Sunday, February 15, 2015

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி!
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

சாலை சீரமைப்பும், SDPI போராட்டமும் ஓர் விரிவான பார்வை

எஸ்.டி.பி.ஐ கட்சியின் பல கட்ட தொடர் போராட்டங்களின் விளைவாக கோப்பேரி மடம் முதல் ஆற்றங்கரை வரையிலான சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி  தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக அழகன்குளம் முதல் தமரை ஊரணி வரையிலான சாலை அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை முதல் கோப்பேரி மடம் வரையிலான தார் சாலை மாவட்ட தலைநகரான இராமநாதபுரத்துடன் இப்பகுதியை இணைக்கும் முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. மேலும், ராமேஸ்வரம் செல்லும் யாத்ரீகர்களும் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியை சேர்ந்த சித்தார்கோட்டை, அத்தியூத்து, தேர்போகி, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம்,ஆற்றங்கரை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வந்த இந்த சாலையானது கடந்த பல வருடங்களாகவே மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்வதற்கு மிகவும் கடினமான நிலையில் காணப்பட்டது. அவ்வப்போது, தற்காலிகமாக போடப்படும் சாலைகள் போடப்பட்ட ஒன்றிரண்டு மாதங்களுக்குள்ளாகவே காணாமல் போய்விடும் அவலமும் இருந்து வந்தது. இதனால், இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாயினர்.

Dua For Gaza