Showing posts with label Community Development. Show all posts
Showing posts with label Community Development. Show all posts

Monday, May 29, 2017

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கிணறு உதவி..!

இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையில்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறையின் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இதனை கடந்த 27.05.2017 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான சகோதரர்.முஹம்மது ரஸீன் அவர்கள்  பயனாளிக்கு வழங்கினார்.

Sunday, February 15, 2015

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி!
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

Thursday, January 30, 2014

பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டுத் துறை இராமநாதபுரம் தெற்கு மாவட்டத்தில் "முழுமையான கல்வி கிராமம் (Sarva Shiksha Gram)"

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக "முழுமையான கல்வி கிராமம் (Sarva Shiksha Gram)" திட்டம் 26.01.14 அன்று இராமநாதபுரம் தெற்கு மாவட்டத்தில் முஹம்மதியாபுரத்தில் துவங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலமாக முஹம்மதியாபுரம் கல்வி வளர்ச்சிக்காக தத்தெடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் எந்த ஒரு குழந்தையும் அவர்களது பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்து விடக்கூடாது என்பதாகும்.

Wednesday, July 17, 2013

3.3 கோடி ரூபாய் பள்ளிக்கூட சாதனங்களை வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட்!

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டுதோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ திட்டத்தில் இந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்கூல் கிட்டுக்களை (பள்ளிக்கூட சாதனங்கள்) வழங்கியுள்ளது. மொத்தம் 1,16, 595 ஸ்கூல் கிட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட வர்ணமயமான பேரணியுடன் இந்நிகழ்ச்சி துவங்கியது.கல்வி சர்வே, ஸ்கூல் கிட்டுகள் விநியோகம், மாணவர்க-பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு, சிறந்த மாணவர்களை ஊக்குவித்தல், பாதியில் படிப்பை நிறுத்திய மாணவர்களை மீண்டும் தேடிப்பிடித்து பள்ளியில் சேர்த்தல் போன்ற நிகழ்ச்சிகள் இந்த ஸ்கூல் சலோ பிரச்சாரத்தின் போது நடந்தேறின.ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உ.பி, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்காளம், மணிப்பூர், மத்தியபிரதேசம், ஆந்திரபிரதேசம், மஹராஷ்ட்ரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 15 மாநிலங்களில் ஸ்கூல் சலோ நிகழ்ச்சிகள் நடந்தன.

Monday, July 15, 2013

அஸ்ஸாமில் ரிஹாபின் 6-வது கட்ட நிவாரண பணிகள் துவக்கம்!

பொங்கைகான்:அஸ்ஸாமில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளை ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் துவக்கியுள்ளது. ரிஹாபின் 5-வது கட்ட நிவாரண பணிகளின் வருடாந்திர அறிக்கையை(2012-13) பொங்கைகான் மாவட்ட துயர்துடைப்பு துறை ப்ரொஜக்ட் ஆஃபீஸர் பங்கஜ் சவுத்ரியிடம் ஒப்படைத்துவிட்டு ரிஹாபின் சேர்மன் இ.அபூபக்கர் ஸாஹிப் 6-வது கட்டமாக இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகளை துவக்கி வைத்தார்.

Thursday, July 4, 2013

2013 ம் ஆண்டிற்கான கல்வி உதவி தொகை திட்டம் அறிவித்தது பாப்புலர் ஃப்ரண்ட்


புதுடெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கடந்த மூன்று மாதங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற "பள்ளி செல்வோம்" பிரச்சாரத்தின் இறுதியாக பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை தடையில்லாமல் தொடர்வதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இத்திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது..

2013-2014 வருடத்தில் கல்லூரியில் இடம் பிடித்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசிய அளவிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து மூன்றுவருடமாக பாப்புலர் ஃப்ரண்ட் செயல்படுத்தி வருகிறது.

Wednesday, June 19, 2013

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஸ்கூல் சலோ!

சமூகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ பிரச்சாரம் இவ்வாண்டு டெல்லியில் துவங்கியது.வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள டெல்லி செங்கோட்டையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி கற்பதன் உரிமையையும் எடுத்தியம்பும் முழக்கங்களையும், அட்டைகளையும் ஏந்தி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற பேரணியின் மூலம் கடந்த மாதம் இந்நிகழ்ச்சி துவங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ் மாநில துவக்க விழா திண்டுக்கல் மாவட்டத்தில் கோலாகலமாக தொடங்கியது.

Tuesday, June 4, 2013

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு 2013-2014 ஆண்டுக்கான கல்வி உதவி தொகை - தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின (இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ,புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சிகள்) மாணவ – மாணவிகளுக்கு 2013-2014 ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. 2013-14ம் கல்வியாண்டிற்கு, புதிதாக உதவித்தொகை பெறவும் மற்றும் முந்தைய வருடம் பெற்று கொண்டிருக்கும் உதவித்தொகையை புதுப்பிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன.

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :

1) 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு

2) பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

Dua For Gaza