Thursday, February 28, 2013

பறிக்கப்படும் ஜனநாயக உரிமைகள் ! அடக்குமுறைக்கு வரம்பற்ற அதிகாரங்கள் !! - பாப்புலர் ஃப்ரண்ட் விநியோகித்த நோட்டிஸ்


பறிக்கப்படும் ஜனநாயக உரிமைகள்! 
அடக்குமுறைக்கு வரம்பற்ற அதிகாரங்கள் !!

சமீபத்திய மக்கள் பிரச்சனைகளில் தமிழக அரசின் தலையீடு விஷயத்திலும், அதில் முடிவு எடுக்கப்பட்ட விதத்திலும் ஒரு நல்ல அணுகுமுறையை நாம் பார்க்க நேர்ந்தது. அது, மத உணர்வுகளை காயப்படுத்தும் சினிமா படத்திற்கு எதிரான முடிவானாலும் சரி, விவசாயிகளுக்கான காவிரி நீர் போராட்டத்தின் நிலையானாலும் சரியே.

ஆனால், இப்படிப்பட்ட அரசின் கொள்கைக்கும் செயலுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தமிழக முதல்வர் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரையிலும் காவல்துறையின் ஒருவிதமான மக்கள் அடக்குமுறை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. அது முஸ்லிம்கள், தலித்துகள், மனித உரிமை ஆர்வலர்கள் நடத்தும் போராட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் பிரதிபலிக்கின்றது. ஒருவேளை இச்செயல் முதல்வர் அவர்களின் பார்வைக்கு உளவுத்துறையால் சரியான முறையில் கொண்டு செல்லப்பட்டதா அல்லது இவ்விஷயங்கள் என்ன மாதிரியாக உளவுத்துறையால் முதல்வரிடம் தெரியப்படுத்தப்பட்டது என்பதை நம்மால் அறிய முடியவில்லை.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்



டெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .



அதன் அடிப்படையில் தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் கொடியேற்றுதல் , பேரணி மற்றும் வாகனப் பேரணி  போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Wednesday, February 27, 2013

எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் முற்றுகை போராட்டம்-எஸ்.டி.பி.ஐ பங்கேற்பு


2013-02-26 12.19.32
விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கை விட்டு மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சார்பில் சேலத்தில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலப்பொருளாளர் அம்ஜத் பாஷா,சேலம் மாவட்ட பொதுச்செயலாளர் சரீஃப்,ஈரோடு மாவட்ட பொதுச்செயலாலர் ஹசன் அலி,மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இவர்களுடன் மதிமுக,பாமக,விசிக,விவசாயிகள் சங்கம்,கொளத்தூர் மணி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே பட்ஜெட்டிற்கு கண்டனம்! SDPI கட்சியின் மாநில பொதுக்குழுவில் தீர்மானம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று(26-02-2012) காலை திருச்சி பீம நகர் கே.எம்.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலசெயலாளர் நாஞ்சில் செய்யது அலி வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக், மாநில செயலாளர்கள் கே. செய்யது இபுராகிம், அபுதாகிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இறுதியாக மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது நன்றி கூறினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tuesday, February 26, 2013

புதுவலசையில் தீ விபத்து


புதுவலசையில்  இன்று(26/02/2013) செவ்வாய் கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் குடிசை ஒன்று முற்றிலும் எரிந்து சாம்பலானது. புதுவலசை மேற்கு தெருவில் வசித்து வரும் இப்ராஹிம் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு தற்செயலாக தீப்பிடித்ததில் அவருடைய குடிசையில்  இருந்த துணிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் முற்றிலும் தீயில் கருகி விட்டது.

ஷஹ்லா மஸூத் கொலை வழக்கு: பா.ஜ.க எம்.எல்.ஏவிடம் சி.பி.ஐ விசாரணை!

Shehla Masood murder- CBI may question senior BJP MLA

புதுடெல்லி:தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூதின் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ, மத்தியபிரதேச மாநில பா.ஜ.க மூத்த எம்.எல்.ஏ த்ரூவ் நாராயண் சிங்கிடம் விசாரணை நடத்த உள்ளது. ஷஹ்லா மஸூதை கொலைச் செய்ய இவர் சதி ஆலோசனையில் ஈடுபட்டார் என்பது குற்றச்சாட்டு. இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஷஹீதா பர்வேசுடன், பா.ஜ.க எம்.எல்.ஏவின் தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
ஷாஹிதா பர்வேஸின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சி.டியின் உண்மை நிலைய ஆராய செண்ட்ரல் ஃபாரன்சிக் சயன்ஸ் லேபரேட்டரின் அறிக்கைக்காக சி.பி.ஐ காத்திருக்கிறது. இவ்வறிக்கை இன்று கிடைக்கும் என கருதப்படுகிறது.

Monday, February 25, 2013

இஷ்ரத் போலி என்கவுண்டர்: மேலும் ஒரு குஜராத் காவல் அதிகாரி கைது!

அகமதாபாத் : 19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் 2004ஆம் ஆண்டு போலியாக என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக குஜராத் மாநில காவல் துறையைச் சேர்ந்த மேலும் ஒரு அதரிகாரியை சிபிஐ கைது செய்துள்ளது.


காந்தி நகர் சிறப்புச் செயல்பாட்டுக் குழு காவல் ஆய்வாளரான பாரத் பட்டேல் என்பவரை சிபிஐ சனிக்கிழமை பின்னிரவில் கைது செய்து ஞாயிற்றுக் கிழமையன்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தியது. மாவட்ட காவல்துணைக் கண்காணிப்பாளர் தருண் பரோட்டும் சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டார்.  2004ஆம் ஆண்டு அகமதாபாத் குற்றப் பிரிவு காவல்துறையில் உதவி ஆய்வாளராக பட்டேல் பணியாற்றியவர்.

“எதிரி நாட்டு உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்” ஈரான் அறிவிப்பு!


ஈரானிய ராணுவம் ‘எதிரி நாட்டு’ உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரானிய அரசு நியூஸ் ஏஜென்சி IRNA (Islamic Republic News Agency) அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஈரானிய ராணுவத்தை சேர்ந்த ஜெனரல் ஹமீத் சர்க்ஹெலி, “தென்கிழக்கு ஈரானின் கெர்மான் பகுதியில் எதிரி ராணுவத்தின் உளவு விமானத்தை வீழ்த்தினோம். இதற்கு முன்னரும் இதே போல உளவு விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன” என்று கூறியதாக செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், எந்த நாட்டு உளவு விமானம் என்பதை ஈரானிய அரசு நியூஸ் ஏஜென்சி தெரிவிக்கவில்லை.

குண்டுவெடிப்பின் பெயரால் போலீஸ் நடத்தும் முஸ்லிம் வேட்டை!

குண்டுவெடிப்பின் பெயரால் போலீஸ் நடத்தும் முஸ்லிம் வேட்டை!
ஹைதராபாத்:ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து 2 நாட்கள் பல்லைக் கடித்துக்கொண்டு கழித்த போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது. பல இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 5க்கும் அதிகமான இளைஞர்களை விசாரணை என்று போலியாக கூறி பிடித்துச் சென்றுள்ளனர். இவர்களில் பலரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர்.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் இவர்கள் நிரபராதிகள் என்று தெரிந்த பின்னர் அரசு இவர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலைச் செய்தது.

Sunday, February 24, 2013

இராமநாதபுரம் SDPI நடத்திய மாபெரும் மாவட்ட மாநாடு

எஸ்.டி.பி.ஐ (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) கட்சியின் இராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பாக அரசியல் எழுச்சி மாநாடு நேற்று (23.02.2013)இராமநாதபுரம் சந்தைத்திடலில் நடைபெற்றது. 

மாலை 5.30 மணி அளவில் மாநாட்டு பேரணியும்,அதனை தொடர்ந்து மாலை 6.30 மனி அளவில் மாநாட்டு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

மாநாட்டு பொதுக்கூட்டத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை தாங்கினார். 



மாவட்ட பொதுச் செயலாளர் முஹம்மது இஸ்ஹாக் வரவேற்றார். 

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: “அப்துல் மீது சந்தேகம் என மீடியா சொல்வது பொய்!” -போலீஸ்


ஹைதராபாத்தில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்த ஒருவர், 2007-ம் ஆண்டு குண்டு வெடிப்பில் சிக்கி கால் இழந்தவர் என்ற விபரம் வெளியானதை அடுத்து, அவர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன.
“அந்த நபர்மீது எமக்கு சந்தேகம் இல்லை” என்று கூறியிருக்கிறது ஹைதராபாத் போலீஸ்.

அப்துல் வாசேய் மிஸ்ரா (மேலே போட்டோவில் உள்ளவர்) என்ற பெயருடைய 23 வயதான வேலையற்ற இந்த இளைஞன், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் சிக்கி படுகாயமடைந்தவர். அவரது போதாத காலம், 5 ஆண்டுகளின்பின் ஹைதராபாத்தில் குண்டு வெடித்த நேரத்தில், குண்டுவெடித்த இடத்தில் நின்று, படுகாயமடைந்துள்ளார்.

EIFF நடத்திய ‘ஆம்னஸ்டி’ விழிப்புணர்வுப் பிரச்சாரம்!

EIFF நடத்திய ‘ஆம்னஸ்டி’ விழிப்புணர்வுப் பிரச்சாரம்!

துபை:ஐக்கிய அரபு அமீரக(UAE) அரசு சட்டவிரோதமாக அமீரகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு ‘ஆம்னஸ்டி’ என்ற பொது மன்னிப்பை அறிவித்துள்ளது. இது குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) வெளிநாட்டவர்களிடையே பரவலாகச் செய்தது.
“அமீரகத்திற்கு நம்பகமாக இருங்கள், பொது மன்னிப்பைப் பயன்படுத்துங்கள்” (BE LOYAL TO UAE, MAKE USE OF AMNESTY) என்ற தலைப்பில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை EIFF பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்தித்து இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டது.

Saturday, February 23, 2013

மனித உரிமைகளை காக்கப் போராடும் அமெரிக்காவின் மறுபக்கம்

லக  அளவில் மனித உரிமை 
மீறல்கள், சமூக அநீதிகள், சர்வதேச 
விதிகள் மீறல்கள், குற்றவியல் 
சட்டங்களை தவறாகப் 
பயன்படுத்துதல்  போன்றவை 
நிகழும் நாடுகளில் அவற்றை 
ஆராய்ந்து  கண்டறிந்து  
வெளிச்சத்திற்கு கொண்டுவந்து நீதி 
கேட்டுப் போராடும்  ஓர் அமைப்பு 
ஓப்பன் சொஸைட்டி 
ஃபவுண்டேஷன்  (OPEN SOCIETY FOUNDATION).

 14 நாடுகளில் அலுவலகங்களுடன் இயங்கும் இதன் தலைமை 
அலுவலகம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருக்கிறது. ஜார்ஜ் 
(GEROGE SOROS) என்ற செல்வந்தரால் அரசாங்கங்களின் ஆதிக்கத்தினால் 
மனித உரிமைகள் அழிக்கப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற 
குறிக்கோளுடன் 1979ல்  துவக்கப்பட்ட  ஓர் அறக்கட்டளை இது. இன்று  
ஒரு மிகப் பெரிய  சர்வதேச அமைப்பாக  உயர்ந்திருக்கிறது. ஐக்கிய 
நாடுகள் சபை அங்கீகரித்திருக்கிறது. இந்த அமைப்பின்   நீதி மற்றும் 
சட்டப்பிரிவு சமீபத்தில் ஓர் அதிர்ச்சியான அறிக்கையை 
வெளியிட்டிருக்கிறது.

சென்னையில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய ரயில் மறியல் போராட்டம் -500 பேர் கைது!

final
    தமிழகத்தை தொடர்ந்து பறக்கணிக்கும் இரயில்வே துறையை கண்டித்தும், வரும் பட்ஜெட்டில் தமிழகத்தில் தேவையான புதிய இரயில்களையும், திட்டங்களையும், நிதி ஒதுக்கீட்டையும் அறிவிக்கக் கோரியும். இராயபுரம் இரயில் நிலையத்தை 4வது முனையமாக விரைந்து செயல்படுத்தக் கோரியும் எஸ்.டி.பி.ஐ கட்சி  சென்ட்ரல் இரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தியது.
            இந்த போராட்டத்தில் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் ஜாகிர் உசேன், ரெத்தினம் அண்ணாச்சி,  வட சென்னை மாவட்ட தலைவர் எஸ்.அமீர் ஹம்சா, தென் சென்னை  மாவட்ட தலைவர் முஹம்மது உசேன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்  பிலால், திருவள்ளூர் மாவட்ட தலைவர் புகாரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Friday, February 22, 2013

புதுவலசை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு!


.புதுவலசை கடற்கரையில் இன்று (22.02.2013) வெள்ளிக் கிழமை காலை அடையாளம் தெரியாத 30 வயது மதிக்க தக்க ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சடலம் ஒன்று கரை ஒதுங்கியதால் நமதூர் கடற்கரையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஹைதராபாத் குண்டுவெடிப்பு – வன்மையாக கண்டிக்கத்தக்கது! மத்திய அரசின் தோல்வி! – சரியான திசையில் விசாரணை வேண்டும்!


press relese(bomp blast)  SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;
           நேற்று ஹைதராபாத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுயில் குண்டுகள் வெடித்து 15க்கும் மேற்ப்பட்டோர் பலியான செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது. பலியான மற்றும் காயமடைந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஷிண்டேவின் முரண்பட்ட கருத்துகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்



மத்திய உள்துறை அமைச்சர் திரு.சுஷில் குமார் ஷிண்டே அவர்கள் பி.ஜே.பி குறித்து தான் வெளிப்படுத்திய கருத்துகளிலிருந்து பின்வாங்கும் விதமாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் “சிந்தன் சிபிர் கூட்டத் தொடரில்” கருத்துக்களை வெளியிட்டிருப்பதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.இது குறித்து அதன் தேசிய மக்கள் தொடர்பாளர் நேற்று டில்லியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாலேகான் தொடங்கி சம்ஜவ்தா குண்டுவெடிப்புகள் வரை நடத்தியவர்கள் குறித்த உண்மைகளை வெளியிடுவதற்கு இன்னும் பொருத்தமான வார்த்தைகளை வேண்டுமானால் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் எத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தினாலும் நூற்றுக்கணக்கனோர் படுகாயமடைவதற்கும், கொல்லப்படுவதற்கும் காரணமான இக்கொடூரகுற்றங்களுக்கு பின்னால் ஹிந்துத்துவவாதிகளின் கைகள் இருப்பதனை மறைக்க இயலாது .

திரைத்துறை - ஒரு சமூகப் பார்வை" சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கருத்தரங்கம்


 தமிழ் திரைப்படத் துறையில் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. அண்மையில் வெளியான கமலஹாசனின் விஸ்வரூபம் உலக மக்களுக்கு நல்லுபதேசமான இறை வேதம் திருக்குர்ஆன் மற்றும் முஸ்லிம்களின் வழிப்பாட்டு முறைகள் தீவிரவாதத்தை தூண்டுவதாக சித்தரித்தது. 
இதற்கு எதிராக முஸ்லிம் சமூகம் வெகுண்டெழுந்தது. இந்நிலையில் திரைப்படத் துறையினருக்கு சமூகம் குறித்த பார்வை தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் "திரைத்துறை - ஒரு சமூகப் பார்வை" கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டல் பாண்டியனில் வைத்து பிப்ரவரி 20 அன்று மாலை 6:45 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் தலைமையில் நடைப்பெற்றது.

தொடர் குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம்


ஹைதராபாத் நகரில் நேற்றைய தினம் (21.02.2013) நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 15 அப்பாவிகள் பலியாகினர்.  83 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இக்குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது .இது குறித்து அதன் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இறந்த பதினைந்து அப்பாவிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் , காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் . இதைப் போன்ற தாக்குதல்கள் மக்களிடையே அமைதியின்மையையும் ,நல்லிணக்கத்தையும் குலைக்கின்றன. இத்தருணத்தில் எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு தீய சக்திகளின் சதிகளை முறியடிக்க வேண்டும் .

சென்னை மற்றும் நெல்லையில் SDPI இன்று இரயில் மறியல்


images (1)
தமிழகம் இரயில்வே துறையில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா )கட்சி சார்பில் இன்று இரயில் மறியல் நடைபெறுகிறது.

சென்னையில் மாநிலத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் மாலை சுமார் 4 மனி அளவில் சென்னை செண்ட்ரல் இரயில் நிலையத்தில் இரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்யப்படும்.

Thursday, February 21, 2013

நிரபராதி என்று நிரூபிக்கட்டும்:அப்புறம் விசா வழங்குவது பற்றி பார்க்கலாம்- மோடி பற்றி அமெரிக்கா

No change in policy for visa to Narendra Modi, says US

புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடிக்கு ஏற்படுத்திய விசா தடையில் மாற்றமில்லை என்று அமெரிக்க ஸ்டேட் அஸிஸ்டெண்ட் செகரட்டரி ராபர்ட் ப்ளேக் தெரிவித்துள்ளார்.
மோடிக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு வெளியாகாமல் விசா மறுப்பை தளர்த்தவோ, மாற்றம் ஏற்படுத்தவோ செய்யப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ராபர்ட் ப்ளேக் இவ்வாறு தெரிவித்தார்.

பிரபாகரனின் மகன் மிருகத்தனமான கொலை -இலங்கையின் போர் குற்றமும், மனித உரிமை மீறலும் மீண்டும்மொருமுறை நிரூபணம்


press SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
இலங்கையில் நடைபற்ற இறுதி போரில் இலங்கை ரானுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் என்ற பாலகனை இலங்கை ராணுவம் மிகக் கொடூரமாக சுட்டு கொன்ற புகைப்படங்களை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த செயல் மிக கொடூரமானது, மிருகத்தனமானது.இந்த புகைப்படம் உண்மையானது என நிபுணர்களால் நிருபிக்கப்பட்டுள்ளது .

Wednesday, February 20, 2013

பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம்:பீகார் சட்டப்பேரவையில் அமளி!

சூரிய நமஸ்காரம்-பீகார் சட்டப்பேரவையில் அமளி!

பாட்னா:பீகார் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம் தொடர்பான பிரச்சனை சட்டப்பேரவையில் அமளி, துமளியை உருவாக்கியது.சூரிய நமஸ்காரத்தை எதிர்த்த ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர்களை பாகிஸ்தான் ஏஜண்டுகள் என்று ஆட்சேபித்த இரண்டு பா.ஜ.க அமைச்சர்களை ராஜினாமாச் செய்யக்கோரி சட்டப்பேரவையில் அமளி நடந்தது.
அவையில் ஆளுநர் தேவானந்த் கோன்வார் உரை நிகழ்த்துகையில் பா.ஜ.க அமைச்சர்கள் ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர்களை பாகிஸ்தான் ஏஜண்டுகள் என்று கூறி அவமதித்தனர். இதில் கோபமடைந்த ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர்கள் அவையின் நடுப்பகுதிக்கு வந்தனர்.பா.ஜ.க அமைச்சர்களின் ஆட்சேபனைக்கு எதிராக முதல்வர் நிதீஷ்குமார் கூட பதில் அளிக்கவில்லை என்று எதிர்கட்சி தலைவர் அப்துல் பாரி சித்தீகி கூறினார்.

அருண் ஜெட்லி பற்றிய கருத்தில் மாற்றமில்லை- கட்ஜு

Katju

புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியை கடுமையாக விமர்சித்து ப்ரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு கட்டுரை எழுதியதால் ரோஷம் கொண்ட பா.ஜ.கவின் அருண் ஜெட்லி, அவரை அப்பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த கட்ஜு அரசியலுக்கு பொருத்தமில்லாத ஜெட்லி தான் அத்துறையில் இருந்து விலகவேண்டும் என்று பதிலளித்தார்.

ரயில்வே துறை தமிழகத்தை புறக்கணிப்பதை கண்டித்து பிப்ரவரி -22 இல் இரயில் மறியல். SDPI கட்சி அறிவிப்பு

ரயில்வே துறை தமிழகத்தை புறக்கணிப்பதை கண்டித்து பிப்ரவரி -22 இல் இரயில் மறியல். எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவிப்பு

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி 19 .02. 2013 அன்று  கோவை பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது

மாவட்ட மாநாடுகள் மற்றும் மாநில ,தேசிய நிர்வாகிகள் தேர்தல்
எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)கட்சியின் வருகிற 2 வருடங்களுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தல், கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்று வருகிறது.இந்த மாதம் இறுதிக்குள் முழுமையாக நடந்து முடிந்து விடும் .தொடர்ந்து அடுத்த மாதம் 9,10 ஆகிய தேதிகளில் திருச்சியில் கட்சியின் மாநில பொது குழு நடைபெற உள்ளது .அதில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கப்பட உள்ளனர்.தொடர்ந்து மார்ச் 30 இல் கட்சியின் தேசிய பொது குழு கோவையில் நடைபெற உள்ளது.இதில் கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Tuesday, February 19, 2013

சவூதி மன்னர் செலுத்திய இரத்தப்பணம் - இந்திய கொலைக்குற்றவாளி விடுதலை!


கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தொன்றில் ஒன்பது ஆட்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு  ஏழாண்டுகள் சிறையில் வாடிய இந்திய வாகன ஓட்டி ஒருவருக்காக சவூதி மன்னரே முன்வந்து சுமார் 653,000 சவூதி ரியால்கள் குருதிப்பணம் செலுத்தியதால்  அந்த  இந்தியர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சலீம் பாஷா, சவூதியின் தெற்குப் பிராந்தியமான கமீஸ் முஷைத் என்னும் நகருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு ஓட்டுநர் பணிக்கு வந்தார். கட்டுமான கற்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணி செய்த அவருடைய வாழ்வில் அந்த விபத்து  ஒரு திருப்பு முனையானது. டிராக்டர் ட்ரெய்லர் ஓட்டிய  பாஷா, நெடுஞ்சாலையில் மினி வேன் ஒன்றுடன் பிப் 11, 2006 அன்று மோதியதில், எட்டு சவூதி பெண் ஆசிரியைகளும், ஒரு எகிப்திய வாகன ஓட்டியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த விபத்தில் பாஷா மீது தவறு இருப்பது கண்டறியப்பட்டு பாஷா சிறை வைக்கப்பட்டார்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்


திருச்சி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும்  “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு  "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .

அதன் அடிப்படையில் திருச்சியில்  " யூனிட்டி மார்ச் " என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப்  இந்தியாவின் மதுரை மாவட்ட தலைவரும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான S.P.நஸ்ருதீன்  துவக்கவுரை நிகழ்த்தி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியானது சரியாக 3 மணியளவில் மரக்கடை ஸ்டார் தியேட்டர் அருகில்  துவங்கி பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலையில் நிறைவு பெற்றது .தொடர்ச்சியாக பேரணியின் முடிவில் மாபெரும்  பொதுக் கூட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : நாகர்கோவிலில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்


கன்னியாகுமரி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும்  “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு  "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .

அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் " யூனிட்டி மார்ச் " என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப்  இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் A.முஹம்மது யூசுப் துவக்கவுரை நிகழ்த்தி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.பேரணியானது சரியாக 3 மணியளவில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில்  துவங்கி ,பெண்கள் கிறிஸ்தவக்  கல்லூரி, வடசேரி  பேருந்து நிலையம் வழியாக சென்று அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நிறைவு பெற்றது .தொடர்ச்சியாக பேரணியின் முடிவில் மாபெரும்  பொதுக் கூட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : தாம்பரத்தில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்


காஞ்சிபுரம் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும்  “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு  "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் "திரைத்துறை - ஒரு சமூகப் பார்வை " கருத்தரங்கம்



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக "திரைத்துறை - ஒரு சமூகப் பார்வை " என்ற தலைப்பில் கருத்தரங்கம் வருகின்ற 20 பிப்ரவரி 2013 அன்று சென்னை எழும்பூர் பாண்டியன் ஹோட்டலில் மாலை 6.45 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  மாநில தலைவர் A.S இஸ்மாயில் , மாநில செயற்குழு உறுப்பினர் A.அஹமது ஃபக்ருதீன் , எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி , இயக்குனர் சீமான், இயக்குனர் அமீர் மற்றும் நடிகர் ராதாரவி ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்த இருக்கிறார்கள் .

இஸ்ரேலிய வீரர், துப்பாக்கியால் சிறுவனுக்கு ‘குறி வைத்த’ போட்டோ அவுட் ஆகி பரபரப்பு!


இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் தனது ஸ்னைப்பர் துக்காக்கியால், பாலஸ்தீன சிறுவன் ஒருவனை குறிவைத்தபோது எடுக்கப்பட்ட போட்டோ, சமூக இணையத்தளத்தில் வெளியாகியதில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது இஸ்ரேலிய ராணுவம்.

மேலேயுள்ள போட்டோ, மொர் ஈஸ்ட்ரோவ்ஸ்கி என்ற இஸ்ரேலிய ராணுவ வீரரின் சமூக இணைத்தள பக்கத்தில் சிறிது நேரம் போஸ்ட் செய்யப்பட்டிருந்தது. உடனடியாகவே போட்டோ கடும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, ராணுவ வீரர் தமது சமூக இணையத்தள பக்கத்தை ரத்து செய்து விட்டார்.

Monday, February 18, 2013

மோடி:பா.ஜ.கவின் குற்றச்சாட்டிற்கு மார்க்கண்டேய கட்ஜு பதில்!

katju-jaitley

புதுடெல்லி:”கோத்ராவில் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பது இப்போதும் மர்மமாகவே உள்ளது’, 2002-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவங்களில் மோடிக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறுவது நம்புவதற்கு கடினமாக உள்ளது. ஜெர்மனியில்1933-ம் ஆண்டு அந்நாட்டு மக்கள் ஹிட்லரின் நாஜி கட்சியைத் தவறாக தேர்வு செய்தனர். அதேபோன்ற தவறை நமது மக்களும் செய்துவிடக் கூடாது.” என்று குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் விபத்து சம்பவத்திற்கு பிறகு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக எழுதிய கட்டுரையில் மார்க்கண்டேய கட்ஜு கூறியிருந்தார்.
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள அருண் ஜெட்லி கூறுகையில், “மோடி குறித்து கட்ஜு எழுதியுள்ள கட்டுரை தனிப்பட்ட முறையில் பகைமை கொண்டு விமர்சிப்பதாக உள்ளது.

மக்கள் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்திற்கான உறுதிமொழியை புதுப்பித்த பாப்புலர் ஃப்ரண்ட் தினம்!

சென்னை:வகுப்புவாத பாசிசம், ஏகாதிபத்திய பயங்கரவாதம், சமூக அநீதி ஆகியவற்றிற்கு எதிராக பெங்களூர் திப்புசுல்தான் நகரில் இருந்து நவீன சமூக சக்திப்படுத்துதலின் ஒளி விளக்காக ஜொலித்து புதிய இந்தியாவிற்கான புதிய பயணத்தை துவக்கிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்கள் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்திற்கான உறுதிமொழியை புதுப்பிக்கும் விதமாக நேற்று(பிப்ரவரி 17) பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை கடைப்பிடித்தது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும், தமிழகத்தில் 3 இடங்களிலும், கேரளாவில் 14 இடங்களிலும் கர்நாடாகா மாநிலத்திலும், இந்தியாவின் இன்னும் பல மாநிலங்களிலும் உரிமை போராட்டத்தின் முழக்கங்களை எழுப்பி யூனிட்டி மார்ச், பேரணி,பொதுக்கூட்டங்கள் நடந்தேறின.

திண்டுக்கல்லில் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற கோரி SDPI கட்சி முற்றுகை போராட்டம்


திண்டுக்கல்லில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய முற்றுகை போராட்டம்
திண்டுக்கல் அங்குவிலாஸ் இறக்கத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் அப்பகுதி மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.குடிப்பவர்கள் போதையினால் பொதுமக்களுக்கும்,மாணவ மாணவிகளுக்கும் தொந்தரவு கொடுத்து வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஏராளமானோர் அப்பகுதியில் ஒன்று கூடி டாஸ்மாக் மது பானக்கடையை அகற்றக்கோரி நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளை நிலங்கள் வழியாக எரிவாயு கொண்டு செல்ல முயன்றால் போராட்டம்- SDPI ஈரோடு மாவட்ட தலைவர் அறிவிப்பு


erode district president hasan babu
ஈரோடு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஹசன்பாபு தலைமையில் இன்று நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் விளை நிலங்களுக்கு அடியில் குழாய்கள் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Sunday, February 17, 2013

அறிவுஜீவிகளை கவர அமெரிக்கா திட்டம்


images (1)
அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பலதுறைகளில் சிறந்துவிளங்குவோருக்காக ஒரு லட்சத்து 25ஆயிரம் விசாக்களை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.பல துறைகளில் சிறந்துவிளங்கும் தொழில் முனைவோருக்கு 75 ஆயிரம் விசாக்களையும், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பட்டதாரிகளுக்காக 50ஆயிரம் விசாக்களையும் உருவாக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

இதுதொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் சட்ட மசோதா கொண்டுவந்துள்ளனர்.

குஜராத்தில் முஸ்லிம்களுக்கான ஸ்காலர்ஷிப்பை அமல்படுத்தவேண்டும் – உயர்நீதிமன்றம்!


அஹ்மதாபாத்:மத்திய அரசின் முஸ்லிம் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்பை குஜராத் மாநிலத்தில் அமல்படுத்த வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத அடிப்படையில் அளிக்கப்படும் ஸ்காலர்ஷிப் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறி முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்காமல் தடுத்து வைத்த நரேந்திரமோடி அரசின் வாதங்களை நிராகரித்த குஜராத் உயர்நீதிமன்றத்தின் பெஞ்ச் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வெளியிட்டது.

Saturday, February 16, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் தினம்:பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள்

சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி:


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக இந்தியா முழுவதும் கடைபிடிக்கவுள்ளது. இந்தியாவில் நடந்த சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது காலடித்தடங்களை பதித்து வருகின்றது.

அப்சல் குரு தூக்கு தண்டனை பற்றி கேப்டன் டிவியில் நடந்த கருத்து பரிமாற்றம்




அப்சல் குருவுக்கு  தூக்கு தண்டனை விதிதத்தை பற்றி கேப்டன் தொலைகாட்சியில் சிந்தனை களம் நிகழ்ச்சியில் தனது கருத்தை பதிவு செய்கிறார் SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது.

“இந்தியாவில் யாருக்கு லஞ்சம் குடுத்திங்க?” இத்தாலியிடம் விளக்கம் கேட்கிறது டில்லி


2 அதிநவீன ஹெலிகாப்டர்களை மத்திய அரசு வாங்கிய விவகாரத்தில் 362 கோடி கமிஷன் இந்தியாவில் ‘யாருக்கோ’ கைமாறியதாக இத்தாலிய விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அது தொடர்பான விபரங்கள் இத்தாலியிடம் கேட்டுள்ளது மத்திய அரசு.

இந்த ஊழல் தொடர்பாக பின்மெக்கானிக்கா கம்பெனியின் துணை நிறுவனமான அகஸ்ட்டா வெஸ்ட்லேண்டிடம் இந்தியா நேற்று முறைப்படி விளக்கம் கேட்டு உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

வினோதினி மரணம் :குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தி காரைக்காலில் NWF சார்பாக ஆர்ப்பாட்டம்


காரைக்காலை சார்ந்த பெண் இன்ஜினியர் வினோதினியை சுரேஷ் என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்தார். தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் கடந்த தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றிருந்த போது அவர் மீது ஆஸிட்டை வீசினார். தந்தையுடன் வந்து கொண்டிருக்கும் போதே இந்த கொடுமை நடந்தது. இரு கண்களிலும் பார்வையை இழந்து கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர் பிப்ரவரி 12 அன்று மரணம் அடைந்தார்.

Thursday, February 14, 2013

அப்சல் குரு தூக்கு:சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

2001 டிசம்பர் 13 ஆம் நாள் நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு கடந்த 9.2 .2013 அன்று காலை 8 மணி அளவில் தூக்கிலிடப்பட்டார்.இதைக் கண்டித்து சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில்கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் NCHROவின் மாநில குழு உறுப்பினர் A ராஜா முஹம்மது துவக்க உரை நிகழ்த்தினார். 

 வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன்,மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு மற்றும் மனித உரிமை பாதுகாப்பு வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.இதில் மனித உரிமை ஆர்வலர்கள்,வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குஜராத் முதலீடுகள்:மோடியின் பொய் பித்தலாட்டத்தை தோலுரித்துக் காட்டும் ஆவணங்கள்!

CMIE
புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி அறிவித்துள்ள நூறுகோடி டாலருக்கான முதலீடுகள் குறித்த புள்ளிவிபரங்கள் போலியானது என்பதை ஆவணங்கள் நிரூபிக்கின்றன. சென்டர் ஃபார் மானிட்டரிங் அகாடமி(சி.எம்.ஐ.இ) அண்மையில் குஜராத்தில் முதலீடுகள் குறித்து நடத்திய ஆய்வில் குஜராத்தில் முதலீடுகள் குறித்து மோடி அறிவித்திருப்பது மிகைப்படுத்தியது என்று தெரியவந்துள்ளது.
மோடி அறிவித்தவற்றில் பெரும்பாலானவை திட்ட அறிவுரைகள் மட்டுமே. 2001-2011 காலக்கட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் மிகக் குறைவானவையே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான பெரிய திட்டங்கள் குறித்த விளக்கங்கள் கூட கிடைக்கவில்லை. அறிவித்த திட்டங்களில் நான்கில் ஒன்றை கூட குஜராத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சி.எம்.ஐ.இ கூறுகிறது. அதுமட்டுமல்ல அவற்றில் பல திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

திருச்சி மாநகராட்சியை முற்றுகையிட முயற்சி-ஏராளமான SDPI கட்சியினர் கைது


திருச்சி மாநகராட்சியை முற்றுகையிட முயற்சி-ஏராளமான எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது
திருச்சி அரியமங்கலம் 29 வார்டு தீடீர் நகர்,அண்ணா நகர்ஆகிய பகுதிகளுக்கு நிரந்தர சாலை வசதி கேட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாநகராட்சி      அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று (12.02.2013)நடைபெற்றது .
மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை தாங்கினார் .இதில் அப்பகுதி பொது மக்களும், எஸ்.டி.பி.ஐ கட்சியினரும் திரளாக கலந்து கொண்டனர். மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர்.

Wednesday, February 13, 2013

அப்சல் குருவின் தூக்கு - மக்களாட்சிக்கு ஓர் உன்னதமான நாள்: அருந்ததி ராய்

நேற்று(9/2/2013) மக்களாட்சிக்கு ஓர் உன்னதமான நாள் இல்லையா?(கட்டுரையின் ஆங்கில மூலம் 10/2/2013 அன்று எழுதப்பட்டது). தில்லியில் இளவேனிற்காலம் தொடங்கிவிட்டது. கதிரவன் உதித்தவுடன் சட்டமும் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. 2011 நாடாளுமன்றத் தாக்குதலில் முக்கிய குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்ட அப்சல் குரு காலைச் சிற்றுண்டிக்கு சற்று முன்பாக, கமுக்கமாகத் தூக்கிலிடப்பட்டார். அவரது உடல் திகார் சிறையிலேயே புதைக்கப்பட்டது. ஒருவேளை மக்பூல் பட் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே அப்சல் குரு புதைக்கப்பட்டிருப்பாரோ? (மக்பூல் பட் காசுமீரைச் சேர்ந்தவர். 1984இல் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டவர். நாளை(11/2/2013) காசுமீர் மக்கள் அவரது நினைவு தினத்தை அனுசரிக்க இருக்கிறார்கள்).
அப்சல் குருவைத் தூக்கிலிடப் போவது அவரது மனைவிக்கோ மகனுக்கோ தெரியப்படுத்தப்படவில்லை. “அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட செய்தியை அப்சல் குருவின் குடும்பத்திற்கு பதிவஞ்சல்(Registered post) மூலமாகவும் விரைவு அஞ்சல்(speed post) மூலமாகவும் அதிகாரிகள் அனுப்பி இருக்கிறார்கள். அஞ்சல் சென்று சேர்ந்ததா இல்லையா என்று உறுதி செய்யுமாறு சம்மு காசுமீர் காவல்துறைத் தலைவருக்கு(DGP) உத்தரவிடப்பட்டுள்ளது” என்று உள்துறைச் செயலாளர் (Home Secretary) ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அதைப் பற்றி யாருக்குக் கவலை? கேவலம் அவர்கள் ஒரு தீவிரவாதியின் குடும்பத்தினர் தானே.

அப்சல் குருவுக்கு வழங்கிய தூக்கு தண்டனையை கண்டித்து சென்னையில் அனைத்து கட்சிகளின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


நாடாளுமன்றக் தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகள் பிடிபடவில்லை, தண்டனையும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்படாத தாக்குதலில் ஈடுபடாத சதிச்செயலில் ஈடுபட்டதாக நிரூப்பிக்கப்படாத அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட பாரபட்சமான தூக்குத்தண்டனை நியாயமற்றது, சட்டவிதிமுறைகளுக்கு அப்பாற்ப்பட்டு மக்களின் கூட்டுமனசாட்சியின் படி தூக்குக்குதண்டனை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்பை சட்டவல்லுனர்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும், விமர்சனம் செய்திருந்த நிலையில் மத்திய அரசு தூக்குத்தண்டனை நிறைவேற்றியிருப்பது பாரபட்சமான நடவடிக்கை, எனவே மத்திய அரசைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனையான தூக்குதண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை  வள்ளுவர் கோட்டம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்பாட்டம் நடைபெற்றது .

அப்ஸல் குரு கூறிய கடைசி வார்த்தை..........!


அல் ஃபிதா – நான் ‘விடை பெறுகிறேன்’. தூக்கிலிடுவதற்கு சில நொடிகளுக்கு முன் அப்சல் குரு உதிர்த்த வார்த்தைகள் . பின்பு அப்சல் குருவின் தூக்கு மேடைக்கு கீழ் இருக்கும் பாதாளக் கதவுகள் திறக்கப்பட்டன. அதை திறப்பதற்கு ஒரு பிடியை நகர்த்தினார் மரண தண்டனையை நிறைவேற்றும் அந்த சிறைச் சாலை ஊழியர்.  

அந்த பெயர் சொல் விரும்பாத சிறைச் சாலை ஊழியர் சொன்னதாவது: 

அப்சல் குருவின் உயிர் ஒரு நிமிடத்தில் பிரிந்தது . ஆனால் சிறைச் சாலையின் விதி முறைப்படி அரை மணி நேரம் உடலை தொங்கவிடப்பட வேண்டும். அதன் பின் அவரது உடல் இஸ்லாமிய சடங்குகளுடன் திகார் சிறை எண் 3 அருகே புதைக்கப்பட்டது . கஷ்மீரைச் சார்ந்த மக்பூல் பட் கல்லறையின் அருகே அப்சல் குருவின் உடலும் புதைக்கப்பட்டது. 

தமிழ்நாடு முழுவதும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்திய " பெண்களை பாதுகாப்போம் " விழிப்புணர்வு பிரச்சாரம்

 
 தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக " பெண்களை பாதுகாப்போம் " எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது .இதில் பொதுமக்கள் அதிகம் சங்கமிக்கும் இடங்களான பஸ் ஸ்டான்ட் , ரயில்வே ஸ்டேஷன் , பள்ளி , கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் " பெண்களை பாதுகாப்போம் " எனும் தலைப்பிட்ட நோட்டிஸ் விநியோகம் செய்யப்படுகிறது.
அதன் ஒரு அங்கமாக சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது

ஆசிட் வீச்சுக்குள்ளான வினோதினி மரணம் : குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்


காரைக்காலை சார்ந்த பெண் இன்ஜினியர் வினோதினியை சுரேஷ் என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்தார். தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் கடந்த தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றிருந்த போது அவர் மீது ஆஸிட்டை வீசினார். தந்தையுடன் வந்து கொண்டிருக்கும் போதே இந்த கொடுமை நடந்தது. இரு கண்களிலும் பார்வையை இழந்து கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று (பிப்ரவரி 12) மரணம் அடைந்தார்.

இவரின் மரணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில் அப்பெண்ணின் மரணத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் அப்பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது .

Tuesday, February 12, 2013

அப்ஸல் குரு:வாக்கு வங்கி அரசியலின் இரை- SDPI

e.abubaker

புதுடெல்லி:அப்ஸல் குருவை தூக்கிலிட்ட நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சோசியல் டொமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: வாக்கு அரசியல் மற்றும் அரசியல் விளையாட்டில் அப்ஸல் குரு பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் ஏன் ? - மாநில தலைவர் இஸ்மாயில் அவர்களின் பேட்டி

மரண தண்டனை பெற்ற 17 இந்தியர்கள் நாடு திரும்பினர்! ரத்த பணம் கொடுத்து விடுதலை!


விடுவிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
விடுவிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
ஷார்ஜாவில் பாகிஸ்தானியர் ஒருவரை கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்திய கைதிகள் விடுவிக்கப்பட்டு, நேற்று இந்தியா வந்து சேர்ந்தனர். இவர்களால் கொல்லப்பட்ட பாகிஸ்தானியருக்கு ‘ரத்த பணம்’ 3.43 மில்லியன் திர்ஹாம் வழங்கப்பட்டதை அடுத்து, இவர்களது குற்றம் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் ஷார்ஜாவில் கடந்த 2009-ம் ஆண்டு பஞ்சாபை சேர்ந்த 16 பேரும் அரியானாவை சேர்ந்த ஒருவரும்  தொழிலாளியாக வேலைபார்த்து வந்தனர். அப்போது இவர்களுக்கும் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு கும்பலுக்கும் இடையே ஷார்ஜா பகுதியில் சாராயம் விற்பது தொடர்பாக சண்டை ஏற்பட்டது.
இதில் பாகிஸ்தானை சேர்ந்த மிஸ்ரி கான் என்பவர் கொல்லப்பட்டார். மூவர் படுகாயமடைந்தனர்.

மரணத் தண்டனையை நீக்கவேண்டும்! – NCHRO

NCHRO

புதுடெல்லி:மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரான மரணத் தண்டனையை வாபஸ் பெறவேண்டும் என்று மனித உரிமை அமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓ கோரிக்கை விடுத்துள்ளது. அப்ஸல் குருவுக்கு சொந்தமாக வழக்கறிஞரை நியமிக்க கூட வாய்ப்பு அளிக்கவில்லை என்று அவ்வமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இதுக்குறித்து என்.சி.ஹெச்.ஆர்.ஓ வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:

Monday, February 11, 2013

அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் பின்னணி என்ன? நேரடி ஒளிபரப்பு

எஸ்.டி.பி.ஐ (SDPI) கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள்,இன்று கேப்டன் தொலைக்காட்சியில் பிற்பகல் 1-1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரடி நிகழ்ச்சியில் அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் பின்னணி குறித்தும்,இந்திய ஆட்சியாளர்களும்,அரசு எந்திரங்களும் எவ்வாறு இந்திய அரசியல் சாசன சட்டத்தை இழிவுபடுத்தி புறக்கணிக்கின்றன என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கிறார்.

Dua For Gaza