Monday, April 28, 2014

ஸமீரா அலி நஜாத்:கருணையின் நிறைகுடமான அன்னை!

TOPSHOTS-IRAN-SOCIAL-EXECUTION-ISLAM
ஈரான் நாட்டில் கடைசி நேரத்தில் தூக்கு கயிறில் இருந்து குற்றவாளியைக் காப்பாற்றிய கொல்லப்பட்ட நபரின் தாய்! என்ற செய்தி கடந்த வாரம் ஊடகங்களிலும், சமூக இணையதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.யார் அந்த தாய்? தனது மகனை கொன்றவனுக்கு மன்னிப்பு வழங்க அந்த அன்னைக்கு எவ்வாறு முடிந்தது? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது.
2007-ஆம் ஆண்டு தெருச் சண்டை ஒன்றில் அப்துல்லாஹ் ஹுஸைன் ஸாதிக் என்ற தனது நேசத்திற்குரிய மகனை பறிகொடுத்து தீராத துக்கத்தை சுமந்துகொண்டு வாழ்ந்த ஸமீரா அலி நஜாத் என்ற அந்த அன்னைக்கு மீண்டும் ஒரு பேரிடி.நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் விபத்து ஒன்றில் தனது இளைய மகனையும் பறிகொடுத்தார்.இது என்ன சோதனை? துயரத்தின் தீரா நினைவுகளை சுமந்துகொண்டு இரவு,பகல்களை கழித்து வந்தபோதுதான் 7 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மகன் அப்துல்லாஹ்வை கொலைச் செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்த செய்தி அவருக்கு கிடைத்தது.

பெண் போலிஸ் சர்மிளாபானு இறப்பில் மர்மம்! உண்மையை கண்டறிய SDPI வழக்கறிஞர் அணி மனுதாக்கல்!



பெண் போலிஸ் சர்மிளாபானு இறப்பில் மர்மம் உள்ளது. எனவே உண்மையை கண்டறிய SDPI வழக்கறிஞர் அணி மதுரை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்து, டாக்டர்கள் குழு வைத்து மறுபிரேத பரிசோதனை(Re-postmortem)செய்வதற்கும் அதை வீடியோகிராப் செய்வதற்கும் உத்தரவு பெற்றுள்ளது.

எகிப்தில் சிறை இன்திஃபாழா துவங்குகிறது!



எகிப்திய சிறைகளில் நடக்கும் கடுமையான மனித உரிமை மீறல்களை கண்டித்து அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் ‘சிறை இன்திஃபாழாவை’ சிறைக்குள் போராட்டம் துவங்க உள்ளனர்.
சதிப் புரட்சியின் மூலம் அநியாயமாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரையும், ஆட்சியையும் கவிழ்த்த சர்வாதிகார ராணுவ அரசு 18 ஆயிரம் பேரை அநியாயமாக சிறையில் அடைத்துள்ளது. இவர்கள் அனைவரும் சிறை இன்திஃபாழாவில் பங்கேற்பர்.

தமிழகத்தில் வகுப்புக் கலவரங்கள் அதிகரித்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சகம்!



தமிழகத்தில் வகுப்புக் கலவரங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2013-ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட வகுப்புக் கலவரங்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முஸஃபர் நகர் கலவரம் உள்ளிட்ட பெரிய கலவரங்கள் நடந்த உத்தரபிரதேச மாநிலம் கலவரங்களில் முன்னணியில் உள்ளது. இங்கு கடந்த 2012-ஆம் ஆண்டு 118 கலவரங்கள் நடந்துள்ளன. 2013-ஆம் ஆண்டு 247 ஆக கலவரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டை ஆள பரந்த மனமே தேவை! – மோடிக்கு பிரியங்கா பதிலடி!

“நாட்டை ஆட்சி செய்வதற்கு மிகப் பெரிய மனமே தேவை. 56 அங்குலம் கொண்ட நெஞ்சு தேவையில்லை” என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா பதில் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

Dua For Gaza