skip to main | skip to sidebar

புதுவலசை

சத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)

  • Home
  • About
  • Contact
  • Log In

Labels

  • இந்தியா (1620)
  • உலகம் (1145)
  • தமிழகம் (552)
  • PFI (192)
  • இஸ்லாம் (179)
  • SDPI (163)
  • ஹிந்துத்துவா (104)
  • கட்டுரை (94)
  • இராமநாதபுரம் (93)
  • புதுவலசை (86)
  • மருத்துவம் (49)
  • சட்டம் (34)
  • அறிவியல் (22)
  • அரசியல் (21)
  • வளைகுடா செய்திகள் (16)
  • Media (14)
  • NWF (12)
  • இஸ்லாமிய கூட்டமைப்பு (12)
  • CFI (11)
  • NCHRO (11)
  • தொடர்கள் (11)
  • Community Development (8)
  • AIIC (6)
  • ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)
  • EPMA (3)
  • video (3)
  • தகவல் தொழில்நுட்பம் (3)

தினம் ஒரு குர்ஆன் வசனம்

இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)

License

பதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:

Delivered by FeedBurner

Site Info

Pages

  • Home
Powered by Blogger.

About Me

My photo
puduvalasainews
சத்தியத்தை உரக்க முழங்குபவன்
View my complete profile
Showing posts with label இஸ்லாமிய கூட்டமைப்பு. Show all posts
Showing posts with label இஸ்லாமிய கூட்டமைப்பு. Show all posts

Friday, June 20, 2014

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க கோரி இலங்கை தூதரகத்தில் கூட்டமைப்பு சார்பில் மனு

islamiya koottamaippu
இலங்கையில் கடந்த காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 15 ம் தேதி நடைபெற்ற வன்முறையில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு 50 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.மேலும் பளிவாசல்களும், வீடுகளும், தொழில் நிறுவனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
மேலும் வாசிக்க
இடுகையிட்டது puduvalasainews நேரம் 10:20:00 PM 0 கருத்துரைகள்
லேபிள்கள்: PFI, SDPI, இஸ்லாமிய கூட்டமைப்பு, தமிழகம்

Wednesday, July 31, 2013

அத்வானி கூட்டத்திற்கு கட்டுப்பாடு - இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கோரிக்கை!

 சேலத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி பங்கேற்கும் கூட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
சேலத்தில் படுகொலை செய்யப் பட்ட பா.ஜ.க. செயலர் ஆடிட்டர் ரமேஷ் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க அத்வானி சேலம் வருகிறார். இக்கூட்டம் வரும் ஆக-1 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்த கூட்டத்தில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக, கூடுதல் கட்டுப்பாடு விதித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை மனுவை, சேலம் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத், நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்திடம் மனு வழங்கியுள்ளனர்.
மேலும் வாசிக்க
இடுகையிட்டது puduvalasainews நேரம் 10:53:00 AM 0 கருத்துரைகள்
லேபிள்கள்: இஸ்லாமிய கூட்டமைப்பு, தமிழகம்

Wednesday, July 24, 2013

இராமநாதபுரத்தில் மசூதிக்கு தீ வைப்பு; முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

 இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் உள்ள செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொழுவதற்காக பள்ளிவாசல் ஒன்று பள்ளி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த (22/07/2013) திங்கள் இரவு சமூக விரோதிகள் சிலர் உள்ளே புகுந்து சிறுநீர் கழித்து, இருந்த தொப்பி உள்ளிட்ட ஆவணங்களை எரித்து, வராண்டா பகுதியில் இருந்து மின்விசிறி மற்றும் ஒலி பெருக்கியை சேதப்படுத்தி தமது மத துவேசத்தை அரங்கேற்றிச் சென்றுள்ளனர்.
மேலும் வாசிக்க
இடுகையிட்டது puduvalasainews நேரம் 11:03:00 AM 0 கருத்துரைகள்
லேபிள்கள்: இராமநாதபுரம், இஸ்லாமிய கூட்டமைப்பு, ஹிந்துத்துவா

பா.ஜ.க பந்த்: இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம்!


சென்னை: சேலத்தில் பா.ஜ.க வின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று (22.7.2013) தமிழகத்தில் முழு கடையடைப்புக்கு அக்கட்சி அழைப்பு விடுத்தது. பா.ஜ.க. நடத்திய இந்த பந்த் தொல்வியை தழுவியது என்றாலும் பல இடங்களில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் மீதும், வணிக நிர்வனங்கள் மீதும் பா.ஜ.க வினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றம் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க
இடுகையிட்டது puduvalasainews நேரம் 10:01:00 AM 0 கருத்துரைகள்
லேபிள்கள்: Media, இஸ்லாமிய கூட்டமைப்பு, தமிழகம்

Friday, July 5, 2013

பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு : கூட்டமைப்பினர் கர்நாடக முதலமைச்சரிடம் கோரிக்கை


கர்நாடகா : முதல்வர் சித்தாரமையாவை இன்று (04.07.2013) தமிழ்நாடு அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். அப்போது கீழ்க்கண்ட கோரிக்கைகள் முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் 17-ம் தேதி பெங்களூர் மல்லேசுவரத்தில் நடைபெற்ற குண்டு வெடுப்பு வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 15 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பாவிகள். இந்த வழக்கிற்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உள்நோக்கத்துடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை பல உண்மை அறியும் குழுக்களும் தெளிவுபடுத்தியுள்ளன. கைது செய்யப்பட்ட இளைஞர்களில் கிச்சான் புகாரி என்ற இளைஞர் உட்பட பலர் போலீஸ் காவலில் கடும் சித்ரவதைக்கும், தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டை ஏற்கும்படி நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க
இடுகையிட்டது puduvalasainews நேரம் 11:43:00 PM 0 கருத்துரைகள்
லேபிள்கள்: PFI, இஸ்லாமிய கூட்டமைப்பு

Wednesday, June 19, 2013

இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கோவையில் "உண்மையும் உரிமையும் " பொதுக்கூட்டம்-பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் பங்கேற்பு


கோவை : தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்டம் லாரிப்பேட்டையில் 16.06.2013 அன்று மாலை 5.00 மணி அளவில் "உண்மையும் உரிமையும் " என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முஹம்மது ஹனீஃபா தலைமை தாங்கினார்.
மேலும் வாசிக்க
இடுகையிட்டது puduvalasainews நேரம் 12:03:00 PM 0 கருத்துரைகள்
லேபிள்கள்: PFI, இஸ்லாமிய கூட்டமைப்பு, தமிழகம்

Saturday, May 18, 2013

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கை சி.பி.ஐ விசாரிக்க இஸ்லாமிய கூட்டமைப்பினர் கோரிக்கை!


press meet_708_270
 பெங்களூரு மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டுவெடிப்பு பா.ஜ.க வின் அரசியல் லாபத்திற்காக நடத்தப்பட்ட சதி செயல் என்றும் இந்த அரசியல் சதிகளுக்கு தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பலிகடா ஆக்கப்படுவதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வாசிக்க
இடுகையிட்டது puduvalasainews நேரம் 10:33:00 AM 0 கருத்துரைகள்
லேபிள்கள்: இந்தியா, இஸ்லாமிய கூட்டமைப்பு

பெங்களூர் குண்டு வெடிப்பு கைது! இஸ்லாமிய கூட்டமைப்பினர் கோவையில் நேரில் ஆய்வு



கோவை: தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்று காலை சென்னையில் இருந்து கோவை வந்தனர். அவர்களை கோவையில் உள்ள இஸ்லாமிய இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

பிறகு காலை சுமார் 11 மணி அளவில் பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞகர்களின் வீடுகளுக்கு என்ன நடந்தது என்ற விவரங்களை அறிய இயக்க தலைவர்கள் சென்றனர். அவர்களது குடும்பத்தினரை சந்தித்து முழுமையாக விவரங்களை அறிந்த பிறகு கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய பிறகு கோவை பத்திரிக்கையாளர் சங்கத்தின் (PRESS CLUB) அலுவலகத்தில் வைத்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டமைப்பின் தலைவர் மவுலானா அப்துல் ரஹ்மான் மிஸ்பாஹி மற்றும் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது அனீபா, தமுமுக மாநில பொதுச்செயலாளர் காஞ்சி ப. அப்துல் சமது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் A.S. இஸ்மாயில், SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, வேல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா மாநில செயலாளர் வழக்கறிஞர் ஜைனுலாபுதீன், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் இனாயத்துல்லா, மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் மாநில தலைவர் அ.ச. உம்மர் பாரூக் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கடந்த ஏப்ரல் 17 இல் பெங்களூர் நகரில் மல்லேஷ்வரம் பா.ஜ.க. அலுவலகம் அருகே வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த கிச்சன் புகாரி உட்பட பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வாசிக்க
இடுகையிட்டது puduvalasainews நேரம் 10:33:00 AM 0 கருத்துரைகள்
லேபிள்கள்: இஸ்லாமிய கூட்டமைப்பு, தமிழகம்

Saturday, May 11, 2013

பெங்களூர் குண்டுவெடிப்பு கைது! இஸ்லாமிய கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்!


பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து, சென்னையில் இன்று அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் வாசிக்க
இடுகையிட்டது puduvalasainews நேரம் 10:24:00 AM 0 கருத்துரைகள்
லேபிள்கள்: இஸ்லாமிய கூட்டமைப்பு, தமிழகம்

Monday, March 28, 2011

மதுரை முஸ்லிம் ஜமாத் தலைவர்கள் ஒட்டுமொத்த தேர்தல் புறக்கணிப்பு

by கூத்தாநல்லூர் முஸ்லீம் under ELECTION, madurai, pfi, SDPI
 

கடந்த 1.03.2011 அன்று மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கடந்த 08.03.2011 முதல் அப்பாவி முஸ்லிம்களை சட்டவிரோத காவலில் வைத்து 4 நாட்கள் கடுமையான சித்திரவதை செய்து மாட்டுத்தலையை போட்டது நாங்கள்தான் என்று ஒத்துக்கொள்ளுமாறு அடித்து துன்புறுத்தி வாக்குமூலங்களை பொய்யாக தாங்களே எழுதி, கத்திகளை சந்தையில் வாங்கி, ஆதாரங்களை போலியாக தயாரித்து பொய் வழக்கு புனைந்து அப்பாவி முஸ்லிம்கள் 5 நபர்களை சிறையிலடைத்தனர்.

மேற்படி அத்துமீற‌ல் சம்மந்தமாகவும், மததுவேசமாகவும், நடந்து கொண்ட காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும், போடப்பட்டுள்ள பொய் வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற ஆவண செய்யக்கோரியும் கடந்த 15.03.2011 அன்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தினரும், மதுரையில் உள்ள 90 பள்ளிவாசல்களின் நிர்வாகிகளுடனும் மற்றும் அனைத்து முஸ்லிம் இயக்கத்தினரும் நேரில் சந்தித்து மனு கொடுத்தோம். பின்னர் மேற்படி மனுவை உள்துறைசெயலாளரும், டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி, தென்மண்டல ஐ.ஜி., ஆகியோரும் பதிவு தபாலில் அனுப்பினோம். பின்னர் மதுரை மா நகர காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் இது சம்பந்தமாக பல முறை புகார் செய்தோம்.

பின்னர் மேற்படி வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட கோரி மதுரை நெல்பேட்டை அண்ணாசிலை அருகில் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைமையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கலந்து கொண்டு அமைதியான முறையில் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பின்னர் கடந்த 23.03.2011 அன்று மீண்டும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு பரிந்துரை செய்ய கோரினோம்.

கடந்த 22.03.2011 அன்று பல்வேறு மனித உரிமை அமப்புகள் ஒன்றிணைந்து உண்மை கண்டறியும் குழு ஒன்றை பேராசிரியரும் பிரபல எழுத்தாளருமான அ. மார்க்ஸ் அவர்கள் தலைமையில் உருவாக்கி பல்வேறு உண்மைகளை கண்டறிந்து கடந்த 23.03.2011 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையிலும் மேற்படி வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மேற்படி வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற இதுவரை உத்தரவிடாததால் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைமையில் உள்ள 90 ஜமாத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும், அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றினைந்து எதிர்வரும் ஏப்ரல் 13ம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டுமொத்தமாக மதுரை வாழ் முஸ்லிம்களை அனைவரும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இடுகையிட்டது puduvalasainews நேரம் 9:41:00 PM 0 கருத்துரைகள்
லேபிள்கள்: இஸ்லாமிய கூட்டமைப்பு, தமிழகம்

Monday, March 14, 2011

மேலபாளைய காவல்துறையின் அராஜகம்

by கூத்தாநல்லூர் முஸ்லீம் under nellai, pfi, SDPI
நெல்லை மாவட்ட மேலபாளையத்தில் காதியானியசத்தை எதிர்த்து அனைத்து இயக்க மாநில தலைவர்களும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.இபிர சாரத்தை அனைத்து இயக்க மக்களும் வரவேற்று போஸ்டர் ஒட்டி உள்ளனர் .
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் காதியானியசத்தை வேறோருப்போம் என்னும் தலைப்பில் போஸ்டர் ஒட்டி கொண்டிருந்த இருவரை போலீசார் அடித்து இழுத்து சென்றுள்ளனர்.அப்பொழுது அந்த சகோதரர் போஸ்டர் ஓட்டுவது ஜனநாயக உரிமை தானே எனும் கேட்கும் பொழுது என்னையே எதிர்த்து பேசுகிறாய என் உளவு துறை அதிகாரி மைதீன் மற்றும் அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர் இருவரை அடித்து  இழுத்து சென்றுள்ளனர்.இதனை கேள்விப்பட்ட அனைத்து இயக்க சகோதரர்களும் காவல்துறையை  முற்றுகையிட்டனர்.
அப்பொழுது காவல் துறை ஆய்வாளர் நேர்மையாக நடந்து கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் இருவரை வெளியிட்டனர்.உளவுத்துறை அதிகாரி மைதீன் மற்றும் மற்ற அதிகாரிகளின் தவறான அணுகுமுறையால் இருவரை போலீஸ் அதிகாரிகள் கைது செயிதுள்ளனர் .இதே போல் ஒரு சில(மைதீன் போல்) தவறான அதிகாரியின் அணுகுமுறையால் ஒட்டு மொத்த காவல் துறைக்கும் கேட்ட பெயர் ஏற்படுகிறது .இனிமேலாவது காவல் துறை அதிகாரிகள் விழிப்பர்களா பொறுத்திருந்து பார்ப்போம் ?
இடுகையிட்டது puduvalasainews நேரம் 8:50:00 PM 0 கருத்துரைகள்
லேபிள்கள்: இஸ்லாமிய கூட்டமைப்பு, தமிழகம்

காதியானிகளுக்கு எதிராக அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒரே மேடையில் பிரச்சாரம்


 


இடுகையிட்டது puduvalasainews நேரம் 8:49:00 PM 0 கருத்துரைகள்
லேபிள்கள்: இஸ்லாமிய கூட்டமைப்பு, தமிழகம்
Older Posts Home

Dua For Gaza

விழித்துக்கொள், வேலை வந்துவிட்டது !!!

இதயமுள்ளவனே...!!!!!!!
எட்டிப்பார்
எட்டுத்திசையும் எம் சமுதாயம்
சர்வதேசத்தின் சதிவலையில் சள்ளடையாகிறது......!

ஜாஹிளியத்துக்கு
ஜால்ரா அடிக்கும்
ஜாதியாய் போனதால்
காளை முதல்
கருக்கள் வரை
துன்பத்தில்
தேய்ந்து வருகிறது ......!

விழித்துக்கொள் வேலை வந்துவிட்டது............!!!!!!!

வாழத் துடிக்கும்
வாலிபனே....!
புறப்படு
எம் சமுதாயத்தின்
காயங்களுக்கு
மருந்திட்டு
ஒத்தடம் கொடுப்போம்
இளைஞனே ........

எழுச்சியின் வேந்தனே
இழிவும்
தோல்வியும்
எம்மினத்தை பிடித்தாட்டும்
பிற்போக்கும் கோழைத்தனமும்
மடமை கொடுமையும்
மங்கி மடியட்டும்

புஷ்பிக்கும்
புரட்சி நாதமே

விழித்துக்கொள் வேலை வந்துவிட்டது............!!!!!!!

மனிதன்
மனிதனை ஆளும்
மடமைத்தனம்
மங்கி
மாட்சிமிக்க
அல்லாஹ்வின் ஆட்சி
அரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....!

பொங்கி எழுந்து வரும்
இஸ்லாமிய எழுச்சி அலையின்
அறிவுப் புரட்சியோடு
குப்றிய பாலைவனத்தில்
சத்திய விதை தூவிட
இலம்தென்றலாய்
எழுந்து வா.............!

தன்மானத்தின் சின்னமே
தடைகளை தகர்க்க
இன்னுமேன் தாமதம்.........?!
திருப்தி அடைந்த
ஆத்மாக்களாய்
அல்லாஹ்வை அடைவோம்...

காற்றில் அணைத்து விட
இஸ்லாம்
கற்பூர தீபமல்ல
அல்லாஹ்வின் ஒளியை
அவர்களால் அணைக்கவே முடியாது !!!

நன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)

Blog Archive

  • ▼  2017 (5)
    • ▼  June (2)
    • ►  May (3)
  • ►  2015 (2)
    • ►  February (2)
  • ►  2014 (81)
    • ►  November (3)
    • ►  October (8)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (13)
    • ►  May (9)
    • ►  April (5)
    • ►  March (2)
    • ►  February (15)
    • ►  January (15)
  • ►  2013 (656)
    • ►  December (19)
    • ►  November (21)
    • ►  October (23)
    • ►  September (52)
    • ►  August (48)
    • ►  July (50)
    • ►  June (54)
    • ►  May (77)
    • ►  April (68)
    • ►  March (75)
    • ►  February (86)
    • ►  January (83)
  • ►  2012 (946)
    • ►  December (102)
    • ►  November (83)
    • ►  October (192)
    • ►  September (111)
    • ►  August (82)
    • ►  July (43)
    • ►  March (24)
    • ►  February (147)
    • ►  January (162)
  • ►  2011 (1748)
    • ►  December (46)
    • ►  November (153)
    • ►  October (32)
    • ►  September (153)
    • ►  August (135)
    • ►  July (239)
    • ►  June (206)
    • ►  May (231)
    • ►  April (284)
    • ►  March (63)
    • ►  February (89)
    • ►  January (117)
  • ►  2010 (176)
    • ►  December (44)
    • ►  November (68)
    • ►  October (63)
    • ►  September (1)
 
Copyright 2010 - புதுவலசை
Powered by Blogger
Blog Templates created by Web Hosting Men
Sponsored by Blogger Widgets