Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Friday, November 22, 2013

முந்தைய தலைமுறையை விட தற்போதைய குழந்தைகளின் உடல் வலு குறைவு!-ஆய்வில் தகவல்!



லண்டன் : உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பல லட்சக்கணக்கான குழந்தைகளிடம் நடத்திய ஆய்வொன்று, தற்காலக் குழந்தைகளில் பலரால், அவர்களின் பெற்றோர்கள் அவர்களைப் போல இளம் வயதினராக இருந்த காலத்தில் ஓடியது போல அதே போன்ற வேகத்தில் ஓட முடியவில்லை, என்பதைக் கண்டறிந்திருக்கிறது.
ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் 28 நாடுகளிலிருக்கும் சுமார் 2.5 கோடிக்கும் மேலான குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

Sunday, July 14, 2013

வயோதிகர்களுக்கு, நாள்பட்ட நோயாளிகளுக்கு ஹஜ், உம்ரா விசா அனுமதி இல்லை!

ரியாத்: வயோதிகர்களுக்கோ அல்லது நாள்பட்ட நோயாளிகளுக்கோ ஹஜ், உம்ரா விசாவிற்கு அனுமதி இல்லை என்று சவூதி அரசு தெரிவித்துள்ளது.
சவூதி உள்ளிட்ட வளைகுடாவில் பரவி வரும் மெர்ஸ் என்ற தொற்றுக் கிருமியால் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் சவூதியில் கடந்த செப்டம்பர் முதல் இந்த கிறுமிக்கு 38 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 77 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே இவ்வருட உம்ரா ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள பயணிகளுக்கு விசா அனுமதி வழங்குவதில் சில கடடுப்பாடுகளை சவூதி அரசு விதித்துள்ளது.

Monday, July 1, 2013

தலைவலி மற்றும் நீரிழிவு நோய்க்கான பிரபல மருந்துகளுக்கு அரசு தடை!

தலைவலிக்கு பயன்படுத்தும் அனால்ஜின் மாத்திரையால், உடலில் வெள்ளை அணுக்கள் குறைவது கண்டறியப்பட்டது. இதேபோல், நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் பியோகி லிடாஜோன் மாத்திரையால் வயிற்றில் புற்றுநோய் கிருமி ஏற்படுவது தெரிய வந்தது. இந்த மருந்தும் அதன் கூட்டு மருந்துகளும், நம் நாட்டில் ஆண்டிற்கு ரூ.600 கோடி மதிப்பிற்கு விற்பனையாகி வரும் சூழ்நிலையில் இந்த மருந்துகளுக்கு தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.

Wednesday, June 12, 2013

பெண்களின் மேக்கப் சாதனங்களில் கலந்துள்ள 500-க்கும் அதிகமான கெமிக்கல்களால் என்னென்ன ஆபத்து?

பெண்களுக்கு தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் காட்டும் அலாதி உலகுக்கேத் தெரியும்!சிம்பிளாக சொல்வதானால் பெண்களுக்கு பிடிக்காத அழகு சாதன பொருட்களே கிடையாது என்று சொல்லலாம். இன்றும் கூட அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் உலக வர்த்தக நிறுவனங்களின் பரிசோதனைக் கூடமாகவும் சந்தைக் காடாகவும்தான் ஆகிப் போனது நம் இந்தியா.
இதன் விளைவு… ”அழகு சாதனப் பொருட்களுக்குப் பின்னே ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய ஆபத்துகள் மறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பும் விற்பனையும் இந்தியாவில் குறைந்த விலையில் அளித்து பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியப் பெண்களை டெஸ்டிங்கிறகு உட்படுத்துகிறது’ என்ற அதிர்ச்சித் தகவலை முன்னரே சொல்லி இருக்கிறது உலகச் சுகாதார நிறுவனம். அதிலும் ”பாதரசம் சேர்க்கப்படும் சோப், பாடி லோஷன், க்ரீம் மற்றும் பிற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்குச் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்” என்றெல்லாம் உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கையே வெளியிட்டு இருந்தது.

Friday, May 24, 2013

மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் இப்போதும் விற்பனை!


பல ஆண்டுகளாக பல்வேறு மீடியாக்கள் சொல்லி வந்த தகவல்தான். ஆனாலும் உலகின் மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை, இந்தியாவில் மட்டும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்ற உண்மையை சமீபத்தில் பாராளுமன்றக் குழு ஒன்று வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதிலும் பெரியவர்களுக்கு மட்டுமின்றி, குழந்தைகளுக்கும் இத்தகைய மருந்துகள் இங்கு அளிக்கப்படுகின்றன என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.

Tuesday, May 7, 2013

"நீங்கள் உங்கள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும்"- Dr.செந்தில் வசந்த்

உலக ஆஸ்துமா தினம் ஆண்டுதோறும் மே 7-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆஸ்துமா தினத்தின் கருப்பொருள் “நீங்கள் உங்கள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும்’ என்பதாகும்.அந்த கருப் பொருளை செயல்படுத்த நாம் சில விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்!

நமது இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 3200 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆஸ்துமா குழந்தைகளிடையே ஒரு நீடித்த நோயாக உருப்பெற்றுள்ளது. நாட்டில் 10-ல் ஒரு குழந்தை இந்நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் இன்கேலர்களை பயன்படுத்துவதன் மூலம் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

Wednesday, May 1, 2013

மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா


மேட்டுப்பாளையம்: கோவை வடக்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா பொதுக்கூட்டம் மற்றும் இலவச தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் அருகில் மஜீத் திடலில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோவை வடக்கு மாவட்ட தலைவர் A.S. ஷபீக் அஹமது தலைமை தாங்கினார். சமூக மேம்பாட்டு துறை பொறுப்பாளர் அஸ்ரப் கிராஅத் ஓதினார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் A. காஜா மைதீன் வரவேற்றார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் அப்துல் கபூர் மன்பஈ வாழ்த்துரை வழங்கினார்.

Wednesday, December 12, 2012

டெங்கு படுத்தும் பாடு: அதன் ஆபத்து என்ன? புதுவலசையில் நில வேம்பு கசாயம் வழங்க பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்பாடு!

டெங்கு பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள், ஆனால் அதன் ஆபத்து  என்ன என்பது தெரியுமா என்று தெரியவில்லை. டெங்கு வந்தால் அது முதலில் தாக்குவது என்பதைவிட, அழிப்பது நமது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை தான். இந்த வெள்ளை அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியும். சாதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு லட்ச்சத்தி ஐம்பதாயிரத்திருக்கு மேல் வெள்ளை அணுக்கள் இருக்க வேண்டும். ஆனால் டெங்கு வெள்ளை அணுக்களை ஒன்று ஒன்றாக குறைபதில்லை. அழிப்பது பத்து ஆயிரம் தொடங்கி ஐம்பது ஆயிரத்திற்கும் மேல் ஒரு நாள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில்.

இது இருபது ஆயிரமாக இருக்குமானால் ரத்தம் உடலின் உள் பக்கமாக கசிய ஆரம்பிக்கும் விளைவு பல் இடையில், மூக்கில், யூரின், மலம் கழிக்கும் போது   ரத்த கசிவு  ஏற்படும். உடம்பில் அம்மை போன்று தோன்றும் இது நோயின் மோசமான சூழ்நிலை இந்த நேரத்தில் அதிகமாக வெள்ளை அணுக்கள் மட்டுமே ஏற்றபடுகின்றது.

ஒரு யூனிட் வெள்ளை அணுக்கள் ராமநாதபுரத்தில் 300௦ ருபாய் வரை கட்டணமாக வாங்கப்படுகிறது. அதுவும் மதுரையில் இருந்து தான் வரவேண்டும். ஆனால் மதுரையில் இந்த வசதி அதிகம் நாம் ரத்தம் கொடுத்தால் அதை எடுத்து கொண்டு நமக்கு வெள்ளை அணுக்கள் தருகின்றார்கள்.

Sunday, November 11, 2012

மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்

* காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும். 

* மிக அதிகமாகச் சாப்பிடுவது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 

Sunday, November 4, 2012

காலாவதியான மருந்துகளை எப்படிக் கண்டுபிடிப்பது?


காலாவதியான மருந்துகளை எடுத்துக் கொள்வதால் என்னாகும்?

‘‘முதல் விஷயம் அதோட ஆற்றல் குறைஞ்சிருக்கும். உடம்புக்கு முடியலைன்னு டாக்டர்கிட்ட போயிருப்பீங்க. மலேரியாவா இருக்கலாம்னு டாக்டர் அதுக்கான மருந்துகளைக் கொடுத்திருப்பார். ஆனா, நீங்க எடுத்துக்கிட்ட மலேரியா மருந்து காலாவதி ஆனதா இருந்தா, அது வேலை செய்யாது. மலேரியா குணமாகாது. மறுபடி டாக்டர்கிட்ட போவீங்க. ‘நீங்க கொடுத்த மருந்து கேட்கலை’ம்பீங்க. 

காலாவதி மருந்து எடுத்துக்கிட்ட விஷயம் டாக்டருக்கு தெரியாது. அவர் மண்டையை உடைச்சுக்கிட்டு, ஒருவேளை அது டைஃபாய்டா இருக்குமோன்னு வேற மருந்துகளையும் டெஸ்ட்டுகளையும் எழுதிக் கொடுப்பார். உங்க நேரம், பணம்னு எல்லாம் விரயமாகும். காலாவதியான மருந்துகளை எடுத்துக்கிறதால சிலருக்கு சரும அலர்ஜி வரலாம். அரிதா சிலருக்கு கல்லீரல், சிறுநீரகம் மாதிரி உள் உறுப்புகள் பாதிக்கப்படலாம். 

Tuesday, October 30, 2012

தாய்மார்களின் உணவுப் பழக்கம் குழந்தையின் உணவுப் பழக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்!


கருவுற்றிருக்கும் தாய்மார்களின் உணவுப் பழக்கம் பிறக்கப்போகும் குழந்தையின் உணவுப் பழக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்கிறது புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.
தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் சத்தான உணவுகளை உண்பதும், குழந்தையின் தேவைக்காகவும் சேர்த்து ‘இருவருக்காக’ உண்பதும் வழக்கம். இப்படி தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் உண்ணும் உணவுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது என்று தான் ஆராய்சிகள் இதுவரை கருதியிருந்தன.

Wednesday, October 24, 2012

டெங்கு மருத்துவ பரிசோதனை எப்படி?


டெங்குவா? எலிசா டெஸ்ட்

டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த எலிசா என்ற ரத்த பரிசோதனையை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையில் தான் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதா? இல்லையா என முழுமையாக தெரியவரும். இதை தவிர, மற்ற ரத்த பரிசோதனைகளை தனியார் மருத்துவமனைகளில் செய்ய கூடாது. இதனால், தவறான பரிசோதனை முடிவுகள் வரக்கூடும். 

டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசிகள் இல்லை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டாம். இதனால், டெங்கு காய்ச்சல் தீவிரமடைய கூடும். அதனால், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தாலோ உடனடியாக அருகில் உள்ள அரசு  மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். 

Monday, October 22, 2012

பரமக்குடியில் 25-ம் தேதி 108 ஆம்புலன்ஸ் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேர்வு!


தமிழகத்தில் மக்களின் அவசர தேவைகளுக்கு பெரும் உதவியாக இருப்பது 108 ஆம்புலன்ஸ் மருத்துவம், காவல் மற்றும் தீ விபத்து முதலிய அவசர தேவைகளுக்கு 24 மணி நேரமும் கிடைக்க கூடிய இந்த இலவச சேவையை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். தமிழ்நாடு சுகாதார திட்டத்தின்கீழ் ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்து அவசர கால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இந்த சேவையை செய்து வருகிறது.

Sunday, October 21, 2012

இனி இதயமும் விலைக்குக் கிடைக்கும்!


இதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு மாற்று இதயம் தேவைப்படுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது செயற்கை இதயம்

ண்டுதோறும் இதயக் கோளாறால் இறக்கும் நாற்பது லட்சம் இந்தியர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது மும்பை மருத்துவமனை. பல்வேறு இதயக் கோளாறுகளால் மாற்று இதயம் பொருத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் உறுப்பு தானத்திற்காக இனி காத்திருக்கத் தேவையில்லை. மும்பை தி ஏஷியன் ஹார்ட் இன்ஸ்டிட்யூட் நானூறு கிராம் எடையில் ஒரு செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளது. இதைப் பொருத்திக் கொண்டால் இதுவரை இதயம் செய்த பொறுப்பை செயற்கை இதயம் எடுத்துக் கொள்ளும்.

முதுமையை விரட்டுவோம் - இளமையாய் இருப்போம்


இளமை.. மனிதனாக பிறந்த யார்தான் எப்போதும் இளமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். அன்றாடம் நாம் பார்க்கும் மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள்? பள்ளியில் படிக்கும் சிறுவனோ, கல்லூரி மாணவனைப் போல் வயது முதிர்ந்து தெரிகிறான். 30, 40 வயதை தொட்ட ஆணோ, பெண்ணோ நம் கண்ணுக்கு 50, 60 வயதுக்காரர்கள் போல் முதுமை தோற்றம் அளிக்கிறார்கள். 

Saturday, October 20, 2012

மழைக்கால நோய்கள்!


மழையின் இதம் மனசுக்கு சுகம் என்றால் மழையினால் பரவும் நோய்கள் உடம்புக்கு சோகம். ஊருக்குள் இருக்கிற ஒட்டுமொத்த அழுக்கையும் இழுத்துக்கொண்டோடும் மழைநீரில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் உற்சாகமாக நீந்திக்கொண்டிருக்கும். தன் வழியில் சிக்கியவர்களை எல்லாம் நோயில் விழ வைத்துவிடும். இப்படிப் பரவும் நோய்களிலிருந்து தப்பிக்க, வருமுன் காக்கும் பாலிஸிதான் பெஸ்ட் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் குணசேகரன்.

Friday, October 19, 2012

சர்க்கரை நோய், இன்சுலின் மாத்திரையை நிறுத்தி விடலாம்!


நீரழிவு எனப்படும் சர்க்கரைநோய் மக்களை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான நோய் ஆகும். இந்த நோய் இல்லாத நாடுகளே இல்லை. எல்லா நாட்டு மக்களுக்கும் ஏற்படுகிறது. வளரும் நாடுகளில் நமது நாட்டில் இந்த நோயின் பாதிப்பு மிகுதியாக உள்ளது. இங்கு கோடி மக்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது.       நீரிழிவு, மதுமேகம், பிரமேகம், மிரமியம், சர்க்கரைநோய், சர்க்கரைவியாதி, டயாபடிக், சுகர் ஆகிய அனைத்தும் இந்த நோயை குறிப்பிடும் பெயர்கள் ஆகும்.
நீரிழிவு நோய் என்பது நம் கணையத்தின் மீது படிந்துள்ள தேவையற்ற நவச்சார உப்பின் படிவமே ஆகும். மனிதனின் சிறுநீர் வெளியேற்றம் சராசரி 1500 மி.லி. அளவு அதற்கு மேல் வெளியேறும் பட்சத்தில் நீரழிவு நோயின் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன. பெற்றோர் இருவருக்கும் இந்த நோய் இருந்தால் சந்ததியினருக்கு 100 சதவீதம் வர வாய்ப்பு உள்ளது. இதனை மருத்துவ பரி சோதனைகள் மூலம் கண்டறியலாம்.

Thursday, October 18, 2012

தவறான சிகிச்சையால் குழந்தையின் மூளை சிதைவு : ரூ.85 கோடி நஷ்ட ஈடு


லண்டனில் தவறான சிகிச்சையால், குழந்தையின் மூளையை சிதைத்த மருத்துவமனை, 85 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர் ஆன்ட்ரஸ். 1994ம் ஆண்டு, இவரது ஏழு மாத ஆண் குழந்தை பெட்ரோவுக்கு, வைரஸ் தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த, டாக்டர்கள் குழு அளித்த தவறான சிகிச்சையால், நல்ல உடல் நிலையில் சேர்க்கப்பட்ட குழந்தையின் மூளையில் சிதைவு ஏற்பட்டது. தற்போது பெட்ரோவுக்கு 19 வயதாகிறது. இன்னும் ஆறு மாத குழந்தையின் மன நிலையில் தான் உள்ளான்.

கிரீன் டீ புற்று நோய்க்கு அருமருந்து!


கிரீன் டீக்கு பச்சைக் கொடி காட்டியவர் சீன நாட்டு மன்னராக இருந்த ஷென் நங்தான். புதிதாகப் பறிக்கப்பட்ட பச்சைத் தேயிலை இலைகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்தபோது கருஞ்சிவப்பு நிறத்தில் திரவம் வெளிப்பட்டது.

அதைக் குடித்த நங் தாங்கமுடியாத உற்சாகத்தால் குதிக்க ஆரம்பித்துவிட்டார்.  அந்த ஆட்டத்திலிருந்து தொடங்கியதுதான் கீரின் டீயின் வரலாறு. சாயா என்ற வார்த்தைக்கும் சொந்தக்காரர்கள் சீனர்கள்தான். "சா'என்ற சொல்லிலிருந்தே சாயா.

Wednesday, October 17, 2012

ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுறை !


உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள்.பல்வேறு தயாரிப்புகள்பணம்உடைஉணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறதுஎப்படி தவாஃப் செய்ய வேண்டும்,எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது,மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.ஆனால்மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் 
பயணம் மேற் கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர்அதுஉடல்நலம்

ஹஜ்ஜின் போது ஹாஜிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகும் ஒரு விஷயம்''உடல்நலம்'' குறித்ததாகும்ஏனெனில்ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களில் 60விழுக்காட்டிற்கும் மேற் பட்டவர்கள் 60 வயதிற்கு மேலுள்ள முதியவர்கள்தாம்

Dua For Gaza