Saturday, August 16, 2014

புதுவலசையில் பாப்புலர் ப்ரண்ட் சார்பில் சுதந்திர தின நிகழ்ச்சி

புதுவலசையில் பாப்புலர் ப்ரண்ட்  ஆஃப் இந்தியா சார்பில் பேருந்து நிலையம் எதிரே தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நாட்டின் 68-வது சுதந்திர தினம் நேற்று (15.08.2014) நாடு முழுவதும் உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாப்புலர் ப்ரண்ட்  ஆஃப் இந்தியா சார்பில் இந்தியா முழுவதும் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

தியாகிகளை  கெளரவப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விளையாட்டு போட்டிகள், பொதுக்கூட்டங்கள்   என பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ப்ரண்ட் செயல் வீரர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள தேசிய தலைமையகத்தில் பாப்புலர்  ப்ரண்டின் தேசியத் தலைவர் சரீப் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

Wednesday, August 13, 2014

EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) நடத்திய 2014-ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா

EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் சார்பாக ஒவ்வொரு வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த வருடங்களைப் போலவே  இந்த வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா வெகு சிறப்பாக 10.08.2014 அன்று நமதூர் மதரஸா வழாகத்தில் பொழிவுடன் நடைபெற்றது. இதில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், 400-க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

Friday, August 1, 2014

புதுவலசையில் "இஃப்தார் கிட்" விநியோகம்

பாப்புலர் ப்ரண்ட்  ஆஃப் இந்தியா சார்பில் கடந்த புனித ரமலான் மாதத்தில் அகில இந்திய அளவில் " இஃப்தார் கிட்" எனப்படும் நோன்பு திறப்பதற்கான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நமதூரில் ஃபித்ரா விநியோகம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஒவ்வொரு வருடமும் ஃபித்ரா எனப்படும் நோன்பு பெருநாள் தர்மம் நமதூரில் தகுதி உடையோருக்கு விநியோகிக்க பட்டு வருகிறது.

Dua For Gaza