Monday, January 14, 2013

இந்திய அரசியலில் கிரிமினல்களுக்கு முதலிடம்! ஏன்?


வரப்போகும் பார்லிமென்ட் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் நிச்சயம் போ்ட்டியிட முடியாதபடி உடனடியாக தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் கமிசன் தெரிவித்துள்ளது.
 
சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தேர்தல்களில் கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட தடைவிதிப்பது குறித்து தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வருவது  தொடர்பாக கடந்த 1998-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதியில் இருந்து தலைமை தேர்தல் கமிஷன் மத்திய அரசிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தி வந்தது. ஆனால் இந்த கோரிக்கை அநியாயத்திற்கு 15 வருடங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Sunday, January 13, 2013

பாம்பனில் தரை தட்டிய கப்பல் ரெயில் பாலத்தில் மோதியது: ரெயில் போக்குவரத்து பாதிப்பு


இந்திய கடற்படைக்கு சொந்தமான பார்ஜர் கப்பல், அதனை இழுத்து வந்த இழுவை கப்பல் கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்ல பாம்பன் வடக்கு கடல் பகுதிக்கு வந்தன.
இந்த கப்பல்கள் துறைமுக அதிகாரிகளின் அனுமதி பெற்று பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டன. கடந்த 10-ந்தேதி முதல் பலத்த காற்று வீசியதால் 2 கப்பல்களின் நங்கூர கயிறு அறுந்து பாறையில் மோதி தரை தட்டி நின்றன. இதனைத் தொடர்ந்து தரை தட்டிய 2 கப்பல்களையும் பாம்பன் துறைமுக அதிகாரிகள், மீனவர்கள் உதவியுடன் மீட்க முயன்றனர்.

இஸ்ரேல் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும்!


காஸா: கடந்த சனிக்கிழமை (12/01/2013) ஹமாஸ் பேச்சாளர் கலாநிதி ஸமி அபூ ஸுஹ்ரி  இஸ்ரேலிய ஜனாதிபதி ஷிமொன் பெரஸைக் கடுமையாக விமர்சித்துக் கருத்துரைத்துள்ளார்.

அண்மைக் காலமாக முன்னாள் பலஸ்தீன் தலைவர் யாஸர் அரஃபாத்தின் மரணம் ஒரு கொலையாக இருக்கலாம் என்று எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அரஃபாத்தின் மனைவியின் ஒத்துழைப்புடன் அல்ஜெஸீரா செய்தி நிறுவனம் மேற்கொண்ட தீவிர ஆராய்ச்சியின் விளைவாக மறைக்கப்பட்ட பல உண்மைகள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கின.

2004 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் மரணமடைந்த யாஸர் அரஃபாத்தின் மரணம் இயற்கை மரணமல்ல என்றும், அவரைக் கொலை செய்ய பொலோனியம் என்ற விஷத்தன்மை வாய்ந்த ஒருவகைக் கதிரியக்கப் பொருள் பயன்படுத்தப் பட்டிருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டி - SDPI


20130110_112343எஸ்.டி.பி.ஐ ( சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சியின் மாநில செயற்குழு ஜனவரி 10,11 ஆகிய இருநாட்கள் நெல்லையில் நடைபெற்றது. மாநிலத்தலைவர்  கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம்.ரபீக் அகமது அனைவரையும் வரவேற்றார் .மாநில  பொதுச் செயலாளர்கள் நெல்லை முபாரக்,அப்துல் ஹமீது,மாநில செயலாளார்கள் அப்துல் சத்தார், வி.எம்.அபுதாஹிர்,செய்யது அலி,கே.செய்யது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழுவின் துவக்கமாக கடந்த  இரண்டு வருட நிர்வாகம் சம்பந்தமாக மாநிலத்தலைவர்  விரிவான உரையாற்றினார். மேலும் தமது உரையில் எதிர் வரும் தேசிய மற்றும் தமிழக அரசியல் மாற்றங்களை கோறிய அவர் அதனை எதிர்  கொண்டு அரசியல் களத்தில் சாதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Saturday, January 12, 2013

ரிஸானாவின் மரணத்துக்கு யார் பொறுப்பு?


ரிஸானாவின் மரணத்துக்கு யார் பொறுப்பு?ரிஸானா நஃபீக். 2005 ஆம் ஆண்டு முதல் இந்தப் பெயர் ஊடகங்களில் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. அந்தப் பரபரப்பான பெயருக்குரிய இலங்கையைச் சேர்ந்த இளம் யுவதிக்கு கடந்த புதன்கிழமை (09/01/2013) காலை இலங்கை நேரம் 11.40 மணிக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதே தினத்தில் அவரது மரணத்தின் பொருட்டு இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட நேர மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

யார் இந்த ரிஸானா?

ரிஸானா இலங்கையின் மூதூர் பிரதேசத்தின் சாபி நகரைச் சேர்ந்தவர். 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி 02 இல் பிறந்த ரிஸானாவுக்கு, 1983 ஆம் ஆண்டு பிறந்ததாக உறுதிப்படுத்தும் போலி ஆவணங்கள் அவரது பயண முகவரால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தன. 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி குடும்ப வறுமை காரணமாக சவூதிக்குப் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்றார். வேலையில் சேரும்போது அவரது உண்மையான வயது 17 மட்டுமே. பணிப்பெண்ணாய் சுமார் ஒன்றரை மாதங்கள் எந்தப் பிரச்சினையும் இன்றிக் கழிந்தன. 

சென்னையில் நடைபெற்ற ஏ.ஐ.ஐ.சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம்


ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் தேசிய நிர்வாகிகளின் கூட்டம் நேற்றைய தினம் (08.01.2013) சென்னையிலுள்ள‌ மாநில தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் மெளலானா உஸ்மான் பேக் ரஷாதி அவர்கள் தலைமை தாங்கினார்.

தேசிய தலைவர் தன்னுடைய தலைமை உரையில் வக்ஃபு நிலத்தில் கட்டப்பட்டிருந்த  கோஷியா மஸ்ஜித் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளை டெல்லி டெவலப்மெண்ட் அதாரிட்டியினர் சமீபத்தில் இடித்தனர். இதனை ஆல் இந்தியா இமாம் கவுன்சில் வன்மையாக கண்டிக்கிறது. இடிக்கப்பட்ட மஸ்ஜிதையும் குடியிருப்பையும் மீண்டும் கட்ட வேண்டும் என ஆல் இந்தியா இமாம் கவுன்சில் அரசு முன் கோரிக்கை வைக்கின்றது. நாட்டில் உள்ள பல வக்ஃபு நிலங்கள் சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டும் அபகரிக்கப்பட்டும் வருகின்றது. இதனை தடுத்திடும் வகையில் வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்க உரிய சட்டத்திருத்ததை கொண்டு வரவேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றது" என கூறினார்.

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தவறினால் போராட்டம் தொடரும் எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர்


sattar
தொடரும் விவசாயிகள் தற்கொலையை தடுத்து நிறுத்தவும், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா 45 ஆயிரம் ருபாய் நஷ்டயீடு வழங்கவும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, நேற்று (09.01.2013)  புதன்கிழமை, காலை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் தமிழக தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்கள் தலைமையில் தஞ்சை இரயில் நிலையத்தில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.சுமார் 500 க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி தொண்டர்கள் இரயிலை மறித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.
தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாகவும்,தமிழக விவசாயிகள் நிலையை மத்திய அரசுக்கு உணர்த்தும் விதமாகவும் எஸ்.டி.பி.ஐ கட்சி இரயில் மறியல் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. மத்திய அரசு- உச்சநீதிமன்றம்,நடுவர் மன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும்.

விசுவருபம் படம் கண்டிப்பாக திரையிடப்படும் முன்பு முஸ்லிம்களிடம் திரையிட்டுகாட்டப்படும்-நடிகர் கமலஹாசன்



அண்மையில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களின் மனம் புண்படும்படி காட்சிகள் அமைக்கபட்டு இருந்தது அதனை தொடர்ந்து துப்பாக்கி பட குழுவினர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டு முஸ்லிம்களுக்கு எதிராக உள்ள காட்சிகளை நீக்கினர் இதற்கு பிறகு விசுவருபம் படம் முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாக முஸ்லிம் மக்களிடம் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு இந்த பிரச்சினையை மிகவும் கவனமாக அணுகி வருகிறது ஏற்கனவே பத்திரிக்கையாளர்களை சந்தித்து கண்டிப்பாக முஸ்லிம்களிடம் காட்டிய பிறகே திரையிட வேண்டும் எனக் கூறியிருந்தன.

Thursday, January 10, 2013

சவூதியில் இலங்கை பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்


சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட இலங்கைப் பெண்ணை வேலைக்காக சவூதி செல்ல கடவுச்சீட்டு எடுத்துக்கொடுத்து உதவிய முகவர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மூதூரிலிருந்து கடந்த 2005ம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியா சென்ற றிசானா நபீக், அவ்வீட்டு உரிமையாளரின் நான்கு மாத குழந்தை ஒன்றுக்கு புட்டிப்பால் ஊட்டிக் கொண்டிருக்கும் போது அக்குழந்தை உயிரிழந்துள்ளது. இதனை பணிப்பெண் றிசானா திட்டமிட்டு செய்த கொலை என வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று வரையும் மரண தண்டனைக் கைதியாக சிறையில் வாழ்ந்து வந்த றிசானாவின் விடுதலைக்காக பல்வேறு மட்டங்களிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

தஞ்சையில் மாபெரும் இரயில் மறியல்:500க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது


DSC_0129
  தமிழகத்திற்குரிய நீரை கர்நாடகாவிடமிருந்து பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும், வறட்சி, கடன் மற்றும் வறுமை காரணமாக தொடரும் விவசாயிகள் தற்கொலையை தடுத்து நிறுத்த, காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா 45 ஆயிரம் ருபாய் நஷ்டயீடு வழங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் விதமாக இன்று (09.01.2013) புதன்கிழமை, தஞ்சை இரயில் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) கட்சியின் சார்பில் தமிழக தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்கள் தலைமையில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Dua For Gaza