Sunday, August 5, 2012

பட்டினியால் நோன்பு நோற்கும் முஸ்லிம்களும், நாற்று நட கிளம்பிய போடோக்களும்!

Decoding the Assam riots
கொக்ராஜர்:புனித ரமலானின் துவக்கத்தில் இருந்து போடோ பிரிவினைவாத பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அகதிகள் முகாமில் அபயம் தேடியுள்ளனர்.
கொக்ராஜர் மாவட்டத்தில் இருந்து துப்ரி மாவட்டத்தில் உள்ள அகதி முகாம்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அபயம் தேடிச் சென்றுள்ளனர்.
பிரதமர், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட வி.ஐ.பிக்கள் வந்து சென்ற புட்கான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமிற்கு அருகில் உள்ளது போரோபித்யா பள்ளிக்கூடம். இங்கு 1266 முஸ்லிம்கள் தங்கியுள்ளனர். இங்கு மாலை 6.10க்கு நோன்பு திறக்கும் இஃப்தார் நேரமாகும். ஆனால், முஸ்லிம்கள் தங்கியுள்ள அப்பள்ளிக்கூடத்தில் இஃப்தார் நேரத்தில் உணவு தயாராவதற்கான எவ்வித பரபரப்பும் காணப்படவில்லை. உணவு தயாரான பாத்திரங்கள் இல்லை. ஆனால், பள்ளிக்கூட திண்ணையில் பசியால் வாடி சுருண்டு கிடக்கும் குழந்தைகளைத்தான் காணமுடிந்தது. பள்ளிக்கூட முற்றத்தில் உள்ள விறகு எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் தண்ணீர் மட்டும் கொதிக்கிறது.

நாடு கடும் வறட்சியை நோக்கி!

வறட்சி!
புதுடெல்லி:அண்மைக் காலத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா கடும் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பருவ மழை அதிகம் பெய்யாதது வறட்சிக்கு காரணமாகியுள்ளது.
2009-ஆம் ஆண்டு கடைசியாக இந்தியாவை வறட்சி பாதித்தது. கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் இம்மாதம் 1-ஆம் தேதி வரை 20 சதவீத மழை மட்டுமே பெய்துள்ளது. இது 23 சதவீதம் வரை ஆகலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் முதன் முறையாக பருவ மழை குறைவாக பெய்துள்ளது. பருவ கால மழை பொய்த்ததால் காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறத் துவங்கியுள்ளது.

Saturday, August 4, 2012

அன்னா ஹசாரே குழுவின் தப்புத் தாளங்கள்!


டெல்லி: மக்கள் ஆதரவை கிட்டத்தட்ட முழுமையாகவே இழந்து விட்டார் அன்னா ஹசாரே. அடுத்தடுத்து அவரது குழுவினர் செய்த தவறுகள், குழப்பங்கள் காரணமாக மக்களின் நம்பிக்கையை இக்குழு இழந்து விட்டது. இதனால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆழ்ந்து யோசிக்காமல் அரசியல் பிரவேசம் என்ற மிகப் பெரிய தவறான முடிவை எடுத்து விட்டார்கள். இது மக்களிடையே மட்டுமல்லாமல், அன்னாவின் ஆதரவாளர்களிடமே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் மூலம் அன்னா ஹசாரே முதல் முறையாக போராட களம் இறங்கியபோது இதோ இன்னொரு காந்தி வந்து விட்டார் என்றுதான் மக்கள் பேசினார்கள். மகாத்மா காந்தியைக் கூட சற்று காலத்திற்கு மக்கள் மறந்து போய் விடும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் அன்னா படம்தான், பேனர்கள்தான்.

Friday, August 3, 2012

ரோஹிங்கியா முஸ்லிம் இனப்படுகொலை: அரசின் முழு ஒத்துழைப்புடன் நிகழ்த்தப்பட்டது – ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் நேரடி ரிப்போர்ட்!

human rights group said Myanmar government forces opened fire on crowds of ethnic Rohingya
யங்கூன்:ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை தடுக்க மியான்மர் அரசு எதுவும் செய்யவில்லை என்றும், அதற்கு பதிலாக வன்முறையாளர்களுடன் இணைந்து ராணுவம் கொலை மற்றும் கூட்டு பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபட்டதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் நேரடி ரிப்போர்ட் கூறுகிறது.
இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுடன் நடத்திய நேர்முகத்தின் அடிப்படையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தயாரித்துள்ள அறிக்கையில் மியான்மர் அரசை குற்றவாளி கூண்டில் நிறுத்தும் அளவுக்கு குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளன. இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மேற்கு மியான்மரில் ராக்கேன் மாநிலத்திற்கு நேரடியாக சென்று இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இனிக்கும் இல்லறம்-10

இனிக்கும்இல்லறம்1
ஹம்னா பின்த் ஜஹ்ஷ் என்ற நபித்தோழி, உஹது போர்க்களத்தில் இருந்து திரும்பிய நபி(ஸல்…) அவர்களை வழியில் சந்தித்தார். அவரிடம் அவருடைய சகோதரர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் மரணமான செய்தி கூறப்பட்டது. அவர் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறி, அவருக்காக பாவ மன்னிப்புத் தேடினார். பின்பு அன்னாரின் தாய்மாமன் ஹம்ஜா(ரழி) இறந்த செய்தியும் கூறப்பட்டது. அதற்கும் அவர் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறி பாவ மன்னிப்புத் தேடினார். பின்பு அவரது கணவர் முஸ்அப் இப்னு உமைர் (ரழி) இறந்த செய்தி கூறப்படவே, அவர் தேம்பி அழலானார். அப்போது நபி(ஸல்) அவர்கள் “ஒரு பெண்ணின் கணவன் அவளிடம் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறான்” என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
ஒரு கணவன் தனது மனைவியின் உள்ளத்தில் எந்த அளவுக்கு இடம்பெற்றிருக்கிறான் என்பதற்கு மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்று நிகழ்வே நமக்கு புரிய வைக்கும். நாம் நமது துணையின் உள்ளத்தில் நீங்காத இடத்தை பிடிக்கவேண்டும்.

Thursday, August 2, 2012

புனே குண்டுவெடிப்பு:டிஃபன் பாக்ஸை எடுத்துச் சென்ற தயானந்த் பாட்டீல் கைது!

Dayanand Patil being taken to Kamala Nehru Hospital for full body scan
புனே:மஹராஷ்ட்ரா மாநிலம் புனே நகரத்தை நேற்று பீதியில்ஆழ்த்திய தொடர் குண்டுவெடிப்பில் டிஃபன்ஸ் பாக்ஸில் வெடிக்குண்டை எடுத்துச் சென்றபொழுது வெடித்ததால் காயமுற்று சிகிட்சை பெற்றுவரும் உள்ளூர் டெய்லரான தயானந்த் பாட்டீல் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புனேயில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஜங்லி மகராஜ் சாலையையொட்டிய பகுதியில் நேற்றிரவு, நான்கு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதனால், புனே நகரமே அதிர்ச்சிக்கு உள்ளானது. பாலகந்தர்வா கலையரங்கம், சினிமா தியேட்டர் மற்றும் தேனா வங்கி அருகிலும், கார்வாரே சவுக் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து வரிசையாக சக்தி குறைந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், குப்பைத் தொட்டியில் ஒரு குண்டும், சைக்கிள் கேரியரில் ஒரு குண்டும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

“முஸ்லிம் என்ற காரணத்தால் நாங்கள் இந்நாட்டில் வாழக்கூடாது என்றா கூறுகின்றீர்கள் சார்?” -சிதம்பரத்தை திணறடித்த உமியா காத்தூன், தில்ரூபா ஹுஸைனின் கேள்விகள்

chidambaram visit assam kokrajar
கொக்ராஜர்:பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கேள்விக் கணைகளால் துளைத்த போதும் தடுமாறாத மத்திய அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் அஸ்ஸாமில் அகதிகள் முகாமில் இரண்டு முஸ்லிம் இளம் பெண்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினார்.
எதிர் தரப்பினரின் எந்த கேள்விகளுக்கும், புத்திசாலித்தனமாக பதிலளிக்கும் சிதம்பரத்தை பதினொன்றாவது வகுப்பு பயிலும் உமியா காத்தூனும், இல்லத்தரசியான தில்ரூபா ஹுஸைனும் உள்ளத்தில் உறைக்கச் செய்யும் கேள்விகளுடன் எதிர்கொண்டனர்.
“அகதிகள் முகாமில் உண்ண உணவும், உடுக்கத் துணியும் இல்லை என்று புகார் கூற நாங்கள் வரவில்லை. இந்த நாட்டில் நாங்கள் வாழ முடியுமா? என்பதை கேட்கத்தான் வந்திருக்கிறோம்” என ப.சிதம்பரத்தை நேருக்கு நேராக நோக்கி கூறினார்கள் அப்பெண்கள்.

புத்தமத வெறியர்களால் இலங்கையில் மதச்சுதந்திரம் பாதிப்பு – அமெரிக்கா அறிக்கை!

Abuses of religious freedom in Sri Lanka last year - US
கொழும்பு:இலங்கையில் கடந்த ஆண்டு பல மத வழிபாட்டுத் தலங்களும், சிறுபான்மை சமூகத்தினரும் தாக்குதலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவாலயங்கள் மற்றும் கிறித்துவ சமூகத்தின் மீது கடந்த ஆண்டு பல தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. அதே போல பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011-ஆம் ஆண்டிற்கான சர்வதேச மதச் சுதந்திரம் குறித்த அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

போடோ பயங்கரவாதிகளுக்கு அத்வானி பகிரங்க ஆதரவு: சிதம்பரத்தின் மீது பாதிக்கப்பட்டவர்கள் கோபம்!

Advani blames illegal immigration for Assam conflict
கொக்ராஜர்:அஸ்ஸாமில் போடோ பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை பிரிவினைவாதிகளின் குண்டுவெடிப்பும், பாதிக்கப்பட்ட மக்களின் கொந்தளிப்பும் வரவேற்றன.
துப்ரி மாவட்டத்தில் மக்கள் கடும் கோபத்துடன் சிதம்பரத்தை சந்தித்தனர். கோர்பாரா மாவட்டத்தில் உள்ள ஜுகிபாராவில் ராணுவ வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். ஆறு பேருக்கு கடுமையாக காயம் ஏற்பட்டது.
அஸ்ஸாமில் போடோ பயங்கரவாதிகள் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறி வன்முறையில் பலர் பலியானார்கள். லட்சக்கணக்கான மக்கள் புலன்பெயர்ந்துள்ளனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும், நிவாரணப் பணிகளையும் ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திங்கள்கிழமை அசாம் தலைநகர் குவாஹாத்தி வந்தார்.

குஜராத் முஸ்லிம்கள் இப்பொழுதும் பீதியில் வாழ்கின்றார்கள்! – அமெரிக்காவின் அறிக்கை!

Gujarat Muslims still live in fear, says US report
வாஷிங்டன்:குஜராத்தில் முஸ்லிம் சமூகம் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் தற்பொழுதும் வேட்டையாடப்படுவோம் என்ற பீதியில் வாழ்வதாக அமெரிக்காவின் மத சுதந்திரம் குறித்த அறிக்கை கூறுகிறது.
2002 குஜராத் இனப் படுகொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் முன்ன்னால் கொண்டு வருவதிலும் தாமதம் ஏற்படுவது குறித்து அவ்வறிக்கை கவலை தெரிவிக்கிறது.

Dua For Gaza