Friday, January 4, 2013

பாலியல் குற்றங்கள் தொடர்பாக கேம்பஸ் ஃப்ரண்டின் கோரிக்கை


அண்மையில் டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் இறந்தார். அதே போல் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 7 ஆம் வகுப்ப்பு மாணவி புனிதா பலாத்காரம் செய்ய முயற்சிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க கோரியும் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய மாணவ இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டங்களை நடத்தியது.

 தமிழகத்தில் கடந்த டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகளை விரைந்து விசாரித்து நீதி வழங்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனவும் பணபலம் மற்றும் அதிகார குறுக்கீடுகளால் பாலியல் பலாத்கார சம்பவங்களில் வழக்கு பதிவு செய்ய்யப்படாமலும் முறையாக விசாரணை செய்ய்ப்படாமலும் குற்றவாளிகள் தப்புவதை தடுக்க காவல்துறையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசிற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை வைத்தது.

Thursday, January 3, 2013

முஸ்லிம் தலைவர்களிடம் காட்டிய பிறகே விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட வேண்டும் - இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை!


முஸ்லிம் தலைவர்களிடம் காட்டிய பிறகே விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட வேண்டும் !தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை

கேளிக்கை , பொழுதுபோக்கு , சுயசம்பாத்தியம் ஆகியவற்றை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் கொள்கை நெறியாக ஏற்றுச் செயல்படும் இஸ்லாத்தையும் , அதை வாழ்வியல் நெறியாகக் கொண்ட முஸ்லிம்களையும் தவறாகச் சித்தரிப்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .

அந்த வகையில் அண்மையில் வெளியான " துப்பாக்கித் " திரைப்படம் தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது . முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகத் துப்பாக்கி படக்குழுவினர் மன்னிப்புக் கோரியதுடன் , ஆட்சேபனைக்குரிய காட்சிகளையும் நீக்கினர் .

“இந்தியாவில் 40 நிமிடத்துக்கு ஒரு பெண் வன்புணர்ச்சி: அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி: , இந்தியாவில் 40 நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். இதில் பெரும்பாலான சம்பவங்கள் குறித்து காவல்துறையிடம் புகார் செய்யப்படுவதே இல்லை. வன்கொடுமை சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சை ஏற்பட்ட பிறகுதான், நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனாலும் எவ்வித தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுப்பதில்லை. என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி புரோமிளா சங்கர் தெரிவித்துள்ளார்.


ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி புரோமிளா சங்கர் தாக்கல் செய்திருந்த பொது நலன் வழக்கில் பாலியல் வன்கொடுமை வழக்குகளை ஆண் காவல் அதிகாரிகளும், ஆண் நீதிபதிகளும் விசாரிப்பதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பல்வேறு வகையில் இடைஞ்சல் ஏற்படுகிறது. எனவே, பெண் காவல் அதிகாரிகளும், பெண் நீதிபதிகளும் மட்டுமே பலாத்கார வழக்குகளை விசாரிக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்!



dhehlan imam 1 எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் . தெஹ்லான் பாகவி இன்று(02.01.2013) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன . டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரமும், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமி புனிதாவிற்கு நேர்ந்த கொடூரமும் இவற்றிற்கு சிறு சாட்சிகள் மட்டுமே .இதை விட கொடூரமான நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் நூற்றுகணக்கில் நடந்து வருகின்றன .இது மிகுந்த கவலைக்குரியது. பெண்கள் மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நம் நாட்டில் இது மிகுந்த அவமானகரமான ஒன்று .
டெல்லி மாணவிக்கு ஏற்ப்பட்ட கொடூரத்திற்கு பின் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டமும், விவாதமும் பாராட்ட வேண்டிய ஒன்றே.இத்தகைய வன்கொடுமைகளை தடுப்பதற்கு பல்வேறு சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளார் .இவற்றை வரவேற்கின்றேன்.

ஊழலில் தலைக்கும் பா.ஜ.க‌!!!!!! !!!!!!!!!!!!!!!!!!


கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் பதவி வகிப்பவர் ஈஸ்வரப்பா. இவர் மீது லோக் ஆயுக்தாவில் புகார் செய்யப்பட்டுள்ளது.முதல்வர் கவனிக்கும் துறைகளான வருவாய், கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்து ராஜ் ஆகிய துறைகளை துணை முதல்வர் பதவிவகித்து வரும் ஈஸ்வரப்பா கவனித்து வருகிறார். இவர் மீது லோக் ஆயுக்தாவில் புகார் செய்யப்பட்டதின் அடிப்படையில் பெங்களூரிலும், ஷிலோவிலும் உள்ள ஈஸ்வரப்பாவிற்கு சொந்தமான 7 இடங்களில் லோக் ஆயுக்தா போலீஸ் திடீரென்று சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 1 கிலோவிற்கு மேல் தங்கம், 37 கிலோ வெள்ளி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். இது மாநில பா.ஜ.கவிற்கு பெருத்த அவமானத்தை பெற்றுத்தந்துள்ளது.

ஆதிவாசி பெண்கள் மற்றும் சிறுபான்மையின பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யபட்டதை அரசாங்கம் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும்-நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்


 கோழிக்கோட்டில் கடந்த டிசம்பர் 26,27-2012 அன்று நடந்த தேசிய கமிட்டி NWF-ன் தேசிய தலைவி ஷாஹிதா தஸ்லீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் இந்திய சமூகத்தில் பெண்களுக்கு குறிப்பாக இளம் வயது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பெண்கள் சமூகமும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று தான் கூறிக் கொண்டிருக்கிறது.பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வளவுதான் தண்டனைகள் கொடுத்தாலும் அவர்களுக்கு இழந்தது ஈடாகாது.பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்ற பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள்.

திரையுலகின் முஸ்லிம் விரோத போக்கு! விழித்தெழுமா முஸ்லிம் சமூகம்?!!


உலக அளவில் சினிமாத்துறை என்பது ஒரு வியாபார சந்தையாக இருந்து வந்தாலும். இந்தியாவில் அதையும் தாண்டி கூடுதலாக சமூக, அரசியல் தளங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு துறையாக உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு இயக்கமோ அல்லது அரசியலோ கொண்டு வரமுடியாத கருத்தாக்கங்களை சினிமாத்துறை மூலம் கொண்டு வரும்போது அது சிறுவர் முதல் பெரியவர் வரை  எளிதில் சென்றடைந்துவிடுகிறது.

Wednesday, January 2, 2013

மனித உரிமை போராளிகளுக்கான முகுந்தன் சி மேனன் நினைவு விருதை உதயகுமார் பெறுகிறார்!


Jan 02: NCHRO  (National Confederation of Human Rights Organisations) வழங்கும் இந்தியாவின் மிக சிறந்த மனித உரிமை போராளிகளுக்கான முகுந்தன் சி மேனன் நினைவு விருதை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார் பெறுகிறார்.

யார் இந்த முகுந்தன் C மேனன்: இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளியான இவர் 1948 ஆம் ஆண்டு இவர் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் செண்பகாசேரி என்கிற ஊரில் பிறந்தார். டெல்லியில் பத்திரிக்கையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டு மனம் வருந்தினார். அதற்க்கெதிராக தனது வாழ்க்கையின் 35 வருடங்களை செலவிட்டு பின்னர் இயற்க்கை எய்தினார். 

பாலியல் வன்முறைகளை தடுக்க முடியுமா?


அன்மையில் தலை நகர் டெல்லியில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு தற்போது இறந்த செய்தி இன்று நட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. மாநில அரசிற்கும், மத்திய அரசிற்கும் பெரும் தலைவலி ஏற்படும் அளவிற்கு போராட்டங்கள் தினம் தினம் தொடர்கின்றன. இக்குற்ற செயலுக்காக சட்டத்திருத்தம்  கொண்டு வரவேண்டும்  என்று தலைவர்களால் பேசப்படுகிறது. இது போன்ற குற்றம் இனி நடைபெறக்கூடாது என்று நீதிமான்களும் பேசிவருகின்றனர். ஆனால் இந்திய அரசால் இக்குற்றத்தை முற்றிலும் அல்ல ஓரளவிற்கு கூட தடுத்துவிடமுடியாது. ஆம் இந்தியாவில் நிலை அந்தளவிற்கு மோசமாக உள்ளது.

Tuesday, January 1, 2013

திரையுலகின் முஸ்லிம் விரோத சிந்தனை மாற வேண்டும்! பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்!


பத்திரிகை செய்தி

திரையுலகின் முஸ்லிம் விரோத சிந்தனை மாற வேண்டும்! பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்!

தமிழ்த்திரையுலகம் நூற்றாண்டு விழாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் இந்த நெடும் பயணத்தில் இவர்கள் சாதித்தது என்ன என்று திரும்பிப்பார்த்தால் விஞ்சுவது ஏமாற்றமும் வேதனையும் மட்டுமே.

சமூக மாற்றத்தில் மிகப்பெரிய பங்காற்றி இருக்க வேண்டிய இத்துறை இக்காலகட்டத்தில் சமூகங்களுக்கு மத்தியில் வெறுப்பையும், குரோதத்தையும் வளர்க்கும் பணியை கனகச்சிதமாக செய்ததுடன் இப்போது அடுத்த பரிணாமத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றதோ என்ற ஐயம் அழுத்தமாக ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தை படம் பிடித்து காட்டிய பழைய படங்கள் அவர்களை கொடுமையான கந்துவட்டிக்காரர்களாகவும், கசாப்புக்கடைக்காரர்கள் கடத்தல் பேர்வழிகள், என்ற பிம்பத்தை காட்டிவந்தது.

Dua For Gaza