Thursday, February 27, 2014

இராமநாதபுரம் தடியடி குறித்து IG அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - DGP க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 அன்று இராமநாதபுரத்தில் ஒற்றுமைப் பேரணி (யூனிட்டி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு காவல்துறையிடம் முறையாக எழுத்துப்பூர்வமாக அனுமதியும் பெறப்பட்டது.
இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில் அங்கு வந்திருந்த காவல்துறையினர் பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே தடியடி தாக்குதலையும் நடத்த துவங்கினர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி ரப்பர் குண்டுகள் பிரயோகப்படுத்தப்பட்டு கண்மூடித்தனமாக தாக்கி ஒற்றுமைப் பேரணி நடக்கும் இடத்தை கலவர பூமியாக மாற்றினர். இதில் வழக்கறிஞர்கள், புகைப்படக்காரர்கள், பத்திரிகை நிருபர்கள், பொதுமக்கள் என 5௦ க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காவல்துறையின் திட்டமிட்ட சதியினை உணர்ந்த பாப்புலர் ஃப்ரண்டின் நிர்வாகிகள் அசம்பாவிதம் தொடராமல் தடுக்கும் வகையில் நிகழ்ச்சியை மேலும் தொடராமல் ரத்து செய்து வந்திருந்த அனைவரையும் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.

Tuesday, February 25, 2014

இராமநாதபுரம் தடியடி: பொய் புகாரை முடித்துக்கொள்வதாக அரசு வக்கீல் நீதிமன்றத்தில் அறிவிப்பு!



ராமநாதபுரத்தில் கடந்த வாரம் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் பேரணியின் போது, தனது ஹோட்டலை அடித்து நொறுக்கியாகதாக புகார் அளித்தவர், போலீசாரின் மிரட்டலால் புகார் அளித்தேன் என கூறியதால் அவ்வழக்கை முடித்துக் கொள்வதாக அரசு வக்கீல் தெரிவித்துள்ளார்.
பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பின் சார்பில் அவர்களின் இயக்க தினமான பிப்.17 அன்று மக்கள் உரிமைக்காக ஒன்றிணைவோம் என்ற முழக்கத்துடன் ஒற்றுமை பேரணியை நடத்தினர். முதலில் அனுமதி அளித்து பின்னர் பேரணி தொடங்கிய போது அனுமதி மறுத்து தடியடி நடத்தினர். இதில் பலருக்கும் பலத்த காயம் ஏற்ப்பட்டது.

Friday, February 21, 2014

இராமநாதபுரத்தில் நள்ளிரவில் அத்துமீறி வீடுபுகுந்து முஸ்லீம்கள் கைது! தமிழக முதல்வர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!!


இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் பி.எஸ்.ஐ.கனி இன்று (21.02.2014)வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிப்ரவரி 17 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இராமநாதபுரத்தில் அனுமதி பெற்று நடைபெற்ற ஊர்வலத்தில் காவல்துறையினர் வேண்டுமென்றே திடீரென அனுமதியை மறுத்து கலவரச்சூழலை ஏற்படுத்தினர்.மேலும் கண்ணீர் புகைகுண்டு,தடியடி,இரும்பு கம்பி,கற்கள் ஆகியவற்றை கொண்டு பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.இதில் வழக்கறிஞர்களும் தாக்கப்பட்டனர்.காவல்துறையினரின் இக்கொடூர தாக்குதலால் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

Thursday, February 20, 2014

உண்மையில் இராமநாதபுரத்தில் நடந்தது என்ன?


ramnad

முஸ்லிம்களின் இரத்தம் இந்திய நாட்டிற்கு மிக அவசிய தேவையாகி போனது. சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு, ஜனநாயக ரீதியில் முஸ்லிம்கள் வாழ்வதை இந்திய ஆளும் வர்க்கமும், ஆதிக்க வர்க்கமும், வந்தேறிகளான ஃபாஸிச ஆரிய வர்க்கமும் விரும்பவில்லை என்பது நன்றாக புலப்படுகிறது.
அடக்கி ஒடுக்கப்பட்டு, வஞ்சனைகளுக்கு உள்ளாகி, உரிமைகளையும், உடைமைகளையும், உயிர்களையும் இழந்து அகதிகள் நிலைக்கு தள்ளப்படும் ஒரு சமூகத்திற்குத்தான் அதன் வலியின் வேதனையும், வாழ்க்கையின் ரணங்களும் தெரியும். நிச்சயம் அது எதிர்வினையாற்ற அவர்களது வாழ்க்கைப் பாதையினை மாற்றி அமைத்து விடும் என்ற நியதி தெரியாத அறிவிலிகள் சட்டம் ஒழுங்கு என்ற போர்வையின் மாய தோற்றத்தில் வரம்புகளை மீறி சோதித்து பார்க்கின்றனர்.
நவீன சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தோற்றுவிக்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ஆம் தேதியான திங்கள் கிழமை நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் அனுசரிக்கப்பட்டது.

நீதிக்கு சாட்சி பகருங்கள் ! - பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அனைத்து மக்களுக்கும் சமஉரிமை கிடைக்கும் புதிய இந்தியாவை படைக்கும் பயணத்திலே தேசம் முழுவதும் பயணித்திக்கொண்டிருக்கின்றது. அதன் பிறப்பின் முகவுரை ஃபாசிசத்தைக் கண்டு சமுதாயம் பயந்து பின்வாங்கி வாசலைத் திறந்து கொடுத்து ஓடிய போது அவ்வழியல்ல இவ்வழி என திசைக்காட்டி - அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அடிமையல்ல!. நீதிக்கு சாட்சி பகருங்கள் என புரட்சியின் ஓசையாக எழுப்பபட்டது.

பிப்ரவரி 17, பாப்புலர் ஃப்ரண்ட் தினம் தேசம் முழுவதும் விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது தமிழகத்தைத் தவிர. ‘மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைவோம்’! என்ற முழக்கத்துடன் ராமநாதபுரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு முறையாக அனுமதி எழுத்துப் பூர்வமாக பெற்றிருந்தும் காவல்துறை சதி வலைகலைப் பிண்ணி கலவரத்தை தூண்டினார்கள். ஆனால், பேரணியில் கலந்து கொண்டவர்கள் நீதியின் போராளிகள் என்பது மறந்துவிட்டு திட்டத்தை தீட்டியுள்ளார்கள். எனவே சூழ்ச்சி தோல்வியில் முடிந்தது. அவர்கள் திட்டமிட்டு சதி செய்தார்கள்; அல்லாஹ் சதி செய்தான்; (3:54).

பாப்புலர் பிரண்ட் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் 100 சதவீதம் திட்டமிட்ட சதி : முழு விவரத்தின் தொகுப்பு....!!


பாப்புலர் பிரண்ட் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் 100 சதவீதம் திட்டமிட்ட சதி : முழு விவரத்தின் தொகுப்பு....!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தினர் ராமநாதபுரத்தில் அணிவகுப்பு நடத்திய நேரத்தில் அவர்கள் மீது காவல்துறையினர் மிருகவெறி தாக்குதல் நடத்தி பல முஸ்லிம்கள் இரத்த வெள்ளத்தில் மிதந்தபடி மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் PFI இயக்கத்தினர் காவல்துறையின் அனுமதி இல்லாமல் அணிவகுப்பு நடத்தியதால் தடியடி நடத்தப்பட்டதாக சில முஸ்லிம்கள் செய்தி பரப்பி வருகிறார்கள்.

இது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான தகவலாகும்.

நடந்தது என்ன ???

இராமநாதபுரத்தில் நடந்தது என்ன?- உண்மை அறியும் குழு அறிக்கை:

இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் தடியடி- உண்மை அறியும் குழு அறிக்கை:

“பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா” அமைப்பினர் ஆண்டுதோறும், அவ் அமைப்பு தொடங்கப்பட்ட பிப்ரவரி 17 அன்று நாடெங்கிலும் ‘ஒற்றுமைப் பேரணி’ (யூனிடி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தி வருகின்றனர். சீருடை அணிந்த அவ் அமைப்பின் இளைஞர்களும், அமைப்பின் பிற ஆதரவாளர்களும் தேச ஒற்றுமை சார்ந்த முழக்கங்களை இட்டுக்கொண்டு ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் அவ்வாறே ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு முறையாக அனுமதி பெற்றுத் திரண்டிருந்த நேரத்தில் பிரச்சினை ஏற்பட்டு, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் நின்றிருந்த காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு மற்றும் தடியடித் தாக்குதலை நடத்தியதில் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் இராமநாதபுரம் மற்றும் மதுரை மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை நாளிதழ்களில் கண்ட நாங்கள், கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்து அப் பகுதிக்குச் சென்று பலரையும் சந்தித்தோம்.

1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
2. ஏ. ஜஹாங்கீர் பாஷா, மூத்த வழக்குரைஞர், மதுரை மாவட்ட நீதிமன்றம்,
3. அ..ராஜா, வழக்குரைஞர், விடுதலைச் சட்ட மையம், மதுரை,
4. ஏ.முகம்மது யூசுப், வழக்குரைஞர், NCHRO, மதுரை,
5. கு.பழனிச்சாமி, சமூக ஆர்வலர், மதுரை,
6. எஸ்.முகம்மது அலி ஜின்னா, வழக்குரைஞர், மதுரை,
7. ரஜினி, வழக்குரைஞர், PUHR, மதுரை,
8. பசுமலை, வழக்குரைஞர், பரமக்குடி,
9. மு.மணிகண்டன், வழக்குரைஞர், மதுரை.

Tuesday, February 18, 2014

இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தின நிகழ்ச்சியில் காவல்துறையின் கொலைவெறி தாக்குதல்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கப்பட்ட தினமான பிப் 17 பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்துடன் கொண்டாடப்பட்டு வரும் அன்றைய தினத்தில் கொடியேற்றுதல், ஒற்றுமை பேரணி, நலத்திட்ட உதவிகள், பொதுகூட்டம் போன்ற நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் நடத்தி வருகின்றது. இவ்வருடம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் 3 இடங்களிலும், கேரளாவில் 16 இடங்களிலும் அமைதியான முறையில் பேரணி மற்றும் அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இவ்வருடம் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா, ரத்த தான முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளோடு ராமநாதபுரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை எழுத்துப்பூர்வமாக அனுமதியும் வழங்கியிருந்தனர். இருப்பினும் பேரணி துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டது.

Monday, February 17, 2014

மருத்துவ உதவி வேண்டிய சகோதரருக்கு உதவி செய்ய கோரிக்கை: EPMA செயளாலர் வேண்டுகோள்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

நமதூரைச் சேர்ந்த சகோதரர் உமர் அலி அவர்களின் மகன் ரஹ்மத்துல்லா (ஆட்டோ ஓட்டுனர்) அவர்களுக்கு இரு முறை நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார். அவரை சோதித்த மருத்துவர்கள் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர்.

அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும். அதனால் உடனடியாக Angioplasty என்னும் இதய அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் படியும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சைக்காண செலவு சுமார் 3 - 3.5 லட்சம் ஆகும் என தெரிகிறது. சகோதரர் ரஹ்மத்துல்லா அவர்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்துமளவிற்கு வசதி இல்லாததல் தன்னுடைய உயிருக்காக உதவியை நாடிநிற்கின்றார்.

அவருக்கு உதவும் வகையில் EPMA சார்பாக உதவிகளை செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம். அந்த அடிப்படையில் நமதூரை சார்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் அமீரகத்தில் பணி செய்துவருகின்றோம். நாம் ஒவ்வொருவரும் முன்வந்து நம்மால் முடிந்த உதவிகளை செய்ய முனைந்தால் நிச்சயம் அந்த சகோதரரின் வாழ்வுக்கும், அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரும் உதவியை செய்திட முடியும்.

Saturday, February 8, 2014

நமதூர் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாட்டம்..!

நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் 124-வது விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா கடந்த வியாழக்கிழமை (06.02.2014) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

விளையாட்டு விழா நமது ஜமாஅத் தலைவர் ஜனாப்.லியாகத் அலிகான் அவர்கள் தலைமையிலும், ஆண்டு விழா கல்விக்குழுவின் கௌரவ  தலைவரும், தாசின் அறக்கட்டளை நிறுவனருமான ஜனாப். தாசின் அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது. விளையாட்டு விழா காலை 8 மணியளவில் தொடங்கி தொடர்ந்து பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆண்டு விழா மாலை சரியாக 5 மணியளவில் தொடங்கியது.  

Wednesday, February 5, 2014

இதுவரை நடந்துள்ள இடஒதுக்கீடு போராட்டங்களுக்கு வெற்றி கிடைக்குமா?

இந்திய தேசம் சம உரிமை கோட்பாடு கொண்ட ஒரு நாடு. ஜனநாயகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்தின் உரிமைகளும் சரிவர பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஆனால் முஸ்லிம்கள், தலித்துகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள் எனப் பல்வேறு சமூக மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு புறம் தள்ளப்படுகின்றனர்.
குறிப்பாக, இந்திய தேசத்தின் விடுதலைக்கும், அதன் வளர்ச்சிக்கும் தங்களின் விகிதாச்சாரத்திற்கு அதிகமாக உயிரை தியாகம் செய்து, உடைமைகளை இழந்து, பொருளாதாரத்தை வாரி இரைத்த முஸ்லிம்களின் இன்றைய சூழ்நிலை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

Monday, February 3, 2014

EPMA நிர்வாகிகள் தாசின் அறக்கட்டளை நிறுவனர் ஜனாப்.தாசின் அவர்களுடன் சந்திப்பு

தாசின் அறக்கட்டளை நிறுவனர் ஜனாப். தாசின் அவர்கள் நமதூர் பள்ளிகளின் கெளரவ கல்வி குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுள்ளார். அதற்காக அவரை கண்ணியப்படுத்தும் விதமாகவும் அவரது பணிகள் சிறக்க உற்சாகப்படுத்தும் விதமாகவும் EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் நிர்வாகிகள் கடந்த வெள்ளிக்கிழமை(31/01/2014) அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது நமதூரின் வளர்ச்சி குறித்தும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும்  EPMA நிர்வாகிகளுடன் பல கருத்துக்களை பரிமாறி கொண்டார். முக்கியமாக நமதூரில் நடத்தப்பட்டுவரும் மழலையர் வகுப்புகள், பழைய பள்ளி கூடத்தில் நடத்தப்பட்டு வந்தது. அந்த பள்ளி கூடம் பாதுகாப்பு இல்லாததாலும், மிகவும் பழுதடைந்து விட்டாதாலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நமதூர் ஜமாஅத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கூட்டத்திற்கு தான் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

1995- ஆம் ஆண்டு ’ஹிந்துத்துவா ஒரு வாழ்க்கை நெறி’ என்று வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்கிறது!

ஹிந்துத்துவாவின் பெயரால் வாக்கு சேகரிப்பது தவறல்ல என்று முன்பு அளித்த தீர்ப்புக் குறித்து உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்கிறது. 1995-ஆம் ஆண்டு ஹிந்துத்துவம் என்பது கலாச்சாரம் என்றும் அதன்பெயரால் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பது தவறல்ல என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதற்கு எதிராக பல தடவைகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஆண்டு விழாவை முன்னிட்டு MMS சார்பாக விளையாட்டு போட்டிகள்

நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் 124-ஆவது  ஆண்டு விழா மற்றும் விளையாட்டு  விழா எதிர் வரும் பிப்ரவரி 6-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.

இதனையொட்டி நமதூர் முஸ்லிம் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் இளைங்கர்களுக்கான  விளையாட்டு போட்டிகளும் தனியே நடத்தப்பட்டு  பரிசளிக்கப்பட்டு வருகின்றன. 

Sunday, February 2, 2014

அஸிமானந்தா வெளியிட்ட புதிய அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்: ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டளையின் படியே தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன!


RSS

புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் தற்போதைய தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அனுமதியும், ஆசியும் வழங்கியதாக ஹரியானா மாநிலம் அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுவாமி அஸிமானந்தா தெரிவித்துள்ளார். காரவன் மாத இதழுக்காக அதன் எடிட்டோரியல் மானேஜர் லீனாகீதா ரகுநாத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இந்த அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

Dua For Gaza