Wednesday, November 27, 2013

ஆற்றாங்கரை – கோப்பேரி மடம் சாலையை சீரமைத்து அகலபடுத்த கோரி தடையை மீறி நடைபயணம் எஸ்டிபிஐ கட்சியினர் கைது!

இராமநாதபுரம் ஆற்றாங்கரை – கோப்பேரி மடம் சாலையை சீரமைக்க கோரி எஸ்டிபிஐ சார்பில் நடைபயணம் அறிவித்து காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது.ஆனால் கடைசி நேரத்தில் காவல்துறையினர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து அழகன்குளத்தில் தடையை மீறி நடைபயணம் ன்று (26.11.2013)துவங்கியது. 

திருவாடனை தொகுதி தலைவர் ஜஹீருதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன்,மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீல்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவாஸ்கான்,எஸ்டிடியூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹிஜ்ரி, தொகுதி செயலாளர் ரியாஸ் அஹமது,இணைச்செயலாளர் கஜினி முஹம்மது,நூருல் ஹக்,பனைக்குளம் கிளைத்தலைவர் பாசித் அலி,செயலாளர் இஜாஸ் அஹமது,அழகன் குளம் கிளைத்தலைவர் அப்துல் ஜமீல்,செயலாளர் உமர்,சித்தார்கோட்டை கிளைத்தலைவர் ரைசுதீன்,தேவிப்பட்டிணம் கிளைத்தலைவர் ஷாஜஹான் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டு தேவிப்பட்டிணம் கொண்டு செல்லப்பட்டு மஹாலில் தங்க வைக்கப்பட்டனர்.

Friday, November 22, 2013

ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் A.ஹாலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர்கள் J.ரசின், S.இல்யாஸ் மற்றும் பொருளாளர் A.அஹமது பைசல் உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த செயற்குழுவில் ஏற்காடு இடைத்தேர்தல் குறித்து கீழ்காணும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

முந்தைய தலைமுறையை விட தற்போதைய குழந்தைகளின் உடல் வலு குறைவு!-ஆய்வில் தகவல்!



லண்டன் : உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பல லட்சக்கணக்கான குழந்தைகளிடம் நடத்திய ஆய்வொன்று, தற்காலக் குழந்தைகளில் பலரால், அவர்களின் பெற்றோர்கள் அவர்களைப் போல இளம் வயதினராக இருந்த காலத்தில் ஓடியது போல அதே போன்ற வேகத்தில் ஓட முடியவில்லை, என்பதைக் கண்டறிந்திருக்கிறது.
ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் 28 நாடுகளிலிருக்கும் சுமார் 2.5 கோடிக்கும் மேலான குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

கண்காணிப்பு விவகாரம்: சிக்கலில் பா.ஜ.க!



புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களே மீதமுள்ள நிலையிலும், நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ள சூழலிலும் குஜராத் முதல்வரும், பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி ரகசியமாக உயர் அதிகாரிகள், தனிநபர்களை கண்காணித்த விவகாரத்தை சமாளிக்க தெரியாமல் பா.ஜ.க தவித்து வருகிறது.
சாஹிபிற்காக(மோடி) உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா, பெங்களூரைச் சார்ந்த ஆர்க்டிக்டான இளம்பெண்ணையும், குஜராத்தில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியையும் தொடர்ந்து கண்காணிக்கும் பொறுப்பை போலீசிடம் ஒப்படைத்த செய்தியை இணையதள நியூஸ் போர்டல்களான குலைல் மற்றும் கோப்ரா போஸ்ட் ஆகியன வெளியிட்டது பா.ஜ.கவிற்கு அழுத்தத்தை கொடுத்து வருகிறது.

2011- ஆம் ஆண்டு கலவரம்:பா.ஜ.க எம்.எல்.ஏ தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!



ருத்ரப்பூர் (உத்தரகாண்ட்) : உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் துக்ராலை தேடப்படும் குற்றவாளியாக ருத்ரப்பூர் நீதிமன்றம் அறிவித்தது. கடந்த 2011ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் ருத்ரப்பூரில் நடைபெற்ற கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர்.
இந்தக் கலவரத்தை தூண்டியதாக ராஜ்குமார் துக்ரால் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் ராஜ்குமார் துக்ராலை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி சிபிசிஐடி போலீஸார் ருத்ரப்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை! திருச்சியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!


எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (20.11.2013) திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை வகித்தார்.

மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன் அனைவரையும் வரவேற்றார். 

மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது, செயலாளர்கள் அமிர் ஹம்சா, ரத்தினம், அப்துல் சத்தார், அபுதாகிர், செய்யது அலி, மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

Sunday, November 17, 2013

நச்சு மாசுக்களால் உலக அளவில் 20 கோடி பேர் பாதிப்பு!



லண்டன்: உலகளவில் இருபது கோடிக்கும் அதிகமான மக்கள் நச்சு மாசுக்கள் காரணமாக பாதிப்படையக் கூடிய அபாயகரமான நிலையில் உள்ளனர் என்று சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வறிக்கையில் உலகளவில் மிகவும் நச்சுத்தன்மை அபாயம் வாய்ந்த பத்து இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நியூயார்க்கிலுள்ள பிளாக்ஸ்மித் நிறுவனமும், சுவிட்சர்லாந்திலுள்ள கிரீன் கிராஸ் அமைப்புமே இந்த ஆய்வை நடத்தியுள்ளன.

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட நடத்திய மாநில அளவிலான விளையாட்டு இறுதி போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி!





பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான்,உடற்பயிற்சி வகுப்புகள்,ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள்,இரத்த தான முகாம்கள்,அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.

Wednesday, November 13, 2013

எஸ்டிபிஐ (SDPI) சார்பில் பரமக்குடியில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம்


இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதை கண்டித்தும்,இந்த மாநாட்டிற்கு இந்திய அரசின் சார்பில் பிரதமர் உட்பட எந்த பிரதிநிதியும் கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட  எஸ்டிபிஐ(சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)சார்பில் பரமக்குடியில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை தாங்கினார்.

பாட்னா குண்டுவெடிப்பு: விசாரணையில் புதிய திருப்பம்!


patna

பாட்னா: பீகாரில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
முன்னர் இந்தியன் முஜாஹிதீன் மீது குற்றம் சாட்டப்பட்ட இச்சம்பவத்தில் புதிய கைதுகளை தொடர்ந்து வழக்கு புதிய திசையை நோக்கி பயணிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஜார்கண்டில் தன்பாத் மாவட்டத்தில் ராஜு ஸாவு என்பவர் இவ்வழக்கில் புதியதாக கைது செய்யப்பட்டுள்ளார். என்.ஐ.ஏ.விடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பீகார் போலீஸ் ராஜு ஸாவுவை தன்பாத்தில் ஜாரியாவில் வைத்து கைது செய்தது.

Sunday, November 10, 2013

சாதிக் ஜமால் போலி என்கவுன்ட்டர் வழக்கு: தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் சாந்துவிடம் சிபிஐ விசாரணை!



குஜராத்தில் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சாதிக் ஜமால் வழக்கில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் நேச்சல் சாந்துவிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு ஜனவரியில் சாதிக் ஜமால் என்பவர் போலீசாரால் தீவிரவாதி எனக் கூறி சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது ஐ.பியில் இணை இயக்குநராக பணிபுரிந்தார் நேச்சல் சாந்து. தற்போது தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பதவி வகித்து வருகிறார்.

ஐ.நா அமைப்பில் அமெரிக்கா, இஸ்ரேல் தகுதியிழப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் வாக்களிக்கும் உரிமையை அமெரிக்காவும், இஸ்ரேலும் இழந்துள்ளன.
பலஸ்தீனத்தை யுனெஸ்கோ அமைப்பில் உறுப்பினராக கடந்த 2011 ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. பலஸ்தீனத்தை உறுப்பினராக இணைத்துக் கொண்டதை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எதிர்த்தன.

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்

இலங்கை தலைநகர் கொழும்பில் வருகின்ற 15-ம் தேதி காமன்வெல்த் மாநாடு தொடங்குகிறது. சொந்த நாட்டு மக்களையே அழித்தொழித்து, சர்வாதிகார போக்கில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ராஜபக்சே அரசை உலக நாடுகள் கண்டித்துக்கொண்டிருக்கும் வேளையில், காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால் அது உலக நாடுகளுக்கு மத்தியில் ராஜபக்சே அரசுக்கு மதிப்பைக் கூட்டும் விதமாகவும், ராஜபக்சே அரசு முன்னின்று மேற்கொண்ட இனப்படுகொலைகளை மறக்கடிக்கும் விதமாகவும் அமைந்து விடும்.

Saturday, November 9, 2013

நிரபராதிகள் மீது பொய்க் குற்றச்சாட்டு: மனித உரிமை கமிஷன் கர்நாடகா போலீஸ் மீது வழக்கு!


shrc

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட நிரபராதிகளான 3 முஸ்லிம்களை ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுவித்த சம்பவத்தில் கர்நாடகா போலீஸ் மீது அம்மாநில மனித உரிமை கமிஷன் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

இஸ்ரேல் நீதிமன்றம் அல் அக்ஸா இமாம் மீது குற்றச்சாட்டு!


''KUDUS'TEKI OSMANLI MIRASIMIZ TEHLIKEDE'' PROGRAMI

ஜெருசலேம்: முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான பைதுல் முகத்தஸ் என்றழைக்கப்படும் அல் அக்ஸா மஸ்ஜிதின் இமாம் ஷேக் ராஇத் ஸலாஹி வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார் என்று இஸ்ரேல் நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த 2007ம் ஆண்டு அவர் நிகழ்த்திய ஓர் உரையில், “அல் அக்ஸாவைக் காப்பதற்காக என் உயிரைக் கூட கொடுப்பேன்” என்று அவர் பேசியது வன்முறையையும், இனவாதத்தையும் தூண்டியதாம்.

முஸஃபர் நகர் கலவரம்: 254 வழக்குகளில் விசாரணை நிறைவுற்றது!


Muzaffarnagar_Oct31360

முஸஃபர் நகர்: உத்தரப் பிரதேச அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு முஸஃபர் நகர் கலவரம் தொடர்பான 254 வழக்குகளில் தனது விசாரணையை நிறைவு செய்துள்ளதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இது குறித்து உத்தரப் பிரதேச போலீஸ் ஏ.டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) முகுல் கோயல் கூறியதாவது:

Thursday, November 7, 2013

சவூதியில் இந்தியர்கள் துன்புறுத்தப்படவில்லை! – மத்திய அமைச்சர் வயலார் ரவி!

சவுதி அரேபிய அரசு, சட்டவிரோதமாக நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தங்களது பணி ஆவணங்களை சட்ட ரீதியாகத் திருத்திக்கொள்ள அளித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், அங்கிருந்து நாடு திரும்பும் இந்தியத் தொழிலாளர்கள் அங்கு துன்புறுத்தப்பட்டதாக எந்த ஒரு புகாரும் இல்லை என்று வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறியிருக்கிறார்.

யாசர் அராஃபத் படுகொலை - திடுக்கிடும் தகவல் அம்பலம்!

பாரிஸ்: பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தீன விடுதலைக்காக தொடக்கத்தில் ஆயுதம் ஏந்தி போராடி, பின்னர் ஆயுதத்தைக் கைவிட்டு அஹிம்சை வழியில் பயணித்த யாசர் அராபத் 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி தனது 75-வது வயதில், பிரான்ஸ் நாட்டில் இறந்தார். அவர் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுப்பப்பட்டாலும் அவருடைய மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க அப்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

Tuesday, November 5, 2013

புதுவலசையில் மழை!

புதுவலசையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. கன மழையின் காரணமாக  ஜாமிஆ பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்த மரம் ஒடிந்து கீழே விழுந்தது. மேலும் நமதூர் பள்ளிக்கூடத்தின் மைதானத்திலும், தெருவிலுள்ள  சாலைகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது.   

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னையில் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்“ விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழா!



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும்“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் கொடூரங்களுக்கு துணை போன மருத்துவர்கள்: புதிய அறிக்கை!



அமெரிக்க இராணுவத்தின் கட்டளைகளை ஏற்று பணியாற்றுகின்ற மருத்துவ நிபுணர்கள், தீவிரவாதம் என்ற பெயரால் சந்தேகிக்கப்படும் நபர்களை கொடூரமாகவும் இழிவாகவும் நடத்தியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
தேசிய பாதுகாப்பின் பேரில், மருத்துவ ஒழுக்கநெறிகளை மீறிச் செயற்படுமாறு அமெரிக்க இராணுவத்தினரும் புலனாய்வு நிறுவனங்களும் மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Dua For Gaza