தமிழகத்தில் +2 தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. 1890 மையங்களில் நடைபெற்ற இவ்வருட +2 தேர்வில் மொத்தம் 7 லட்சத்து 81 ஆயிரத்து 395 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 593 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி சதவீதம் 85.9 ஆகும். வழமைபோல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 82.3 சதவீதமாகவும் மாணவிகளின் தேர்ச்சி 89 சதவீதமாகவும் இவ்வருடம் இருந்தது. கணிதப் பாடத்தில்தான் அதிகமான பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றிருக்கின்றனர்.
200க்கு 200 எடுத்த மாணவ மணிகளின் விபரம்
அக்கவுண்டன்சி 1320 பேர்
வேதியியல் 1243 பேர்
வர்த்தகம் 1167 பேர்
இயற்பியல் 646 பேர்
உயிரியல் 615 பேர்
பிசினெஸ் கணிதம் 358 பேர்
கம்ப்யூட்டர் சயின்ஸ் 223 பேர்
தாவரவியல் 4 பேர்
கணிதம் 2720 பேர்
விலங்கியல் பாடத்தில் யாரும் இவ்வருடம் 200 மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:
Post a Comment