Tuesday, July 31, 2012

குஜராத் இனப்படுகொலை:21 பேருக்கு ஆயுள்!

Court convicts 22  in Deepda Darwaza masscare case
மெஹ்ஸானா(குஜராத்):2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தீப்தா தர்வாஸா கூட்டுப் படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக கண்டறிந்த 21 பேருக்கு மெஹ்ஸானா நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் 61 பேர் விடுதலைச் செய்யப்பட்டனர்.

மேற்காசியாவில் சி.ஐ.ஏவின் உளவுவேலைக்கு இஸ்ரேல் அச்சுறுத்தல்!

US sees Israel, tight Mideast ally, as spy threat
வாஷிங்டன்:மேற்காசியாவில் தங்களின் உளவு வேலைகளுக்கு இஸ்ரேல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக சி.ஐ.ஏ கருதுகிறது. இத்தகவலை அமெரிக்க உயர் உளவுத்துறை அதிகாரியை மேற்கோள்காட்டி அசோசியேட் ப்ரஸ்செய்தி வெளியிட்டுள்ளது.
பாரம்பரிய நண்பர்களான அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையே அவநம்பிக்கை துளிர்விடுவதை இச்செய்தி தெரியப்படுத்துகிறது.
இஸ்ரேலில் சி.ஐ.ஏ உளவாளிகளின் வீடுகள் தாக்கப்பட்டதாக வெள்ளைமாளிகை கூறியதைத் தொடர்ந்து இச்செய்தி வெளியாகியுள்ளது. சி.ஐ.ஏவின் மேற்காசிய விவகாரத்துறை தலைவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து தகவல் தொடர்பு உபகரணங்களை சேதப்படுத்தியது இஸ்ரேல் மீது சந்தேகம் ஏற்பட காரணமாகும்.

நாகர்கோவில்:வீடுகள் மீது கல்வீச்சு! – நள்ளிரவில் முஸ்லிம்கள் சாலை மறியல்!

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நடந்த மறியல் போராட்டம்2
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள இடலாக்குடி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர் ஆகும். இடலாக்குடியில் ஆஸாத் கார்டன் மற்றும் ரஹ்மத் நகர் பகுதிகளில் நேற்று சில மர்ம நபர்கள் முஸ்லிம் ஆண்கள் ரமலான் இரவு சிறப்புத் தொழுகைக்கு(தராவீஹ்) சென்ற வேளையில் வீடுகள் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் ஷேக் மன்சூர், அஹ்மத் கான், நூர்ஜஹான் ஆகியோரது வீடுகள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதி முஸ்லிம்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் வாழும்  ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் நள்ளிரவு 11 மணி அளவில் திரண்டு வந்து நாகர்கோவில்-கன்னியாகுமரி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்வீச்சில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நடந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இனிக்கும் இல்லறம்-9

இனிக்கும்இல்லறம்1
இல்லறம் இனிமையாக அமைவதிலும், மகிழ்ச்சியான குடும்பத்தை கட்டி எழுப்புவதிலும் விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை (Give and Take Policy) மிக முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை வகிக்கிறது. இதில் தம்பதியினர் இருவரின் புரிதல்கள் அல்லது உள்வாங்கல்கள் ஆதிக்கம் செலுத்துவதை காணலாம்.
குடும்பத்தில்  ஏதேனும் ஒரு விவகாரத்தில் இருவருக்கும் இடையே வெவ்வேறான புரிதல்கள் நிலவலாம். இதனால் இங்கே கருத்தொற்றுமை ஏற்படாத சூழல் உருவாகும். ஒரு விஷயத்தை குறித்து இருவரும் புரிந்துகொண்டது முரணாக இருந்தாலும் ஒருவர் மற்றவருக்காக சூழல்களை கருத்தில் கொண்டு இறங்கி வருதல் அல்லது இணங்கி வருதல் விட்டுக் கொடுத்தல் எனப்படும்.

குஜராத்:இனப்படுகொலையின் போது சேதமடைந்த வழிப்பாட்டுத் தலங்களை சீரமைக்க உத்தரவிடும் தீர்ப்புக்கு தடை இல்லை!

SC refuses to stay HC order on shrines
புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்ட வழிப்பாட்டுத் தலங்களை சீரமைக்க இழப்பீடு வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. குஜராத் மோடி அரசு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தை அணுகியது.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது சேதமடைந்த வழிப்பாட்டுத் தலங்களை புனரமைப்பது குறித்த கொள்கையை வகுக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

Monday, July 30, 2012

அஸ்ஸாம் கலவரம்:இந்திய குடிமக்களை வங்காளதேச குடியேற்றக்காரர்களாக சித்தரிக்க முயற்சி! – எஸ்.டி.பி.ஐ

இ.அபூபக்கர்
புதுடெல்லி:அஸ்ஸாம், உ.பி மாநிலங்களில் வெடித்து கிளம்பிய கலவரங்கள் குறித்து சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா அதிர்ச்சியையும், கவலையையும் வெளியிட்டுள்ளது. வகுப்புவாத கலவரங்களை குறித்து விசாரணை நடத்த நீதி விசாரணை கமிஷனை நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ தேசியதலைவர் இ.அபூபக்கர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுத்தொடர்பாக இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: ‘இரு கலவரங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் ஆவர். மாநில அரசு கற்பனை எண்ணத்தை கைவிட்டு நிலைமைகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ: உடல் கருகி 47 பேர் பலி: பலர் காயம்!

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ-உடல் கருகி 47 பேர் பலி -பலர் காயம்
நெல்லூர்:டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 47 பயணிகள் உடல் கருகி பலியாயினர். 20 க்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் நெல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தீ பிடித்த ‌‌ரயில்‌ எஸ்-11 கோச்சில் இருந்த மொத்தம் 72 பேரில் இன்னும் சிலர் தீயில் சிக்கி இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது
டெல்லியிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்து பின்னர் அதிகாலை 04:30 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எஸ்-11 வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறி்ந்து ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ‌பலர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக "பலி கொடுக்கப்படும்" ஈரான்: இஸ்ரேல் போர் தொடுக்கும் அபாயம்


US tells Israel it has plans to attack Iran
டெல்அவீவ்:ஈரானுடன் வல்லரசு நாடுகள் நடத்தும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் டெஹ்ரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய ராணுவ நடவடிக்கைக் குறித்து அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இஸ்ரேல் பிரதமருடன் விவாதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் பத்திரிகையான ஹாரட்ஸ், ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தாமஸ் டோணிலன் இரண்டுவாரம் முன்பு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடத்திய சந்திப்பில் ஈரான் மீது போர் தொடுப்பது தொடர்பாக விவாதித்ததை வெளியிட்டுள்ளது. பெயர் வெளியிட விரும்பாத ஒரு உயர் அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி ஹாரட்ஸ் இச்செய்தியை கூறுகிறது.

தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் இந்து அமைப்பினர்.. மங்களூர் மாணவிகள் குமுறல்


இனிக்கும் இல்லறம் -8

இனிக்கும்இல்லறம்1
இன்றைய சமூக சூழலில் குடும்பத்திற்கு அந்தஸ்தை பெற்று தரும் காரணியாக பொருளாதாரம் மாறிவிட்டது. ஏனெனில் இன்றைய வாழ்க்கைப் போராட்டங்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே நடைபெறுகின்றன. ஆகவே குடும்ப வாழ்விலும் பொருளாதாரம் ஆதிக்கம் செலுத்துவதில் ஆச்சர்யமில்லை.
இல்லறத்தில் மகிழ்ச்சி தொடர வேண்டுமானால் அதன் பொருளாதார கட்டமைப்பு வலுவுள்ளதாக இருப்பதோடு, ஒழுங்காக பேணப்படுதல் வேண்டும். குடும்பத்தின் வரவுக்கு ஏற்றவாறு செலவுச் செய்யும் மனைவி அமைந்துவிட்டால் குடும்ப மகிழ்ச்சி நீடிக்கும். இல்லையெனில் அங்கு குழப்பம் உருவாக சாத்தியக் கூறுகள் அதிகம்!

Sunday, July 29, 2012

மேற்கு கரையில் இஸ்ரேல் குடியிருப்புகள் அதிகரிப்பு!

Jewish settlers in West Bank increased
ஜெருசலம்:ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் கடந்த ஆண்டு மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இஸ்ரேலின் மக்கள் தொகையை மேற்கோள்காட்டி பிரிட்டனில் கார்டியன் பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
புதிய புள்ளிவிபரப்படி மேற்கு கரையில் கடந்த ஓரு ஆண்டில் 4.5 சதவீதம் சட்டவிரோத குடியேற்றம் நடந்துள்ளது. மேற்கு கரையில் ஃபலஸ்தீன் வீடுகளுகள், மஸ்ஜிதுகள் மீது சட்டவிரோத யூத குடியிருப்பு வாசிகள் நடத்தும் தாக்குதல் கடந்த ஒரு ஆண்டில் 150 சதவீதம் அதிகரித்துள்ளது என ஃபலஸ்தீன்(மேற்குகரை) பிரதமர் ஸலாம் ஃபயாதை மேற்கோள்காட்டி கார்டியன் கூறுகிறது.

இனிக்கும் இல்லறம் -7

இனிக்கும்இல்லறம்1
மகிழ்ச்சியான குடும்பத்தை கட்டியெழுப்புவது எப்படி?
ஒரு சமூகத்தில் தனிமனிதனுக்கு அடுத்த ரோலை வகிப்பது குடும்பங்கள் ஆகும். ஆகவே குடும்பத்தில் ஏற்படும் நேரான, எதிர்மறையான நடத்தைகள் அக்குடும்பம் சார்ந்திருக்கும் சமூகத்திலும் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. ஆகவே, ஆண்-பெண் இருபாலரின் ஆளுமைத் தன்மைகள் இனங்காணப்படல் வேண்டும்.
ஒரு குடும்பத்தில் கணவனைப் பொறுத்தவரை மகிழ்ச்சியை தேடுபவனாகவும், மனைவியை பொறுத்தவரை அன்பை நேசிப்பவளாகவும் தங்களது இயற்கையான தன்மையை வெளிப்படுத்துகின்றனர். கணவனது தேடுதலும், மனைவியின் நேசித்தலும் ஆகிய இரு காரணிகளின் இறுதி விளைவு சந்தோஷமாக இருக்கவேண்டும். இதனை நாம் ஏற்றுக்கொள்ளாதவரை மகிழ்ச்சியான குடும்பத்தை கட்டியெழுப்புவது சிரமமே!

ரோஹிங்கியா முஸ்லிம் கூட்டுப் படுகொலை குறித்து விசாரணை தேவை: ஐ.நா!

un-urges-inquiry-over-rohingya-killings
ஐ.நா:மேற்கு மியான்மரில் கடலோர மாநிலமான ராக்கேனில் அரசு ஆதரவுடன் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அத்துமீறல்கள் குறித்து விசாரணை தேவை என ஐ.நா மனிதஉரிமை கமிஷன் தெரிவித்துள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை புத்த சமூகத்தினர் நடத்தி வரும் தாக்குதல்களை தடுப்பதற்காக அப்பகுதிக்கு அனுப்பப்பட்ட ராணுவமே முஸ்லிம்களை குறிவைப்பதாகவும், இது துக்ககரமானது எனவும் ஐ.நா மனித உரிமை கமிஷனின் தலைவர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.
ஐ.நா அகதிகள் விவகார ஏஜன்சியின் அறிக்கையின் படி 80 ஆயிரம் முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களில் இருந்து புலன் பெயர்ந்துள்ளார்கள் என கூறுகிறது.

கலவரம் இந்தியாவுக்கு களங்கம்:பிரதமர் மன்மோகன், துயர்துடைப்பு பணிகளுக்கு ரூ.300 கோடி!

PM Manmohan Singh says Assam violence a blot on the face of nation, announces Rs 300 crore relief
குவஹாத்தி:அஸ்ஸாமில் வகுப்புவாத கலவரம் தேசத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதற்கு முடிவு கட்டவேண்டும் எனவும் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
கொக்ராஜர் மாவட்டத்தில் போடோ இனவாத தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கலவரங்கள் நிகழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்தார் பிரதமர் மன்மோகன். அப்பொழுது அவர் அஸ்ஸாம் துயர் துடைப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்குவதாக தெரிவித்தார். இதில் ரூ.100 கோடி துயர்துடைப்பு பணிகளுக்கும், மறுவாழ்வு திட்டங்களுக்கும் அவசர நிதியாக வழங்கப்படும் என்றார்.

Saturday, July 28, 2012

அஸ்ஸாமில் நடந்தது குஜராத் மாடல் முஸ்லிம் இனப்படுகொலை!

Assam Muslim genocide has same model as Gujarat genocide!
குவஹாத்தி:ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள். கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கலவரக்காரர்கள் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருப்பது உறுதியானது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புவது தெரிந்தது. இளைஞர்கள் கத்தி மற்றும் கம்புகளுடன் கிராமத்தின் நுழைவு பாதைகளில் பாதுகாப்பிற்காக நின்றனர்.
ஆனால் என்ன பயன்? “ராணுவ உடையில் 30க்கும் மேற்பட்ட போடா வன்முறையாளர்கள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்தனர். எங்களால் அவர்களை தடுக்க முடியவில்லை. எங்கள் கண் முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள். வீடுகளை தீயிட்டு கொழுத்தினார்கள். விவசாயப் பொருட்களை கொள்ளையடித்தார்கள். துப்பாக்கி முனையில் எங்களை நிறுத்தி இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என மிரட்டினார்கள். கொக்ராஜர் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் நயான் அலி(வயது 22) கூறுகிறார்.
டெஹல்கா பத்திரிகை அஸ்ஸாமில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை வெளிக்கொணர்ந்துள்ளது.

சிரியாவில் போராட்டம் தீவிரம்: துருக்கி எல்லையை மூடியது!

Turkey partially closes border with Syria
டமாஸ்கஸ்/அங்காரா:சிரியாவின் 2-வது பெரிய நகரமான அலப்போவில் எதிர்ப்பாளர்களுடன் மோதல் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து அப்பகுதிக்கு கூடுதல் ராணுவத்தினரை அரசு அனுப்பியுள்ளது. வடமேற்கு நகரமான இத்லிபில் இருந்து ஆயிரக்கணக்கான ராணுவத்தினரை எதிர்ப்பாளர்களை விரட்ட சர்வாதிகார பஸ்ஸார் அரசு அனுப்பியுள்ளது.
நேற்று மட்டும் அலப்போவில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் எதிர்ப்பாளர்களை பஸ்ஸார் அரசு எதிர்கொள்கிறது. அலப்போ நகரத்தை எதிர்ப்பாளர்களிடமிருந்து கைப்பற்றுவது ஆஸாத் அரசின் வாழ்வா? சாவா? போராட்டமாக மாறியுள்ளது.

ஹஜ் ஒதுக்கீடு:மறுபரிசீலனைச் செய்யக்கோரும் மத்திய அரசின் மனு நிராகரிப்பு!

Supreme Court rejects plea on Haj quota order
புதுடெல்லி:புனித ஹஜ் பயணிகளுக்கான அரசு ஒதுக்கீட்டை குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அடுத்த ஆண்டில் அமல்படுத்த அனுமதி தர வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நேற்று(வெள்ளிக்கிழமை)நிராகரித்தது.
இது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாகனவதி, வழக்குரைஞர் ஹாரிஸ் பெரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஒதுக்கீட்டை குறைத்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்த ஆண்டு அமல்படுத்த அனுமதி தர வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அஃப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசின் கோரிக்கையை நிராகரித்தது.

இனிக்கும் இல்லறம்–6

இனிக்கும்இல்லறம்1
அரபு மொழியில் வீட்டிற்கு ‘மகான்’ என்றதொரு பெயர் உண்டு. அதன் ஆழமான பொருள் அமைதி தவழும் இல்லம் என்பதாகும்.
செங்கற்களும், சிமெண்டும், மணலும் சேர்த்து அழகானதொரு வீட்டை கட்டினால் மட்டும் போதாது அந்த வீட்டில் வசிப்போர் இடையே அமைதி நிலவவேண்டும். அப்பொழுதுதான் அந்த இல்லம் அமைதி தவழும் இல்லமாக மாறும். லட்சக்கணக்கான பணத்தை செலவழித்து வீட்டை கட்டிவிட்டு அங்கே வசிப்போர் இடையே சண்டைச் சச்சரவுகள் நிலவி உறவுகள் சீர்கெட்டு குடும்பத்தில் அமைதி குலைந்தால் காசை செலவழித்து என்ன பயன்?
அன்பு, அமைதி, ஆறுதல் என்பது திருமணத்தின் மூலமாக தம்பதியினர் இடையே உருவாக வேண்டும். அவ்வாறு உருவாகவில்லை எனில் திருமணம் முடித்து என்ன பலன்?

அஸ்ஸாம்:வகுப்புவாத வன்முறைகளை கண்டித்து இமாம்ஸ் கவுன்சில் பேரணி!

அஸ்ஸாம்- வகுப்புவாத வன்முறை
புதுடெல்லி:அஸ்ஸாமில் வகுப்புவாத கலவரத்தில் அரசு அவசர நடவடிக்கை எடுக்க கோரி ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் அஸ்ஸாம் மாநில கமிட்டி சார்பாக குவஹாத்தி நகரத்தில் கண்டன பேரணி நடைபெற்றது.
மாநில தலைவர் மவ்லானா ஃஹைருல் அனாம், பொதுச் செயலாளர் மவ்லானா அக்பர் அலி அஹ்மத், மாவட்ட தலைவர் ஆஸம் கான் ஆகியோர் பேரணிக்கு தலைமை தாங்கினர்.

தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட 18 முஸ்லிம்கள் விடுதலை!

Gujarat HC grants relief to 18 convicts
அஹ்மதாபாத்:2002 குஜராத் இனப்படுகொலைக்கு பழிவாங்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் உதவியுடன் போராளி இயக்கங்களுடன் இணைந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட 18 பேரை உயர்நீதிமன்றம் விடுதலைச் செய்துள்ளது. இவர்கள் இதுவரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தகால அளவை தண்டனைக்குரிய காலமாக கணக்கிட்டு அவர்களை நீதிமன்றம் விடுதலைச் செய்தது.
சிறப்பு நீதிமன்றம் இவர்களுக்கு 10 ஆண்டுகள் கடும் சிறைத்தண்டனை வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
2010 ஜனவரி மாதம் 12-ஆம் தேதி இவ்வழக்கில் 22 பேருக்கு  சிறப்பு பொடா நீதிமன்றம் தண்டனை வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 18 பேருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. மூன்று பேருக்கு ஒன்பது ஆண்டுகள் தண்டனையும், ஒரு வழக்கறிஞருக்கு மூன்றரை ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

Friday, July 27, 2012

கூட்டம் வராததால் டென்ஷன்... பத்திரிக்கையாளர்ளை தாக்கிய அன்னா ஆதரவாளர்கள்!

Thin crowd at Team Anna fast
டெல்லி: அன்னா ஹஸாரே குழுவினரின் லேட்டஸ்ட் உண்ணாவிரதம் நாட்டு மக்களிடையே பெரும் கேலிப் பொருளாகி வருகிறது. கூட்டம் கொஞ்சமும் கூடாததால் கடும் கடுப்பில் உள்ள அன்னா ஆதரவாளர்கள், பத்திரிக்கையாளர்கள்தான் இதற்குக் காரணம் என்று பத்தாம்பசலித்தனமாக கருதி, இன்று செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களைத் தாக்கி தங்களது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர்.

அன்னா ஹஸாரே குழுவினரின் போராட்டங்கள் மீது தற்போது அவர்களுக்கே நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது. அதுவும் மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு அன்னா ஹஸாரேவே டைரக்டாக உண்ணாவிரதம் உட்கார்ந்தபோது ஈ, காக்காய்களே அதிக அளவில் அங்கு ஆதரவு தெரிவிக்க அதிகம் கூடியிருந்தன. மக்களைக் காணவில்லை. இதனால் சுருக்காக தனது போராட்டத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊருக்குப் போய் விட்டார் அன்னா. அதன் பின்னர் அவர் போராட்டத்திற்கே வரவில்லை.

சிறுமி மரணம்:போக்குவரத்து துறை அதிகாரிகள் மீது கண்துடைப்பு நடவடிக்கை தேவை இல்லை! – உயர்நீதிமன்றம் காட்டம்!

Sruthi
சென்னை:பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்த சிறுமி சுருதியின் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையின் போது தலைமை நீதிபதி இக்பால், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கை வெறும் கண்துடைப்பாக இருக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

உலகம் லண்டனை நோக்கி!

London-Olympics-2012
லண்டன்:இரண்டு வாரங்களுக்கு அதிகமாக நீளும் உலக விளையாட்டு கோலாகலமான ஒலிம்பிஸ் போட்டிகள் இன்று லண்டனில் துவங்குகின்றன. இன்று நள்ளிரவு ஒலிம்பிக்ஸ் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக பிரிட்டீஷ் ராணி எலிசபத் துவக்கி வைக்கிறார். இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் 120 நாடுகளின் பிரதிநிதிகள் உள்பட 60 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
உலகின் மாபெரும் விளையாட்டு கோலகலமான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கிரேக்க நாட்டில் 2700 ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கிய இப்போட்டி, 1896ல் இருந்து நவீன ஒலிம்பிக் போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது. 2008ம் ஆண்டு போட்டி சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஒலிம்பிக் போட்டியையொட்டி லண்டன் நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. ஆஸ்கார் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்பட புகழ் இயக்குனர் டேனி பாயல் வடிவமைத்துள்ள தொடக்க விழா நிகழ்ச்சிகள், ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்டமான வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனிக்கும் இல்லறம் -5


இனிக்கும்இல்லறம்1
கணவன்-மனைவி இவர்களுக்கான ரோல் என்ன?
கணவன்-மனைவி இருவருக்குமே குடும்பத்தில் ஒரு ரோல் அல்ல பல ரோல்கள் காத்திருக்கின்றன. இது என்ன சீரியலா? சினிமாவா? ரோலைப் பற்றி பேசுகிறோம்! என உங்கள் மனதில் கேள்வி எழலாம்! ஆனால் குடும்பத்தில் ஓர் ஆணும், பெண்ணும் பல ரோல்களில் நடிக்க வேண்டியுள்ளது. ஆனால் நீங்கள் நினைப்பது போன்ற நடிப்பு அல்ல. உண்மையிலேயே நீங்கள் உங்களது எதார்த்தமான நடிப்பை  வெளிப்படுத்துகின்றீர்கள்!
பெற்றோருக்கு மகனாக, மனைவிக்கு கணவனாக, பிள்ளைகளுக்கு தந்தையாக, உடன்பிறந்தவர்களுக்கு சகோதரனாக ஒருஆண் தனது பங்களிப்பை நிறைவேற்றவேண்டிய கடமை உள்ளது. அதைப் போலவே பெண்ணும் மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக என தனது ரோலை நிறைவேற்ற வேண்டும். ஆணும் சரி, பெண்ணும்சரி தங்களது ரோலை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றமுறையில் கச்சிதமாக நடந்துகொண்டால் இல்லறத்தில் பிரச்சனைகள் நிச்சயமாக உருவாகாது.
ஒரு தந்தை, தனது மகன் தான் கூறும் அறிவுரையை கேட்காத பட்சத்தில் ‘அடித்து விடுவேன்’ என மிரட்டுவார். ஆனால் உண்மையில் நீங்கள் உங்கள் சிறுமகனை அடிக்க முடியுமா?இருந்தாலும் அடித்து விடுவேன் என மிரட்டுவது ஒரு நடிப்பு தானே! ஆனால் சிலர் கண்டிக்கும் விஷயத்தில் தங்களது குடும்பத்தினரிடம் வரம்பு மீறி நடந்துக் கொள்வர்!இவ்வாறான குடும்பத்தில் எங்கே அமைதி தவழும்?

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்! – நீண்ட ஆய்விற்கு பிறகு அமெரிக்க பேராசிரியர் தகவல்!

Religion Professor Robert Shedinger
வாஷிங்டன்:உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராக கருதப்படும் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் தாம் இயேசு முஸ்லிம் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.  was jesus a muslim? என்ற தனது புதிய நூலில் அவர் இதனை தெளிவுப்படுத்துகிறார்.
இயேசு முஸ்லிமா? என்ற கேள்வியுடன் அவர் நூலை துவக்குகிறார். ஆம்! அவர் முஸ்லிமே! என்பதுதான் தனது கேள்விக்கான பதிலாக இறுதியில் பேராசிரியர் ஷெடிங்கர் குறிப்பிடுகிறார்.

மலேகான்:குற்றவாளிகளை போலியாக அடையாளம் காட்ட சொத்து வாங்கி தருவதாக ஆசைக்காட்டிய ஏ.டி.எஸ்!

Abrar Ahmed
புதுடெல்லி:2006-ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் துவக்கத்தில் கைதான அப்ரார் அஹ்மதிடம் இதர நபர்களை அடையாளம் காட்ட சொத்து வாங்கி தருவதாக மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை ஆசை காட்டியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இவ்வழக்கில் மறு விசாரணையை நடத்தி வரும் என்.ஐ.ஏ இத்தகவலை வெளியிட்டுள்ளது.
ஏ.டி.எஸ் துவக்கத்தில் அப்ரார் அஹ்மதை அப்ரூவராக சித்தரித்து பின்னர் திருத்தியது. போலீஸ் கஸ்டடியில் இருந்த 3 தினங்களும் தன்னிடம் சில நபர்களின் ஃபோட்டோக்களை காண்பித்து அவர்களை அடையாளம் கண்டுகொண்டதாக ஒப்புக்கொள்ள ஏ.டி.எஸ் கூறியதாகவும், அவ்வாறு ஒப்புக்கொண்டால் கஷ்மீர் மாநிலம் தவிர வேறு எங்கேயும் தனது பெயரில் சொத்து வாங்கி தருவதாக ஏ.டி.எஸ் ஆசை காட்டியதாக அப்ரார் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

Wednesday, July 25, 2012

இந்தியாவின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் பதவியேற்பு – பாரபட்சமற்ற முறையில் பணியாற்றுவேன் என உறுதி!

Pranab Mukherjee sworn-in as 13th President
டெல்லி: நாட்டின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று பதவி ஏற்றார். அவருக்கு  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, கடந்த 19-ம்  தேதி புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது.
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கும், பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்  பி.ஏ.சங்மாவுக்கும் இடையே, இந்த தேர்தலில் நேரடி போட்டி ஏற்பட்டது. கடந்த  ஞாயிற்றுக்கிழமை அன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி  பெற்றார்.
இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் நேற்றுடன்  நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து நாட்டின் 13-வது ஜனாதிபதியாக, பிரணாப் இன்று  பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஜனாதிபதியாக பதவியேற்பதற்காக இன்று காலை தனது இல்லத்திலிருந்து  கிளம்பிய பிரணாப் முகர்ஜி, மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட், நாட்டின்  முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவிடம், முன்னாள் பிரதமர் ராஜீவ்  காந்தியின் நினைவிடமான வீர் பூமி, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி  ஆகியோரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

Tuesday, July 24, 2012

பாப்புலர் ஃப்ரண்டின் கல்வி உதவித்திட்டம்


புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கடந்த இருமாதங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற "பள்ளி செல்வோம்" பிரச்சாரத்தின் இறுதியாக பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை தடையில்லாமல் தொடர்வதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இத்திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2012-2013 வருடத்தில் கல்லூரியில் இடம் பிடித்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசிய அளவிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து இரண்டு வருடமாக பாப்புலர் ஃப்ரண்ட் செயல்படுத்தி வருகிறது.

உ.பி:பரேலியில் கலவரம் – துப்பாக்கிச்சூட்டில் முஸ்லிம் இளைஞர் பலி!

Zari-worker Imran who died of gun shot wounds was buried today in Bareilly
பரேலி(உ.பி):பரேலியில் இரு பிரிவினர் இடையே உருவான கலவரத்தில் துப்பாக்கிச்சூட்டில் முஸ்லிம் இளைஞர் பலியானார்.
மோதலைத் தொடர்ந்து நகரத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வெளியாகும் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்காது என டிவிசனல் கமிஷனர் கே.ராம்மோகன் ராவ் தெரிவித்தார்.
பரேலி ஷஹ்பாத் பகுதியில் ரமலான் நோன்பு திறக்கும் வேளையில் ஹிந்து மதத்தின் கன்வாரியா பிரிவினர்(சிவ பக்தர்கள்) பள்ளிவாசல் அருகில் பாட்டுப்பாடியும், சத்தம் போட்டுக் கொண்டு இருந்துள்ளனர். முஸ்லிம்கள் அவர்களிடம், சத்தத்தை குறைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து தங்களது செயலை தொடர்ந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் உருவாகியுள்ளது.
மோதல் கலவரமாக மாறி அண்மை பகுதிகளில் வேகமாக பரவியது. கன்வாரியா சமூகத்தைச் சார்ந்த கும்பல் ஸப்ஸி மண்டி என்ற பகுதியை தீக்கிரையாக்கியுள்ளனர்.

Monday, July 23, 2012

டென்மார்க்கில் 21 மணிநேர நோன்பு!

21 hours of fasting in denmark
கோபன்ஹெகன்:டென்மார்க்கில் முஸ்லிம்கள் இவ்வாண்டு 21 மணிநேர நோன்பை கடைப்பிடிக்கின்றனர். உலகிலேயே அதிக மணிநேரம் நோன்பை கடைப்பிடிப்பவர்கள் இந்நாட்டு முஸ்லிம்கள் ஆவர்.
அதேவேளையில் அர்ஜெண்டினாவில் வாழும் முஸ்லிம்கள் 9 மணிநேரமே நோன்பை நோற்கின்றார்கள். லத்தீன் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு என்பதால் இவர்களுக்கு உலகிலேயே குறைந்த அளவே நோன்பு நோற்றால் போதும். ஏனெனில் இங்கு பகல் குறைந்த நேரம் ஆகும்.

அரபு வசந்தத்தின் இறுதி மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலையாக அமையும்! – இஸ்மாயீல் ஹானிய்யா!

Gaza prime minister Ismail Haniyeh
காஸ்ஸா:அரபுலகில் நடந்துகொண்டிருக்கும் வசந்த புரட்சிகள் தற்போதைய சூழலுடன் ஒடுங்கிவிடும் என கருத வேண்டாம் என ஃபலஸ்தீன் காஸ்ஸா பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காஸ்ஸாவில் உள்ள மஸ்ஜிதுல் அமீனில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியது:

Sunday, July 22, 2012

கர்நாடகாவில் அரசு செலவில் மழைக்காக பூஜை! பா.ஜ.க அரசின் பிற்போக்குத்தனம்!

Karnataka to perform special poojas of Rs 18.5 crore for rain
பெங்களூர்:சங்க்பரிவாரின் அரசியல் பிரிவான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி புரியும் கர்நாடகாவில் கடும் வறட்சியை போக்க அரசு செலவில் மழைக்காக பூஜை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
மதசார்பற்ற ஜனநாயக தேசமான இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் மனித சமூகத்தை கற்காலத்திற்கு அழைத்துச் செல்லும் முட்டாள்தனமான ஹிந்துத்துவா கொள்கையை கோட்பாடாக கொண்டுள்ள பா.ஜ.க அரசு 37 ஆயிரம் கோயில்களில் 18.5 கோடி ரூபாய் செலவில் மழைக்காக பூஜை நடத்தப் போகிறதாம். இதுத்தொடர்பான சுற்றறிக்கை கோயில்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ பூஜாரி தெரிவித்துள்ளார்.
கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் மாநிலத்தை பாதித்துள்ளதால் இந்த ஏற்பாடாம்.
ஜூலை 27-ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் வருண பகவானை மகிழ்விக்க சிறப்பு பூஜையை பா.ஜ.க அரசு நடத்தப்போகிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் அனுமதித்துள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.

Saturday, July 21, 2012

ரோஹிங்கியா முஸ்லிம்களிடம் ராணுவம் பாரபட்சமாக நடந்துகொள்கிறது: ஆம்னஸ்டி!

Burmese Gov’t Will Not Recognize 800,000 Rohingya Citizens
பாங்காக்:ரோஹிங்கியா முஸ்லிம்களிடம் மியான்மர் ராணுவம் கடுமையான பாரட்சத்தை காட்டுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் தெரிவித்துள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையில் கொடூரமாக சித்திரவதைச் செய்யப்படுகின்றனர் என்று புகார் எழுந்துள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான பெரும்பாலான கைது நடவடிக்கைகளும் சட்டவிரோதமானதும், பாரபட்சமானதுமாகும் என ஆம்னஸ்டி அறிக்கையில் கூறியுள்ளது

Friday, July 20, 2012

மீனவர் படுகொலை கண்டித்து சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை! SDPI கட்சியினர் கைது!


sdpi protest
சென்னை தமிழக மீனவர் அமெரிக்க கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்திய சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு வேண்டும் என்று கூறிய ஒபாமாவின் அத்துமீறலை கண்டித்தும் சென்னையில் இன்று எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மாநில செயலாளர் சையது அலி தலைமையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரத்தினம் அண்ணாச்சி, ஜாகிர் உசேன் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் உசேன், வட சென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா, திருவள்ளூர் மாவட்ட தலைவர் புஹாரி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், துப்பாக்கிச்சூடு செய்த அமெரிக்க படையினர் கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர். முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினரை போலிசார் கைது செய்தனர்.

Thursday, July 19, 2012

ரமலானை வரவேற்போம்!!!


ரமலானை வரவேற்போம்!!!புனிதமும், கண்ணியமும், ரஹ்மத்தும் நிறைந்த மாதமான ரமலான் நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது. ஈமான் கொண்ட அனைவரும் இந்த மாதத்தை எதிர்நோக்கியவாறு தங்களுடைய 5 கடமைகளில் ஒன்றான நோன்பை நிறைவேற்றி அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய ஆவலாகவும், சந்தோஷமாகவும் உள்ளனர்.

ஏனென்றால் நோன்பு முஸ்லிம்களின் உள்ளங்களிலும், வாழ்க்கையிலும் நல்லதொரு மாற்றங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அடுத்து வருகின்ற பதினோரு மாதங்களுக்குக்கான ஒரு பயிற்சியாகவும் உள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு இது ஒருவசந்த காலம் என்று கூறும் அளவுக்கு நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன.

இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், நோன்பு நோற்றல், ஐவேளை தொழுதல், இரவுநேர வணக்கங்கள், சொல்-செயல்-எண்ணங்கள் என்று அனைத்திலும் இறையச்சத்தை பேணுதல் என்று ஒரு அமைதியான, நிம்மதியான சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது. ரமலானின் முழு பலனையும் அடையவேண்டும் என்பதில் எந்த ஒரு முஸ்லீமுக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

பெரம்பலூரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பாக போராட்டம்


 பெரம்பலூர் மாவட்டத்தில் வயதைக் காரணம் காட்டி முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை தடுத்து பெற்றோரை கைது செய்த மாவட்ட ஆட்சியரின் அதிகார துஷ் பிரயோகத்தை கண்டித்தும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்டு இந்திய நீதி மன்றத்தை அவமதித்து முஸ்லிம் திருமணத்தை தடுத்து நிறுத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்தும், இம்மாவட்ட காவல் துறையை கண்டித்தும் முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றினைந்து நடத்திய போராட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இன்று 17-07-2012 அன்று நடைபெற்றது. 
 
ஜமாத்துல் உலமா தலைவர் அப்துல் ரஹ்மான் ஆலிம் தலைமையில் ,பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர் இஸ்மாயில் ,இந்திய தௌஹீத் ஜமாஅத் தலைவர் S .M பாக்கர் ,த மு மு க மூத்த தலைவர் ஹைதர் அலி அ, SDPI தமிழ் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி , ,இந்திய தேசிய லீக் இனாயதுல்லாஹ் ,தேசிய லீக் பசீர் அஹ்மத் ,சுன்னத்துவல் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர் ,மறு மலர்ச்சி முஸ்லிம் லீக் உமர் பாருக் ,வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சிங்கந்தர் ,தேசிய லீக் பசீர் அஹ்மத் ,ஆல் இந்தியா மில்லி கவுன்சில் அமீர் அலி ,தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முஹம்மத் மன்சூர் ,இஸ்லாமிய விழிபுணர்வு கழகம் முஹம்மத் கான் பாக்கவி மேலும் பல இயக்க தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

Tuesday, July 17, 2012

போலீஸ் கஸ்டடி மரணம்: காஜா யூனுஸின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை!

Khwaja Yunus
மும்பை:2002-ஆம் ஆண்ட் காட்கோபர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு போலீஸ் கஸ்டடியில் கொலைச் செய்யப்பட்ட காஜா யூனுஸின் குடும்பத்தினருக்கு மஹராஷ்ட்ரா அரசு இதுவரை இழப்பீட்டை வழங்கவில்லை. மும்பை உயர்நீதிமன்றம் 2012 ஏப்ரல் 10-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி 17 லட்சம் ரூபாய் காஜா யூனுஸின் குடும்பத்தினருக்கு வழங்கியிருக்க வேண்டும்.
இதுத்தொடர்பாக மஹராஷ்ட்ரா அரசின் உள்துறைக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக யூனுஸின் தாயார் ஆஸியா பேகத்தின் வழக்கறிஞர் மிஹிர் தேசாய் தெரிவித்துள்ளார்.
காஜா யூனுஸ் ஆசியா பேகத்தின் ஒரே மகன் ஆவார். இவர் துபாயில் சாஃப்ட்வெயர் எஞ்சீனியராக பணியாற்றி வந்தவர். விடுமுறையில் ஊருக்கு செல்லும் பொழுது அநியாயமாக காட்கோபர் குண்டுவெடிப்பு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் போலீஸ் காவலில் வைத்து கொலைச் செய்யப்பட்டார்

துபாயில் அமெரிக்க கப்பற்படையால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: ஜெ.அறிவிப்பு!

fisherman sekar
சென்னை:ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணங்களில் ஒன்றான துபாயில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற தமிழரான ஏ.சேகர் அமெரிக்க கப்பற்படையின் அநீதிமான துப்பாக்கிச்சூட்டில் பலியானார். அவருடன் பயணித்த 3 பேர் காயமுற்றனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் கொலைச் செய்யப்பட்ட மீனவர் ஏ.சேகரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘துபாய் நாட்டில் உள்ள ஜெபல் அலி துறைமுகம் அருகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்க கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. சேகர் என்ற மீனவர் உயிரிழந்தார் என்றும், மூன்று மீனவர்கள் காயமடைந்தனர் என்றும் செய்தி கேட்டு நான் மிகுந்த வருத்தமுற்றேன்.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மீனவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

துபாய்:அமெரிக்க கப்பற்படையின் வெறிச்செயல் – துப்பாக்கிச்சூட்டில் தமிழர் பலி!


Indian(Tamil)  fisherman killed in US Navy firing off Dubaiதுபாய்:அமெரிக்க கப்பல் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிப்புற கடற்பகுதியில் வைத்து மீன்பிடி படகு மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சார்ந்த மீனவர் பலியானார். 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

ராமநாதபுரத்தைச் சார்ந்த சேகர்(வயது 26) என்பவர் அமெரிக்க கப்பற்படையின் அநியாய துப்பாக்கிச்சூட்டில் பலியான நபர் ஆவார். மணிகண்டன், முத்துக்கண்ணன் ஆகியோருக்கு துப்பாக்கிச்சூட்டில் காயம் ஏற்பட்டது.

பாரசீக வளைகுடாவின் 30 கடல் மைல் தொலைவில் உள்ள ஜெபல் அலி கடல் பகுதியில் வைத்து துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மீன் பிடித்தலுக்கு உபயோகிக்கும் 9 மீட்டர் அகலம் கொண்ட 3 எஞ்சின்களை உடைய ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

Monday, July 16, 2012

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யக்கோரி நாடுதழுவிய பிரச்சாரம்


புதுடெல்லி: எவ்வித குற்றமும் நிரூபணமாகாமல் நாடு முழுவதும் பல வருடங்களாக சிறையில் வாடும் முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யப்பட‌ வேண்டுமென்பதை வலியுறுத்தி தேசிய அளவில் மாபெரும் பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொள்ள இருக்கின்றது. இந்த மாதம் 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பல்வேறு விதமான கருத்தாலோசனைகளும், விவாதங்களும் இச்செயற்குழு கூட்டத்தில் நடைபெற்றது.

சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை உற்று நோக்கும்போது இந்தியாவில் பல சிறைச்சாலைகளில் பல முஸ்லிம் இளைஞர்கள் பல வருடங்களாக விசாரணைக்கைதிகளாகவே இருந்து வருகின்றனர். மேலும் அவர்களது வழக்குகள் தொடர்பான் விசாரணைகள் காலம் தேதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் முஸ்லிம்களின் சதவிகிதத்தை விட அம்மாநில சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை ஒரு கணக்கெடுப்பு வெளியிட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய ஆதாரங்கள் இல்லாதிருந்தும் யு.ஏ.பி.ஏ விதியை காரணம் காட்டி இன்றுவரை அவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டு வருகிறது. இப்பேற்பட்ட அப்பாவி இளைஞர்கள் சிறையில் இருந்து விடுபட வேண்டுமென்றால் சமூக ஆர்வலர்களும், தேசத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இதற்காக முன்வர வேண்டும்.

Wednesday, July 11, 2012

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா

புதுவலசை : நமதூர் அரபி ஒலியுல்லாஹ்வின் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் சிறப்பான பரிசளிப்பு விழா நமதூர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் மூலமாக பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வருடம் சற்று சிறப்பாக EPMA அமைப்புடன், தாசின் அறக்கட்டளையும் மற்றும் நமதூர் முஸ்லிம் தர்ப பரிபால சபையும் இணைந்து முப்பெரும் விழாவாக வெகு விமர்செய்யாக பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இதில் முஸ்லிம் தர்ம பரிபாலன சபைகளின் .கவுரவ தலைவர் ஜனாப். தையூப் கான் அவர்கள் தலைமை வகிக்க, ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகிக்க பரிசளிப்பு விழா சிறப்பாக துவங்கியது. இதில் தாசின் அறக்கட்டளையின் நிறுவனர் ஜனாப். தாசின், பள்ளிகளின் தாளாளர் ஜனாப். லியாகத் அலி கான், EPMA-வின் செயலாளர் ஜனாப். ஜாபிர் ஹுசைன், நமது ஊராட்சிகளின் செயல் தலைவர் ஜனாப். ஜபருல்லாஹ் கான், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஜனாப். சிக்கந்தர் சீதக்காதி மறைக்காயர், மற்றும் திரு. ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

Monday, July 9, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்

ஜூலை - 07 புதுவலசையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முஸ்லிம் தர்ம பரிபாலன சபை தலைவர் ஜனாப். அஹமது கபீர், செயலாளர் ஜகுபர் சாதிக் மற்றும் புதுவலசை ஃபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் ஆகியோர் துவங்கி வைத்தனர். இலவச கண் பரிசோதனையில் புதுவலசை, பனைக்குளம், தேர்போகி போன்ற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.  


                                    

பெரியப்பட்டிணத்தில் நடந்தது என்ன? – தூது நிருபரின் நேரடி அலசல்!


நேற்று முன்தினம் மதியம் கலைஞர் டி.வியில் பரபரப்பான ஃப்ளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் கடலோர கிராமத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பயிற்சி பெற்ற தீவிரவாதிகளை போலீஸ் பிடித்துச் சென்றது என்பதுதான் அந்த செய்தியின் சாராம்சம். இச்செய்தி பல்வேறு மீடியாக்களில் பலவிதமாக வெளியாகியிருந்தது.

அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக மீடியாக்களில் வெளியான இச்செய்தியின் உண்மை நிலைக்குறித்து அறிய தூது சார்பாக விசாரணையை துவக்கினோம்.

இதுத்தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் காலித் அவர்களை நாம் தொடர்பு கொண்டோம். அப்பொழுது அவர் கூறியது: “வலிமையான இந்திய தேசத்தை உருவாக்கவேண்டும் என்ற அடிப்படையில் ‘ஆரோக்கியமான சமுதாயம்! ஆரோக்கியமான தேசம்!’ என்ற கொள்கையை வகுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு உடற்பயிற்சிகள், சுயமுன்னேற்றம், நல்லொழுக்க பயிற்சிகளை அளித்து வருகிறது. இப்பயிற்சிகள் வெளிப்படையாக அதுவும் காவல்துறையினருக்கு தெரிந்தே நடைபெறுவதால் இதில் ரகசியம் எதுவும் இல்லை.

Dua For Gaza