Wednesday, October 3, 2012

மோடியின் பயண செலவு விவரங்களை குஜராத் அரசு தர மறுக்கிறது: தகவல் அறியும் உரிமைவாதி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 3 ஆண்டுகள் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்ட வகையில்,  மக்கள் வரிப்பணம் 1,880 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக குஜராத்  முதல்-மந்திரி நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். ஒரு பத்திரிகையில் வெளியான தகவலை அடிப்படையாக  கொண்டு இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார். 

இதை, காங்கிரஸ் கட்சி மறுத்த போதிலும், உண்மையான  செலவு  எவ்வளவு? யார் பணம்? என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நரேந்திர மோடி மீதே இது போன்றதொரு குற்றச்சாட்டை சமூக சேவகி ஒருவர் இப்போது கூறியுள்ளார். 

இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய இரத்ததான முகாம்!

அக்டோபர் - 02 - ல் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனை இரத்த வங்கியும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் இராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது.
 பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் செய்யது ஹாலிது தலைமை தாங்கினார்.

 பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட இரத்ததான பொறுப்பாளர் நஜுமுதீன், மாவட்ட தலைமை மருத்துவமனை இரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர்.கருப்புசாமி M .S .,

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் ஹசன் அலி , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் SDPI கட்சி நடத்திய மனித சங்கிலி போராட்டம்!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி காந்தி பிறந்த தினமான அக்டோபர் -02 ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.தொடர்ச்சியாக 15 நாட்கள் தமிழக மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரப்பாடல்கள்,நாடகங்க
ள், துண்டு பிரசுரம் விநியோகம
்,போஸ்டர் பிரச்சாரம், தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என்று மக்களுக்கு மதுவின் கொடுமையினை விளக்க எஸ்.டி.பி.ஐ கட்சி முடிவு செய்துள்ளது.




சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி: 
அக்டோபர் 2 க்கு முன்பு மது விலக்குக்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியும் பல்வேறு அரசியல் கட்சிகளும் அரசை கேட்டிருந்தன. அரசு இதுவரை வெளியிடாதது வருந்ததக்கது. 
இலவசப்பொருட்களை மக்கள் கேட்கவில்லை. மதுக்கடைகள் வேண்டாம் என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். போராடுகிறார்கள். மக்கள் கேட்காத இலவச பொருட்களை வழங்குவதற்காக பல்லாயிரம் பெண்களின் வாழ்க்கையை பறிப்பது எப்படி நியாயம்?

யுனெஸ்கோ தூதராக சவூதி அரேபியா பெண் விஞ்ஞானி தேர்வு!

ஐ.நா சபையின் கல்வி, கலாச்சார, விஞ்ஞான கழகமான யுனெஸ்கோ தனது நல்லெண்ணத் தூதராக சவூதி அரேபிய பெண் விஞ்ஞானி முனைவர். ஹயாத் சிந்தியை தேர்வு செய்துள்ளது. இளைய சமுதாயத்தவரிடம் விஞ்ஞான ஆர்வத்தைத் தூண்டி, கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தவராக டாக்டர் ஹயாத் அறியப்படுகிறார். கல்வயில், குறிப்பாக
விஞ்ஞான கல்வி குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடமும் பெண்களிடமும் ஏற்படுத்துவது இந்தப் பதவியின் நோக்கமாகும.

"இலட்சியங்களை அடைவதில் டாக்டர் ஹயாவின் உறுதியும், நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் பக்கம் இளைய சமுதாயத்தை ஈர்த்த அவருடைய பங்களிப்பும் போற்றுதலுக்குரியது. என்று யுனெஸ்கோ தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. " மத்திய கிழக்கிலும், அதற்கப்பாலும் டாக்டர் ஹயாத் ஆற்றிய விஞ்ஞான சேவைகளுக்கு இஃதோர் அங்கிகாரம்" என்று யுனெஸ்கோ தலைவர் ஐரினா பொகோவா தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஹஜ் பாதுகாப்புத் திட்டத்திற்கு சவூதி உள்துறை அமைச்சர் ஒப்புதல்!

Saudi Interior Ministry Approves First Hajj Safety Guide
மக்கா:ஹஜ்ஜில் எதிர்பாராத நிகழ்வுகள், விபத்துகள் நடந்தால் அவற்றை நேரிடுவதற்காக பாதுகாப்புப் படை ஒன்று உருவாக்கும்  திட்டத்தை சவூதி பாதுகாப்புத் துறை அமைச்சகம் தயாராக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் விவரங்கள் அடங்கிய திட்ட அறிக்கைக்கு சவூதி உள்துறை அமைச்சர் முஹம்மத் பின் அஸீஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.

மக்காவிலும், மதீனாவிலும், இன்னபிற ஹஜ் கிரியைகள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதனை நேரிடுவதற்கான உடனடி நடவடிக்கைகளை இந்தப் பாதுகாப்புப் படை துரிதகதியில் எடுக்கும். இதற்குத் தேவையான மனிதவளமும், நவீன தொழில்நுட்பக் கருவி ஏற்பாடுகளும் அடங்கியதுதான் இந்தப் பாதுகாப்புப் படை.

Tuesday, October 2, 2012

இந்தியாவில் 74% பேருக்கு இதய நோய் பாதிப்பு

இந்தியாவில் 74 சதவீதம் பேருக்கு இதய நோய் பாதிப்பு உள்ளது என்ற அதிர்ச்சியான தகவலை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலக இதய நாள் சென்ற அக்டோபர் மாதம் 29ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் மருத்துவத்துறை சார்பில் சர்வே நடத்தப்பட்டது. 

இதில் இந்தியாவில் வசிப்போரில் 74 சதவீதம் பேருக்கு இதய நோய் பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. மொத்தம் 12 முக்கிய நகரங்களில் 1.02 லட்சம் பேரிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது. இதில் 40 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்கள் 72 சதவீதம் பேருக்கு இதய நாள பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

பெற்றோர்களின் கடமைகள் பற்றி இஸ்லாம்!

குடும்பத்தின் தலைவிசொத்துரிமைபேச்சு உரிமைகல்வியில் உரிமைதிருமணத்தில் உரிமை என்று பலவற்றிலும் பெண்களுக்கு கண்ணியமான உரிமையை வழங்கி,மேன்மைபடுத்திய மார்க்கம் இஸ்லாமே தவிர வேறு மார்க்கமே இல்லை என்பதில் எந்த ஐயமுமில்லை.
இத்தகைய சிறப்பை வழங்கிய இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தவில்லை என்றாலும் அவனுக்கு மாறு செய்யாமல் இருப்பது உகந்தது.
ஆனால் இன்று பெண்களின் நிலையோ???!!! தவறான பழக்க வழக்கத்தாலும்ஊடகங்களின் ஈர்ப்பாலும்உலக வாழ்வின் ஆக்கிரமிப்பாலும்போதைப் பொருளாகசுகம் கொடுக்கும் கருவியாகவிளம்பர பொருளாகபெற்ற பெண் மக்களை பணத்திற்காகவும்
வறுமையை நீக்கவும் கொடுங்கிழார்களுக்கு பெற்றோர்களாலேயே விற்கப்படும் பொருளாக, இது போன்ற இன்னும் பிற இழிநிலைகளில் வாழ்கின்றனர் என்று சிந்திக்கும் போது நெஞ்சம் பதறுகிறது.

இயக்க சுதந்திரம்:கேம்பஸ் ஃப்ரண்ட் நடத்திய பாராளுமன்றத்தை நோக்கிய அணிவகுப்பு!

campus front of india
புதுடெல்லி:கல்வி கூடங்களில் இயக்க சுதந்திரம்(organisational freedom)  கோரி மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பை நடத்தியது.
மதியம் 2.30 மணியளவில் துருக்மான் கேட்டில் இருந்து அணிவகுப்பை துவக்கிய உறுப்பினர்களை போலீசார் ஜந்தர் மந்தரில் தடுத்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த கண்டனப் போராட்டத்தை தேசிய தலைவர் அனீசுஸ்ஸமான் துவக்கி வைத்தார்.

மகாத்மாவின் கனவான மதுவிலக்கு நிறைவேறுமா?

தனது வாழ்நாளில் மகாத்மா காந்தி தீவிரமாக வலியுறுத்திய இரண்டு விஷயங்கள் மது விலக்கும்,தீண்டாமையும்தான்.இந்தியா சுதந்திரம் பெற்று அறுபத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது.மகாத்மாவின் நோக்கம் நிறைவேறவில்லைஆயினும் இன்றும் நாட்டில் இவ்விரண்டும் ஒழிக்கப்பட வில்லை.ஏன் கூறுகின்றேன் என்றால்  மகாத்மா படம் பொரிக்க படம் இன்று அதிகம் புழங்கும் இடம் மது கடையில்தான்  .இத்தனைக்கும் காந்தி அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிதான் நாட்டை பெரும்பாலும் ஆட்சி செய்தது,செய்துகொண்டிருக்கிறது.ஆனால் காந்தியின் கனவை நிறைவேற்றத்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு மனமில்லை.காரணம் என்ன?
சுதந்திரத்திற்கு முன்பு உள்ள நமது தலைவர்களுக்கு தேச நலனும் மக்கள் முன்னேற்றமும் முதன்மையானவையாக இருந்தது.ஆனால் இன்று உள்ள நமது தலைவர்களுக்கு பதவி சுகமும் அதனால் கிடைக்கும் சுய ஆதாயமும் தான் முக்கியமாக தெரிகிறது.ஜனங்க என்னவானாலும் அவர்களுக்கு அக்கறை இல்லை.என்பதையே தற்போதைய நடப்புகள் காட்டுகின்றன.

கத்தாஃபியை கொலைச் செய்தது சர்கோஸியின் உளவாளி!

'Gaddafi killed by French agent on Sarkozy order'
லண்டன்:முன்னாள் பிரான்சு நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோஸியின் உத்தரவின்படி பிரெஞ்சு உளவாளி முன்னாள் லிபியா நாட்டு சர்வாதிகாரி முஅம்மர் கத்தாஃபியை கொலைச் செய்ததாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. லிபியா அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிரிட்டன் பத்திரிகையான டெய்லி மெயில் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
கத்தாஃபியை கைது செய்த பிறகு அவரிடம் விசாரணை நடத்தினால், தான் தொடர்பான ரகசியங்கள் வெளியாகிவிடும் என அஞ்சியே சர்கோஸி, கத்தாஃபியை கொலைச் செய்ய உத்தரவிட்டார் என அச்செய்தி கூறுகிறது.

Dua For Gaza