Thursday, January 31, 2013

பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பியை தடை செய்! தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!

chennai1
சென்னை:நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை கண்டித்தும், நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு காரணம் சங்க்பரிவார அமைப்புகள் தான் என்ற உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் கருத்தை ஆதரித்தும், சங்பரிவார அமைப்புகளை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னையில் நேற்று (ஜனரி-30)  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில  தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.

Wednesday, January 30, 2013

புதுவலசையில் SDPI கொள்கை விளக்க கருத்தரங்கம்-திரளாக மக்கள் பங்கேற்பு

புதுவலசை: நமதூரில் SDPI-யின் கொள்கை விளக்க கருத்தரங்கம் மஹ்பூப் அலி அவர்களது கடையின் மேல்மாடியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், மாவட்ட செயளாலர் ஷரீப் சேட், அழகை நாசர், மாவட்ட செய்தி தொடர்பாளர் ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  சகோதரர் செய்யது அஹமது கான் தலைமை தாங்கினார்.

இமாம் நூருல் ஹஸன் பாகவி "அரசியலும் மார்க்கமும்" என்ற தலைப்பில் அறிமுகவுரை நிகழ்த்தினார். அவ்வுரையில் முஸ்லிம்கள் அரசியலை சாக்கடை என்று கூறி ஒதுங்கியதன் விளைவு இன்று அடக்கி ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்ட மக்களாக மாற்றப்பட்டனர். இந்த நிலையை மாற்றி அமைக்க முயலும் சூழலைத்தான் SDPI இந்திய தேசம் முழுக்க செய்துவருகின்றது என்று அழகிய முறையில் அன்றைய சூழலையும், இன்றைய அரசியலையும் எடுத்து கூறினார்.

செல்போன் ரோமிங் கட்டணம் நீக்கம்! நாட்டில் முதல் நிறுவனமாக ஏர்செல் அறிவிப்பு!!


‘ஒரு தேசம் ஒரு கட்டணம்’ என்ற திட்டத்தில், ஒரு செகண்டுக்கு ஒரு பைசா
‘ஒரு தேசம் ஒரு கட்டணம்’ என்ற திட்டத்தில், ஒரு செகண்டுக்கு ஒரு பைசா
ஏர்செல் செல்போன்களில் ரோமிங் கட்டணம் நீக்கப்படுகிறது என அறிவித்துள்ள அந்த நிறுவனம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், “மொபைல் போன் நிறுவனங்களில், நாட்டிலேயே, முதல் நிறுவனமாக, ஏர்செல் நிறுவனம், ரோமிங் கட்டணத்தை நீக்கி உள்ளது” என்றும் தெரிவித்துள்ளது.

செல்போன்களில் இருந்து, மாநிலம் விட்டு மாநிலம் பேசும்போது, டயல் செய்பவரும், மறுமுனையில் பேசுபவரும் ரோமிங் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. இப்போது, ஏர்செல் செல்போன்களில் ரோமிங் கட்டணம் நீக்கப்பட்டதன் மூலம், மறுமுனையில் பேசுபவர் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏர்செல் சந்தாதாரர்கள் இதன் மூலம் கூடுதல் பலன் பெறுவார்கள்.

மதச்சார்பற்ற தன்மையை விரும்பக்கூடிய தரப்பினருக்கு ஏமாற்றம்! – உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து SDPI

vishwaroopam
சென்னை:நடிகர் கமலின் விஸ்வரூபம் திரைப்படம் மீதான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மதச்சார்பற்ற தன்மையை விரும்பக்கூடிய அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக எஸ்.டி.பி.ஐ கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. 
இது குறித்து அக்கட்சியின்  மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில்;
“தமிழ் சினிமாவைப் பொருத்தவரை முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் துப்பாக்கி படத்தை தொடர்ந்து கமலஹாசன் நடித்து, இயக்கி தயாரித்துள்ள விஸ்வரூபம் படமானது முஸ்லிம்களை மிகவும் மோசமான முறையில் பயங்கரவாதிகளாக சித்தரித்தும், முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனை தவறாக சித்தரித்தும் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மற்றும் மதச்சார்பற்ற தன்மையில் நம்பிக்கை கொண்ட சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடையே எதிர்ப்பு வலுத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விஸ்வரூபம் படத்திற்கு இரண்டு வார கால தடை விதித்தது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவிற்கு இன்று (29-01-13) சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஷிண்டேவின் அறிக்கையை ஆதரித்து தூத்துக்குடியில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்



தூத்துக்குடி : ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.க வும் தீவிரவாத பயிற்சி முகாம்களை நடத்துகிறது என்ற மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் அறிக்கையை ஆதரித்து 27.01.2013 அன்று மாலை சரியாக 5.15 மணிக்கு தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு SDPI கட்சி சார்பாக தீவிரவாத செயல்களில் ஈடுபடும் B.J.P மற்றும் R.S.S இயக்கங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் தடைசெய்ய வேண்டும் , பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களையும் இதர நிரபராதிகளையும் நிபந்தனையின்றி விடுதலைச் செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நடுநிசி தீர்ப்பு! புறக்கணிக்கப்படும் நியாயம்!


 சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான வழக்குகள் இந்தியாவில் உடனே முடிக்கப்பட்டு இதுபோல் இரவோடு இரவாக தீர்பளிக்கப்படும். 

அதே நேரம் பாபர் மசூதியை இடித்து இந்தியாவில் பல்வேறு மதக்கலவரங்களை  ஏற்ப்படுத்தி, தொடர் குண்டு வெடிப்புகளில் பங்கு கொண்ட ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு எதிராக ஊடகங்களும், நீதி துறையும், அரசு இயந்திரங்களும் மவுனம்காக்கும்.
 
இந்தியாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் நிரூபிக்கப்பட்டடு, உள்துறை
அமைச்சர் நேரிடையாக குற்றம் சுமத்திய பின்னரும் கூட அந்த இயக்கங்களை தடை செய்ய முடியவில்லை. சம்மந்தப்பட்ட இயக்கங்கள் தங்களை தடை செய்து பாருங்கள் என்ன நடக்கும்  என்று சவால்  விடுகின்றன. ஆனால் முதுகெலும்பில்லாத காங்கிரஸ் அரசோ மவுனம் காக்கிறது. இதை பற்றி எல்லாம் கமலஹாசன் படம் எடுக்க மாட்டார். 

Tuesday, January 29, 2013

துலே கலவரம்: போலீசாரின் பங்கினை வெட்ட வெளிச்சமாக்கும் வீடியோ காட்சிகள்!

Dhule riots- Video shows policemen looting shops, destroying private property
புதுடெல்லி:மஹராஷ்ட்ரா மாநிலம் துலேயில் இம்மாதம் நடந்த வகுப்புக் கலவரத்தில் போலீஸின் பங்கினை நிரூபிக்கும் மேலும் பல புதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளை கொள்ளையடிக்கும் நபர்களுடன் இணைந்து போலீசும் ஈடுபடுவது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. போலீசின் தலையீடே கலவரம் உருவாக காரணம் என்று சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மியின் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு கண்டறிந்தது.
முஸ்லிம்களின் கடைகளை கொள்ளையடிக்கும் போலீஸ் கடைகளில் உள்ள பொருட்களை கடத்திச் செல்வது வீடியோ காட்சிகளில் இடம்பெற்றுள்ளன. ஒரு பெட்டிக் கடையை உடைக்க முடியாத போலீஸ் மீன் மார்க்கெட் அருகில் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், வீடுகளில் குடிநீரை சேமிக்க வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் ஆகியவற்றை உடைக்கும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளன.  உள்ளூர் தொலைக்காட்சி சானலின் கேமராமேனும் கலவரத்தில் பங்கேற்றதாக உடைக்கப்பட்ட கடையின் உரிமையாளர் கூறுகிறார்.

பா.ஜ, ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்ய தில் உண்டா ?


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் நடத்திய சிந்தனைக்கூட்டத்தில் இளவரசர் ராகுல் காந்திக்கு பட்டம் சூட்டிய கதையை படித்திருப்பீர்கள். அனைவரும் இளவரசருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே கூடவே ஒரு நமுத்துப் போன பட்டாசை கொளுத்தி விட்டார். “ஐதராபாத் மெக்கா மசூதி, மகாராஷ்டிராவின் மாலேகான், பாகிஸ்தான் செல்லும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் போன்றவற்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு, பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரே காரணம்” எனக் கூறியிருந்தார்.
இந்த காவி பயங்கரவாதத்தைப் பற்றி கூறிய உடனே சங்க பரிவாரங்கள் துள்ளிக் குதித்தன. உடனே ஷிண்டே அந்த குண்டு வெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டோரின் பட்டியலை வெளியிட்டு வாயடைத்தார். ஆனாலும் இந்து மதவெறியர்கள் நாடெங்கும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ‘ஷிண்டே தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்து மதவெறியர்கள் கூடுதல் சினத்துடன் எகிறினர்’ என்று சிலர் கூறுகிறார்கள். ஆண்டைகளின் இத்தகைய ஆதிக்க மனோபாவம் இயல்பானது என்பதற்கு ஷிண்டேவை வைத்து மட்டுமல்ல, அம்பேத்கர் பேரைக்கூடச் சொல்லாமல் ஆமீர்கான் நடத்திய “சத்யமேவ ஜெயதே” நிகழ்ச்சியைக்கூட சான்றாக சொல்ல முடியும்.

Monday, January 28, 2013

கருத்து சுதந்திரமா?கருத்து திணிப்பா அல்லது கருத்து பரவலாக்கமா?




கருத்து சுதந்திரம் பறிக்கபடுகிறது என்று கூக்குரலிடும் ஊடகங்கள் ஆனால் கருத்தை திணிப்பதை பற்றியோ அல்லது கருத்தை தவறாக பரவாலாக்க படுகிறது பற்றியோ பேசுவது இல்லையே,உங்களுக்கு எதிராக ஒரு கருத்து சுதந்திரம் நடந்தால் கொந்தளிக்கும் நீங்கள் (தினமலர் புவனேஸ்வரி விஷயம்).உங்களுக்கு நடந்தால் அது கருத்து திணிப்பு! அதே எங்களுக்கு நடந்தால் கருத்து சுதந்திராமா?மேலும் இது வரை சினிமா துறையில் பல படங்களுக்கு பிரச்சினை வந்த பொழுது எதற்கும் வாய் திறக்காத  சினிமா துறை இப்பொழுது முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து திணிப்பு நடக்கும் பொழுது நாங்கள் போராடினால் அது கலாச்சார தீவிரவாதமா?இது தான் இரட்டை நீதியோ?

விஸ்வரூபம் விவகாரம்: அகில இந்திய அளவில் எதிர்ப்பு வலுக்கிறது

protest-against-kamal-haasans-film-intensifies

புதுடெல்லி:புனித திருக்குர்ஆனை அவமதிக்கும் விதமான காட்சிகள் அடங்கிய கமலஹாசனின் விஸ்வரூபம் என்ற திரைப்படம் திரையிடுவதற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கவேண்டும் என்று அகில இந்திய அளவில் முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான மூவ்மெண்ட் ஃபார் சிவில் ரைட்ஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
திரையரங்குகளிலும், டி.டி.ஹெச் மூலமாகவும் விஸ்வரூபம் திரையிடப்படுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், இத்திரைப்படத்தை சென்சார் போர்ட் மீண்டும் தணிக்கைச் செய்யவேண்டும், புனித திருக்குர்ஆனையும், முஸ்லிம்களையும் மோசமாக சித்தரிக்கும் காட்சிகளை நீக்கவேண்டும் ஆகிய முக்கிய கோரிக்கைகளை இக்கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.

முஸ்லிம்களின் உணர்வுகளை அரசியல் கட்சிகளும் , சினிமாத் துறையினரும் நடுநிலையோடு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்


முஸ்லிம்களின் உணர்வுகளை அரசியல் கட்சிகளும் , சினிமாத்துறையினரும் நடுநிலையோடு சீர்தூக்கிப்பார்க்கவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முஹம்மது நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கு முஸ்லிம்களின் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், திரைப்படத்துறையினரும் சமூக ஆர்வலர்களும் பலகருத்துக்களை வெளியிட்டனர். பல கருத்துக்கள் ஆதரவாகவும், சில கருத்துக்கள் எதிராகவும் வெளியிட்டனர்.

Sunday, January 27, 2013

ஜன-28 சமூகநீதி போராளி பழனி பாபா 16-வது நினைவு நாள்



ஜனவரி (28.01.2013) சமுதாயப்போராளி பழனிபாபா அவர்களின் 16வது நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரையை வெளியிடுவதில் பழனிபாபா இணையதளம் பெருமையடைகிறது  அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டிய அல்ஹாஜ் பழனிபாபா அவர்களது இயற்பெயர் அஹமது அலிஎன்பதாகும்.இவரது திறமையைக் கண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கைய்யா தேவர், தனது நண்பர்களிடமெல்லாம் அஹமது அலியை அறிமுகப்படுத்தி வைக்கும்போது, அவரது பெயரைச் சொல்லாமல் மரியாதையுடன் "பாபா" என்று அறிமுகப்படுத்துவார். அதுபோலவே அஹமது அலி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது தனது ஊர் பற்றி குறிப்பிடும்போதும் அங்குள்ளவர்கள் கேட்கும்போதும், பழனிக்கு பக்கத்தில் உள்ள புது ஆயக்குடி என்று சொல்லுவார்.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்கள்


பெரம்பலூரில் காவல்துறையை கண்டித்தும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் பாப்புலர் ஃப்ரண்ட் தடையை மீறி நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 22.01.2013 அன்று நடந்த ஊர்வல பிரச்சினையில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்கள் , மாணவர்கள் என மொத்தம் 80க்கும் மேற்பட்டவர்களை சட்டவிரோதமாக கைது செய்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்தும் கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்யக் கோரியும் பெரம்பலூர் புது பஸ் ஸ்டான்ட் அருகில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 25.01.2013 அன்று தடையை மீறி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பாப்புலர் ஃப்ரண்ட் எதிர்ப்பை தொடர்ந்து கேரளாவிலும் விஸ்வரூபம் படத்திற்கு தடை



நடிகர் கமல் நடித்து இயக்கி தயாரித்துள்ள "விஸ்வருபம்" படம் இஸ்லாமிய மார்கத்திற்கு எதிராக உள்ளதால் உலகமெங்கும் முஸ்லிம்கள் நடிகர் கமல் மேல் கொந்தளிப்பில் உள்ளனர். தமிழ் நாட்டில் இந்த திரைப்படத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் இருக்க முஸ்லிம் அமைப்புகள் கேட்டு கொண்டதற்கு இணங்க தமிழக அரசு இத்திரை படத்திற்கு 2 வார கால தடை விதித்தது .



 மேலும் சில அரபு நாடுகளிலும் இந்த திரை படத்திற்கு தடை விதிகபட்டுளது இதனை தொடர்ந்து மலேசியாவில் இப்படத்தை தடை செய்ய கோரி 
24-1-13 அன்று பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல் வீரர்கள் மற்றும் கிம்மா என்ற முஸ்லிம் அமைப்பும் இணைந்து உள்துறை அமைச்சகதை தொடர்பு கொண்டு இப்படத்தில் முஸ்லிம்களை எவ்வாறு அநியாயமாக தீவிரவாதிகளாக சித்தரிக்கபட்டுளத்தை விரிவாக விளக்கினார்கள் .

Saturday, January 26, 2013

மாவீரன் "சேகுவேரா" இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு...



சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக்கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும். பலப்பல கேள்விகள் அவரது வானத்தில் வல்லூறுகளாய்ப் பறந்தன. இந்தக் குழப்பமான சூழ்நிலையில்தான் 'சே' & காஸ்ட்ரோ சந்திப்பு!


ஒரு மகத்தான வீரனை தனக்குள் இணைத்துக் கொண்ட தருணத்திலிருந்து கியூபா அரசியலில் எவருக்கும் அறியாத பரிணாம மாற்றங்கள் நிகழத்துவங்கின. வரைபடங்கள் விரிக்கப்பட்டன. புரட்சிக்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டன.

பயிற்சி முழுவதுமாக முடிவடைந்த வீரர்கள் முழுமையாக கெரில்லாக்களாக மாறியிருந்தனர். புரட்சிக்கான நாள் குறிக்கப்பட்டது. இம்முறை காஸ்ட்ரோவின் கண்களில் நம்பிக்கை ஒளி தெரிந்தது. தனது கனவுகளை நிறைவேற்ற காலம் ஒரு மகத்தான வீரனைப் பரிசளித்திருக்கிறது எனும் நம்பிக்கை.

மதுரையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு நேரடி விமானசேவை ஆலோசனைக்கூட்டத்தில் வலியுறுத்தல்


 மதுரையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு ஏர் இந்தியா விமான சேவை துவங்க வேண்டுமென துபாயில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
மதுரை வர்த்தக தூதுக்குழு, ஏர் இந்தியா நிறுவனம், தமிழ் அமைப்புகள் இணைந்து துபாயில்  ஆலோசனைக் கூட்டம் நடத்தின.
 மதுரை முன்னாள் எம்பி ராம்பாபு, தமிழ்நாடு வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், முதுநிலைத் தலைவர் ரத்தினவேல், சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்க துணைத்தலைவர் பிரபாகரன், பாண்டியன் ஓட்டல் இயக்குநர் வாசுதேவன், துபாய் ஏர் இந்தியா மேலாளர் ராம்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இடிஏ மெல்கோ செயல் இயக்குநர் அகமது மீரான் வரவேற்றார். 

நிரந்தரமாக தடை செய்யும்வரை போராட்டம் ஓயாது -அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு




 விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவை நீக்கி உத்தரவிடக் கோரி படத்தின் இயக்குநரும், ஹீரோவுமான கமல்ஹாசன் போட்டுள்ள வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 28ம் தேதி வரை தடை நீடிக்கும் என இடைக்கால உத்தரவிட்டுள்ளது. 

இதனால் திட்டமிட்டபடி விஸ்வரூபம் இன்று தமிழகத்தில் திரையிடப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவை அறிவித்துள்ளன. இதையடுத்து தமிழக அரசு 2 வார காலத்திற்கு இப்படத்தை திரையிடுவதற்குத் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து தற்போது நடிகர் கமல்ஹாசன் நீதிமன்றத்திற்கு சென்றார்

அரபு நாடுகளில் 25 வயதுக்குட்பட்ட பெண்கள் பணிபுரிய இலங்கை அரசு தடை

அரரேபிய நாடுகளில் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக 25 வயதுக்குட்பட்ட பெண்கள்  அங்கு செல்வதற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

 இத்தகவலை இலங்கையின் தொடர்புத் துறை அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்.

குறைந்த ஊதியத்திற்கு வீட்டு வேலை செய்வதற்காகச் செல்லும் அனைத்து வயது பெண்களுக்குமான தடை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் இது முதல்படிதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

Friday, January 25, 2013

"ஒன்றுபட்டால்(தான்) உண்டு வாழ்வு"


இஸ்லாமிய இயக்கங்களின் ஒன்றுபட்ட போராட்ட வியூகத்தால் கமலஹாசன் இயற்றி நடித்த "விஸ்வரூபம்" திரைப்படத்திற்கு தமிழக அரசு இடைக்கால தடைவிதித்திருக்கிறது. இது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்பதை பதிவு செய்வதோடு ஒரு சில கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.


இஸ்லாத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் சித்திரிக்கும் திரைப்படங்கள் இன்று நேற்றல்ல மாறாக பல ஆண்டுகளாக தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அன்றைய காலங்களில் அதனை எதிர்ப்பதற்கான வழி தெரியாமல் முஸ்லிம்கள் சகித்துக்கொண்டு இருந்த நிலை மாறி தற்போது முஸ்லிம்களுக்கான உரிமை மீட்பு போராட்டத்தில் இறையருளால் பலமான சமூக இயக்கங்கள் இன்று தமிழகத்தில் காலூன்றி நியாயத்திற்காகவும், நீதிக்காகவும் உரிமைக்காகவும் போராடி வருகிறது. சமிபத்தில் வெளியான "துப்பாக்கி" படமாகட்டும் இன்னும் திரையிடப்படாத விஸ்வரூபம் திரைப்படமாகட்டும் முஸ்லிம்களின் ஒன்றுபட்ட முயற்ச்சியால் ஓரளவிற்கு தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.

கேப்டன் தொலைக்காட்சியில் சகோ அஹமது ஃபக்ருதீன்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது ஃபக்ருதீன் அவர்கள் கேப்டன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விஸ்வரூபத்திற்கு எதிரான முஸ்லிம்களின் போராட்டங்களைப்பற்றி எடுத்துக்கூறினார்.



எது கலாச்சார தீவிரவாதம்?


கமல்: அறியாமையின் வடிவமா? எதேச்சியதிகாரத்தின் தூண்டுகோலா?

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 15 நாள் தற்காலிக தடை விதித்ததை தொடர்ந்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை கமலின் உண்மை முகத்தை (சுயரூபத்தை) வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

ஆரம்பத்தில் விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களுக்கு ஆதரவான திரைப்படம் என்றும் இத்திரைப்படம் வெளிவந்தால் முஸ்லிம்கள் பிரியாணி கொடுப்பார்கள் என்றும் கூறினார். ஆனால் திரைப்படத்தின் உண்மை நிலையோ வேறு. திரைப்படம் முழுவதுமே முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், உலகப்பொதுமறையாம் திருக்குர்ஆனை தீவிரவாத நூலாகவும், முஸ்லிம்களின் வழிபாட்டை தீவிரவாத வழிப்பாடாகவும் சித்தரித்தே வெளிவந்துள்ளது. முஸ்லிம்களின் உயர்ந்த கலாசாரத்தையே தீவிரவாத கலாச்சாரமாக சித்தரிக்கும் கமல் அவரின் சுயரூபத்தை எதிர்க்கும் போது அதை கலாச்சார தீவிரவாதம் என்கிறார். இது கமலின் இரட்டை முகத்தையே காட்டுகிறது.

முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யவேண்டும் – SDPI கோரிக்கை!

sdpi
புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் தீவிரவாத பயிற்சி முகாம்களை நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் அறிக்கையை தொடர்ந்து பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களையும் இதர நிரபராதிகளையும் நிபந்தனையின்றி விடுதலைச் செய்யவேண்டும் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

விஸ்வரூபத்திற்கு 15 நாள் தடை - தமிழக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் நன்றி


துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் படத்திலும் இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதமாக அனைத்து காட்சிகளையும் இயக்குனர் கமலஹாசன் தன்னுடைய கற்பனையை கொண்டு சித்தரித்திற்கும் இப்படத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் தமிழக அரசிடம் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தது. இஸ்லாமியர்களின் இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விஸ்வரூபம் படத்திற்கு முதற்கட்டமாக 15 நாள் தடை விதித்ததற்கு அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக தமிழக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

Thursday, January 24, 2013

காவி பயங்கரவாதம்: தொடரும் காங்கிரசின் கோழைத்தனம்!

janardan dwivedi

புதுடெல்லி:இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் காவி ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் தொடர்பு குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆகியன தீவிரவாத முகாம்களை நடத்துவது குறித்தும் ஜெய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே தோலுரித்துக் காட்டினார்.
ஏற்கனவே முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் காவி பயங்கரவாதம் குறித்து பேசியிருந்தார். ஷிண்டேவின் கருத்தை தொடர்ந்து பா.ஜ.க உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளும், தினமணி போன்ற பார்ப்பன வெறி ஏடுகளும் தாம் தூம் என்று குதித்து ஹிந்துத்துவா தீவிரவாதம் குறித்து பேசுவது தேசத் துரோகம் போல சித்தரித்தன.

விஸ்வரூபம் தமிழகம், UAE-ல் தற்காலிக தடை!


முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் படத்தை தடை செய்யக் கோரி இன்று (23.01.2013) இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் உள்துறை செயலாளரை சந்தித்து பேசினர். பின்னர் பத்திரிகைக்கு பேட்டியளித்த இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் விஸ்வரூபம் படம் தடை செய்யப்படவில்லை என்றால் போராட்டம் நடக்கும் என்று அறிவித்தனர் .

இந்நிலையில் தமிழக அரசு விஸ்வரூபம் படத்திற்கு 15 நாள் தற்காலிக தடை விதித்துள்ளது . முஸ்லிம்களின் ஒற்றுமையான முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. முன்னதாகபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 21.01.2013 அன்று சென்சார் போர்டை முறைப்படுத்தக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Wednesday, January 23, 2013

பயங்கரவாதத்திற்கு எந்த மதமும் இல்லை- ஷிண்டே கருத்துக்கு குர்ஷித் ஆதரவு!



பாரதிய ஜனதாவும் அதன் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ்ஸும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்து சரியே என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் கூறியுள்ளார்.

இந்து அமைப்புகளும், பாரதிய ஜனதாவும் சுஷில் குமார் ஷிண்டே யின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், "உள்துறை அமைச்சர் கூறியுள்ள கருத்து உண்மை தான். புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணையில் தெரியவந்த உண்மைகளைத் தான் அவர் கூறினார். புலனாய்வு அமைப்புகள், மத்திய அரசுக்கு தெரிவித்த தகவல்களை, உள்துறை அமைச்சர் என்ற முறையில் அவர் வெளிப்படுத்தினார். இந்தப் பிரச்னையை திசை திருப்பும் வகையில், பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள், தேவையற்ற கருத்துக்களை கூறி வருகின்றன" என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் தெரிவித்துள்ளார்..

விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் - கமிஷனரை சந்தித்தனர் இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள்



சென்னை : முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் படத்தை தடை செய்யக் கோரி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர்கள் 22.01.2013 அன்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்தனர். கமிஷனர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று (23.01.2013) இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் உள்துறை செயலாளரை சந்திக்க உள்ளனர் .

இந்துத்துவ தீவிரவாதத்தை தோலுரித்துக் காட்டிய உள்துறை அமைச்சர்! பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு!


ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே இந்துத்துவ தீவிரவாதிகளை தோலுரித்துக் காட்டியதை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்றுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்டின் சேர்மன் கே.எம். ஷரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள், அரசியல் படுகொலைகள் மற்றும் மதக்கலவரங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆல் தூண்டிவிடப்பட்ட இந்துத்துவ தீவிரவாத இயக்கங்களே காரணம் என்பதை கடந்த பல ஆண்டுகளாக பிரசித்திபெற்ற அரசியல் தலைவர்கள், அறிவு ஜீவிகள்,சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இந்த தேசத்திலுள்ள மக்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து வெளிவரும் சங் பரிவாரங்களின் சதிகள்: நீதியரசர் சச்சாரை கொல்ல முயற்சி செய்தது அம்பலம்

சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள இந்துத்துவ தீவிரவாதி ராஜேந்திர செளத்ரி அளித்துள்ள வாக்குமூலத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் உயிருக்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் குறிவைத்திருந்த விவரம் தெரியவந்துள்ளது.

அக்டோபர் 2006ல் இந்த  முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும்  ஆனால் கை கூடவில்லை என்றும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் சமூக - பொருளாதார நிலைகளை ஆய்வு செய்ய மத்திய அரசு மார்ச் 2005 ல் நீதிபதி சச்சார் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்திருந்தது. நவம்பர் 2006 ஆம் ஆண்டு அந்த ஆணையம் தங்கள் ஆய்வறிக்கையை அரசுக்கு அளித்தது.

Tuesday, January 22, 2013

மத்திய அரசு டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - SDPI


எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருட்களின் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களின் கைகளில் கொடுத்துள்ளது.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் டீசல்,பெட்ரோல் ஆகியவற்றின் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. இதனால் அனைத்து பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.இப்படி அடிக்கடி விலைவாசி உயர்ந்தால் நாட்டு மக்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.மக்கள் நலனை விட எண்ணெய் நிறுவனங்களை பற்றி மத்திய அரசு அதிகம் கவலைப்படுகிறது.அதனால் எண்ணெய் நிருவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபத்தில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் நஷ்டத்தை சந்திக்கவில்லை. இந்நிலையில் மத்திய அரசு மக்கள் மீது அக்கறையில்லாமல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளது.

பாசிசத்தை தடுப்போம்!குடியரசை காப்பாற்றுவோம்! – கேம்பஸ் ஃப்ரண்ட் நடத்தும் தேசிய பிரச்சாரம்!

campus front of india
சென்னை:ஃபாசிசத்தை தடுப்போம்! குடியரசை காப்பாற்றுவோம்! என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிற ஜனவரி 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பிரச்சாரம் நடத்த உள்ளது.
இதுத் தொடர்பாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பாசிச சக்திகள் இந்திய குடியரசை தகர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். தேசத்தின் ஆன்மாவின் மீது ஆர்.எஸ்.எஸ் நடத்திய முதல் தாக்குதல்தான் காந்தி படுகொலை. ஜனநாயகம் மற்றும் மதசார்பற்ற கொள்கைக்கு எதிராக மிரட்டல் விடுக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க நடத்தும் தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட தயார்! – திக்விஜய் சிங் அறிவிப்பு

திக்விஜய் சிங்
புதுடெல்லி:இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் நடத்தும் தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட தயார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் வைத்து இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் தீவிரவாத முகாம்களை நடத்திவருவதாகவும், நாட்டில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திவிட்டு அவற்றை சிறுபான்மையினர் மீது பழிபோடுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியிருந்தார். இதனால் பதட்டமடைந்த சங்க்பரிவாரம் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதற்கான ஆதாரங்களை ஷிண்டே வெளியிடவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இலங்கையில் தமிழர்களின் கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம் - பாப்புலர் ஃப்ரண்ட்

இலங்கையில் தமிழர்களின் கலாச்சார அடையாளங்களை படிப்படியாக இலங்கை அரசு அழித்து வருவதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆ ஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது .

தமிழர்கள் அதிகம் வசிக்கும் 89 கிராமங்கள் தமிழ் பெயரிலிருந்து சிங்கள பெயராக மாற்றப்பட்டுள்ளது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 367 ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளது. 

ஒரு மசூதி இடிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பகுதியில் அதிகமான ராணுவ சோதனை சாவடிகளை நிறுவி ராணுவ ஆட்சியைப் போல் பீதியை சிங்கள அரசு ஏற்படுத்தியுள்ளது . நாட்டை ஆளும் அரசு சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட்டு விட்டு அந்த சிறுபான்மையினரை வதை செய்யும் செயலை இலங்கை அரசு தொடர்ந்து செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது .

சென்சார் போர்டை முறைப்படுத்தக் கோரி சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்



சென்னை : நூறாண்டுகளை கடந்து நிற்கும் இந்திய சினிமா வரலாற்றில் சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிராக பல திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. குறிப்பாக இஸ்லாம் மார்க்கத்தின் மீது அவதூறு பரப்பும் விதமாகவும், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இத்தகைய செயல்கள் சிறுபான்மை சமூக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

நூறாண்டுகளை கடந்து நிற்கும் இச்சினிமாத்துறையை ஒழுங்கு படுத்துகின்ற பொறுப்பு திரைப்பட தனிக்கை குழுவிற்கும் உண்டு. ஆனால் சிறுபான்மை சமூக மக்களை புண்படுத்தும் விதமாக எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தடைவிதிக்காமல் அதனை கண்டும் காணாமல் விட்டு விடுவது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

Monday, January 21, 2013

ஃபலஸ்தீனர்களுக்கு மற்றுமொரு அங்கீகாரம்: மலேசிய பிரதமர் காஸா சுற்று பயணம் மேற்கொள்கிறார்!


ஹமாஸ் அமைப்பின் கட்டுபாட்டில் உள்ள காஸா பகுதிக்கு மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக் இந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மலேசிய பிரதமர், வெளியுறவு அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழு செவ்வாய் கிழமை காஸா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியா நீண்ட காலமாக ஃபலஸ்தீனத்துடன் நெருங்கிய நட்புறவை பேணி வருவதோடு, இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவை கடைபிடிக்காத நாடாகும். கடந்த நவம்பரில் கஸா மீதான தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த மலேசிய பிரதமர் நஜீப், அந்த தாக்குதலை ஃபலஸ்தீனர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை என்றார்.

ஊழல்,மதுவுக்கு எதிராக SDPI-நடத்திய நெல்லை மாவட்ட மாநாடு


நெல்லை:மது, லஞ்ச ஊழலுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தக்கோரியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நெல்லையில் மாபெரும் மாநாடு நேற்று (ஜன-20) நடைபெற்றது.
முன்னதாக இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் மது மற்றும் உலக மயமாக்கலால் ஏற்படும் அவலங்கள் குறித்த மாதிரிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. பாளை சித்தா மருத்துவ கல்லூரியிலிருந்து துவங்கிய பேரணி இறுதியாக பாளை ஜவஹர்  திடலில் முடிவடைந்தது.

தஞ்சையில் இமாம் மீது தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யகோரி ஆல் இந்தியா இமாம் கவுன்சில் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்கள் மீது தாக்குதல் - குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை!

தஞ்சாவூர்: மசூதி இமாம் மீதும் இன்னபிற முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

கடந்த வாரம் பட்டுக்கோட்டை அண்ணாநகர் மசூதி இமாம் மைதீன் அப்துல் காதர் பிலால் என்பவரையும் மற்றும் அவரது மாமனார் உள்ளிட்டோரையும்,   பாலா, சிற்றரசு, சிரஞ்ஜீவி உடபட குடிபோதையில் இருந்த 15 பேர் கொண்ட கும்பல் இமாமை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, உருட்டுக் கட்டைகளைக் கொண்டு கடுமையாகத் தாக்கினார்கள். இந்தச் சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மன்னிப்பு கேள்: சோனியாவுக்குப் பாஜக பகிரங்க மிரட்டல்!

சோனியாவுக்குப் பாஜக பகிரங்க மிரட்டல்!
புது டெல்லி: "நாட்டில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுமே தீவிரவாதத்தை வளர்த்துகின்றன என்ற உள்துறை அமைச்சர் ஷிண்டேயின் கருத்துக்குக் காங்கிரஸ் தலைவர் சோனியா மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையேல் பயங்கர பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என பாஜக பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

"ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக நடத்தும் பயிற்சி முகாம்கள் நாட்டில் இந்து தீவிரவாதத்தை வளர்த்துகின்றன. அவற்றின் பயிற்சி முகாம்களில் தீவிரவாத பயிற்சியளிக்கப்படுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு போன்ற நாட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டுள்ளது. அவற்றை நடத்தியபின்னர், சிறுபான்மையினர் அக்குண்டுவெடிப்புகளை நடத்தியது போன்று போலி தடயங்களை விட்டுச் செல்கின்றனர்" என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியிருந்தார்.

காவி அமைப்புகள் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துகின்றன! – மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே

'Saffron is antonym of terrorism' - shinde
ஜெய்பூர்:காவி பயங்கரவாதத்தைப் பரப்புவதற்காக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜனதாவும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்  நடைபெற்றுவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய ஷிண்டே, “ஒரு பக்கம் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். ஆனால், பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஹிந்து பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக, பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விழிப்புடன் கண்காணித்து வருகிறோம்.

Sunday, January 20, 2013

இஸ்லாத்தை தழுவும் தாழ்த்தப்பட்டவர்கள் இனி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!


madurai high court

மதுரை:மதுரை: இஸ்லாத்தை தழுவிய ஆதிதிராவிட வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக கருத வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் கூரியூரை சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான். இவர் உமர்நகர் ஜமாத் தலைவராக உள்ளார். இவர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
நாங்கள் ஆதி திராவிடர் பிரிவை சேர்ந்தவர்கள். 30 ஆண்டுக்கு முன்பு இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டோம். எங்களுக்கு உரிய ஜாதி சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். இதனால், இஸ்லாத்தை தழுவிய ஆதிதிராவிட பிரிவை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகள் மறுக்கப்படுகின்றன.

பாபர் மசூதி வழக்கு - கி.வீரமணி கண்டனம்!

வெள்ளி விழாவுக்கு காத்திருக்கும் பாபர் மசூதி வழக்கு - கி.வீரமணி கண்டனம்!

சென்னை: பாபர் மசூதி வழக்கை ஜவ்வு மிட்டாய் போல் இழுப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தி.க. தலைவர் கி.வீரமணி, மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்களான ஜோஷி, லோகேஷ் சர்மா ஆகியோர்  அதில் மட்டுமல்லாமல், அய்தரா பாத்தின் மெக்கா மஜிஸ்த் ஆஜ்மீர்தர்கா குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டு, அதற்கு மேலும் குஜராத் கலவரத்தை  திட்டமிட்டே அங்கே  நிகழ்த்திவிட்டு, முஸ்லீம்கள்மீது  பழியைப் போட்டு விட்டு செயலை மிகவும் பக்குவமாகச் செய்துள்ளார்கள்!

‘துலே’யில் போலீஸ் நடத்திய வன்முறை! பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!



மஹாராஷ்டிரா மாநிலம் ‘துலே’யில் அப்பாவி முஸ்லிம்கள் மீது போலிஸ் நடத்திய அட்டூழியத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமைச் செயலகம் வன்மையாக கண்டித்துள்ளது. ‘துலே’யில் நடந்த இந்த கொடூரம் குறித்து மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஏஜன்சியை கொண்டு விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் கொண்டுவரவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டை வழங்கவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பின் தமிழ் மாநில மக்கள் தொடர்பு அலுவலர் அ.பக்ருதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

போலீஸ் நடத்திய வன்முறையில் 6 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட 200 முஸ்லிம்கள் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் போலீஸ் முஸ்லிம்களுக்கு எதிராக பாரபட்சமாக நடந்துகொண்டது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன. 70 முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபொழுது ஹிந்துக்களில் 2 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் போலீஸ் முஸ்லிம் வீடுகளை தீக்கிரையாக்கி, பணம், தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடைமுறைகள் எதனையும் பின்பற்றாமல் அஜாக்கிரதையான நிலையில் கண்ணீர் புகை குண்டு பிரயோகிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.

Saturday, January 19, 2013

இன்னும் திருந்தாத தலைநகர்.........?


கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பின்னரும் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு ,பலாத்கார முயற்சி போன்றவை தலைநகர் டில்லியில் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி நள்ளிரவில் தனது ஆண் நண்பருடன் பஸ்சில் வந்து கொண்டிருந்த மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் வன்முறை கும்பலால் கற்பழிக்கப்பட்டு தாக்குதலுக்குட்படுத்தப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை ‌மேற்கொண்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பபட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ல் மரணமடைந்தார். இதனையடுத்து தலைநகர் டில்லியில் இது வரையில் வரலாறு காணாத அளவில் வயது வித்தியாசமின்றி , அரசியல் கட்சிகளை தவிர்த்த மக்கள் போராட்டம் வெடித்தது. மக்களை சமாதானப்படுத்த வந்த டில்லி முதல்வர் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு போராட்‌டம் தொடர்ந்து நீடித்தது. மக்களின் புரட்சியை கண்ட மத்திய அரசு அவசர அவசரமாக கற்பழிப்புக்கு எதிரான சட்டத்தை மாற்றியமைத்து நடைமுறைக்கு கொண்டு வர பரிசீலனை செய்துள்ளது. அதே போல் ஒவ்வொரு மாநில அரசும் பாலியல் குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்தும் வகையில் சட்டங்களை நிறைவேற்ற துவங்கியது.

பொது இடங்களில் சிலைகளை நிறுவ உச்சநீதிமன்றம் தடை!

ban on statues in public places!
புதுடெல்லி: சாலை மற்றும் பொது இடங்களில் சிலைகளை நிறுவுதல் மற்றும் இதர கட்டுமானங்களை மேற்கொள்ள மாநில அரசுகள் அனுமதி அளிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றங்கரையில் தேசிய நெடுஞ்சாலையில், மறைந்த காங்கிரஸ் தலைவர் என்.சுந்தரத்தின் சிலையை நிறுவ கேரள அரசு அனுமதியளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்
தொடரப்பட்டது.

சார் ஒரு நிமிசம்: ராம.கோபாலனுக்கும் செலக்டிவ் அம்னீஸியா?

ராம.கோபாலனுக்கும் செலக்டிவ் அம்னீஸியா?

இந்திய-பாகிஸ்தான் எல்லையிலுள்ள பூஞ்ச் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களைத் தாக்கிவிட்டு, அதில் ஒரு ராணுவ வீரரின் தலையையும் கொய்து சென்றதாக பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் இதை அனேகமாக, தீவிரவாதிகளே செய்திருக்கக்கூடும் என்றும் பாகிஸ்தான் கூப்பாடு போட்டதை உலகநாடுகள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் தனது நாட்டு ராணுவ வீரரையும் இந்திய ராணுவம் அத்தகைய முறையில் கொன்றிருப்பதாக பாகிஸ்தான் புதுக்கரடியை உலவ விட்டுள்ளது.

Friday, January 18, 2013

ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் முகாம்களை கண்டுபிடிக்க காடுகளில் என்.ஐ.ஏ தேடுதல் வேட்டை!

NIA team scans Dewas forests for saffron hideouts
புதுடெல்லி:ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் ரகசிய முகாம்களை கண்டுபிடிக்க மத்தியபிரதேச மாநிலத்தின் தேவாஸில் உள்ள காட்டுப்பகுதிகளில் தேசிய புலனாய்வு ஏஜன்சி தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெடிக்குண்டு தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு இங்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் சோதனை நடத்தியிருந்தனர். இதுத்தொடர்பான ஆதாரங்கள் மற்றும் ரகசிய முகாம்களை கண்டுபிடிக்க என்.ஐ.ஏ சோதனை நடத்திவருகிறது.

பலஸ்தீனர்கள் ஒன்றுபட்டு அணிதிரள வேண்டும் : அர்தூகன்


பலஸ்தீனர்கள் ஒன்றுபட்டு அணிதிரள வேண்டும் : அர்தூகன்
அன்காரா: அண்மையில் துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகன், பலஸ்தீன் அரசியல் தலைவர்களை அலைபேசியூடே தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.

பலஸ்தீன் அதிகார சபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் காலித் மிஷைல் ஆகியோரைத் தொடர்பு கொண்டு பேசிய அர்தூகன், பலஸ்தீனுக்குள் காணப்படும் உள்ளகப் பிரிவினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளைத் துரிதப்படுத்துமாறு வேண்டியுள்ளார்.

Thursday, January 17, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரியப்பட்டினம் நகர தலைமை அலுவலகம் திறப்பு விழா


இராம்நாட் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரியப்பட்டினம் நகர தலைமை அலுவலகம் 16.01.2013 அன்று திறக்கப்பட்டது.இதற்கு நகர தலைவர் ரியாஸ் தலைமை தாங்கினர். இரு ஜமாத்தலைவர்களும் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன் , முகவை மாட்ட தலைவர் H.ஹபீப் நவாஸ் கான் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர் ஹாஜி.கபீர் அம்பலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன் பேசுகையில் , " அலுவகம் மூலம் இயக்கத்திற்க்கு அடையாளம் தேவையில்லை இயக்கத்தின் 20வருட வரலாறுக்கு சொந்தம் இந்த பெரியப்பட்டினம் என்றும் , இயக்கம் கடந்து வந்த பாதைகள் மற்றும் தற்போது செய்து வரும் பணிகள் பற்றியும் எடுத்துரைத்த அவர் முஸ்லிம்களை சக்திப்படுத்தும் பணியிலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஒருபோதும் பின்வாங்காது " என்றார்.

Wednesday, January 16, 2013

ரயிலை திருடிச் சென்ற பெண், அதை செலுத்த தெரியாமல், பில்டிங்கில் மோதினார்!


சுவீடன் நாட்டு ரயில் ஒன்றை பெண் ஒருவர் திருடிச் சென்றபோது, (ஆம், ரயிலை திருடிச் சென்றார்!) ரயில் போய் மக்கள் குடியிருக்கும் அப்பார்ட்மென்ட் பில்டிங்கில் மோதி இன்று (செவ்வாய்க்கிழமை) விபத்துக்குள்ளானது. ரயிலை திருடிச் சென்ற பெண், ரயிலை சரியாக ஓட்ட தெரியாத காரணத்தாலேயே விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ரயிலை திருடிச் சென்று மோதிய பெண் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலைநகர் ஸ்டாக்ஹார்ம் புறநகரப் பகுதியில் நடைபெற்றுள்ளது இந்த சம்பவம்.

Tuesday, January 15, 2013

சர்ச்சைக்குரிய உரை:சுவாமி கமலானந்தா கைது!

swami kamalananda
ஹைதராபாத்:முஸ்லிம்களுக்கு எதிராக துவேசத்தை பரப்பும் வகையில் உரை நிகழ்த்திய ஹிந்து சன்னியாசி சுவாமி கமலானந்தா பாரதியை போலீஸ் கைது செய்துள்ளது. விசாரணைக்காக ஹைதராபாத்திற்கு கொண்டுவரப்பட்ட கமலானந்தாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்று போலீஸ் கூறுகிறது.
ஹிந்து கோயில் பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் தாம் கமலானந்தா. இம்மாதம் எட்டாம் தேதி ஹைதராபாத்தில் நடந்த பேரணியில் கமலானந்தா வெறுப்பை உமிழும் உரையை நிகழ்த்தியுள்ளார்.

"என் கணவரைத் தூக்கிலிடுங்கள்"

பாலியல் குற்றச் செயல்களை தொடர்ந்து செய்து வரும் ஒருவரை அக்கொடிய குற்றங்களுக்காகத் தூக்கிலிடும்படி அவரது மனைவியே கோரிக்கை விடுத்துள்ளார். பாலியல் குற்றம் ஒன்றுக்காக சிறைப்பட்டிருந்த அந்த நபர், சிறையிலிருந்து விடுதலை ஆகி வந்து  ஒரு சிறுமியை கடத்தி வன்புணர்ந்துகொன்றதாக மீண்டும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.


கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதியன்று மஹாராஷ்டிரா மாநிலம் அஹமது நகர் மாவட்டத்தில் ஷிர்டி என்னும் நகரில் 9 வயதேயான சிறுமியை கடத்திச் சென்று வ்ன்புணர்ந்து கொலை செய்ததாக, சுனில் சுரேஷ் என்னும் பப்பு சால்வே(32) இரு நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பப்பு சால்வேயின் மனைவியான சரிகா சால்வே(28) "இந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்த இவரை உடனடியாகத் தூக்கிலிடுங்கள்" என்று கோரியுள்ளார்
இந்த வழக்குத் தொடர்பாக. 17ம் தேதி வரை காவல்துறை காவலில் பப்பு சால்வே வைக்கப்பட்டுள்ளார்.

Monday, January 14, 2013

இந்திய அரசியலில் கிரிமினல்களுக்கு முதலிடம்! ஏன்?


வரப்போகும் பார்லிமென்ட் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் நிச்சயம் போ்ட்டியிட முடியாதபடி உடனடியாக தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் கமிசன் தெரிவித்துள்ளது.
 
சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தேர்தல்களில் கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட தடைவிதிப்பது குறித்து தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வருவது  தொடர்பாக கடந்த 1998-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதியில் இருந்து தலைமை தேர்தல் கமிஷன் மத்திய அரசிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தி வந்தது. ஆனால் இந்த கோரிக்கை அநியாயத்திற்கு 15 வருடங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Dua For Gaza