Showing posts with label NCHRO. Show all posts
Showing posts with label NCHRO. Show all posts

Friday, October 31, 2014

எஸ்.பி. பட்டணம் காவல் நிலையக் கொலை - உண்மை அறியும் குழு அறிக்கை

மதுரை,
  அக்டோபர் 29, 2014.

சென்ற அக்டோபர் 14 அன்று மாலை இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை காவல் சரகம், எஸ்.பி. பட்டணம் என அழைக்கப்படும் சுந்தரபாண்டியன் பட்டனம் காவல் நிலையத்தில் காட்டுவா எனபவர் மகன் செய்யது முஹம்மது (24) என்பவர் அந்தக் காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் (எஸ்.அய்) அ.காளிதாஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அனைத்து நாளிதழ்களிலும் விரிவாக வெளிவந்தது. அவ் வழக்கு விசாரணை தற்போது சி.பி.சி.அய்.டி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், காளிதாஸ் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு இராமநாதபுரம் தலைமைக் காவல் நிலையத்தில் உள்ளார் எனவும், கொல்லப்பட்ட செய்யது முஹம்மது குடும்பத்திற்கு அரசு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு தந்துள்ளது என்பதும், பல்வேறு இயக்கங்களும் செய்யது முஹம்மது குடும்பத்திற்கு நீதி கேட்டுப் போராடி வருகின்றன என்பதும், சம்பவத்தின் போது காவல் நிலையத்தில் இருந்த ஆறு காவலர்களும் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பதும் தொடர்ந்து வந்த செய்திகள்.

Friday, December 13, 2013

ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேஷனுக்கு முகுந்தன் சி.மேனன் விருது!


Nchro

கோழிக்கோடு: பிரபல மனித உரிமை ஆர்வலரும், என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் ஸ்தாபகபொதுச் செயலாளருமான மறைந்த முகுந்தன் சி.மேனன் பெயரில் ஆண்டு தோறும் என்.சி.ஹெச்.ஆர்.ஓ (தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு) மனிதஉரிமை விருதை வழங்கி வருகிறது. இவ்விருது மனித உரிமை மற்றும்சுற்றுச்சூழல் தளத்தில் சிறப்பாக பணியாற்றிய நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Sunday, August 4, 2013

மேலப்பாளையத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் அப்பாவிகள்:NCHROவின் உண்மை கண்டறியும் குழு!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த ஆகஸ்ட் 1 ம் தேதி அன்று வீட்டில் வெடி குண்டு வைத்திருந்ததாக பொய்யாக குற்றம் சுமத்தி மேலும் சேலம் பி.ஜே.பி பொது செயலாளர் ஆடி ட்டர் ரமேஷ் வழக்கிலும் பொய்யாக குற்றம் சுமத்தி அப்பாவி முஸ்லிம்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளது தமிழக காவல் துறை . இது குறித்து NCHRO வின் உண்மை கண்டறியும் குழு நேரில் சென்று சம்பவம் நடந்த பகுதிகளை ஆய்வு செய்து,பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நேரில் சென்று விசாரித்தனர்.

Monday, July 15, 2013

கடையநல்லூர் மசூத் கொலை வழக்கு: எஸ்.பி ஈஸ்வரன் பதவியிறக்கம்!

நெல்லை: நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மசூத் என்பவர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி விசாரணைக்காக கன்னியாகுமரி மாவட்ட போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு கீரிப்பாறை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

கடந்த ஆறு வருடங்களாக இந்த வழக்கிற்காக போராடி வருகின்றது மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO). என்.சி.ஹெச்.ஆர்.ஓ. வின் களப் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தினால், இக்கொலையில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. பிரதாப் சிங், டி.எஸ்.பி.கள் ஈஸ்வரன், சந்திரபால் உள்ளிட்ட பன்னிரெண்டு காவல்துறை அதிகாரிகள் மீது சி.பி.சி.ஐ.டி கொலை வழக்கு பதிவு செய்து, திருநெல்வேலி செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

Sunday, June 2, 2013

கடைய நல்லூர் மசூத் கொலை வழக்கு : டி எஸ் பி சஸ்பெண்ட்!

2005 ஆம் ஆண்டு காவல்துறை கண்காணிப்பில் இருந்த சிறைக்கைதி ஒருவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட வழக்கில், காவல்துறையின் க்யூ பிரிவு மாவட்ட துணை கண்காணிப்பாளர் சந்திரபால் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணிஓய்வு பெற இருந்த 24 மணி நேரத்துக்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு, கடையநல்லூரைச் சேர்ந்த மசூத் என்னும் 38 வயது நிதி நிறுவன அதிபரை காவல்துறை ஒரு திருட்டுக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்தது.விருதுநகரைச் சேர்ந்த வணிகர் கிருஷ்ணமூர்த்தி என்பவரை காரில் கடத்திச் சென்று ரூ.10 இலட்சம் கொள்ளையடித்ததாக மசூத் மற்றும் அவரது தோழர்கள் மூவரை காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றிருந்தது.

Tuesday, May 28, 2013

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்ற உண்மை கண்டறியும் குழு வலியுறுத்தல்!

பெங்களூரு மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பு வழக்கில் மூன்று மாநிலங்கள் தொடர்பு இருப்பதாலும், பல முரண்பாடான தகவல்கள் வெளியாவதாலும் இந்த வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்
என மனித உரிமைகள் அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பின் (NCHRO), உண்மை கண்டறியும் குழு வலியுறுத்தியுள்ளது.

Saturday, May 18, 2013

கேரளா நாராத் சம்பவம்: போலீஸாரால் ஜோடிக்கப்பட்டது! மனித உரிமை அமைப்பு அறிக்கை!


கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள நாராத் பகுதியில் வெடிக்குண்டுகளுடன் ஆயுதப் பயிற்சில் செய்ததாக கூறி 21 பேரை கைது செய்த சம்பவம் போலீஸாரால் ஜோடிக்கப்பட்டது என்று உண்மைக் கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓ குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் நடத்திய தீவிர விசாரணையில் போலீசாரின் குற்றச்சாட்டுக்கள் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது.

Thursday, February 14, 2013

அப்சல் குரு தூக்கு:சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

2001 டிசம்பர் 13 ஆம் நாள் நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு கடந்த 9.2 .2013 அன்று காலை 8 மணி அளவில் தூக்கிலிடப்பட்டார்.இதைக் கண்டித்து சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில்கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் NCHROவின் மாநில குழு உறுப்பினர் A ராஜா முஹம்மது துவக்க உரை நிகழ்த்தினார். 

 வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன்,மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு மற்றும் மனித உரிமை பாதுகாப்பு வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.இதில் மனித உரிமை ஆர்வலர்கள்,வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, February 12, 2013

மரணத் தண்டனையை நீக்கவேண்டும்! – NCHRO

NCHRO

புதுடெல்லி:மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரான மரணத் தண்டனையை வாபஸ் பெறவேண்டும் என்று மனித உரிமை அமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓ கோரிக்கை விடுத்துள்ளது. அப்ஸல் குருவுக்கு சொந்தமாக வழக்கறிஞரை நியமிக்க கூட வாய்ப்பு அளிக்கவில்லை என்று அவ்வமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இதுக்குறித்து என்.சி.ஹெச்.ஆர்.ஓ வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:

Wednesday, January 2, 2013

மனித உரிமை போராளிகளுக்கான முகுந்தன் சி மேனன் நினைவு விருதை உதயகுமார் பெறுகிறார்!


Jan 02: NCHRO  (National Confederation of Human Rights Organisations) வழங்கும் இந்தியாவின் மிக சிறந்த மனித உரிமை போராளிகளுக்கான முகுந்தன் சி மேனன் நினைவு விருதை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார் பெறுகிறார்.

யார் இந்த முகுந்தன் C மேனன்: இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளியான இவர் 1948 ஆம் ஆண்டு இவர் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் செண்பகாசேரி என்கிற ஊரில் பிறந்தார். டெல்லியில் பத்திரிக்கையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டு மனம் வருந்தினார். அதற்க்கெதிராக தனது வாழ்க்கையின் 35 வருடங்களை செலவிட்டு பின்னர் இயற்க்கை எய்தினார். 

Saturday, December 29, 2012

UAPA உடனே நீக்க வேண்டும்-NCHRO

  மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) சார்பாக ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் 20.12.2012 மாலை 5.00 மணியளவில் சென்னையில் நடைபெற்றது.என்.சி.ஹெச்.ஆர்.ஓ.வின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர். ஏ. ராஜா முஹம்மது வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுப் துவக்கவுரையாற்றினார். மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் தலைவர் (PUHR) பேரா. அ. மார்க்ஸ் யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கொடூரத்தன்மை குறித்து அறிமுக உரையாற்றி விவாதத்தை துவக்கி வைத்தார்.

Dua For Gaza