Wednesday, October 31, 2012

நாடார் சாமுதாயத்தை பற்றி தவறான தகவல்களும் வரலாற்று திரிபுகளும் வெளியிடப்பட்டுள்ளதர்க்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி கண்டனம்



 எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி இன்று வெளியுட்டுள்ள அறிக்கை பின்வருமாறு
மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரிய(CBSE) பாட திட்டத்தின் 9 வது வகுப்பு ‘சமுக அறிவியல்‘ பாடத்தில் ‘இந்தியாவின் காலனியாதிக்க மாற்றம்‘ என்ற பாடம் உள்ளது. இதில் ‘சாதி மோதலும் ஆடை மாற்றமும்‘ என்ற தலைப்பின் கீழ் நாடார் சாமுதாயத்தை பற்றி தவறான தகவல்களும் வரலாற்று திரிபுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் .உடனடியாக இந்த தவறுகளை திருத்துவதோடு இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

பொய்ப் பிரச்சாரங்களுக்கு எச்சரிக்கையாக அமைந்த பாப்புலர் ஃப்ரண்டின் சமநீதி மாநாடு!

பாப்புலர் ஃப்ரண்டின் சமநீதி மாநாடு!ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்
கோழிக்கோடு:நவீன சமூக இயக்க சக்தியின் வளர்ச்சியை பொய்ப் பிரச்சாரங்களின் மணல் கோட்டையை கட்டி தடுக்க முடியாது என்ற பிரகடனத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமநீதி மாநாடு கோழிக்கோடு கடற்கரையில் புதிய வரலாற்றை எழுதியது.
வளர்ச்சி, சீர்திருத்தம், சுதந்திரம், நம்பிக்கை ஆகியவற்றை பிரதிபலிக்கும் மூவர்ண கொடியை ஏந்தியவாறு கேரளாவின் மலபார் பகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதூறு பிரச்சாரங்களுக்கு தங்களது எதிர்ப்புணர்வை பறைசாற்றினர்.
பயம், கோழைத்தனம் இவற்றையெல்லாம் கடலில் தூக்கி வீசிவிட்டு தனது லட்சிய பயணத்தை துவக்கிய மாபெரும் இயக்கத்தை போலீஸ்-ஊடக-அரசு இயந்திரங்களின் மிரட்டல்களாலும், வேட்டையாடல்களாலும் தகர்க்க முடியாது என்ற பிரகடனத்திற்கு மாநாட்டில் கலந்துகொண்ட மக்கள் வெள்ளம் சாட்சியம் வகித்தது.

புனித பூமியில் -IFF தொண்டர்களின் தன்னிகரில்லா சேவை!


மக்கா:IFF என்னும் இந்தியா ஃபிராட்டர்னிட்டி ஃபோரம் வருடா வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் ஹாஜிகளுக்கு தன்னலமற்ற தொண்டுகள் பல ஆற்றி வருகின்றது. இந்த வருடமும் அவர்களின் சேவை அபாரமாக இருந்தது. IFF தன்னார்வத் தொண்டர்கள் அரஃபாவிலும், முஸ்தலிபாவிலும், கூடார நகரமான மினாவிலும் பெரு வெள்ளமாகத் திரண்டு சென்ற ஹாஜிகளுக்கு இடைவிடாது சேவைகள் செய்தனர். இது ஹாஜிகளுக்கு மிகுந்த உதவியாகவும், நிவாரணமாகவும் இருந்தது.
குறிப்பாக கூடார நகரமான மினாவில் IFF தன்னார்வத் தொண்டர்களின் சேவை தனித்துவமிக்கதாக இருந்தது.

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அவசியம் – மத்திய அமைச்சர் ரஹ்மான் கான்!

Minority Affairs Minister K Rahman Khan favours reservation for backward Muslims
புதுடெல்லி:பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களை தழுவிய தலித்துகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று ரஹ்மான் கான் பி.டி.ஐ செய்தி ஏஜன்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் கூறியது: “இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரே நிவாரணம் அல்ல. இருப்பினும் அது பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையாகும். 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு அரசு தரப்பின் சட்ட நடைமுறை வீழ்ச்சிகளை பிரதிபலிக்கிறது.

Tuesday, October 30, 2012

கல்கி அவதாரம் எப்போதோ முடிந்து விட்டது:பண்டித் வைத் ப்ரகாஷ்


இறைவனின் கடைசி அவதாரம் என்று இந்துக்களால் விசுவாசிக்கப்படுகின்ற கல்கி அவதாரம் எப்போதோ இடம்பெற்று முடிந்து விட்டது, எனவே இனி அதை எதிர்பார்க்க வேண்டாம் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இந்தியில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார் இந்தியாவில் வங்காள மாநிலத்தை சேர்ந்த சமஷ்கிருத பண்டிதரான பிராமணர் ஒருவர்.
இவரின் பெயர் பண்டித் வைத் ப்ரகாஷ். புத்தகத்தின் பெயரை தமிழில் இறை தூதின் வழிகாட்டி என்று சொல்லலாம். முஹமது நபிதான் வேதாகமங்களில் சொல்லப்பட்டு இருக்கின்ற கல்கி அவதாரம் என்று இந்நூலில் எடுத்துக் கூறி உள்ளார்.

தாய்மார்களின் உணவுப் பழக்கம் குழந்தையின் உணவுப் பழக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்!


கருவுற்றிருக்கும் தாய்மார்களின் உணவுப் பழக்கம் பிறக்கப்போகும் குழந்தையின் உணவுப் பழக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்கிறது புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.
தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் சத்தான உணவுகளை உண்பதும், குழந்தையின் தேவைக்காகவும் சேர்த்து ‘இருவருக்காக’ உண்பதும் வழக்கம். இப்படி தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் உண்ணும் உணவுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது என்று தான் ஆராய்சிகள் இதுவரை கருதியிருந்தன.

இரோம் ஷர்மிளா இந்தியாவின் மகள்: மகா சுவேதா தேவி!

irom sharmila
கொல்கத்தா:இரோம் ஷர்மிளா இன்று மணிப்பூரின் மகள் மட்டுமல்ல, மாறாக இந்தியாவின், அமைதிக்காக பாடுபடும் அனைத்து நபர்களின் மகள் என்று புகழ்பெற்ற வங்காள எழுத்தாளர் மகா சுவேதா தேவி கூறியுள்ளார். கேரளாவைச் சார்ந்த கோவிலன் அறக்கட்டளை சார்பாக முதன்மை ஆக்டிவிஸ்ட் இந்தியா விருதை மணிப்பூரில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகளுக்காக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வரும் இரும்பு மனுஷியான இரோம்ஷர்மிளாவிற்கு வழங்கினார் மகா சுவேதா தேவி.

ரிஹாப் மூலம் 25 ஆயிரம் குடும்பத்தினருக்கு குர்பானி இறைச்சி விநியோகம்!

rehab qurbani distribution
புதுடெல்லி:அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்த இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமைந்தது குர்பானி இறைச்சி. தேச முழுவதும் ஈதுல் அழ்ஹா என்று அழைக்கப்படும் தியாகத்திருநாளில் குர்பானி கொடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட இறைச்சிகள் அடங்கிய பொட்டலங்களை ரிஹாப் இந்தியா பவுண்டேசன் விநியோகித்தது.

14 வருடம் சிறையிலடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஆமிருக்கு திருமணம்: அருந்ததி ராய் உட்பட பல மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்பு!

aamir khan marriage
புது தில்லி:தன் இளமையின் பெரும் பகுதியை சிறையில் கழித்து இறுதியில் குற்றமற்ற அப்பாவி என்று விடுதலை செய்யப்பட்ட முஹம்மத் ஆமிர் கானுக்கு கடந்த அக்டோபர் 15ம் தேதி வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய், இன்னொரு முக்கிய மனித உரிமைப் போராளியான ஷப்னம் ஹாஷ்மி, பத்திரிகையாளர் அஸீஸ் பர்னீ, வழக்கறிஞர் என்.டி. பஞ்சோலி, அரசியல்வாதிகள் ராம் விலாஸ் பாஸ்வான், முஹம்மத் அதீப் ஆகிய பிரபலங்களுடன், ஆமிரின் உறவினர்களும், நண்பர்களும் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

Monday, October 29, 2012

அமெரிக்காவை எதிர்த்தால் அவமானபடுத்துவதா? தனது கருத்தில் மாற்றம் இல்லை: இம்ரான் கான்

Imran_Khan
கனடா:பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாட்டு அரசியல் கட்சி தலைவருமான இம்ரான் கான், நியூயோர்க் செல்லும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது முதல் தெக்ரிக்-இ-இன்சாப் எனும் கட்சியை தொடங்கி நடத்தி வரும் இம்ரான் கான், சமீபகா லமாக பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா ஏவுகணைகள் நடத்தும் தாக்குதல்களை கடுமையாக கண்டித்துவருகிறார். இந்நிலையில் தனது கட்சிக்கு நிதி சேர்க்கும் முகமாக நியூயார்க்கில் சொற்பொழிவு நிகழ்வொன்றில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு செல்ல தயாரானர் இம்ரான் கான்.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு KIFF நடத்திய விளையாட்டு நிகழ்ச்சி

குவைத் நகரம்:ஹஜ் பெருநாளை முன்னிட்டு குவைத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளைச் செய்து வரும் குவைத் இந்தியா ஃபிராட்டர்னிட்டி ஃபோரம் (KIFF) சார்பாக விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பெருநாள் தினத்தன்று மதியம் சரியாக 2 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்வில் கால்பந்தாட்டம், கபடி, கைப்பந்து போட்டி, பெண்கள், சிறுவர்களுக்கான போட்டிகள் எனப் பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை அமுலாக்க முயற்சிகள் எடுக்கப்படும்: அமைச்சர் ரஹ்மான்கான்

k.rahman khan
புது தில்லி:சச்சார் கமிட்டி அறிக்கையை அமுல்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக புதிதாகப் பதவி ஏற்றுள்ள கே.ரஹ்மான் கான் கூறினார்.
மத்திய அமைச்சரவையில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கேபினட் அந்தஸ்துள்ள புதிய அமைச்சர்களும், இணை அமைச்சர்களும் அறிவிக்கப்பட்டுளளனர்.
சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டுவதைத் தடுப்பதற்கும், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கும் பாராளுமன்றத்தில் எதிர் வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் புதிய சுரங்க மசோதா கொண்டு வந்து சட்டமியற்ற முயற்சி செய்யப்படும் என்று சுரங்கத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தின்ஷா படேல் கூறினார்.

Sunday, October 28, 2012

அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு ராணுவ பயிற்சி!


டெல் அவிவ்: அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மிகப்பெரிய ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் எல்லை  பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த பிரச்னையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதேபோல் ஈரான் அணு ஆயுதங்களை  தயாரிப்பதாக கூறி, அந்த நாட்டின் மீது போர் தொடுப்போம் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் மிரட்டி வருகின்றன. இந்நிலையில், இதற்கு முன்பு எப்போதும்  இல்லாத வகையில் மிகப்பெரிய கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்கா, இஸ்ரேல் ஈடுபட்டுள்ளன. ராக்கெட்களை ஏவி இருநாட்டு வீரர்களும் பயிற்சியில்  ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஆயிரம் அமெரிக்க வீரர்களும் இதே எண்ணிக்கையில் இஸ்ரேல் வீரர்களும் இந்த கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைகளில், "ஜிம் மற்றும் லைப்ரரி!':பீகார் மாநில அரசு புதிய திட்டம்


கைதிகளின் உடல் நலம் மற்றும் மன நலத்தை பேணிக் காப்பதற்காக, சிறைகளில், உடற் பயிற்சிக் கூடம் மற்றும் நூலகங்களை திறக்க, பீகார் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, பீகார் மாநில, சிறைத் துறை ஐ.ஜி., ஆனந்த் கிஷோர் கூறியதாவது:பீகார் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில், தற்போது, 25 ஆயிரம் கைதிகள் உள்ளனர். இந்தக் கைதிகள், தங்களின் உடல் நலத்தை பேணி காக்க, உடற்பயிற்சி மேற்கொள்ள விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவோ அல்லது விளையாடவோ, சிறைகளில் போதிய இடவசதி இல்லை.

இந்தியா முழுவதும் தியாக திருநாள் வழமையான உற்சாகத்துடன் கொண்டாட்டம்!

Eid al-Adha celebrations underway in India
புதுடெல்லி:ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் நாடு முழுவதும் நேற்று (27.10.12) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
முஸ்லிம்கள் ஈத்காஹ் திடல்களிலும், மஸ்ஜித்களிலும் பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றினர். பின்னர் பரஸ்பரம் ஈத் வாழ்த்துகளையும், மகிழ்ச்சிகளையும் பரிமாறிக்கொண்டனர். அறுசுவை உணவுகள் உண்டு மகிழ்ந்தனர். தன் அருமை மகனையே இறைவனின் கட்டளைக்கேற்ப அறுத்துப் பலியிட முன்வந்த இப்றாஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக ஆடுகளையும், மாடுகளையும், ஒட்டகங்களையும் அறுத்துப் பலியிட்டனர்.

Saturday, October 27, 2012

தியாக திருநாளில் தியாகங்கள் செய்திட தயாராவோம் : எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவரின் பெருநாள் வாழ்த்து செய்தி



எஸ்.டி.பி.ஐ கட்சி யின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

இதயம் நிறைந்த தியாக திரு­­நாள் நல்வாழ்த்துக்கள்

நிறைந்த மகிழ்சியோடும், மிகுந்த சந்தோசத்தோடும் தியாக திருநாளாம் ”பக்ரீத்” பெருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு என் இதயம் நிறைந்த தியாக திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்களின் தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி


தியாகத் திருநாள் சிந்தனை தேச முன்னேற்றத்திற்கு களம் அமைக்கட்டும் ! பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்களின் தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி

மனித சஞ்சாரமற்ற மலைக்குன்றின் அடிவாரப் பாலைவனத்தில் இறைவனின் கட்டளைக்கு இணங்க தன் குடும்பத்தை தனித்து விட்டுச் சென்று புனித மக்காவில் மனித வாழ்க்கையின் விதையைத் தூவியவர். பகுத்தறிவிற்கு ஒவ்வாத நம்பிக்கைகள் மூலம் மக்களை அடிமைப்படுத்திய இராஜ்ஜியங்களுக்கு எதிரான போராட்டத்தை உலகில் தோற்றுவித்தவர். அவர் தாம் தியாகத்தின் திருவுருமாம் நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் .

Friday, October 26, 2012

பர்மாவில் மீண்டும் புத்தர்களின் வெறியாட்டம்: 11 முஸ்லிம்கள் மரணம்!

11 Rohingya Muslims killed in Myanmar
நேய்பிடவ்:மியான்மரின்(பர்மா)  மேற்கு ரக்ஹினே மாநிலத்தின்  சித்வே நகரில் உள்ள இரண்டு முஸ்லிம் கிராமங்களில் புத்த வெறியர்கள் உள்ளே நுழைந்து தீ வைத்தார்கள். இதில் குறைந்தபட்சம் 11 ரோஹிங்கியா முஸ்லிம்கள்  கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்தக் கோரச் சம்பவத்தை அரங்கேற்ற வந்த எராளமான புத்த வெறியர்களை இராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் தடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் தைரியம் பெற்ற புத்த வெறியர்கள் மம்ரா, மிரவ்ட் ஆகிய கிராமங்களில் உள்ள முஸ்லிம் வீடுகளுக்கு தீ வைத்தனர் என்று ரேடியோ பங்கா வானொலி கூறுகிறது.

வளைகுடா நாடுகளில் தியாகத் திருநாள் கொண்டாட்டம்! – துபாய் ஈத்கா திடலில் மக்கள் உற்சாகம்!

துபாய் ஈத்கா திடலில் மக்கள் உற்சாகம்!
துபாய்:இறைத்தூதர் ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் அரும் தியாகத்தை நினைவுகூரும் ஈதுல் அழ்ஹா – பக்ரீத் பண்டிகை இன்று அரபுலகம் எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா ஆகிய இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்புத் தொழுகையை தொழுதனர்.

உலகில் தயாரிக்கப்படும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணடிப்பு! – ஐ.நா வின் அதிர்ச்சித் தகவல்

உணவில் வீணடிப்பு!
ஜெனிவா:உலகில் தயாரிக்கப்படும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஓராண்டில் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு வீணடிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற வளர்ந்த நாடுகளில் வீணடிப்பு 36 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், இந்தியா,  சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் உணவுகள் வீணடிக்கப்படுவதாக ஐ.நா. அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

Thursday, October 25, 2012

இந்தியா எங்களின் நண்பன்! – சீனா


பெய்ஜிங்:இந்தியா எங்களின் எதிரி நாடு அல்ல  என்று சீனா தெரிவித்துள்ளது.  1962ம் ஆண்டு நடந்த போருக்குப்பின், உலகம் பெரும் மாற்றங்களை சந்தித்து விட்டதாகவும், இந்தியா தங்களது நட்பு நாடே அன்றி, எதிரி அல்ல என சீனா தெரிவித்துள்ளது.
1962-ல் இந்தியா சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை தொடர்பாக போர் நடந்தது. இதில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக மறைந்து, இருநாட்டு உறவு முறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இருப்பினும் எல்லைப்பிரச்சினையில் அது வரம்பு மீறி நடந்து வருகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சட்டம் கொண்டு வரவேண்டும்! – ஆர்.எஸ்.எஸ்


நாக்பூர்:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள் விடுத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில்  நேற்று நடைபெற்ற விஜயதசமி விழாவில் ஆர்.எஸ்.எஸ்.  தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசும்போது இதனை அவர் தெரிவித்தார்.
“ராமஜென்ம பூமிக்கு அருகிலேயே பெரிய கட்டிடங்கள் கட்ட முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்பணிகளுக்கு மாநில அரசுகள் உதவி செய்வதாகவும் தெரிய வந்துள்ளது.

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா? Part-5

                         பகுதி-5


எல்லோருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பது ஒரு நியாயமான கோரிக்கைதானே! அதை ஏன் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்?


மேலோட்டமாகப் பார்த்து இந்தப் பிரச்சினையை அணுக முடியாது. கிரிமினல் சட்டம், தண்டனைச் சட்டம் எல்லாம் இங்கே பொதுவாகத்தான் இருக்கிறது. சிவில் சட்டத்தில் விவாகரத்து, தத்து எடுத்தல், சொத்துரிமை ஆகியவற்றில் மட்டும் சில வேறுபாடுகள் மத அடிப்படையில் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஏதோ இந்திய முஸ்லிம்கள் அனைவருக்கும் அவர்களது ஷரியத் சட்டங்கள் எல்லாம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது போலச் சொல்வதும் தவறு. உதாரணமாக முஸ்லிம் நீதி முறையோ, தண்டனை முறையோ இங்கு நடைமுறையில் இல்லை. குற்றவாளிக்குத் தண்டனை என்பது இங்கே மத ரீதியில் வழங்கப்படுவதும் இல்லை. எல்லோருக்கும் பொதுவாகத்தான் தண்டனை வழங்கப்படுகிறது. 

“ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுத்தே தீருவேன்!” : பராக் ஒபாமா சபதம்


வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தான் பதவியில் நீடிக்கும் வரை ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி பூண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பில் பராக் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பாக  மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே தொலைக்காட்சியில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இரண்டு விவாதங்களுக்குப் பிறகு மிட் ரோம்னியின் கை சிறிது ஓங்கியிருந்தது.

Wednesday, October 24, 2012

டெங்கு மருத்துவ பரிசோதனை எப்படி?


டெங்குவா? எலிசா டெஸ்ட்

டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த எலிசா என்ற ரத்த பரிசோதனையை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையில் தான் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதா? இல்லையா என முழுமையாக தெரியவரும். இதை தவிர, மற்ற ரத்த பரிசோதனைகளை தனியார் மருத்துவமனைகளில் செய்ய கூடாது. இதனால், தவறான பரிசோதனை முடிவுகள் வரக்கூடும். 

டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசிகள் இல்லை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டாம். இதனால், டெங்கு காய்ச்சல் தீவிரமடைய கூடும். அதனால், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தாலோ உடனடியாக அருகில் உள்ள அரசு  மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். 

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா? Part-4

                     பகுதி-4

முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்புச் சாதனங்கள் எப்படி செயல்படுகின்றன?

முஸ்லிம்கள் பற்றிய கட்டுக் கதைகள் என இதுவரை நாம் என்னவெல்லாம் சொன்னோமோ அவ்வளவும் தொடர்புச் சாதனங்கள் வழியாய்த்தான் மக்கள் மத்தியில் பதிக்கப்படுகின்றன. இந்தி மொழிப் பத்திரிகைகள் இந்த வகையில் மிகவும் மோசம். பாபர் மசூதிப் பிரச்சினையில் ‘ஸ்வதந்த்ர சேத்னா’, ;பயோனியர்’, ‘ஆஜ்’, ‘ஸ்வதந்த்ர பாரத்’ போன்ற பத்திரிகைகள் எப்படி முஸ்லிம்களுக்கு எதிரான பொய்யான வதந்திகளைப் பரப்பின என்பதை ராதிகா ராமசேஷன் என்பவர் வெளிப்படுத்தியுள்ளார் (எ.பொ.வீ. 15-1-90). முலாயம்சிங் யாதவ் இந்த வெறியர்களுக்கு ஆதரவாக இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவரை ‘முல்லா முலாயம்’ என்றே இப்பத்திரிகைகள் எழுதின. “முலாயம் இஸ்லாமியரை ஆயுதம்வைத்துக் கொள்ளச் சொல்கிறார்” எனவும், “முலாயம் ஆட்சியில் இந்துக்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர்” எனவும் இவை பொய்ச் செய்திகளை வெளியிட்டன.

காஸாவுக்கு எதிராய் விரைவில் போர்தொடுப்போம்: நெத்தன்யாஹூ


நஸரத்: கடந்த திங்கட்கிழமை (22/10/2012) கட்டார் நாட்டின் அதிபர் ஷெய்க் ஹமாத் பின் கலீஃபா அல்தானி  இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகைக்கு உட்பட்டிருக்கும் காஸாவுக்கு முதன்முறையாக வருகைதந்திருந்தார்.

இதனையடுத்து, செவ்வாயன்று ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் பல்கேரிய அதிபர் ரோஸன் ப்ளீவ்னெலீவ் உடனான சந்திப்பின்போது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ, 'தம்முடைய அரசாங்கம் காஸாமீது எந்தக் கணத்திலும் போர் தொடுக்கலாம்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா அமைதிப்படை பாதுகாப்பு பணியில் பாலியல் மோசடி: விசாரணை இறுதிக் கட்டத்தில்!


புதுடெல்லி:ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் கலவரத்தை கட்டுப்படுத்த ஐ.நா அமைதிப்படை பாதுகாப்பு பணியை மேற்கொண்டது. இப்படையில் இந்திய ராணுவ வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். காங்கோவில் ஒரு ஹோட்டலில் வைத்து விபச்சார குற்றத்தில் ஈடுபட்டவர்களுடன் இந்திய மேஜர் ஒருவரும் கைதுச் செய்யப்பட்டார். இதுத்தொடர்பான விசாரணை நடந்துவரும் சூழலில் அவருக்கு எதிராக இன்னொரு வழக்கும் தொடுக்கப்பட்டது.

Tuesday, October 23, 2012

5 மாதத் தகவல் இருட்டடிப்பின் மர்மம் என்ன? - ஃபஸீஹின் மனைவி

fasih mahmood hand over to india
சமீபத்தில் சவூதி அரேபியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு தில்லியில் கைது செய்யபப்ட்ட பஸிஹ் முகமதுவின் இருப்பிடம் குறித்து எத்தகவலையும் தெரிவிக்காமல் மறைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று பஸிஹ் முகமதுவின் மனைவி  22 வயது நிகாத் பர்வீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு சின்னசாமி மைதானம் மற்றும் தில்லி ஜும்மா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்றும் இந்தியன் முஜாஹிதின் சார்பாக பஸிஹ் முகமது இதை செய்ததாகவும் இந்திய புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

நில நடுக்கம் பற்றி முன் கூட்டியே தகவல் கொடுக்காத விஞ்ஞானிகளுக்கு சிறை!


 நில நடுக்கம் பற்றி முன்னெச்சரிக்கை செய்யாத விஞ்ஞானிகளுக்கு இத்தாலி நீதிமன்றம் சிறை தண்டனை விதித்திருப்பது  மற்ற உலகளாவிய விஞ்ஞானிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது பற்றிய விவரம்:
இத்தாலி நாட்டின் லாஅகியுலா பகுதியில் கடந்த 2009 ல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 309 பேர் கொல்லப்பட்டனர் .

இந்திய அரசியலமைப்பு சட்டம் 356 பிரிவு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!


இந்திய அரசியல் சட்டம் 356 குடியரசுத் தலைவராட்சி (அல்லது மத்திய ஆட்சி) என்பது இந்தியாவில் மாநில அரசு ஒன்று கலைக்கப்பட்டு அல்லது , 

இடைநிறுத்தப்பட்டு நடுவண் அரசின் மேற்பார்வையில் இயங்குவதைக் குறிக்கிறது. இவ்வகை நடுவண் அரசின் நேரடி ஆட்சிக்கு இந்திய அரசியலமைப்பு விதி 356 வழி செய்கிறது. 
இவ்விதியின்படி, மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் இயங்காதிருக்கும்போது மாநில அரசுகளைக் கலைக்க நடுவண் அரசிற்கு அதிகாரம் உள்ளது.மாநில சட்டப்பேரவையில் 
எந்தவொருக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிட்டாது ஆட்சி அமைக்க இயலாதிருப்பினும் குடியரசுத் தலைவராட்சி அமையலாம். 

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா? Part-3

                       பகுதி-3
ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், பாரதீய ஜனதா போன்ற இந்து மதவெறி அமைப்புகள் மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாத்தை குறிவைப்பதேன்?
இதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலில்: இந்து மதத்திற்கு அடுத்த பெரிய மதம் இஸ்லாம். சில மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கூட உள்ளனர். அடுத்தது: வரலாற்று ரீதியாய் முஸ்லிம்களை ‘எதிரி’யாக நிறுத்துவது எளிது. இதனை முன்பே விளக்கியுள்ளோம். கடைசியாக: இந்து மதத்தின் அடிப்படைகளான வருணாசிரமம், சாதிக் கொடுமை, தீண்டாமை ஆகியவற்றுக்கு ஒரு சரியான சவாலாக விளங்குவது இஸ்லாம்தான்.

கிறிஸ்தவம் உட்படப் பிற மதங்கள் சாதிக்குப் பலியானபோது இஸ்லாம் மட்டுமே சாதியை ஒப்பீட்டு அளவில் வென்று நின்றது. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் குரு கோல்வால்கர், “நான்கு வருணம் என்கிற நமது சமூக அமைப்பில் முதலில் தலையிட்ட மதம் இஸ்லாம்தான். இந்தியாவில் நுழைந்த இஸ்லாம் நமது சாதி வர்க்கச் சமூக அமைப்பிற்குச் சவாலாய் இருந்தது” என வயிறெரிந்தார். ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா போன்றவை வருணாசிரமத்தைப் பேணுபவை. இமாசலப் பிரதேச மாநிலப் பாரதிய ஜனதா அரசு பதவியிலிருந்த கொஞ்ச காலத்தில் செய்த காரியங்களிலொன்று மணலி என்ற இடத்தில் மனு கோயிலைப் பல கோடி ரூபாய் செலவு செய்து புதுப்பித்தது. இவர்கள் இஸ்லாமை முதன்மை எதிரியாகக் கருதாமல் வேறென்ன செய்வார்கள்?

கஷ்மீரில் வனப்பகுதி நிலம் வேறு நோக்கங்களுக்கு ஒதுக்கீடு! – சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல்!


ஸ்ரீநகர்:கஷ்மீர் மாநிலத்தில் வனப்பகுதி நிலம் வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று comptroller and audit general of india(சி.ஏ.ஜி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இம்மாதம் வெளியிடப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தேசிய வனக் கொள்கையின்படி, மொத்த நிலத்தில் குறைந்தபட்சம் 33 சதவீதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால் ஜம்மு கஷ்மீரில் அந்த அளவை விட மிகவும் குறைவாக 25 சதவீத வனப்பகுதி நிலம் மட்டுமே உள்ளது. இந்த 25 சதவீத நிலத்திலும் வெறும் 1,063 ஹெக்டேர் (ஒரு சதவீதம்) நிலம் மட்டுமே மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. 1991-92 முதல் 2010-11 வரையிலான காலகட்டத்தில் 1,883.23 ஹெக்டேர் வனப்பகுதி நிலம் வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டதை ஆவணங்கள் காட்டுகின்றன. இதற்குப் பதிலாக, வேறு எந்த நிலமும் வனப்பகுதி பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை.

காஸ்ஸாவில் முதல் தடவையாக நோம் சோம்ஸ்கி வருகை! இஸ்ரேல் ஆக்கிரமிப்பை நிறுத்த கோரிக்கை!

Noam Chomsky attends Gaza conference
காஸ்ஸா:காஸ்ஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் ஆக்கிரமிப்பை நிறுத்தவேண்டும் என்று அமெரிக்காவைச் சார்ந்த பிரபல சிந்தனையாளரும், சமூக ஆர்வலருமான நோம் சோம்ஸ்கி கூறியுள்ளார். காஸ்ஸாவில் உள்ள இஸ்லாமிக் யூனிவர்சிட்டி நடத்திய சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் சோம்ஸ்கி. முதல் தடவையாக அவர் காஸ்ஸாவிற்கு வருகை தருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

கட்காரி நிறுவனத்தின் முறைகேடுகள் - டைம்ஸ் ஆப் இந்தியா அம்பலம்!


பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரியின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தின் நடவடிக்கைகளில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. 

பூர்த்தி பவர் அன்ட் சுகர் லிமிடெட் என்ற நிறுவனம் பாஜக தலைவர் நிதின் கட்காரியின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு ஐடியல் சாலை கட்டுமானக் குழும் (IRB) என்ற நிறுவனம் ஏராளமான கடன்களை வழங்கியுள்ளதுடன் முதலீடும் செய்துள்ளது. நிதின் கட்காரி 1995 முதல் 1999 வரை மகாராஷ்டிர பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது ஐஆர்பி நிறுவனத்திற்கு மாநில அரசின் பல ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

Monday, October 22, 2012

மக்களை சந்திப்போம்! உண்மை சொல்வோம்! பாப்புலர் ஃப்ரண்ட் எழுச்சியுடன் நடத்திய கோவை மண்டல மாநாடு!


கோவை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? என்ற தலைப்பில் மாபெரும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நேற்றைய தினம் (21.10.2012) அன்று கோவையில் மாபெரும் மண்டல மாநாடு நடைபெற்றது.


சிறுபான்மை சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் வலிமைக்காகவும் போராடக்கூடிய சமூக இயக்கங்கள் மீது அவதூறை பரப்பி அவப்பெயரை ஏற்படுத்தி அவர்களின் போராட்டங்களை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள சில ஃபாசிஸ சிந்தனை கொண்ட உளவுத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு ஊடகங்களை மிகப்பெரும் ஆயுதங்களாக பயன்படுத்தி ஜனநாயக உரிமைக்காக போராடி வரும் இயக்கங்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு வருகிறது. இதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மீது விதிவிலக்கு இல்லாமல் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

பரமக்குடியில் 25-ம் தேதி 108 ஆம்புலன்ஸ் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேர்வு!


தமிழகத்தில் மக்களின் அவசர தேவைகளுக்கு பெரும் உதவியாக இருப்பது 108 ஆம்புலன்ஸ் மருத்துவம், காவல் மற்றும் தீ விபத்து முதலிய அவசர தேவைகளுக்கு 24 மணி நேரமும் கிடைக்க கூடிய இந்த இலவச சேவையை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். தமிழ்நாடு சுகாதார திட்டத்தின்கீழ் ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்து அவசர கால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இந்த சேவையை செய்து வருகிறது.

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா? Part-2

                      பகுதி-2

ஜின்னாவின் திட்டம் அறிவு ததும்பும் திட்டம்” எனப் பாராட்டினார் பெரியார் ஈ.வெ.ரா.

தாங்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டைப் பிரிக்க வேண்டுமென்று இந்துககள் சொன்னார்களா? நம்ப முடியவில்லையே! அவர்களுக்கு இதில் என்ன லாபம்?

இந்துக்கள் சொன்னார்கள் என்று நான் சொல்லவில்லை. இந்து மகாசபைத் தலைவர்கள் சொன்னார்கள். சாதாரண மனிதனுக்கு, தான் ஒரு இந்து என்ற உணர்வே கிடையாது. அவனுக்கு ஏதாவது உணர்வு இருக்கிறதென்றால் சாதி உணர்வு வேண்டுமானால் இருக்கலாம். உயர்சாதி இந்து ஆதிக்கச் சக்திகள் வெள்ளையரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பறித்துத் தாங்கள் வைத்துக் கொள்ள விரும்பியபோது சாதிகளாய்ப் பிளவுண்டிருந்த மக்களை ‘இந்துக்கள்’ என்ற பெயரில் ஒன்றிணைக்க வேண்டியிருந்தது.எனவே முஸ்லிம்கள் என்றொரு ‘எதிரி’யைக் காட்டித் தங்களிடமிருந்து அந்நியமாகியிருந்த தாழ்ந்த சாதி மக்களைத் தங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உயர்சாதியினருக்கு இருந்தது

ம‌துரை - ‍ துபாய் நேர‌டி விமான‌ம்!அமீர‌க‌ த‌மிழ் அமைப்பின‌ரிட‌ம் ம‌த்திய‌ அமைச்ச‌ர் உறுதி!


ம‌துரையிலிருந்து துபாய்,சார்ஜா,ம‌ஸ்க‌ட் போன்ற‌ ந‌க‌ர‌ங்க‌ளுக்கு விமான‌ம் இய‌க்க‌ப்ப‌ட வேண்டும் என‌ப‌து வ‌ளைகுடாவில் ப‌ணியாற்றும் தென் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் ப‌ல்லாண்டு க‌ன‌வாகும்.த‌ற்போது ம‌துரை விமான‌ நிலைய‌த்திலிருந்து கொழும்பு உள்ளிட்ட‌ வெளிநாடுக‌ளுக்கு விமான‌ங்க‌ள் செய‌ல்ப‌ட‌ ஆர‌ம்பித்திருக்கும் நிலையில் க‌ன‌வு நிறைவேறும் சூழ்நிலை உருவாகியுள்ள‌து.

சில‌ தின‌ங்க‌ளுக்கு முன் துபாயில் உள்ள‌ த‌மிழ் அமைப்புக‌ள் ம‌ற்றும் ஏர் இந்தியா நிறுவ‌ன‌த்தாருட‌ன் ம‌துரையிலிருந்து துபாய்,சார்ஜா போன்ற‌ விமான‌ம் இய‌க்குவ‌து தொட‌ர்பான‌ க‌ல‌ந்தாலோச‌னை கூட்ட‌த்திற்கு ஈடிஏ நிறுவ‌ன‌ம் சார்பில் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

சீனாவின் விஷ உற்பத்தி!


உலகம் முழுவதும் உணவு பொருட்கள் விநியோகம் செய்வதில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் முழுவதற்கும் பூண்டு மட்டும் சுமார் 80 சதவீதம் சீனாதான் விநியோகம் செய்கிறது; இதிலிருந்து சீனாவின் உற்பத்தி மற்றும் விநியோக அளவை கணக்கீட்டுக்கொள்ளலாம். 

உணவு  பொருட்கள் விற்பனை செய்யும் நெஸ்ட்லே(Nestle) மற்றும் யுனிலிவர்(Unilever) போன்ற பன்னாட்டு நிறுவனங்கள்கூட தங்கள் உற்பத்திக்குத் தேவையான வெங்காயம் மற்றும் காளான்களை சீனாவிடமிருந்து பெற்றுதான் உணவு பொருட்களை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. 

ஏழை மாணவர்களுக்கு 25% இலவச ஒதுக்கீடு தனியார் பள்ளிகளில் அமல்படுத்தாது ஏன்? குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கேள்வி ?


            தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின்‘ பொது விசாரனை ‘சென்னையில் நேற்று முன்தினம் ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்கா தலைமையில் நடைபெற்றது.
அப்போது அதில் கலந்து கொண்ட ஆணையத்தின் உறுப்பினர் வி. வசந்தி தேவி பேசிய போது இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டை அமல்செய்ய தேவையில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தில் இருந்து எந்த மாதிரியான உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளன. என கேள்வி எழுப்பினார் .

2013 ம.பி. சட்டசபை தேர்தலில் SDPI போட்டி


sadi siddiqe
போபால்:எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச பிரிவு எதிர் வரும் 2013 சட்டசபை தேர்தலில் சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச மாநிலத் தலைவரும், தேசிய துணைத் தலைவருமான வழக்கறிஞர் ஸாஜித் ஸித்தீக்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக  மாநில செயற்குழு எடுத்த  முடிவைத் தெரிவித்தார். கட்சியின் தேசிய செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் கான் செயற்குழுவுக்கு தலைமை வகித்தார்.

Sunday, October 21, 2012

இனி இதயமும் விலைக்குக் கிடைக்கும்!


இதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு மாற்று இதயம் தேவைப்படுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது செயற்கை இதயம்

ண்டுதோறும் இதயக் கோளாறால் இறக்கும் நாற்பது லட்சம் இந்தியர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது மும்பை மருத்துவமனை. பல்வேறு இதயக் கோளாறுகளால் மாற்று இதயம் பொருத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் உறுப்பு தானத்திற்காக இனி காத்திருக்கத் தேவையில்லை. மும்பை தி ஏஷியன் ஹார்ட் இன்ஸ்டிட்யூட் நானூறு கிராம் எடையில் ஒரு செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளது. இதைப் பொருத்திக் கொண்டால் இதுவரை இதயம் செய்த பொறுப்பை செயற்கை இதயம் எடுத்துக் கொள்ளும்.

இந்திய தேசத்தின் தலைகுனிவு-இங்கே யாருக்கும் வெட்கமில்லை!


சக மனிதன் தன் மலக்கழிவை கையால் எடுப்பதும் தலையில் சுமப்பதும் கண்டும் கேட்டும் அதை அவமானமாக கருதும் எண்ணத்தைக் கூட இந்திய சமூகம் இன்னும் பெற்றிருக்கவில்லை. வெட்ககேடு.

2012இ ஏப்ரல் மாதம் டி.பி சத்திரம் என்ற ஊரில் மலம் அள்ளும் தொழிலாளி ஒருவர் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் போது மூச்சுத்திணறி இறந்திருக்கிறார். நம் ஊர் தொலைக்காட்சிகளுக்கு அது வெறும் பரபரப்பான செய்தியாக மட்டுமே இருந்தது. பார்ப்பவர்களுக்கும் அதைப் பற்றிய எவ்விதமான சொரணையும் இல்லை.
இறந்துப் போன அண்ணனின் வேலையை கார்ப்பரேஷனிலோ பஞ்சாயத்திலோ வாங்கிய தம்பி சின்னமுனியும் ஜூலை மாதத்தில் அதே போன்றதொரு முடிவில் மரணமடைந்திருக்கிறார். இறந்துப் போனவர்களுக்கு அரசு நிவாரணம் எதுவும் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளவும்.

முதுமையை விரட்டுவோம் - இளமையாய் இருப்போம்


இளமை.. மனிதனாக பிறந்த யார்தான் எப்போதும் இளமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். அன்றாடம் நாம் பார்க்கும் மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள்? பள்ளியில் படிக்கும் சிறுவனோ, கல்லூரி மாணவனைப் போல் வயது முதிர்ந்து தெரிகிறான். 30, 40 வயதை தொட்ட ஆணோ, பெண்ணோ நம் கண்ணுக்கு 50, 60 வயதுக்காரர்கள் போல் முதுமை தோற்றம் அளிக்கிறார்கள். 

அபய பூமி கஅபா!


கஅபா அபய பூமி என்பதின் விளக்கம்
திருக்குர்ஆனில் பல்வேறு வசனங்களில் கஅபாவை அபய பூமியாக பாதுகாப்புத் தலமாக ஆக்கியிருப்பதாக அல்லாஹ் கூறியுள்ளான்.
وَقَالُوا إِنْ نَتَّبِعِ الْهُدَى مَعَكَ نُتَخَطَّفْ مِنْ أَرْضِنَا أَوَلَمْ نُمَكِّنْ لَهُمْ حَرَمًا آَمِنًا يُجْبَى إِلَيْهِ ثَمَرَاتُ كُلِّ شَيْءٍ رِزْقًا مِنْ لَدُنَّا وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ (57) سورة القصص
அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்க ளில் அதிகமானோர் அறிய மாட்டார்கள் (அல்குர்ஆன் 28:57)
أَوَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا حَرَمًا آَمِنًا وَيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ أَفَبِالْبَاطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَةِ اللَّهِ يَكْفُرُونَ (67) العنكبوت
இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்க வில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா? (அல்குர்ஆன் 29:67)

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா? Part-1

இந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்?இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்?இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி?முஸ்லிம்கள் ஹிந்துகளாக கட்டய மத மாற்றம்?இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகளா?ஏன்  கஷ்மீரில் தீவிரவாதம்  அதிகரிக்கிறது ?மேலும் முஸ்லிம்கள் மீது சுமத்த படும் பல பொய் குற்றசாட்டுகளுக்கும் மிகவும் அற்புதமாகவும்,ஆழமாக சிந்தித்தும்  இந்த கட்டுரையில் விளக்கம் அளித்துள்ளார் தோழர் அ.மார்க்ஸ் அவர்கள் மிகவும் பெரிய கேள்வி -பதில் தொகுப்பு.எனவே இதை மூன்று பாகங்களாக பிரித்து வெளியிடுகிறோம்


இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர். வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் நோக்கமா? 

இஸ்ரேலின் அட்டூழியம்! உதவிக்கு சென்ற படகை வழிமறித்து கைது செய்த அடாவடிதனம்


இஸ்ரேலின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. காசாவுக்கு சென்று கொண்டிருந்த படகை இஸ்ரேல் படையினர் தடுத்து நிறுத்தி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலின் அடாவடிதனத்தால் பலஸ்தீனில் அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் நித்தம் நித்தம் கொன்று குவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதற்கு மருந்துகள், உதவிகள் செய்ய எந்த நாட்டிற்கும் அனுமதி வழங்காமல் அட்டூழியத்தை தொடர்ந்து அரங்கேற்றிவருகிறது.
காசா நிலப்பரப்புக்குள் படகுகள் நுழையாதபடி இஸ்ரேல் இராணுவம் தடைகளை போட்டு வைத்துள்ளது. மேலும் யாரும் உள்ளே வரக்கூடாது போன்ற பல்வேறு தடைகளையும் அறிவித்துள்ளது.

காற்று, நீரைப் பயன்படுத்தி பெட்ரோல் - விஞ்ஞானிகள் சாதனை!


வெறும் காற்றையும்  நீரையும் பயன்படுத்தி வேதிவினைகளின் மூலம் பெட்ரோல் உற்பத்தி செய்து இங்கிலாந்து வேதியியல் பொறியியலாளர்கள் சாதனை செய்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களில் சுமார் 5 லிட்டர் பெட்ரோல் வரை அவர்கள் உற்பத்தி செய்துள்ளனர் எனினும் இந்த முறைமை அதிக செலவு பீடிக்கும் வகை என்றும் தெரிவித்துள்ளனர்.

காற்றிலிருக்கும் கார்பன் எனப்படும் கரியை நீரிலிருக்கும் ஹைட்ரஜனுடன் வினை புரியச் செய்து மெத்தனால் எனப்படும் சேர்மத்தைத் தயாரித்த பொறியியலாளர்கள் பின்னர் மெத்தனாலிலிருந்து பெட்ரோலைப் பிரித்து எடுத்துள்ளனர்.

முஸ்லிம் மாணவிகள் முக்காடு அணிய எதிர்ப்பு: ரஷ்ய பிரதமர் கருத்து


ரஷ்யா:முஸ்லிம் மாணவிகள் முக்காடு அணிவதற்கு ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர் புடின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 பள்ளி மாணவிகள் தலையை முக்காடிட்டு வருவது கூடாது என தெரிவித்துள்ளார். .
ரஷ்யாவில் மொத்தமுள்ள 15 கோடி மக்களில், இரண்டு கோடி பேர் முஸ்லிம்கள் ஆவர்.
செசன்யா, வடக்கு காகசஸ், டடார்ஸ்டான் ஆகிய மாகாணங்களில் அதிகளவு முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
இங்கு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் முக்காடு அணிந்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பள்ளி முதல்வர்கள் மிரட்டப்படுகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் மனு- தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம்:கருணாநிதி!


சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசு தாக்கல் செய்துள்ள மனு, தமிழகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் என்று முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்:

சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்திற்கு எத்தனை அவசியமானது என்பதைப்பற்றி நான் 2 நாட்களுக்கு முன்பு கூட கடிதம் எழுதியிருந்தேன், திராவிடர் கழகத் தலைவர் இளவல் வீரமணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் ஜி. ராமகிருஷ்ணனும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தா. பாண்டியனும், பா.ம.க. சார்பில் நிறுவனர் ராமதாசும் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.

லேடன் இப்ராஹிமோவிக்கு “தங்க பாதம்” (GOLDEN FOOT ) விருது!

zladen ibrahimovic
மோன்டி கார்லோ:2012ம் ஆண்டுக்கான கோல்டன் ஃபூட் (GOLDEN FOOT ) என்றழைக்கப்படும் “தங்க பாதம்” விருதை, ஸ்வீடன் கால்பந்து அணி கேப்டன் லேடன் இப்ராஹிமோவிக் தட்டிச் சென்றார்.
மொனாகோ நாட்டில் லார்வாட்டோ கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தி கிரிமால்டி ஃபோரம் என்ற அரங்கில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்பந்து ஜாம்பவானான பிரேசில் வீரர் பீலே, கோல்டன் ஃபூட் விருதை இப்ராஹிமோவிக்கிற்கு வழங்கினார்.

Saturday, October 20, 2012

மழைக்கால நோய்கள்!


மழையின் இதம் மனசுக்கு சுகம் என்றால் மழையினால் பரவும் நோய்கள் உடம்புக்கு சோகம். ஊருக்குள் இருக்கிற ஒட்டுமொத்த அழுக்கையும் இழுத்துக்கொண்டோடும் மழைநீரில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் உற்சாகமாக நீந்திக்கொண்டிருக்கும். தன் வழியில் சிக்கியவர்களை எல்லாம் நோயில் விழ வைத்துவிடும். இப்படிப் பரவும் நோய்களிலிருந்து தப்பிக்க, வருமுன் காக்கும் பாலிஸிதான் பெஸ்ட் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் குணசேகரன்.

Dua For Gaza