சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் ஏற்ப்பட்ட சம்பவம் அமெரிக்காவையே உலுக்கியது. அதன் காரணத்தால் அமெரிக்க தூதரகம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவேண்டும் என்று அவசர உத்தரவு.
விஷயம் என்னவென்று பார்த்தால் அமெரிக்க போலிஸ் ஒருவன் அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களுக்கு சொந்தமான குருத்வராவுக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டான் இதில் 6 சீக்கியர்கள் பலியானார்கள் பலர் படுகாயம் ஆனார்கள். இது அமெரிக்க ராணுவம் செய்த படுபாதகச் செயல் இதை இந்தியன் மட்டும் அல்ல மனிதன் என்கின்ற முறையில் நாமும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் உள்ள இன்னொரு விஷயம் என்னவென்றால் உலக ரவுடி என்று தன்னை நினைத்துக்கொண்டு இருக்கும் அமெரிக்கா பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டு தனது தூதரகம் அனைத்திலும் அவர்களது தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் இறக்கியது.
