Tuesday, August 14, 2012

படிப்பினை!

வாசகர் பக்கம்
சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் ஏற்ப்பட்ட சம்பவம் அமெரிக்காவையே உலுக்கியது. அதன் காரணத்தால் அமெரிக்க தூதரகம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவேண்டும் என்று அவசர உத்தரவு.
விஷயம் என்னவென்று பார்த்தால் அமெரிக்க போலிஸ் ஒருவன் அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களுக்கு சொந்தமான குருத்வராவுக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டான் இதில் 6 சீக்கியர்கள் பலியானார்கள் பலர் படுகாயம் ஆனார்கள். இது அமெரிக்க ராணுவம் செய்த படுபாதகச் செயல் இதை இந்தியன் மட்டும் அல்ல மனிதன் என்கின்ற முறையில் நாமும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் உள்ள இன்னொரு விஷயம் என்னவென்றால் உலக ரவுடி என்று தன்னை நினைத்துக்கொண்டு இருக்கும் அமெரிக்கா பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டு தனது தூதரகம் அனைத்திலும் அவர்களது தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் இறக்கியது.

சிரியா விவகாரம்:ஈரானின் எச்சரிக்கைக்கு எர்துகான் பதிலடி!


Turkey issues 'frank, friendly' warning to Iran
அங்காரா:சிரியா சர்வாதிகார அதிபர் பஸ்ஸார் அல் ஆஸாதை பதவியில் இருந்து அகற்ற எதிர்ப்பாளர்கள் நடத்தும் போராட்டம் ஒன்றரை ஆண்டுகளை தாண்டியுள்ள சூழலில் அந்நாட்டு விவகாரம் தொடர்பாக ஈரான்-துருக்கி இடையே கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ளன.
எதிர்ப்பாளர்களை கொடூர்மாக கொன்றொழிக்கும் பஸ்ஸார் அல் ஆஸாதை பதவியில் நிலை நிறுத்த ஈரான் ஆர்வமாக இருக்கும் வேளையில், எதிர்ப்பாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது துருக்கி.

Monday, August 13, 2012

அசாம் அகதிகளுக்கு உதவிடுவீர்! பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் வேண்டுகோள்!


அசாம் அகதிகள் முகாமில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகளுக்கு பொருளாதார ரீதியில் உதவிக்கரம் நீட்டுமாறு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்தார்.

சிறுபான்மையினருக்கு எதிராக போடோ இனத்தினர் நடத்திய கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் சேர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயன்றளவு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

149 அகதிகள் முகாமில் அவர்களின் அடிப்படை தேவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 149 முகாம்களில் நேரடியாக சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சிராங்கில் 25 முகாம்கள், சபாரில் 10 முகாம்கள், பிலாசிபாராவில் 55 முகாம்கள், போங்கைகாவ்னில் 7 முகாம்கள், கவுரிபூரில் 25 முகாம்கள், கோக்ரஜாரில் 27 முகாம்கள் என அவர்களின் தேவை என்ன என்பது கணக்கிடப்பட்டுள்ளது.

மும்பை வன்முறை:சதித்திட்டம் குறித்து விசாரணை நடத்த முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை!

Community leaders condemn Mumbai violence, appeal for calm
மும்பை:அஸ்ஸாம் மற்றும் மியான்மர் கலவரத்தை கண்டித்து மும்பையில் நடந்த போராட்டத்தின் போது உருவான வன்முறையில் 2 பேர் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் நடந்துள்ள சதித்திட்டத்தை வெளிக்கொணர சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஸ்ஸாம், மியான்மர் கலவரத்தை கண்டித்து மும்பை ஆஸாத் மைதானத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 22 வயதான அல்தாஃப் ஷேக், முஹம்மது உமர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மைதானத்தின் வெளியே சிலர் பீதியை கிளப்பிவிட்டதாக நேற்று முன்தினம் சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

பங்களாதேஷ்:மஸ்ஜிதில் இடி-மின்னல் தாக்கி இமாம் உள்பட 13 பேர் மரணம்!

Imam among 13 dead as lightning strikes Bangladesh mosque
டாக்கா:வடகிழக்கு பங்களாதேஷில் இடி-மின்னல் தாக்கி மஸ்ஜிதில் இருந்த இமாம் உள்பட 13 பேர் மரணமடைந்துள்ளனர். 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.
தலைநகர் டாக்காவில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள ஸுனாம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஸரஸ்வதிபூர் கிராமத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Sunday, August 12, 2012

துருக்கியில் பூரண மத சுதந்திரம் – ரோமன் பாதிரியார் பாராட்டு!

Complete religious freedom in Turkey - roman bishop
இஸ்தான்புல்:இஸ்லாமியவாதிகள் ஆளும் துருக்கியில் பூரணமான மத சுதந்திரத்தை அனுபவிப்பதாக கிறிஸ்தவ மத நிறுவனத்தின் இயக்குநரான ரோமன் பாதிரியார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்தைக் குறித்து பயப்படும் அளவுக்கு ஒரு சிறு சம்பவங்களை கூட எங்களது அண்டை அயலார்களான முஸ்லிம்களிடம் இருந்து நாங்கள் சந்திக்கவில்லை.

மியான்மருக்கு செல்லும் முதல் முஸ்லிம் நாடு துருக்கி!

Turkish Prime Minister Erdogan’s wife and a Myanmar refugee woman hug each other, crying
யங்கூன்:பர்மாவில் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளால் துயரத்தை அனுபவிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு துருக்கி நாட்டு குழு பார்வையிட்டதுடன் ஆறுதல் கூறி உதவிகளையும் வழங்கியது.
பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானின் மனைவி அமீனா, அவரது மகள், வெளியுறவுத்துறை அமைச்சர் தாவூத் ஒக்லு மற்றும் அவரது மனைவி ஆகியோர் மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.

மஸ்ஜிதுல் அக்ஸா:ஜும்ஆ தொழுகையில் 3.5 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்பு!

Muslims pray in Al-Aqsa on penultimate Ramadan Friday
ஜெருசலம்:இஸ்லாத்தில் மூன்று முக்கிய புனித மஸ்ஜிதுகளில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸாவில் ரமலானின் நான்காவது வெள்ளிக்கிழமையன்று மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையில் பங்கேற்றனர்.
இஸ்ரேலின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி லட்சக்கணக்கான மக்கள் பரிசுத்தமான மஸ்ஜிதில் நடந்த ஜும்ஆவில் கலந்துகொண்டனர்.

Saturday, August 11, 2012

சர்வதேச குத்ஸ் தினத்தை நினைவு கூற பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு!

Al-Quds Day
சென்னை: ‘அல் குத்ஸ் தினத்தில்’ போராடி கொண்டிருக்கும் ஃபஸ்தீன மக்களுக்கு நம்முடைய ஆதரவை தெரிவிக்க பாப்புலர் ஃப்ரண்டின் தமிழகத் தலைவர் இஸ்மாயில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
புனித பூமியான ஃபலஸ்தீன் மற்றும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ஆகிய பிதேசங்களில் இவர்கள் புரிந்து வரும் அட்டூழியங்களை நாம் தினந்தோறும் கேள்விப்பட்டு வருகிறோம். அல்லாஹ்வின் தூதர்களையே கொலை செய்வதற்கு தயங்காதவர்கள் இன்று பச்சிளம் பாலகர்களையும் கொலை செய்ய தயக்கம் காட்டுவதில்லை.

வளர்ச்சியில் மோடியின் குஜராத்தை விட நிதிஷின் பீகார் முன்னிலை: மோகன் பாகவத் புகழாரம்!

RSS chief says Nitish govt far ahead of Modi's
புதுடெல்லி:வளர்ச்சியில் நரேந்திர மோடியின் குஜராத்தை விட நிதிஷ்குமாரின் பீகார் முன்னணியில் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத் புகழாரம் சூட்டியுள்ளார்.
வெளிநாட்டு ஊடக பிரதிநிதிகளுக்கு அளித்த பேட்டியில் மோகன் பாகவத் இக்கருத்தை தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவை தனது கட்டளைக்கு கீழ்படியவைக்கும் மோடியின் நடவடிக்கையில் ஏற்பட்ட வெறுப்பை மோகன் பாகவத் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

Dua For Gaza