Friday, November 30, 2012

ஃபலஸ்தீனுக்கு ஐ.நா வில் கண்காணிப்பு உறுப்பினராக அங்கீகாரம்!

General Assembly recognizes Palestine as observer state
ஐ.நா:ஐக்கிய நாடுகளின் பொது அவையில் கண்காணிப்பு உறுப்பினராக ஃபலஸ்தீனுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஃபலஸ்தீன் ஆணையம், தலைவர்கள் மற்றும் தூதரக பிரதிநிதிகளின் வெற்றியாக இந்த அங்கீகாரம் கருதப்படுகிறது.
193 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐ.நா பொது அவையில் 138 நாடுகள் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தன. 9 நாடுகளின் ஃபலஸ்தீனின் கோரிக்கையை எதிர்த்து வாக்களித்தன.

மத்திய ஆசியாவில் தவிர்க்க முடியாதவராக வளர்ந்து வரும் முர்ஸியை முடக்க இஸ்ரேல் சதி!


எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆட்சியை சீர்குலைக்க முன்னாள் அரபு லீக் தலைவர் அம்ர் மூஸாவும், இஸ்ரேலின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸிபி லிவ்னியும் ரகசியமாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல் குத்ஸ் அல் அரபி பத்திரிகையின் எடிட்டர் அப்துல் பாரி அத்வான், லண்டனில் அல் ஹிவார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் ராணுவம் காஸ்ஸாவில் தாக்குதல் நடத்துவதற்கு 10 தினங்களுக்கு முன்பாக நவம்பர் 4-ஆம் தேதி ரமல்லாவில் எதிர்பாராத சுற்றுப்பயணம் நடத்திய பொழுது லிவ்னி, அம்ர் மூஸாவை சந்தித்துள்ளார். பேச்சுவார்த்தை தொடர்பான ரகசிய தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. காஸ்ஸாவின் மீது தாக்குதல் நடக்கும் வேளையில் உள்நாட்டில் பிரச்சனைகளை உருவாக்கி முர்ஸியின் கவனத்தை திருப்பவேண்டும் என்று லிவ்னி, அம்ர் மூஸாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கொடூர பிரிவுகளை நீக்க பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கோழிக்கோட்டில் இரு தினங்கள் நடைபெற்றது. டிசம்பா 6,2008 அன்று சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட கொடூர பிரிவுகளை நீக்குமாறு இந்த செயற்குழு கோரிக்கை வைத்தது.தற்போதைய குளிர் கால கூட்டத் தொடரிலேயே ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்து இந்த பிரிவுகளை நீக்குமாறு மத்திய அரசாங்கத்தையும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்த குழு கேட்டுக்கொண்டது.

மும்பை தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணியில் மத்திய அரசாங்கம் இந்த பிரிவுகளை பெரிய அளவில் விவாதங்கள் இன்றி நிறைவேற்றியது. இதற்கு முன்னர் இருந்த சிறப்பு சட்டங்களான தடா மற்றும் பொடா சட்டத்தின் பிரிவுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் படியும் குற்றம் சாட்டப்பட்டவர் தான் ஆதாரத்தை வழங்குவேண்டுமே அல்லாமல் அரசு தரப்பு அதனை செய்ய வேண்டாம். குற்றவாளி அவதூறுக்கு உள்ளாக்கப்படுவதை தடுப்பதற்கும் எவ்வித சட்ட ரீதியான பாதுகாப்பும் கிடையாது. வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதற்கும் மூடிய அறைக்குள் விசாரணை நடத்துவதற்கும் குற்றவாளிக்கு எதிராக இரகசிய சாட்சிகளை பயன்படுத்துவதற்கும் இந்த புதிய பிரிவுகள் வழிவகை செய்கின்றன.

அஸ்ஸாமில் "ரிஹாப் இந்தியா" செய்வது என்ன?அஸ்ஸாம் அகதிகள் முகாம்களின் அவல நிலை - நேரடி ரிப்போர்ட்


அஸ்ஸாமில் கடந்த ரமலான் மாதத்தின் போது முஸ்லிம்கள் மீது “போடோ” தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்தும், இதனால் தமது சொந்த வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டது குறித்தும் கடந்த மாத விடியலில் விரிவாக குறிப்பிட்டிருந்தோம்.இதனைத் தொடர்ந்து “ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன்” சார்பாக அஸ்ஸாம் சென்ற நிவராணக் குழுவில் பங்கேற்ற பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினரும், NCHRO என்ற மனித உரிமை அமைப்பின் மாநில பொதுச் செயலாளருமான வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுப் அவர்கள் நேரடி கள ஆய்வு தகவல்களை விடியல் வாசகர்களுடன் இந்த இதழில் பகிர்ந்து கொள்கிறார்.


ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் 

ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் என்ற அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் (NGO ) டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2008ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இந்திய தேசத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, பொருளாதார, சமூக மேம்பாட்டிற்காக பாடுபடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. 
எஸ்.டி.பி.ஐ. என்ற தேசிய அரசியல் கட்சியின் தலைவர் இ.அபூபக்கர் ரிஹாப் இந்தியா தொண்டு நிறுவனத்தின் சேர்மனாகவும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஓ.எம்.ஏ. அப்துல் சலாம் இதன் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகின்றனர். 

Thursday, November 29, 2012

201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார்


லண்டன்: நான்கு ஆண்டுகளில் விமானத்தில் பறக்காமல் கடல் மற்றும் தரைவழி என பஸ், ரயில் ஆகியவற்றின் மூலம் 201 நாடுகளுக்கு பயணித்து பிரிட்டனைச்சேர்ந்த வாலிபர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பல லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து உலகை சுற்றி வந்த முதல் வாலிபர் என்ற பெருமையினை பெற்றுள்ளார்.

பிரி்ட்டனைச் சேர்ந்தவர் கிராஹம் ஹக்கிஸ் (33). இவர் பிரிட்டனின் லிவர்பூல் மாகாணத்தைச் சேர்ந்தவர். கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதியன்று தனது பயணத்தை துவக்கினார். மொத்தம் 201 நாடுகளுக்கு இவர் சுற்றுப்பயணம் செய்தார். எந்த சூழ்நிலையிலும் வேறு நாட்டிற்கு செல்ல இவர் விமானத்தை பயன்படுத்தவே இல்லை. கடந்த 2009-ம் ஆண்டு புத்தாண்டு அன்று (ஜனவரி 1-ம் தேதி) தனது பயணத்தை துவக்கி மொத்தம் 1,426 நாட்களில் 1லட்சத்து 60 ஆயிரம் மைல்கள் ( 2 லட்சத்து 46 ஆயிரம் கிலோ மீட்டர்கள்) பயணித்துள்ளர். இவற்றில் சில நாடுகளுக்கு கடலில் படகு மூலமாகவும், பக்கத்து நாடுகளுக்கு ரயில், பஸ், டாக்ஸி போன்ற வாகனங்கள் வாயிலாகவும் மொத்தம் 201 நாடுகளுக்கு சென்றார். இறுதியில் ஆப்ரிக்க நாடான தெற்கு சூடானை நேற்று சென்றடைந்தார். 

முகமது நபியை இழிவுபடுத்தி படம் எடுத்த ஏழு நபர்களுக்கு தூக்கு !


கெய்ரோ : முஸ்லீம்களின் இறுதி தூதரான முஹம்மது நபியை இழிவுபடுத்தும் வகையில், 'இன்னோசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்' என ஓர் திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டதும், அதை எதிர்த்து சென்னை உட்பட, உலகெங்கும் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றதும் அறிந்ததே.

இப்படத்தை எடுத்த ஏழு பேர் மீதும் எகிப்தில் வழக்கு தொடரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஏழு நபர்களும் எகிப்திற்கு வெளியே உள்ள நிலையில் இவ்வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சைப் அல் நஸ்ர் “ இஸ்லாம் மற்றும் அதன் தூதரை அவமானப்படுத்தும் வகையில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும் படம் எடுத்துள்ளனர் என்பது உறுதியாகிறது” என்று தீர்ப்பளித்துள்ளார்.

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு முதலமைச்சருடன் சந்திப்பு




28.11.2012 புதன்கிழமை மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்களை சந்தித்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கொடுக்கப்பட்ட நன்றி அறிதலும் , கோரிக்கைகளும்

சமீபத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படம் முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்டிருந்ததால் மிகப் பெரிய கவலையும் கோபமும் ஏற்பட்டது . இவ்வேளையில் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு மிகுந்த பொறுப்புணர்வோடு இப்பிரச்சினையை அனுகியதோடு தாங்களும் உரிய வகையில் தகுந்த நடவடிக்கைகள் எடுத்ததின் விளைவாக அப்படக் குழுவினர் கூட்டமைப்பு நிர்வாகிகளோடு சந்தித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் சிலவற்றை எடுக்க சம்மதித்தனர் . எனவே தங்களின் நியாய உணர்வுடன் கூடிய நடவடிக்கைகளுக்கு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

முஸ்லிம் சமுதாயத்தின் மீது அக்கறையுடன் செயல்படும் தங்களிடம் எம் சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கைகள் சிலவற்றை இங்கே சமர்ப்பிக்கின்றோம் .இந்த ஜீவாதார கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .

கோரிக்கைகள் :

1. பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5% இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை நீக்குவதோடு முஸ்லிம் சமுதாய மக்களின் நலனை கருத்தில் கொண்டு இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம் .

Wednesday, November 28, 2012

சி.பி.ஐ. அதிகாரிகள் வெளிநாடுகளில் பணிபுரிய, துபாய், லண்டன், நியூயார்க் செல்கிறார்கள்!

ஃபாரினா.. ஜாலிதான்!
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில், தமது அதிகாரிகளை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது சி.பி.ஐ.! முதல் கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பணிபுரிய, சி.பி.ஐ. அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

சி.பி.ஐ. இயக்குநர் ஏ.பி.சிங், “2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் உட்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு சி.பி.ஐ. விசாரணைகளில், குற்றங்கள் வெளிநாடுகளிலும் நடந்துள்ளன. அவற்றை விசாரணை செய்வதற்கு, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நியமிக்கப்படுவது அவசியமாகிறது.

இஸ்ரேலை கண்டித்து நெல்லையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆலிம்களின் தேசிய இயக்கமான ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக பாலஸ்தீன் மீது தொடர் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 25.11.2012 ஞாயிறு மாலை 5.00 மணியளவில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சந்தை முக்கில் நடைபெற்றது.இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலை சார்ந்த மௌலவி.சாகுல் ஹமீது உஸ்மானி தலைமை தாங்கினார் .
 மௌலவி.செய்யது அலி மஸ்லஹி கண்டன உரையாற்றினார் . அவர் தனது உரையில் " பாலஸ்தீன் மீதும் அங்குள்ள குழந்தைகள் , மருத்துவமனைகள் மீதும் தொடர் தாக்குதல் நடத்திய இஸ்ரேலை வன்மையாக கண்டித்தார் . மேலும் இந்தியா இஸ்ரேல் மற்றும் அதற்கு துணை நிற்கும் அமேரிக்கா உடனான அனைத்து ராஜிய உறவுகளையும் முறிக்க வேண்டும் , ஐ.நா.சபை இஸ்ரேல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்றும் வலியுறுத்தினார் . 

அணுக்கழிவு: தமிழகத்தை ஏமாற்றும் காங்,பா.ஜ கட்சிகள்!


Nuclear waste not to be dumped at Kolar gold mine- Govt to Apex court
புதுடெல்லி:அணுக் கழிவுப் பொருள்களைக் கோலார் தங்க வயல் சுரங்கத்தில் கொட்டும் நோக்கம் இல்லை என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு மின் நிலையத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அணுசக்தி எதிர்ப்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையின்போது, கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அணுக் கழிவுகள் எவ்வாறு அகற்றப்படும்? என்பதை விளக்குமாறும் உத்தரவிட்டனர்.

பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான அவதூறுகளை தடுத்த நிறுத்த வேண்டும் - மாநில செயற்குழுவில் தீர்மானம்



கடந்த 2012 நவம்பர் 19,20 ஆகிய தேதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ஏ. ஹாலித் முஹம்மது, மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில் உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் கீழ்க்காணும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

1. பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான அவதூறுகளை தடுத்த நிறுத்த வேண்டும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? என்ற பிரச்சாரம் கடந்த அக்டோபர் 10ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்டின் மீது களங்கம் விளைவிக்கும் அவதூறுகளை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இச்செயற்குழு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றது.

Tuesday, November 27, 2012

ஆப்கானில் அமெரிக்காவின் திட்டம் என்ன? வாஷிங்டன் போஸ்ட் போட்டுடைக்கிறது!!


பயிற்சி கொடுப்பாங்க!
ஆப்கானிஸ்தானை விட்டு வெளிநாட்டு படைகள் வரும் 2014-ம் ஈண்டின் இறுதியுடன் வெளியேறிவிடும் என்று கூறப்பட்டுவரும் நிலையில், அதன் பின்னரும் சுமார் 10,000 அமெரிக்க ராணுவத்தினர் அங்கே தங்கியிருப்பார்கள் என்ற தகவல் வாஷிங்டனில் இருந்து வெளியாகியுள்ளது.
மேலும் சில வருடங்களுக்கு (ஆம், வருடங்கள்) தங்கியிருக்கவுள்ள இவர்கள், ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு பயிற்சி வழங்கவே தங்கியிருக்க வேண்டியுள்ளது என வாஷிங்டன் அறிவிப்பு கூறுகிறது. ஆப்கான் ராணுவத்துக்கு தற்போது பயிற்சிகளை அமெரிக்க ராணுவம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கி வருகிறது.

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை - டிசம்பர் 6 அன்று தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுக்குழு முடிவு


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுக்குழு கூட்டம் 25.11.2012 அன்று தேனியில் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் தேசிய துணைத்தலைவர் எம்.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பாப்புலர் ஃப்ரண்ட்டின் தேசிய பொதுக்குழுவிற்கான பிரதிநிதிகளை மாநில பொதுக்குழு தேர்ந்தெடுத்தது. இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில், மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முஹம்மது, மாநில செயலாளர்கள் ஷேக் முஹம்மது அன்சாரி மற்றும் ஆரிஃப் பைசல், மாநில பொருளாளர் அஸ்கர் இப்ராஹிம், மாநில செயற்குழுஉறுப்பினர்கள், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள்ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டிசம்பர் 6 ஐ பாசிஸ எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்க பாப்புலர் ப்ரண்ட் முடிவு



பாபரி மஸ்ஜித் இடிப்பின் 20வது ஆண்டை தேசிய அளவில் பாசிஸ எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்க பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளது . "என்றும் நம் நினைவில் பாபரி மஸ்ஜித் " என்ற கருத்தை மையப்படுத்தி பொதுக்கூட்டங்கள் நடத்துவது , துண்டுபிரசுரங்கள் விநியோகிப்பது மற்றும் போஸ்டர் பிரச்சாரம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது .

பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டக் கோரியும் , மஸ்ஜித் இடிப்பில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்கக் கோரியும் அன்றைய தினம் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா நடைபெறும் . இதில் பாப்புலர் ப்ரண்டின் தேசிய தலைவர் இ .எம். அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள் .

Monday, November 26, 2012

அமெரிக்க உளவு விமானங்கள் அடுத்த தடவை அத்துமீறி வந்தால் தவறாமல் விழும் சூடு!


ஈரானின் கடற்கரை நகரமான புஷேஹ்ர்
அமெரிக்க கடற்படையினர் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஈரான் புகார் கூறியுள்ளது. தமது வான் பரப்பில் அனுமதியில்லாமல் அமெரிக்க உளவு விமானங்கள் பறக்க விடப்படுவதாகவும் ஐ.நா.விடம் புகார் தெரிவித்துள்ளது ஈரான்.
ஐ.நா.வுக்கான ஈரானிய தூதர் மொஹமெட் கசாயி, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனிடம் இது தொடர்பான புகார் கடிதத்தை கொடுத்து, நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். பெர்சியன் கடல், மற்றும் ஓமான் கடல் பகுதிகளில் அமெரிக்க கடற்படையின் அத்துமீறல்கள் நடைபெறுவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பர்தா அணிந்து உரை !


Sumaiya Karim, wearing hijab speaks in British Parliamentபிரித்தானிய நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் அணிந்து உரையாற்றிய மாணவி அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார்.

பிரிட்டிஷ் நாடு தேர்தல் ஜனநாயகத்தின் தாயகம் என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்டில், மாணவர்கள், இளைஞர்களிடையே ஜனநாயக ஆர்வத்தைத் தூண்டவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில்  இளைஞர்களின் பிரச்னைகள் குறித்து உரையாற்றவும்  தேர்ந்தெடுக்கப்படும் சில இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதுண்டு. 

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் பங்கேற்பு


கோவை : 10 ஆண்டு ஆயுள் தண்டனை முடித்த முஸ்லிம் சிறைவாசிகளையும் தமிழின உணர்வாளர்களையும், மதபேதம், இனபேதம் பார்க்காமல் கருணை அடிப்படையில் சட்டமன்ற வைரவிழா ஆண்டில் விடுதலை செய்யக் கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கோவையில் தமிழ்நாடு ஹோட்டல் அருகில் 23.11.2012 வெள்ளிக்கிழமை மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் கே.எம்.சரீப் தலைமை தாங்கினார் . இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் A.S. இஸ்மாயில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் நாசர் (முன்னால் எம்.எல்.ஏ) , திரைப்பட இயக்குனர் அமீர் அப்பாஸ், வேங்கை இப்ராஹிம், அமைப்பு செயலாளர் தர்மலிங்கம், கொள்கை பரப்பு செயலாளர் ஷாஜஹான் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஒடுக்கப்பட்ட சமூக மக்களும், சிறுபான்மையினரும் அரசியல் அதிகாரம் பெற வேண்டும்- SDPI


   சென்னை :தர்மபுரியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட   கலவரம்  தொடர்பாக    21.11.2012 அன்று சென்னையில் சமுக சமத்துவ படை தலைவர் சிவகாமி I.A.S அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயலாளர் VM.அபுதாகிர் அவர்கள் கலந்து கொண்டு தனது கருத்துகளை பதிவு செய்தார்.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக உளவுத்துறைக்கு முஸ்லிம் ஒருவர் தலைவர் ஆகிறார்!

investigation burea
புதுடெல்லி:புலனாய்வுத் துறையின் இயக்குநராக எஸ். ஆசிப் இப்ராஹிம் நியமிக்கப்பட உள்ளார். இத்தகைய உயரிய பதவிக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட உள்ளது இதுவே முதல் முறையாகும். 1977ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
இப்போது புலனாய்வுத்துறை இயக்குநராக உள்ள நேச்சல் சாந்துவின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிகிறது. ஆசிப் நியமனம் தொடர்பான உத்தரவு திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக வெளியாகும். இவரது நியமனத்துக்கு பிரதமர் மன்மோகன் தலைமையிலான பணி நியமனத்துக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.

Sunday, November 25, 2012

சீறி எழுந்த "CFI" மாணவர் கூட்டம் : அடி பணிந்த "காலிகட்" பல்கலைக்கழகம்!

கேரளாவின் "காலிகட்" பல்கலைக்கழக "தொலைதூர கல்வி" பாட புத்தகத்தின் ஆட்சேபகரமான கட்டுரையை நீக்ககோரி "Campus Front of India" (CFI) மாணவர் அமைப்பினர் போராட்டத்தையடுத்து, அதனை நீக்க பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.
B.A. (மலையாளம்) மூன்றாமாண்டு பாடத்தில், "மாப்லாஸ்"களுக்கு (மலப்புரத்தில் வாழும் "மலபார்" முஸ்லிம்கள்) எதிராக "கேரள சம்ஸ்காரம்" என தலைப்பிட்டு 31ம் பக்கத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலமான 1921ல், 500 முதல் 600 ஹிந்துக்களை, மாப்லாஸ்கள் கொன்றதாக சொல்லப்பட்டுள்ளது.

Saturday, November 24, 2012

பால்தாக்கரே குறித்த ஃபேஸ்புக் சர்ச்சை-பெண்கள் மீதான வழக்கு வாபஸ்!


பால்தாக்கரே குறித்த ஃபேஸ்புக் சர்ச்சை-பெண்கள் மீதான வழக்கு வாபஸ்! சிவசேனா தலைவர் பால் தாக்கரே மறைவு குறித்தும் அவருக்காக பந்த் தேவையில்லை எனவும் ஃபேஸ்புக்கில் விமர்சித்தற்காக 2 கல்லூரி மாணவிகள் மீது சிவசேனா கட்சி வழக்கு தொடர்ந்தது.

இதனை தொடர்ந்து இரண்டு மாணவிகளும் கைது செய்யப் பட்டனர். ஃபேஸ்புக்கில் கருத்து சொன்னதற்காக பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிரஸ் கவுன்சில் தலைவர் முன்னாள் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மகாராஷ்டிரா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Thursday, November 22, 2012

சார்மினார் அருகே முன்பு கோயில் இருந்ததில்லை – புகைப்படம் ஆதாரம்!

A photograph of the Charminar taken in 1957 showing no structure adjacent to the walls.
ஹைதராபாத்:இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் கோபுரங்களில் ஒன்றான சார்மினார் சர்ச்சையில் சிக்கியிருக்கும்சூழலில் மினாராக்களின்(சார்மினார் கோபுரம்) வரலாற்று ரீதியான உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
நான்கு மினாராக்களுடன்(கோபுரங்கள்) வானை நோக்கி கம்பீரமாக நிற்கும் ஹைதராபாத்தில் 420 வருடகால பழமையான சார்மினாரும், அதன் சுற்றுவட்டாரமும் கடந்த சில வாரங்களாக செய்திகளில் இடம் பிடித்துள்ளன. சார்மினாரின் வலப்புறம் புதிதாக கட்டப்படும் கோயில்தான் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Wednesday, November 21, 2012

நடுவானில் நினைவு இழந்த பைலட்! விமானத்தை லேன்ட் செய்த பயணி!!


விமானப் பயணத்தின்போது ஒரு பயணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால், “இங்கே யாராவது டாக்டர் இருக்கிறீர்களா?” என்ற அறிவிப்பு மேற்கொள்ளப்படுவது சகஜம். ஆனால், விமானத்தின் கோ-பைலட் உடல்நலம் பாதிக்கப்பட்டால்?
லுஃப்தான்சா (ஜெர்மன்) ஏர்லைன்ஸ் போயிங் 747 ரக விமானத்தில் நேற்று, “இங்கே யாராவது விமானி இருக்கிறீர்களா?” என்ற அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆச்சரியகரமாக பயணிகளிடையே ஒரு விமானியும் இருந்தார். போயிங் 747 விமானத்தை இயக்க லைசென்சை வைத்திருக்கும் நபராகவும் அவர் இருந்தார்.

அமெரிக்கா நியூஜெர்சியில் (Newark) இருந்து, ஜெர்மனியின் பிராங்பர்ட் நோக்கி பறந்து கொண்டிருந்த 747 விமானத்தின் போ-பைலட்டே உடல்நலம் குன்றி, நினைவிழந்து, தொடர்ந்து விமானத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த விமானத்தில் இருந்த பயணிகளில் ஒருவர், அமெரிக்க விமான நிறுவனம் ஒன்றின் போயிங் 767 பைலட். அத்துடன், 747 விமானம் செலுத்துவதிலும் பயிற்சி பெற்றவர்.

Tuesday, November 20, 2012

இந்தியா: இஸ்ரேல் தூதரகத்தை நோக்கி மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள் கண்டனப் பேரணி!

isreal embessy protest in delhi
புதுடெல்லி:ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் அப்பாவி மக்களை கொன்றுக் குவிக்கும் இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலை கண்டித்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை நோக்கி மனித உரிமை ஆர்வலர்களும், மாணவர்களும் கண்டனப்  பேரணி நடத்தினர். என்.சி.ஹெச்.ஆர்.ஓ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஐஸா, ஜெ.என்.யூ ஸ்டுடண்ட்ஸ் யூனியன், எ.ஐ.பி.டபிள்யூ.எ, எ.ஐ.சி.சி.டி.யூ, எல்.டி.டி.எஃப் உள்ளிட்ட அமைப்புகளின் தலைமையில் இந்த கண்டனப்பேரணி நடைபெற்றது.
அவரங்கசீப்-ஜன்பத் சாலை சந்திப்பில் இருந்து துவங்கிய பேரணி, இஸ்ரேல் தூதரகத்தை நோக்கி செல்லும் வழியில் போலீஸ் தடுப்புகளை ஏற்படுத்தி தடைசெய்தது. இஸ்ரேல் மீதான கடும் எதிர்ப்பால் கொந்தளித்த மக்கள் போலீசின் தடுப்புகளை மீற முயன்ற போது தலைவர்கள் தலையிட்டு தடுத்தனர். நிரபராதிகளின் இரத்தத்தை உறியும் புற்றுநோய்தான் இஸ்ரேல் என்றுஎன்.சி.ஹெச்.ஆர்.ஓ தேசிய செயலாளர் வழக்கறிஞர் எ.முஹம்மது யூசுஃப் கூறினார்.

Monday, November 19, 2012

பால்தாக்கரேயின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்!


பால்தாக்கரேயின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்!பால்தாக்கரேவின் குடும்ப மருத்துவராக டாக்டர் ஜலீல் பார்க்கர் என்ற ஒரு இஸ்லாமியரே இருந்து வந்துள்ளார்.
இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கையின் தீவிரத் தலைவர் என்று முத்திரை குத்தப்பட்ட பால் தாக்கரே, தன்னுடைய குடும்ப மருத்துவராக டாக்டர் ஜலீல் பார்க்கர் என்ற இஸ்லாமியரையே வைத்திருந்திருக்கிறார். மேலும் தன் உடல்நிலை குறித்து அனைத்து ஆலோசனைகளும் ஜலீல் பார்க்கரிடமே கேட்டு வந்துள்ளார்.

தாக்கரேவுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படும்போது, டாக்டர் ஜலீல் பார்க்கர் தாக்கரேவின் இல்லமான மாதோஸ்ரீக்கு அடிக்கடி வருகை தந்து இவருக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். தாக்கரேவின் மிக நம்பிக்கைக்குரிய மருத்துவர் என அவரது உறவினர்கள் ஜலீல் பார்க்கர் குறித்து தெரிவித்துள்ளனர்.

Sunday, November 18, 2012

காஸ்ஸா:சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் – எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!

இ.அபூபக்கர்
புதுடெல்லி:காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய  விமானத் தாக்குதலில் மூத்த ஹமாஸ் கமாண்டர் அஹ்மத் ஜஃபரியும், பெண்களும், குழந்தைகளும் உள்பட ஏராளமானோர் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வன்மையாக கண்டித்துள்ளார்.
இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: “மக்களை இத்தகைய காட்டுமிராண்டித் தனமாக கூட்டுப் படுகொலைச் செய்வது சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களை கடுமையாக மீறுவதாகும். ஃபலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தாக்குதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டும்.

Saturday, November 17, 2012

ஃபலஸ்தீன் விவகாரம்! இஸ்ரேலுக்கு எதிராகஉலகமெங்கும் கண்டனப் பேரணிகள்!

protest in all over world
லண்டன்:உலகின் பல்வேறு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. தடைகளால் துயரத்தில் ஆழ்ந்துள்ள காஸ்ஸாவின் மீது இஸ்ரேல் பயங்கரவாத ராணுவம் விமானத் தாக்குதலை வலுப்படுத்தியுள்ள சூழலில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.
லண்டனில் இஸ்ரேல் தூதரகத்தின் முன்னால் ஃபலஸ்தீன் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கண்டனப் போராட்டத்தை நடத்தினர். காஸ்ஸாவில் இஸ்ரேலின் கூட்டுப்படுகொலையை தடுத்து நிறுத்துங்கள்! மேற்காசியாவை போர் சூழலில் இருந்து காப்பாற்றுங்கள்! மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்துங்கள்! உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பி மக்கள் தூதரகத்திற்கு வெளியே கண்டனப்பேரணியை நடத்தினர்.

அனைத்து குருபூஜை நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்க வேண்டும்- SDPI வலியுறுத்தல்


தருமபுரியில் தலித் மக்கள் மீது ஜாதிய வன்முறை நடத்தப்பட்டதை கண்டித்தும், தென் மாவட்டங்களில் நடைபெற்ற கலவரங்களை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ கட்சி) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் இன்று(16.11.2012) மாலை மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்றது.
கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வரவேற்றார். வட சென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா, தென் சென்னை மாவட்ட தலைவர் முகம்மது உசேன், காஞ்சி மாவட்ட தலைவர் முகம்மது பிலால், திருவள்ளூர் மாவட்ட தலைவர் புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விசிக மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார், கேரளா எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச்செயலாளர் மனோஜ் குமார், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத் தலைவர் முகம்மது இஸ்மாயில் , தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் நாஞ்சில் செய்யதலி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

Thursday, November 15, 2012

இராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்! தமிழக காவல்துறை இணை இயக்குநரிடம் எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை மனு!!


இராமநாதபுரம் மற்றும் கோவை மாவட்டங்களில் வாழக்கூடிய முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடக் கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக இன்று (14-11-2012) காவல்துறை ஏ.டி.ஜி.பி யிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 30 தேவர் குரு பூஜையின்போது நடந்த அசம்பாவித சம்பவங்களை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றமும், முஸ்லிம்கள் மீதான வன்முறையும் நடந்தேறியுள்ளது. முஸ்லிம் வியாபாரிகளுக்கு சொந்தமான வியாபார தலங்கள் லட்சக்கணக்கில் சேதப்படுத்தப்பட்டன. இரு சாதியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சமூக விரோதிகள் மதக்கலவரமாக மாற்ற முயற்சித்து வருகின்றனர்.

போதையில் மிதந்த தமிழகம்! – 2 நாளில் ரூ.270 கோடி விற்பனையாம்!

போதையில் மிதந்த தமிழகம்!
சென்னை:தனிமனித வாழ்க்கையையும், குடும்பத்தையும், சமூகத்தையும் சீரழிக்கும் மதுவை மக்கள் நலன் கருதாமல் வருமானத்தை குறிவைத்து அரசே கடைகளை நடத்தி வரும் அலங்கோலம் தமிழகத்தில் புதிய சாதனையை படைத்து வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளில் மட்டும் ரூ.270 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த தீபாவளியன்று ரூ.20 கோடி அதிகமாக விற்பனையாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 6,823 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக ரூ.80 கோடி முதல் ரூ.100 கோடி வரை மதுபான விற்பனை நடந்துள்ளது. பண்டிகை நாட்களில் வழக்கமாக விற்பனை சூடு பிடிக்கும். தீபாவளி என்றால் உச்சத்தை தொடும்.

Wednesday, November 14, 2012

இன்று "பழனி பாபா" பிறந்த நாள்!


1950 நவம்பர் 14 ஆம் நாள், என்.வி.முஹம்மது அலி - கதீஜா பீவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், "பழனிபாபா". இயற்பெயர் அஹமது அலி.

ஒடுக்கப்பட்டோர் அரசியல் விடுதலை; இஸ்லாமிய கருத்தியல்; சிறுபான்மையினர் பாதுகாப்பு; உழைக்கும் வர்க்கச் சார்பு; முஸ்லிம் சமுதாய விழிப்புணர்வு; என, தனது கொள்கைகளை வரையறுத்துக் கொண்ட அவர், அக்கொள்கைகளின் அடிப்படையில் மிகத் தீவிரமாக களமிறங்கினார்.

தமிழகத்தில் அவர் பயணிக்காத கிராமங்களே இல்லை.1980 களில் நிகழ்ந்த மீனாட்சிபுரம் மதமாற்றத்தை தொடர்ந்து, குமரிமாவட்டம் மண்டைக்காட்டில் ஆர்.எஸ்.எஸ். கலவரம் செய்தது.

'இந்து முன்னணி' என்ற பெயரில் களமிறங்கிய இந்துத்துவ சக்திகள், அமைதிப்பூங்காவான தமிழகத்தை அமளிக்காடாக்கினர். விநாயகர் ஊர்வலத்தை அறிமுகப்படுத்தி, முஸ்லிம்களை வம்புக்கு இழுத்தனர்.

'காமவெறியில் விஞ்சி நிற்பவள் கதீஜாவா? அன்னை மேரியா? மணியம்மையா?' என்ற தலைப்பில் பட்டிமன்றங்களை நடத்தினர்.

முஸ்லிம்களின் உயிருக்கு உயிரான நபிகளாரைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்தனர். ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இத்தகைய அராஜகச் செயல்களால் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்தது.

இந்துத்துவ வெறியர்களின் கோரத்தாக்குதலுக்கு இலக்காகிய முஸ்லிம்கள், பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். பேசவே பயந்து, வாய் பொத்தி ஊமையாய்க் கிடந்த சமூகத்திற்கு, கேள்வி கேட்க கற்றுத் தந்தார்.

இந்து முன்னணியின் மதவெறிக் கூட்டங்களுக்கு எதிர் கூட்டம் போட்டு, தமது அபாரமான பேச்சுத் திறனால் தக்க பதிலடி கொடுத்தார். அவர் கலவரத்தை விதைத்தவர் இல்லை; கலவரத்தை விதைத்தவர்களுக்கு எதிரான கருத்தை விதைத்தவர்.

பாபாவின் தனித் திறமைகளினாலும், நாவண்மையினாலும் ஈர்க்கப்பட்ட அரசியல் தலைவர்களும், சமூக சிந்தனையாளர்களும் அவருக்கு நெருக்கமானார்கள். பழனிபாபா, தனது பொதுவாழ்க்கைப் பயணத்தில், முதலில் எம்ஜிஆருடன் நெருக்கமாக இருந்தார்.

பின்னர் கலைஞருடன் இருந்தார்.ஒரு கட்டத்தில் கலைஞருடனும் முரண்பட்டார் பாபா. இறுதியில், டாக்டர் ராமதாசோடு நெருங்கிய பாபா, அவரோடும் முரண்பட்டு விலகினார்.

பழனிபாபா, எம்ஜிஆரையும் - கலைஞரையும் - ராமதாசையும், சமுதாயத்திற்காகவே ஆதரித்தார்; சமுதாயத்திற்காகவே எதிர்த்தார்.

சுயநல அரசியலையோ, அல்லது பிழைப்புவாத அரசியலையோ அவர் முன்னெடுத்திருந்தால் எந்தத் தலைவரோடும் அவருக்கு முரண்பாடுகள் ஏற்பட்டிருக்காது.

1997, ஜனவரி 28 ஆம் நாள் பழனிபாபா படுகொலை செய்யப்பட்டார்.

'நான் வாழ வந்தவனல்ல; மாள வந்தவன்' என்று செல்லுமிடமெல்லாம் முழங்கிய அவர் சொன்னது போலவே மாண்டுபோனார்.

அல் அஸ்ஹர் ஜும்ஆவில் கர்ழாவி, முர்ஸி, எர்துகான் பங்கேற்பு!

yusuf al qardawi
கெய்ரோ:உலகப் பிரசித்திப் பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் கர்ழாவி எகிப்தில் உள்ள பிரபல அல் அஸ்ஹர் பல்கலைக்கழக மஸ்ஜிதில் ஜும்ஆவில் (வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை) தலைமையேற்று நடத்த உள்ளார். அல் அஸ்ஹரில் இதுவரை கர்ழாவி ஜும் ஆவுக்கு தலைமை தாங்கி
நடத்தியதில்லை. எகிப்தில் தொடர்ந்து ஆண்டு வந்த சர்வாதிகார ஆட்சியாளர்களால் கத்தர் நாட்டில் வாழ்ந்து வந்தவர் கர்ழாவி.

சார்மினார் அருகே தடை உத்தரவு நீடிக்கிறது! எம்.ஐ.எம்முடன் காங்.பேச்சுவார்த்தை!

chaarminaar
ஹைதராபாத்:ஆந்திர மாநில காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு வாபஸ் பெற்றுள்ள மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் (எம்.ஐ.எம்) கட்சியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. சார்மினார் அருகே கோயில் விரிவாக்க பணிகள் தொடர்பாக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்ட முடிவை மறு பரிசீலனை செய்யக்கோருவதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
அதேவேளையில் தங்களின் முடிவை மாற்றிகொள்ளமாட்டோம் என்று எம்.ஐ.எம் அறிவித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க சார்மினாருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் பாக்கியலெட்சுமி கோயில் கட்டுமானப்பணிக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால், அதையும் மீறி காங்கிரஸ் அரசு சங்க்பரிவார்களுடன் கூட்டு வைத்து கோயில் கட்டும் பணிகளை தொடரஅனுமதித்தது.

அஸ்ஸாமில் தொடரும் நிவாரணப் பணிகள்! கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2-ம் கட்டமாக வீடுகளை வழங்கியது ரிஹாப்!

Rehab Indian Foundation enter fourth Phase of relief activities
குவஹாத்தி:ரிஹாப் இந்தியா பவுண்டேசன் சார்பாக அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2-வது கட்டமாக வீடுகளை வழங்கும் நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் துவக்கி வைத்தார். போகைகானில் ஹபாஸரா கிராம பஞ்சாயத்தில் ரிஹாபின் மாதிரி கிராமத்தில் கட்டப்பட்ட 31 வீடுகள் அளிக்கபட்டன.

Tuesday, November 13, 2012

பாப்புலர் ஃப்ரண்டின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு!-கடும் எதிர்ப்பு!

why popular front
ஹைதராபாத்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த ஆந்திர போலீசுக்கு எதிராக ஹைதராபாத் நகரத்தில் பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. தேச அளவிலான ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்?’ என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம் குர்னூலில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதனை கண்டித்து கண்டனப்பேரணி நடத்தப்பட்டது.

எகிப்தில் ஹிஜாப்புடன் விமானப் பணிப்பெண்கள்


எகிப்தின் வரலாற்றில் முதல் முறையாக ஹிஜாப்புடன் விமானப் பணிப்பெண்கள்

எகிப்து விமான பணிப்பெண்கள் எகிப்தின் விமான சேவை வரலாற்றில் முதல் முறையாக ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட்டுள்ளனர் . எகிப்தில் பெண்கள் தொலைக்காட்சி நிகழ்சிகளில் ஹிஜாப்புடன் தோன்றுவதற்கும் , எகிப்திய விமான பணிப்பெண்கள் விமானத்தில் ஹிஜாப் அணிந்து கடமைபுரியவும் இருத்த தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளது .

மீண்டும் மதக் கலவரத்தை நோக்கி தமிழகம்!


எண்பதுகளின் இறுதிகளிலும் அதற்குப் பின்பும் தமிழகம் மதக் கலவரத்தைச் சந்தித்து வந்தது. இந்த மதக் கலவரங்களுக்கு வித்திட்டது இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவாரத்தின் தமிழக அமைப்புகள்.

மேடைப் பேச்சுகளில் இஸ்லாத்தையும், இறைத் தூதர் நபிகள் நாயகத்தையும், முஸ்லிம்கள் அன்னையராகக் கருதும் நபியவர்களின் மனைவி யரையும், முஸ்லிம்களைப் பற்றியும் தரக்கு றைவாகப் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தன இந்த அமைப்புகள்.

அண்ணன் - தம்பி, மாமன் - மச்சான் என்று பழகி வந்த தமிழக மக்கள் மத்தியில் விஷக் கருத் துகளை புகுத்தியதும் இதே சங்பரிவார அமைப்பு கள்தான். இதுபோன்ற பிரச்சாரங்கள் எல்லை கடந்த நிலையிலும், அரசாங்கமோ, அரசு இயந் திரமோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் இத்தகைய அமைப்புகளுக்கு மறைமுகமாகவும் சில வேளை நேரடியாகவும் ஆதரவு கொடுத்து வந்தன.

உளவுத்துறை போலீசின் உடைகள் காக்கி; உள்ளமோ காவி : முஸ்லிம் சட்ட வாரிய நிர்வாகி குற்றச்சாட்டு!


முஸ்லிம் "பர்சனல் லா" போர்டின் தேசிய துணைப்பொதுச்செயலாளர் "அப்துர்ரஹீம் குரைஷி" நேற்று போபாலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இந்திய தேசத்தின் உளவுப்பிரிவுகளான "ரா" மற்றும் "ஐ.பி" ஆகிய துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் பலர், காக்கி நிறத்திலான "போலீஸ் உடைகள்" அணிந்துக்கொண்டிருந்தாலும், அவர்கள் காவி பயங்கரவாத சிந்தனையுடன் செயல்படுவதாக தெரிவித்தார். எனவே தான், ஹிந்துத்துவ தீவிரவாதிகள் குண்டுகளை வைத்த பல வழக்குகளில், முஸ்லிம் இளைஞர்கள் குறிவைத்து கைது செய்யப்பட்டு கொடுஞ்சித்திரவதை செய்யப்பட்டனர், என்றார். 

தற்போது அஸ்ஸாமிலும் நாகலாந்திலும், முஸ்லிம்களை கொன்று குவிக்கும் போடோக்களுக்கு ஆதரவாக இங்குள்ள காவி சிந்தனை படைத்தவர்கள் செயல்படுவதுவதாக குற்றம் சாட்டிய அவர், "போடோக்கள், தாய்லாந்திலிருந்து இங்கு வந்து குடியேறியுள்ள மங்கோலிய வம்சாவளியை சேர்ந்தவர்கள்" என்றார். 

Monday, November 12, 2012

அஸ்ஸாம்:மருத்துவ சேவையை துவக்கியது ரிஹாப் இந்தியா!


புதுடெல்லி:அஸ்ஸாம் துயர் துடைப்பு முகாம்களில் அவசர சேவை கிடைப்பதற்காக அரசு சாரா நிறுவனமான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசனின் (ஆர்.ஐ.எஃப்) நடமாடும் மருத்துவமனை தனது பயணத்தை துவக்கியுள்ளது.
கண அதிகார நாளிதழின் ஆசிரியரும், குவஹாத்தி பல்கலைக் கழக பேராசிரியருமான திலீப் நடமாடும் மருத்துவமனையை துவக்கி வைத்தார். குவஹாத்தி உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரும், ஆர்.ஐ.எஃப் ட்ரஸ்ட் உறுப்பினருமான ராஷித் அஹ்மத் சவுதரி கொடி அசைத்தார்.

கோவை மற்றும் இராமநாதபுரம் கலவரங்களுக்கு SDPI மாநில செயற்குழு கடும் கண்டனம்: தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள்



 சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ ) கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் நேற்று (11.11.2012) மதுரையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் செய்யது இப்ராஹிம் வரவேற்புரையாற்றினார். மாநில பொது செயலாளர் நெல்லை முபாரக், மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர்கள் வி.எம். அபுதாகிர், அப்துல் சத்தார், நாஞ்சில் செய்யது அலி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் டி. ரத்தினம் அண்ணாச்சி, அப்துல் சலாம் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள் பொதுச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது நன்றியுரையாற்றினார்.
இச்செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :
1. தமிழகத்தில் அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுக்கடைகளை நடத்துவது என்பது மாபெரும் அவமானம் ஆகும். இதனால் மிகப்பெரிய கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. லட்சக்கணக்கான குடும்பங்கள் பெரும் துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் நலனில் அக்கரையுள்ள அமைப்புகளாலும், அரசியல் கட்சிகளாலும் எழுப்பப்பட்டு வருகிறது. இத்தகைய போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி தனது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது.

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலால் 2 வாரங்களில் 3 பாலஸ்தீனர்கள் பலி குழந்தைகள் உட்பட14 பேர் படுகாயம்


பாலஸ்தீன பகுதிகளில் அப்பாவி மக்கள் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படைகள் அவ்வப்போது நடத்தும்  ஏவுகனை  மற்றும் ஆயுதத் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில்  பாலஸ்தீன மனித உரிமை மையம் (Palestinian Center for Human Rights (PCHR)) வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த அக்டோபர்  24 ஆம் தேதியில் இருந்து நவம்பர்  7 ஆம் தேதி வரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியாகி இருப்பதுடன், பெண்கள் குழந்தைகள்  உட்பட 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இஸ்ரேலின் இத்தாக்குதலை  வன்மையாக கண்டித்துள்ள  ஹமாஸ் அமைப்பு, சர்வதேச சமூகமும், முஸ்லீம் உலகமும் பாலஸ்தீனர் களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

கோவையில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாப்புலர் ப்ரண்ட் வேண்டுகோள்


தமிழகத்தின் முன்னணி தொழில்நகரமாம் கோவையில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் சங்கபரிவாரங்கள் கடந்த இரண்டு மாதமாக செயல்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதும், அவர்களின் தொழில் ஸ்தாபனங்களை தீயிட்டு கொளுத்துவதும் நடந்து வருகிறது .கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி கண்ணப்ப நகர் பகுதியில் உபைதூர் ரஹ்மான் என்பவரது கடையை தீவைத்து எரித்துள்ளனர் . வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் இன்றுவரை கைது செய்யப்படவில்லை . இன்றைய தினம் வரை முஸ்லிம்களின் நான்கு வணிக ஸ்தாபனங்களுக்கு பல்வேறு இடங்களில் தீவைத்துள்ளனர் .

நீதிமன்ற உத்தரவை மீறி சார்மினார் அருகே கோயில் கட்டும் முயற்சி: 5 எம்.எல்.ஏக்கள் கைது:சந்திர சேகர் ராவ் கண்டனம்


Tension in Hyderabad over Charminar temple, MIM MLAs held
ஹைதராபாத்:வரலாற்றுச் சிறப்பு மிக்க சார்மினாரின் அருகே கோயில் கட்டுவதை நிறுத்திவைக்க கோரி போராட்டம் நடத்திய மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீனின்(எம்.ஐ.எம்) 5 எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர். அப்பகுதியில் கடந்த சில தினங்களாக மோதல் சூழல் நீடித்து வருகிறது. எம்.ஐ.எம் தலைவர் அக்பருத்தீன் உவைஸியும் கைது செய்யப்பட்டவர்கள் அடங்குவார்.
சார்மினாரின் சுற்றுவட்டாரப் பகுதியில் கோயில் கட்டுமானப் பணிகளை நிறுத்திவைக்கக் கோரி எம்.ஐ.எம் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கட்சி அளித்த புகாரை தொடர்ந்து சார்மினார் அருகே பழையை நிலை நீடிக்கவேண்டும் என்றும், கட்டுமானப் பணிகள் கூடாது என்றும் ஆந்திரமாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Sunday, November 11, 2012

இங்கிலாந்தில் செயல்படும் ரகசிய நீதிமன்றங்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

saberimoghaddam
பிரிட்டன்:பிரிட்டனின் நீதித்துறைக்கு அப்பாற்பட்டு ரகசிய நீதிமன்றங்களை அமைக்கும் பிரிட்டன் அரசின் முயற்சி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரிட்டனின் உள்நாட்டு உளவுத்துறையான M15 ஆல் உருவாக்கப்பட்ட சிறப்பு குடியேற்ற முறையீடு கமிசன் (SPECIAL IMMIGRATION APPEAL COMMISSION – SIAC) என்னும் தீர்பாயம் பல்லாண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இத்தீர்பாயத்தில் நடைபெறும் விசாரணைகள் வெளி உலகுக்கு தெரியாமல் ரகசியமாக நடைபெறும். மேலும் அதில் குற்றம் சாட்டப்பட்டவர் தனக்காக தானே ஒரு வழக்கறிஞரை அமர்த்த முடியாது மாறாக அரசாங்கமே ஒரு வழக்கறிஞரை நியமிக்கும். குற்றம் சாட்டப்பட்டவர் அல்லாமல் வழக்கறிஞர் மட்டுமே விசாரணைகளில் கலந்துகொள்வார்.

மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்

* காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும். 

* மிக அதிகமாகச் சாப்பிடுவது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 

ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு காங்கிரஸ் எம்.பி புகழாரம்!

MP Sajjan Singh Verma praises work spirit of RSS
போபால்:ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளுக்கு புகழாரம் சூட்டி காங்கிரஸ் எம்.பி உரையாற்றியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.மத்தியபிரதேச மாநிலம் தேவாஸ் மக்களவை தொகுதியின் எம்.பியான ஸஜ்ஜன்சிங் வர்மா என்பவர்தாம் இந்த சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்தியவர் ஆவார்.
நீமச்சில் என்ற இடத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் வர்மா உரையாற்றினார்.அப்பொழுது அவர் கூறியது:அர்ப்பணிப்புடன் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் செயல்படுகின்றார்கள்.ஆனால், காங்கிரஸ் தலைவர்களோ ஏ.சி அறைகளில் பூட்டிக்கொண்டு உள்ளே அமர்ந்துள்ளனர். துக்ககரமான காலக்கட்டத்தை கடந்து கட்சி சென்றுகொண்டிருக்கிறது.

Saturday, November 10, 2012

ஜோடிக்கப்பட்ட தீவிரவாத வழக்குகளை வாபஸ் பெறுகிறது உ.பி. அரசு!

Akhilesh's move to withdraw cases against 'falsely implicated' terror accused, challenged
புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலத்தில் அப்பாவி முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட ஜோடிக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதுக் குறித்து அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி அரசு ஆலோசித்து வருகிறது.
நான்கு குண்டுவெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளைத்தான் உ.பி அரசு வாபஸ் பெறவிருக்கிறது.

பூமிக்குள் எவ்வளவு தூரம் செல்லலாம்? புது முயற்சி


மனிதன் சந்திரனுக்கு சென்று வந்துள்ளான். செவ்வாய்க் கிரகத்திலிருந்தும் சில மாதிரிகளை சேகரிக்கவும் திட்டம் தீட்டியுள்ளான். ஆனால் சொந்த பூமியில் நிலத்துக்கடியில் எவ்வளவு தூரம் சென்றுள்ளான்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடையாது. ஆனால் இக்கேள்விக்குப் பதில் காண்பதற்கான செயற்திட்டம் சுமார் $1 பில்லியன் டாலர்கள் செலவில் வெகு விரைவில் நடைபெறவுள்ளது,
மனிதன் சந்திரனுக்கு சென்று வந்துள்ளான். செவ்வாய்க் கிரகத்திலிருந்தும் சில மாதிரிகளை சேகரிக்கவும் திட்டம் தீட்டியுள்ளான். ஆனால் சொந்த பூமியில் நிலத்துக்கடியில் எவ்வ
ளவு தூரம் சென்றுள்ளான்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடையாது. ஆனால் இக்கேள்விக்குப் பதில் காண்பதற்கான செயற்திட்டம் சுமார் $1 பில்லியன் டாலர்கள் செலவில் வெகு விரைவில் நடைபெறவுள்ளது,
 

அதாவது கடலுக்கு அடியில் சுமார் 6 Km தூரத்துக்கு நிலத்தைத் தோண்டி பூமியின் சூடான அடர்ந்த சிலிக்கேட் பாறைகளால் சூழப்பட்ட பகுதி (mantle) அதாவது பூமியின் மையத்துக்கும் மேலோட்டுக்கும் இடையில் (interior between the crust and the core) உள்ள பிரதேசத்துக்குச் செல்லவுள்ளனர்.
 

சனாதன் சன்ஸ்தா ஹிந்துத்துவா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க மஹாராஷ்ட்ரா அரசு சிபாரிசு!

maha-govt-recommends-right-wing-organisation-sanatan-sanstha-as-a-terror-outfit-under-the-uapa
மும்பை:சட்டவிரோத செயல் தடைச் சட்டத்தின் படி (யு.ஏ.பி.ஏ) ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க மத்திய அரசிடம் சிபாரிசு செய்திருப்பதாக மஹராஷ்ட்ரா அரசு மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இன்னொரு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்தை தடைச் செய்வதுக் குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
மாநில தீவிரவாத எதிர்ப்புப்படை(ஏ.டி.எஸ்) அபினவ் பாரத்தை தடைச் செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. 2008-ஆம் ஆண்டு மலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் அபினவ் பாரத்தின் உறுப்பினர்கள் ஈடுபட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டி இக்கோரிக்கையை அரசுக்கு விடுத்தது ஏ.டி.எஸ்.

Friday, November 9, 2012

தகவல் கேட்டவருக்கு வெற்று தாள்களை அளித்து மோசடி : தகவல் ஆணையத்தில் புகார்


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் கேட்டு விண்ணப்பித்தவருக்கு, வெற்று தாள்களை அளித்து, அதிகாரிகள் மோசடி செய்துள்ள சம்பவம் அம்பலமாகியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநில தகவல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் தாலுகா, பெரகம்பி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பெரகம்பி ஊராட்சியில், 2011ம் ஆண்டு, 120 ஏக்கர் நில பரப்பில், கருவேல மரங்களை வெட்ட நடந்த ஏலம் தொடர்பாகவும், அதன் மூலம் கிடைத்த நிதி செலவிடப்பட்டது தொடர்பான விவரங்களை பெற, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார்.

வரலாறு திசைமாறும் பொழுது…!

U.S. President Obama celebrates on stage as confetti falls after his victory speech during his election rally in Chicago
உலக வரைபடத்தில் நிறவெறியால் புறக்கணிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு மகுடம் சூட்டும் வகையில் பெயரிலேயே நிறவெறியைக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் மாளிகையான ‘வெள்ளை மாளிகையின்’ படிக்கட்டுகளில் மீண்டும் ஒபாமா அதிபராக ஏற உள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே கறுப்பு இனத்தைச் சார்ந்த ஒருவர் 2-வது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றிப்பெறுவது இதுவே முதல் தடவை.
அமெரிக்காவின் 44-வது அதிபராக கடந்த முறை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் பாரக் ஒபாமா.

Dua For Gaza