Tuesday, May 31, 2011

முஸ்லிம் பெண்ணின் உடலுக்கு இந்து முறைப்படி ஈமக்கிரியை!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தீவிபத்தில் ஆயிசா (30) என்ற முஸ்லிம் பெண்ணின் உடலும், சுந்தரி சைன் (30) என்ற சமவயதுள்ள இன்னொரு பெண்ணின் உடலும் ஒரே மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தன.

சவாய் மான்சிங் மருத்துவனையில் 80% தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சுந்தரி சைனின் பிரேதத்தை அவரது கணவர் சுனில் சைன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை பிரேத அறையிலிருந்து ஈமக்கிரியைக்காக பெற்றுச் சென்றுள்ளனர்.

பெற்றோரின் கவனக்குறைவால் 3 வயது சிறுவன் பூட்டிய காருக்குள் மரணம்!

சென்னை பல்லாவரம் புறநகர் பகுதியில் வசிக்கும் நியாமதுல்லா (37) மற்றும் அவரது மனைவி மும்தாஜ் பேகம் (36) உறவினரின் மரணத்தையொட்டி துக்கம் விசாரிக்க திரு.வி.க நகருக்குத் தங்கள் மூன்று வயது மகன் அஸ்மதுல்லாவுடன் சென்றுள்ளனர்.

பகல் 1:00 மணியளவில் உறவினரின் வீட்டுக்குச்சென்ற அவர்கள், மகன் காரில் உறங்கியதைக் கவனிக்காமல் கணவருடன் சென்றிருக்கூடும் என்று மனைவியும், மனைவியுடன் இருக்கக்கூடும் என்று கணவரும் நினைத்துக் கொண்டு இருந்துள்ளனர்.

சிறுமியை வன்புணர்ந்த இருவருவருக்கு நடுத்தெருவில் தூக்குதண்டனை!

 ஈரான் நாட்டில் 9 வயது சிறுமியை வன்புணர்ந்த இருவருக்கு நடுத்தெருவில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் விபச்சார வழக்குகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். சில மாதங்களுக்கு முன் 9 வயது சிறுமியை வன்புணர்ந்து, அதை வீடியோ படமெடுத்த வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று தெருவில் மக்கள் முன்னிலையில் வைத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஆடை களைய மறுத்ததால் தனிமைச் சிறையில் அடைப்பு

நப்லஸ் நகரைச் சேர்ந்த பலஸ்தீன் இளைஞர் ஒருவரை, சோதனை என்ற பெயரில் ஆடைகளை முழுமையாகக் களைந்துவிட்டு நிர்வாணமாக நிற்குமாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் நிர்ப்பந்தித்த சம்பவம் இஸ்ரேலிய ரமோன் சிறைசாலையில் இடம்பெற்றுள்ளது.

அதனை ஏற்க மறுத்ததால் ஆத்திரமுற்ற ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகம், முஹம்மத் நாஃபித் திவைகத் எனும் பலஸ்தீன் இளைஞரை 21 நாட்கள் தனிமைச் சிறையில் அடைத்துவைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இஸ்ரேலின் நிரந்தரத் தலைநகர் ஜெரூசலமே: பெஞ்சமின் நெத்தன்யாஹூ

"ஜெரூசலத்தை யூதமயப்படுத்தும் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தமது அரசு கடமைப்பட்டுள்ளது" என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ வலியுறுத்தியுள்ளார்.

'யூத நாடான' இஸ்ரேலின் நிரந்தரத் தலைநகரமாகத் திகழப் போவது ஜெரூசலமே எனப் பிரகடனப்படுத்தி, இஸ்ரேலியப் பிரதமர் அமெரிக்கக் காங்கிரஸில் நிகழ்த்திய உரை பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்தே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும்!!

உலகின் மக்கள்தொகையில் 500 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கிறார்களாம்.ஒரு வருடத்தில் பட்டினியால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 15 மில்லியன் .உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உலகின் மூன்றில் ஒருபங்கு மக்கள் மிதமிஞ்சிய ஊட்டமுள்ளவர்கள் என்றும்,
மற்றுமோர் பிரிவினர் நிறைவு பெற்றவர்கள் என்றும், மூன்றாம் பிரிவினர் பட்டினியால் உயிரிழந்து கொண்டிருப்பவர்கள் என்றும் தெரிவிக்கிறது.
 
நீங்கள் இதைப்படித்து முடிப்பதற்குள் 200 பேர் பட்டினியால் செத்திருப்பர்.
4 மில்லியன் இது இந்த வருட முடிவிற்குள் நிகழப்போகும் பட்டினிச்  சாவுகளின் எண்ணிக்கை.

தொடர வேண்டும் இதுபோன்ற பேச்சுவார்த்தைகள்!

சில நாட்களுக்கு முன் பங்களாதேசில் நடந்த கிரிகெட் போட்டியில்,இந்திய பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பின் நல்ல தொடக்கமாக,இன்று இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

மாவீரன் கர்கரே உடைய மரணத்திருக்கு முன் இதுபோல் பேச்சுவார்தைகள் நடக்கும்போதெல்லாம் இந்தியாவில் எங்காவது குண்டுவெடிப்புகள் நடக்கும்.

நல்லெண்ணையும் அதன் மருத்துவ குணமும்!!

*  நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது.

எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

*  நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

யூதர்களால் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அச்சுறுத்தல்

ஒபாமாவின் இஸ்ரேலுக்கு எதிரான அண்மைய அறிவிக்கையால், யூதர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நார்வேவிலிருந்து வரும் ஆஃப்டன்போஸ்டன் (Aftenposten) பத்திரிக்கை  செய்தி கட்டுரை வெளியிட்டுள்ளது.

உலகிலேயே அமெரிக்காவில் தான் யூதர்கள் அதிகம் வாழ்கிறார்கள். 2008 தேர்தலில் ஒபாமாவிற்கு 78 சதவீத அமெரிக்க வாழ் யூதர்களின் ஒட்டு கிடைத்துள்ளதாகவும் ஆனால் இஸ்ரேல், பாலஸ்தீனப் பிரச்சனையில் ஓபாமாவின் நிலைப்பாடு அவர்களுக்கு சாதகமாக இல்லை என்பதால், பெரும் யூத நிறுவனங்கள் ஒபாமாவிற்கு அளித்து வரும் நிதி உதவியை நிறுத்திக் கொள்ளப் போவதாக மிரட்டி வருகிறார்கள் என்று அந்த பத்திரிக்கையில் தலைப்புச் செய்தியாக வெளிவந்துள்ளது.

தான் யார் என்பதையே மறந்துவிட்ட பலஸ்தீன் கைதி

கான்யூனிஸ் நகரைச் சேர்ந்தவர் வதீ தம்மான். அவருக்கு வயது 30. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை இவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது. தற்போது தன்னுடைய தண்டனைக் காலத்தை ஏறத்தாழ பூர்த்திசெய்துள்ள நிலையில் உள்ள அவர், நஃப்ஹா பாலைவனச் சிறையில் இருந்து நெகேவ் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

"இந்தப் பலஸ்தீன் இளைஞர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையின் காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். தன்னுடைய நிலைகுறித்து அவர் பலமுறை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியபோதும், அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை.

ஒஸாமாவைக் காட்டிக் கொடுத்தது தலிபான் தலைவர் - மற்றொரு மர்ம திருப்பம்

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட மர்ம சம்பவத்தில் மற்றொரு திருப்பமாக அவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தது தலிபான் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் பராதர் என்று செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக அபு அஹ்மத் அல் குவைதி என்பவரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம் அமெரிக்கா அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்ததாக தெரிவித்திருந்தது.

ஒஸாமா பின் லேடன் மே 2 ஆம் திகதி அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க சிறப்பு ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.கடந்த ஆண்டு கராச்சியில் வைத்து அப்துல் பராதர் கைது செய்யப்பட்டார்.

ஃபுளோடில்லா குழுவுக்கு ஆபத்து நேர்ந்தால் பான்கிமூன் பொறுப்பு

"எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் காஸாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் ஃப்ரீடம் புளோடில்லா- 2 குழுவுக்கு ஆபத்து ஏதேனும் நேர்ந்தால் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கி-மூன் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்" என காஸா முற்றுகைக்கு எதிரான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில், காஸா கடற்பரப்பை முற்றுமுழுதாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இஸ்ரேலுடன் ஏற்படக்கூடிய பிரச்சினையைத் தவிர்க்குமுகமாக ஃப்ரீடம் புளோடில்லா- 2 குழுவினரை இப்பயணத்தில் இருந்து தடுத்துநிறுத்த உதவுமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் மத்தியதரைக் கடலை அடுத்துள்ள நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்:

பெட்ரோல், டீசல் விலையைமத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறினார்.

காயல்பட்டினத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழகத்தில் அதிமுக அரசு அமைந்துள்ளதால் சிறுபான்மை மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கடந்த 24ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினோம். அப்போது தமிழகத்தில் இஸ்லாமிய திருமண கட்டாய பதிவு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

Monday, May 30, 2011

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 16 வயது சிறுவன்

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இங்கிலாந்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் புதிய சாதனை படைத்துள்ளான்.

உலகின் மிகப்பெரிய சிகரம் என அழைப்படுவது ஹிமாலய மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரம்(8850 அடி உயரம்). இங்கிலாந்தின் லண்டன் நகரில் சர்பிடான் பகுதியைச் சேர்ந்த அட்கின்ஸான்(16) என்ற பள்ளி மாணவர் நேபாள், சீனா, இங்கிலாந்து மலையேற்றக் குழுவினருடன் திபெத் பகுதியிலிருந்து எவரெஸ்ட் சிகரத்திற்கு பயணம் மேற்கொண்டான் 28.05.2011 அன்று வெற்றிகரமாக எவெரஸ்ட் சிகரத்தை அடைந்ததாக மலையேற்றக்குழுவின் இணையதளம் செய்தி‌ வெளியிட்டுள்ளது.

எத்தனை காலம்தான் "ஏமாற்றுவார்" இந்த நாட்டிலே!!

 சத்தீஷ்கார் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.5-க்கு 1 கிலோ பருப்பு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. அந்த தொடக்க விழாவில் பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.

அந்த விழாவில் பேசிய நிதின் கட்காரி, உலக அளவில் தீவிரவாதம் வளர்ந்து வருவதால் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று தெரிவித்தார்.

சிந்திக்கவும்: இந்திய தீவிரவாதிகள் உலக தீவிரவாதம் குறித்து பேசுகிறார்கள். இந்தியாவில் நடந்த அனைத்து தீவிரவாத செயல்களின் பின்னணியிலும் இருந்து செயல்பட்டது இந்த ஹிந்துத்துவா இயக்கங்களே.

நடிகர் மோகன்லாலும், துபாய் புர்ஜ் கலிஃபா உல்லாச வீடும்!!

 உலகின் மிக உயரமான கட்டிடமாகிய (துபாய் நாட்டில் உள்ள) புர்ஜ் கலிஃபா அடுக்குமாடி,இந்த குடியிருப்பில் மூன்றரை கோடி ரூபாயில் வீடு வாங்கியுள்ளார் மலையாள நடிகர் மோகன்லால்.

கடந்த வாரம் தனது 51 வது பிறந்தநாளை நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாடினார். தனக்கு தானே பிறந்தநாள் பரிசளித்துக் கொள்ள விரும்பினார்.

துபாயில் புர்ஜ் கலிஃபா என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க முடிவு செய்தார். முதலில் துபாய் சென்று வீட்டை பார்வையிட்டார். 29&வது மாடியில் 940 சதுர அடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள வீடு அவருக்கு பிடித்திருந்தது.

ஆட்சியாளர்களின் அம்மணத்தை அம்பலப்படுத்தும்! SDPI !!

 பெங்களூரு: SDPI கட்சியின் புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தலைவர் இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய உரை.SDPI அமைத்திருக்கும் இந்த அரசியல் தளம் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் உட்பட நாட்டில் வாழும் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் அளவிற்கு விசாலமானது.

புதிய பூகோளத்தை வடிவமைத்திருக்கிறோம் அதற்கு எல்லைகள் உண்டு. இந்த பூகோள எல்லையில் ஹிந்துக்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்சீக்கள், ஆதிவாசிகள், தலித்துகள், மற்றும் பிற இந்தியர்களுக்கு உரிய பிரதிந்தித்துவம் உண்டு.

வரையறுக்கப்பட்ட இந்த புதிய பூகோளத்தில் புதிய சரித்திரம் படைக்கவிருக்கிறோம்.இந்த புதிய சரித்திரம் படைக்க நமது கட்டமைப்பை மீளாய்வு செய்வதும் அவசியம். இந்த புதிய சிறிய கட்சி 21 மாநிலங்களில் செயல்வீரர்களைக் கொண்டுள்ளது.

செர்பிய போர்க்குற்றவாளியும்!! ஸ்ரீலங்கா போர்க்குற்றவாளியும்!!

 கடந்த 15 வருடங்களாக தேடப்பட்டுக் கொண்டிருந்த சேர்பிய போர்க் குற்றவாளி ரட்கோ மிலாட்விஜ் கைது செய்யப்பட்டுள்ளான். இவனது கைது உலகில் உள்ள ஜனநாயக விரும்பிகள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை பிறப்பித்துள்ளது.

1990 களில் முன்னாள் யுகோசுலாவியா துண்டு துண்டாக பிரிந்தபோது சேர்பிய இராணுவத்திற்கு இவன் தளபதியாக இருந்தான். அத்தருணம் அரச இராணுவத்தைப் பயன்படுத்தி இளைஞரும், பெரியோரும், முதியவருமாக 8.000 முஸ்லிம்களை படுகொலை செய்தான்.

இவனுடைய படுகொலை சேர்பிய முஸ்லீம்களுக்கு எதிரானது, போர் என்ற பொதுமைப்பட்ட கருவியை இனத்துவேஷத்துடன் பயன்படுத்தியது இவன் புரிந்த குற்றம்.

போர் குற்றவாளி ராஜபக்சேக்கு அமெரிக்கா நிபந்தனை!!

அமெரிக்கா முன்வைத்துள்ள நிபந்தனைகள் மற்றும் திட்டங்களை பின்பற்றுவது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானம் எதனையூம் மேற்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபாட் ஓ பிளக், இலங்கை பின்பற்ற வேண்டிய சில நிபந்தனைகளை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அமெரிக்காவின் இலங்கை தூதுவர் பெட்ரிகா புட்டினிஸ் ஊடாக, வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் வலியூறுத்தப்பட்டது.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு தொடர இந்த நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என ரொபர்ட் ஓ பிலக் வலியுறுத்தினார்.

பலஸ்தீன் கிராமம் இராணுவ வலயமாக அறிவிப்பு

மேற்குக் கரையின் நப்லஸ் நகரை அடுத்துள்ள ஈராக் பூரின் எனும் பலஸ்தீன் கிராமத்தை, 'மூடிய இராணுவ வலய'மாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் அறிவித்துள்ளது. இக்கிராமத்தை அடுத்து சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள இஸ்ரேலியப் பிரிவினைச் சுவருக்கு எதிராக வாரந்தோறும் ஊர்மக்களால் மேற்கொள்ளப்படும் அமைதியான எதிர்ப்புப் பேரணியில் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்வதைத் தடுக்குமுகமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.

ஈராக் பூரின் மேயர் அப்துல் ரஹீம் குத்தூஸ் தெரிவிக்கையில், "தேடுதல் நடவடிக்கை என்ற பேரில் உள்ளூர்வாசிகளின் வீடுகளில் நுழைந்து அட்டகாசம் புரியும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், ஈராக்பூரின், டெல் ஆகிய ஊர்களின் பிரதான நுழைவாயில்களில் பிரவேசத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

ஊடகவியலாளரைத் தாக்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை

கடந்த வெள்ளிக்கிழமை (28.05.2011) மாலை ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் ராஸ் அல் அமூத் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் குழுவொன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் மிகமோசமான தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் ஊடகவியலாளர்கள் சிலர் படுகாயமடைந்தனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் இந்த அடாவடிச் செயலை பலஸ்தீன் ஊடகவியலாளர் பேரவை வன்மையாகக் கண்டித்துள்ளது.

பலஸ்தீன் ஊடகவியலாளர் பேரவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ராஸ் அல் அமூத் பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் சட்டவிரோதக் குடியேற்றங்கள், பலஸ்தீன் மக்களுக்கெதிரான அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்குத் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் பலஸ்தீனர்களின் எதிர்ப்புப் பேரணி இடம்பெற்றுக் கொண்டிருந்த இடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே மேற்படி ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான்-கி-மூன்?

காஸா மீதான இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகையை முறியடிக்கும் வகையில் எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் மனிதாபிமான நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்குத் தயாராகவுள்ள ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 குழுவை நோக்கித் தமது முயற்சியைக் கைவிடுமாறு கேட்டுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூனை காஸா முற்றுகைக்கு எதிரான ஐரோப்பிய அமைப்பு மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஐந்து வருடங்களுக்கும் மேலாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையினால் ஒரு சட்டவிரோத முற்றுகை சுமார் 1.5 மில்லியன் பலஸ்தீன் மக்கள்மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் அன்றாட சுமுகவாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகளின் உதவி அவர்களுக்குப் பெரிதும் தேவைப்படுகின்றது.

கைதிகள் தாக்கி சிறை மருத்துவர் பலி!

பீகார் மாநிலத்தில் சிறை கைதிகள் ஒன்றுகூடி கொடூரமாக தாக்கியதில், சிறை மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பீகார் மாநிலத்திலுள்ள கோபால்கஞ்ச் சிறையில் உள்ள கைதிகளுக்கு போலி மருத்துவ சான்றிதழ் கொடுக்க சிறை மருத்துவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறை கைதிகள் ஒன்றாக கூடி மருத்துவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சிறை மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Sunday, May 29, 2011

அமெரிக்க நீதிமன்றத்தில் ஹெட்லி புதிதாக எதையும் தெரிவிக்கவில்லை: மன்மோகன் சிங்!

அமெரிக்க நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ள தீவிரவாதி டேவிட் ஹெட்லி, புதிதாக எதையும் தெரிவித்து விடவில்லை. அவர் கூறிய தகவல்கள் ஏற்கனவே நமக்கு தெரிந்தவைதான் என்று  பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

எத்தியோப்பியா, தான்சானியா நாடுகளின் 6 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மன்மோகன் சிங்  நேற்று சனிக்கிழமை டெல்லி திரும்பினார். விமானத்தில் தன்னுடன் வந்த செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு:
 

சமச்சீர் கல்வி ரத்து - முதல்வர் ஜெ.வுக்கு பாராட்டு

சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக மெட்ரிக் பள்ளிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் சங்கத்தின் நெல்லை மண்டல மாநாடு சங்கர்நகரில் நடந்தது. மாநில துணைத்தலைவர் அனந்தராமன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம், அவைத்தலைவர் மரியசூசை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் பேசினார். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

சென்னை - அமெரிக்கத் தூதரகத்துக்கு மர்ம மின்அஞ்சல்

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் குண்டு வெடிக்கும் என வந்துள்ள மின் அஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மின் அஞ்சல் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பப்பட்டள்ளது.
முதல் கட்ட விசாரணையில் இந்த மின் அஞ்சல் மைலாப்பூரில் உள்ள ஒரு இணைய தள மையத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அங்கு சென்று விசாரணை நடத்தியும் அதனை அனுப்பிய நபர் யார் என கண்டறிய முடியவில்லை. எனவே இணையதள குற்றங்களை விசாரிக்கும் சைபர் கிரைம் காவல்துறையின் உதவி நாடப்பட்டுள்ளது. முதலில் பெங்களூரு தூதரகத்துக்கும் மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி விரைவில் பிடிபடுவான் என காவல்துறை தெரிவித்துள்ளது. ராயப்பேட்டை  உதவி கமிஷனர் விஜயகுமாரி, இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் குண்டு வெடிக்கும் என வந்துள்ள மின் அஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மின் அஞ்சல் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பப்பட்டள்ளது.

முதல் கட்ட விசாரணையில் இந்த மின் அஞ்சல் மைலாப்பூரில் உள்ள ஒரு இணைய தள மையத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அங்கு சென்று விசாரணை நடத்தியும் அதனை அனுப்பிய நபர் யார் என கண்டறிய முடியவில்லை. எனவே இணையதள குற்றங்களை விசாரிக்கும் சைபர் கிரைம் காவல்துறையின் உதவி நாடப்பட்டுள்ளது. முதலில் பெங்களூரு தூதரகத்துக்கும் மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ISIஐ தீவிரவாத அமைப்பாக நிரூபிக்க இந்தியா முடிவு!

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மும்பை தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நியூயார்க் நீதிமன்றத்தை இந்திய அரசு என்று தகவல்கள் கூறுகின்றன.

மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்ட ரப்பி கேவ்ரியல் நோவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் தொடர்ந்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தங்களையும் வாதியாகச் சேர்த்துக் கொள்ளக் கோரி இந்திய அரசு மனு செய்ய உள்ளது.

குழந்தைகள் தங்களது மத அடையாளத்தை கூற அஞ்சுகின்றனர்: ஆய்வில் தகவல்

புலம் பெயர்ந்த குழந்தைகள் தங்களது மத அடையாளத்தை குறிப்பிடுவதற்கு பயப்படுகிறார்கள். இத்தகைய நிலை நீடித்தால் கனடாவில் கிறிஸ்துவ மதம் சக்தி வாய்ந்ததாக நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் கனடாவில் முஸ்லீம்கள் தங்களது நம்பிக்கைகளை பின்பற்றுவதில் எந்த வித இடையூறும் இல்லை என கூறுகிறார்கள். இருப்பினும் இதர வடிவத்தில் பாகுபாடுகள் தொடர்கின்றன என அவர்கள் கூறுகிறார்கள்.

"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!

 கடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடல் ஆகும்.

கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10 கன கிலோ மீட்டர்கள்.

உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாய்த் திகழ்கிறது கடல். கடலை நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம்.

ஓய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு. கடலின் ஆழம் முழுவதும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை.

மத்திய அரசே அன்னா ஹஸாராவை காப்பாற்று!!

 என்னை கொள்வதற்கு முப்பது லட்சம் விலை விலை பேசப்பட்டதாகவும், அந்த நபர் என்னை கொள்ள மறுத்து விட்டதாகவும் அன்னஹசாரே கூறியுள்ளார் .

இந்த செய்தி இந்திய நாட்டையும், காந்திய வாதிகளையும், சமாதானத்தை விரும்பும் இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவுள்ளது.

கொள்கை கோமான்களின் குடிமிச்சண்டை!!

கடந்த 2009 ம் ஆண்டு கர்நாடக முதல் அமைச்சர் எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்யுமாறு ரெட்டி சகோதரர்கள் போர்க்கொடி தூக்கியபோது,அவர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், ரெட்டி சகோதரர்களை சமாதானம் செய்யுமாறு கட்சி மேலிடம் என்னை கேட்டுக்கொண்டது.ரெட்டி சகோதரர்களுக்கு அமைச்சர் பதவிகளை அளிக்கும் முடிவை நான் எடுக்கவில்லை.

நமது பிரதமர் சுத்தமானவர்: அன்னா ஹசாரே!!

 பிரதமர் உள்ளிட்ட உயர் பதவியில் உள்ளவர்களையும் ஊழல் புகார் தொடர்பாக மக்கள் கோர்ட்டில் நிறுத்தி விசாரித்து தண்டிக்கும் வகையில், லோக்பால் சட்டம்' உருவாகி வருகிறது.
அந்த சட்டத்துக்காக நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே, பெங்களூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

சட்டசபை உறுப்பினராக நாளை கருணாநிதி பதவி ஏற்பு!

தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, நாளை திங்கட்கிழமை பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கடந்த 23ஆம் திகதி பதவி ஏற்றனர். அப்போது கருணாநிதி அவரது மள் கனிமொழியைப் பார்க்க டெல்லி சென்றிருந்ததால் அன்றைய தினம் பதவி ஏற்கவில்லை. அவருடன் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும், சிவபதி, மனோகரன் ஆகியோரும் பதவி ஏற்காமல் இருந்தனர்.

பலஸ்தீன் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைப்பு

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் உள்ள கைதிகள் தமக்கெதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து கடந்த மூன்று வாரங்களாக மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டமொன்றைத் தொடர்ந்தனர். இப் போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அவர்கள் முடிவெடுத்திருப்பதாக 'அஸ்ரா' சிறைக்கைதிகள் தொடர்பான கற்கைகளுக்கான மையம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் கடந்த மூன்று வாரகாலம பரவலாகத் தொடர்ந்து இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக, பலஸ்தீன் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடாத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் தற்போது முன்வந்துள்ளது.
இப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் பட்சத்தில் அல்லது சிறைக்கைதிகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும்பட்சத்திலோ உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனக் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
பலஸ்தீன் கைதிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்காமை, நோய்வாய்ப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படாமை, தமது உறவினர்களைக் கிரமமாகச் சந்திக்க அனுமதி மறுப்பு, ஒடுங்கிய இருட்டான சிறைக் கொட்டடிகளில் தனிமைச் சிறையில் அடைத்துவைத்தல், பெண் சிறைக் கைதிகளின் அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுதல், பிரசவத்தின் போதும், குழந்தைக்குப் பாலூட்டும்போதும்கூட கைவிலங்குகளை அகற்றாதிருத்தல், கழுவுநீர் கசியும் பூச்சிகள் நெளியும் துர்நாற்றமான அறைகளில் அடைத்துவைத்தல், மிகக் கடுமையான சித்திரவதைகளை மேற்கொள்ளுதல் முதலான அடிப்படை மனித உரிமைகளுக்கு மாற்றமான முறையில் பலஸ்தீன் ஆண்-பெண் கைதிகள் நடாத்தப்படுவதை எதிர்த்தே இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் உள்ள கைதிகள் தமக்கெதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து கடந்த மூன்று வாரங்களாக மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டமொன்றைத் தொடர்ந்தனர். இப் போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அவர்கள் முடிவெடுத்திருப்பதாக 'அஸ்ரா' சிறைக்கைதிகள் தொடர்பான கற்கைகளுக்கான மையம் தெரிவித்துள்ளது.
 
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் கடந்த மூன்று வாரகாலம் பரவலாகத் தொடர்ந்து இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக, பலஸ்தீன் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடாத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் தற்போது முன்வந்துள்ளது.
 

Saturday, May 28, 2011

கலாநிதி அஹ்மத் பஹ்ஹாரின் ஓமான் விஜயம்

பலஸ்தீன் சட்டப் பேரவையின் இணைப் பேச்சாளரான கலாநிதி அஹ்மத் பஹ்ஹார் ஓமானுக்கு அரசியல் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ஓமான் தலைநகர் மஸ்கட்டில் ஓமான் அரச அதிகாரிகளுடன் பல்வேறு சந்திப்புகளை நிகழ்த்திய கலாநிதி பஹ்ஹார், இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பாகவும் பலஸ்தீன் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஓமானிய அரசு உறுதுணையாக நிற்கவேண்டிய அவசியம் குறித்தும் கலந்துரையாடினார்.

ஃப்ரீடம் புளோடில்லா-2 இல் இணையும் 12 ஐரோப்பிய நாடுகள்

ஃப்ரீடம் புளோடில்லா-2 இல் இணைவதற்கு 12 ஐரோப்பிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக காஸா மீதான சட்டவிரோத முற்றுகையை முறியடிப்பதற்கான ஐரோப்பிய அமைப்பு கடந்த வியாழக்கிழமை (26.05.2011) தெரிவித்துள்ளது.
மேற்படி அமைப்பின் பேச்சாளர் ரமி அப்து தெரிவிக்கையில், ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளும் ஏனைய 8 ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து காஸா மக்களுக்கான நிவாரண உதவிக் குழுவில் பங்குகொள்ளப் போவதாக அறிவித்துள்ளன என்று கூறியுள்ளார்.
ஐரோப்பிய அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், மனிதாபிமான மற்றும் சமாதானச் செயற்பாட்டாளர்கள் முதலான பலதரப்பினரும் இணைந்து பயணிக்கவுள்ள இந்த நிவாரண உதவிக் குழுவினர் தமது இலக்கினை தடைகள் இன்றி வெற்றிகரமாகச் சென்றடைய உரிய ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் வழங்க முன்வருமாறு சர்வதேச சமூகத்திடம் அவர் தனது அமைப்பின் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக 1.7 மில்லியன் பலஸ்தீன் மக்கள் அநியாயமாக முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நிலையை மாற்றியமைக்கும் எதிர்பார்ப்போடு காஸாவை நோக்கிப் பயணிப்பதற்காக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தாம் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தலான நிலையையும் மீறி எதிர்பார்த்ததையும் விட அதிகமான கப்பல்கள் தமது குழுவில் இணைந்துள்ளன என்றும், தமது உன்னத இலக்கினை அடையப் பெறுவதற்காக எத்தகைய விலையைக் கொடுப்பதற்கும் அவர்கள் தயாராகவே உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
ரமி அப்து தன்னுடைய அறிக்கையில், ரஃபா எல்லைக் கடவையை நிரந்தரமாகத் திறப்பது என்ற எகிப்திய தரப்பின் முடிவானது பலஸ்தீன் மக்களைப் பொறுத்தவரையில் ஓர் ஆரோக்கியமான ஆரம்பமாகும் என்றும், இந்த முன்னெடுப்பு சரியான திசையிலான ஒரு பயணத்துக்கான சமிக்ஞையாக அமைந்துள்ளதோடு, எல்லையூடான போக்குவரத்து வரையறைகளும் கட்டுப்பாடுகளும் தனிமனிதர்களுக்குரியதாக இருக்கவேண்டுமே தவிர, பொருட்களுக்குரியதாக அமையக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இதுவரை காலமும் காஸா மக்களுக்குத் தேவையான பொருட்கள் யாவும் இஸ்ரேலியக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள எல்லைக்கடவைகள் ஊடாகவே எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. அது அம்மக்களைச் சென்றடைய மிக நீண்டகாலம் எடுக்கின்றது. மருந்து, மருத்துவ உபகரணங்கள் முதலான, மிகத் துரிதமாக காஸா மக்களைச் சென்றடைய வேண்டிய பொருட்களுக்கான தேவை அங்கு அதிகமாக உள்ளது என ரமி அப்து சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடம் மே மாதம் நிவாரண உதவிக்குழுவைச் சேர்ந்த கப்பல்கள் மீது சர்வதேசக் கடற்பரப்புக்குள் வைத்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட காட்டுமிராண்டித் தாக்குதலினால் 9 துருக்கிய செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு விசாரணை என்ற பெயரில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு பல்வேறு வகையிலும் அவமானப்படுத்தப்பட்டனர். இதனால், துருக்கி-இஸ்ரேலிய நல்லுறவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, உலகளாவிய ரீதியில் இஸ்ரேல் மிகப்பெரும் கண்டனங்களை எதிர்கொண்டமை இங்கு நினைவுகூறத்தக்கது.
"ஃப்ரீடம் புளோடில்லா-2" இல் இணைவதற்கு 12 ஐரோப்பிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக காஸா மீதான சட்டவிரோத முற்றுகையை முறியடிப்பதற்கான ஐரோப்பிய அமைப்பு கடந்த வியாழக்கிழமை (26.05.2011) தெரிவித்துள்ளது.
 
மேற்படி அமைப்பின் பேச்சாளர் ரமி அப்து தெரிவிக்கையில், ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளும் ஏனைய 8 ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து காஸா மக்களுக்கான நிவாரண உதவிக் குழுவில் பங்குகொள்ளப் போவதாக அறிவித்துள்ளன என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் சந்தையில் குண்டுவெடிப்பு: எட்டுப் பேர் பலி

கடந்த வெள்ளிக்கிழமை (27.05.2011) பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியின் ஸலர்ஸாய் பிராந்தியத்தில் உள்ள பரபரப்பான சந்தையில் நிகழ்நத குண்டுவெடிப்பினால் எட்டுப் பேர் பலியானதோடு மேலும் 14 பேர் படுகாமடைந்துள்ளனர். அப்பகுதியில் இருந்த கடைகள் மற்றும் கட்டடங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
அரச மருத்துவமனை மருத்துவர் முஹம்மத் ஸயீத், குண்டுவெடிப்பினால் ஸ்தலத்திலேயே பலியான நான்குபேரின் உடல்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றன என்றும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் நால்வர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.
படுகாயமடைந்துள்ள பலரின் நிலை மிகக் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் அரசதரப்பு அதிகாரி இஸ்ரார் கான் கருத்துரைக்கையில், இந்த வெடிகுண்டு தாலிபான் எதிர்ப்பாளர்கள் சிலர் வழமையாக ஒன்றுகூடும் ஓர் உணவகத்திலேயே வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு இதுவரை எந்தந் தரப்பினரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர்வாசிகள் குறிப்பிடுகையில், இதே பிராந்தியத்தில் இருந்து தம்மை வெளியேற்றம் முயற்சியில் ஈடுபட்ட பலரைக் குறிவைத்துத் தாலிபான்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர் என்று சாட்சியமளித்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியப் பாதுகாப்பு நிலைவரம் என்பது நாளுக்குநாள் மோசமடைந்து வருவதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காவல்துறையினரைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் கொலைத் தாக்குதல்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. கடந்த வியாழக்கிழமை ஹங்கு நகரில் உள்ள காவல்துறை மீது இடம்பெற்ற மிகப் பெரிய கார் குண்டுவெடிப்பினால், 38 பேர் கொல்லப்பட்டதோடு 52 பேர் படுகாயமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை (27.05.2011) பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியின் ஸலர்ஸாய் பிராந்தியத்தில் உள்ள பரபரப்பான சந்தையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் எட்டுப் பேர் பலியானதோடு, மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். அப்பகுதியில் இருந்த கடைகள் மற்றும் கட்டடங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன.

அரச மருத்துவமனை மருத்துவர் முஹம்மத் ஸயீத், குண்டுவெடிப்பினால் ஸ்தலத்திலேயே பலியான நான்குபேரின் உடல்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றன என்றும், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் நால்வர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.

சிரியாவில் கலவரம்: எட்டுப் பேர் பலி

சிரியா நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு அலையினால் பொதுமக்களுக்கும் அரச படைகளுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்துள்ளன. இதன் விளைவாக, எதிர்ப்பாளர்களில் எட்டுப் பேர் பலியாகியுள்ளனர் என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள் தரும் தகவல்களின்படி, கடந்த வெள்ளிக்கிழமை (27.05.2011) சிரியா தலைநகர் டமஸ்கஸிலும் அதன் தெற்கேயும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
'டேல் நகரில் மூவரும் டமஸ்கஸின் கதானா குடியிருப்பில் மூவரும் ஸபாதானி குடியிருப்பில் ஒருவரும், லட்டாகிய்யா அருகில் ஒருவருமாகப் பொதுமக்களில் எட்டுப்பேர் கொல்லப்பட்டுள்ளனர்' என லெபனானைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் அமைப்பின் கண்காணிப்பாளர் ரமி அப்துர் ரஹ்மான் தெரிவித்தள்ளார்.
வெள்ளிக்கிழமை இறந்தவர்களின் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற நிலையில், எதிர்ப்பாளர்கள் அரச கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் இடம்பெறல்வேண்டும் என்ற தமது கோரிக்கையை முன்வைத்தவர்களாகத் தொடர்ந்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
சிரியா நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு அலையினால் பொதுமக்களுக்கும் அரச படைகளுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்துள்ளன. இதன் விளைவாக, எதிர்ப்பாளர்களில் எட்டுப் பேர் பலியாகியுள்ளனர் என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள் தரும் தகவல்களின்படி, கடந்த வெள்ளிக்கிழமை (27.05.2011) சிரியா தலைநகர் டமஸ்கஸிலும் அதன் தெற்கேயும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏமனில் கலவரம்: இடையில் சிக்கித் தவிக்கும் இந்திய நர்சுகள்

ஏமனில் அதிபருக்கு எதிராக ஏற்பட்டுள்ள உள்நாட்டுக் கலவரத்தில் சிக்கி தமிழகம், கேரளாவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சுகள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு கொண்டு சென்ற டிரக்கை நேற்று கலவரக்காரர்கள் குண்டு வீசித் தகர்த்தனர். இதனால் பலர் பசியால் மயங்கிய நிலையில் உள்ளனர். அவர்களை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

வளைகுடா நாடான ஏமன் தலைநகர் சன்ஆவில் உள்ள மிலிட்டரி மருத்துவமனையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சுகள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஏற்காட்டில் மாபெரும் மலர் கண்காட்சி!!

 சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 36வது கோடைவிழா மலர் கண்காட்சி 27.05.2011 அன்று தொடங்கியது. மலர் கண்காட்சியை கண்டு களிக்க நேற்று சுற்றுலா பயணிகள் திரளாக வந்திருந்தனர். ஏரியில் படகு சாவரி செய்யவும் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஏற்காட்டிற்கு அனைத்து தரப்பு மக்கள் மட்டுமன்றி அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மாநிலத்திலிருந்து சுற்றுலா வருகின்றனர். கண்காட்சியில் சிறப்பு அம்சமாக 15 ஆயிரம் மலர்களைக் கொண்டு கிரிக்கெட் உலக கோப்பை வடிவ மலர் அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 200 வடிவங்களில் மலர் அலங்காரம் அழகுடன் அமைக்கப்பட்டுள்ளது. 100 க்கும் மேற்பட்ட மலர் வகைகள் சுமார் 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புப்படைத் தாக்குதலில் மூன்று பலஸ்தீன் மீனவர் படுகாயம்

கடந்த வியாழக்கிழமை (26.05.2011) மாலையில் கான் யூனிஸ் பிராந்தியக் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றிருந்த பலஸ்தீன் மீனவப்படகு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் மூன்று பலஸ்தீன் மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையின் இயந்திரப் படகு ஏழு மீனவர்கள் பயணித்த பலஸ்தீன் மீன்படிப் படகினை விரட்டிவந்து வேகமாக மோதியதில் மூன்று மீனவர்கள்  படுகாயமடைந்ததோடு, அவர்களின் படகு மிகமோசமாகச் சேதமடைந்தது.
சம்பவத்தால் பாதிக்கப்பட்ட படகையும் மீனவர்களையும் பலஸ்தீன் கடற்படை மீட்புக்குழுவினர் கண்டு கரைசேர்த்துள்ளனர். எலும்புகள் முறிவுற்ற நிலையில் மிக மோசமாகப் படுகாயமடைந்த மீனவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலஸ்தீன் கடற்படை மீட்புக் குழுவின் பணிப்பாளர் கேப்டன் யஹ்யா யட தாயிஹ் குறிப்பிடுகையில், சேதமடைந்த படகை மீனவர்களின் இருப்பிடத்திற்குக் கொண்டு சேர்ப்பதில் தமத குழு பெரும் அசௌகரியங்களைச் சந்திக்க நேர்ந்தது எனவும், பலஸ்தீன் மீனவர்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையால் கட்டவிழ்த்து விடப்படும் அக்கிரமச் செயல்கள் வருடக்கணக்கில் தொடர்கதையாக நீளும் ஒரு விடயமே தவிர இன்று நேற்று நடக்கும் நிகழ்வல்ல. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் பலஸ்தீன் மக்கள் பல்முனையிலும் அனுபவித்துவரும் துன்பங்களில் இது ஒரு சிறு துளி மட்டுமே என்று விசனம் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (26.05.2011) மாலையில் கான் யூனிஸ் பிராந்தியக் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றிருந்த பலஸ்தீன் மீனவப்படகு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் மூன்று பலஸ்தீன் மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.


இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையின் இயந்திரப் படகு ஏழு மீனவர்கள் பயணித்த பலஸ்தீன் மீன்படிப் படகினை விரட்டிவந்து வேகமாக மோதியதில் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்ததோடு, அவர்களின் படகு மிகமோசமாகச் சேதமடைந்தது.

கேரளாவில் ”எண்டோசல்பான்” உற்பத்திக்கான உரிமம் ரத்து!

கேரளாவில் ”எண்டோசல்பான்” பூச்சி கொல்லி மருந்து உற்பத்திக்கான உரிமத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், ”எண்டோசல்பான்” பூச்சி கொல்லி மருந்து உற்பத்திக்கான உரிமத்தை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சமச்சீர்கல்வி - என் பாடலை நீக்கலாம் : கருணாநிதி!

சமச்சீர் கல்வியின் பாட நூல்களில் இடம்பெற்றுள்ள எனது பாடலை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

2006ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் இயற்றப்பட்டது.

முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழுவின் ஆய்வறிக்கை, இதனைத் தொடர்ந்து கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது.

அப்சல் குருவும், ஹிந்துதுவாவும்! ஒரு பார்வை!!

2001, டிசம்பர் 13-ம் தேதி, நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பாதுகாப்பு வீரர்களும், நாடாளுமன்றத்தின் ஒரு அலுவலரும் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான அப்சல் குருவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

Friday, May 27, 2011

காஸா எல்லையை எகிப்து நிரந்தரமாக திறக்கின்றது

OurUmmah:எகிப்து பாலஸ்தீன் காஸா ரபாஹ் எல்லையை சனிக்கிழமை தொடக்கம் நிரந்தரமாக திறக்கபோவதாக அறிவித்துள்ளது இந்த அறிவிப்பை எகிப்து எகிப்தின் அதிகார பூர்வ தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த அறிவிப்பை பலஸ்தீனர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். காஸா ரபாஹ் எல்லையை நிரந்தரமாக திறக்கபட்டால் கடந்த நான்கு ஆண்டுகால காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகை உடைக்கப்படும் என்பது குறிபிடத்தக்கது.

எகிப்தின் இடைக்கால வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி கடந்த ஏப்ரல் மாதம் இறுதி பகுதியில் காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவர முக்கிய தீர்மானம் எடுக்கபோவதாகவும் எதிர் வரும் பத்து தினங்களில் நீதிக்கு விரோதமான காஸா மீதான முற்றுகையை நீக்கும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது.

ஏமனில் இருந்து இந்தியர்கள் வெளியேற அரசு அறிவுரை!

அதிபர் அலி அப்துல்லாஹ் சாலிஹுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து வன்முறை பரவி வருவதால் ஏமனில் உள்ள இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு இந்திய அரசு கோரியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் பேசிய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர், ஏமனில் நடைபெற்று வரும் வன்முறைகளைத் தொடர்ந்து அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் எவ்வகையில் எல்லாம் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியுமோ அந்த வகைகளில் விரைவாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

பேரவையின் கவுரவம் மேலும் உயரும் வகையில் செயல்படுங்கள்: ஜவாஹிருல்லாஹ்!

தமிழக சட்டப்பேரவையின் கம்பீரமும் கவுரவமும் மேலும் உயரும் வகையில் சபாநாயகர் செயல்படுவார் என நம்புவதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வாழ்த்து தெரிவித்து சட்டப்பேரவையில் பேசியதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள இந்த சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களாக அமர்வதற்கும், நீங்கள் இந்த 14வது சட்டப்பேரவையின் தலைவராக 1922ம் ஆண்டு வெலிங்டன் பிரபுவும் அவருடைய துணைவியாரும் இந்த அவைக்கு பரிசாக அளித்த சிறப்புமிக்க சிம்மாசனத்தில் அமருவதற்கும் வழிவகுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்சல் குருவைத் தூக்கிலிட வேண்டும் : பாஜக!

மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் நிராகரித்துவிட்ட நிலையில், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றவாளியாகக் கூறப்பட்டுள்ள அப்சல் குருவைத் தூக்கிலிட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், "அப்சல் குரு எப்போது தூக்கிலிடப்படுவார்? அவருடைய கருணை மனு இன்னும் எவ்வளவு காலங்களுக்கு நிலுவையில் இருக்கும்?" என்று கேள்வி எழுப்பினார்.

குஜராத்தில் லஞ்சம், மது, ஊழல்!! அன்னா ஹசாரே அதிரடி!!

தனது கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்ட அன்னா ஹசாரே, குஜராத்தின் உண்மை நிலையை நேரில் கண்டு மனம்வெதும்பி அறிக்கை சமர்பித்தார்.
சிறிது நாட்களுக்கு முன் தன்னால் புகழப்பட்ட மனித மிருகம் நரேந்திர மோடியை குறித்து அன்ன ஹசாரே இப்பொழுது அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளார்.
இந்தியாவிலேயே குஜராத்தில் "தான்" அதிகமாக லஞ்ச ஊழல் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது என்றும் தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில் காந்தி பிறந்த இம்மண்ணில் காந்தி எதை ஒழிக்க பாடுபட்டாரோ அந்த மது விற்பனை காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றார்.
இந்த மாநிலத்தில், பால் விற்பனையை விட மது விற்பனைதான் அதிகமாக உள்ளது என கோபம் பொங்க தெரிவித்தார்.லோக்பால் பில் தயாராக்குவதர்க்காக குஜராத்திற்கு வந்தார் அண்ணா ஹசாரே. அப்போது அவர் பொதுமக்களிடம் கையெழுத்துகள் சேகரித்தார்.

அமெரிக்கப் பெண் செயற்பாட்டாளர் மீது வெறித்தாக்குதல்!

ஐக்கிய அமெரிக்கக் காங்கிரஸில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவின் உரையின் போது இடைமறித்துக் கேள்வி எழுப்பினார் என்ற ஒரே காரணத்தினால் அமெரிக்கப் பெண் செயற்பாட்டாளர் மீது ஸியோனிஸத் தீவிரவாதிகள் வெறித்தனமாகத் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நெத்தன்யாஹூ தன்னுடைய உரையில், 'பலஸ்தீனர்களும் சரிசமமான அரசியல் உரிமைகளை அனுபவிக்கும் வகையில் 1967 ஆம் ஆண்டுக்கான எல்லைகளை ஏற்றுக்கொண்டு இஸ்ரேல் தான் கைப்பற்றிய பலஸ்தீன் நிலங்களைப் பலஸ்தீனரிடம் திரும்பக் கையளிக்க வேண்டும் என்று கூறப்படுவது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும்' என்ற கருத்துப்படப் பேசியபோது, அவரது கருத்தை இடைமறித்து கோட்பிங்க் (Codepink) எனும் சமாதானத்துக்கான பெண்கள் குழுமத்தின் உறுப்பினரான ரே எபிலியா, "உண்மைதான் ஆக்கிரமிப்பு என்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது தான். எனவே, உங்கள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இனியும் வேண்டாம். போர்க் குற்றங்களை உடனே நிறுத்துங்கள்.  பலஸ்தீனர்களுக்கு சரிசமமான உரிமைகளை வழங்குங்கள்" என்று உரத்த குரலில் கூறியுள்ளார்.

ரஃபா எல்லைக்கடவையை நிரந்தரமாகத் திறக்க எகிப்து தீர்மானம்!

எதிர்வரும் சனிக்கிழமை முதல் ரஃபா எல்லைக் கடவையை நிரந்தரமாகத் திறப்பது என எகிப்திய அதிகாரத் தரப்பு தீர்மானித்துள்ளது. வெள்ளிக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை காஸாவுக்கான ரஃபா எல்லைக் கடவை நிரந்தரமாகத் திறந்துவைக்கப்படவுள்ளது.

இந்தத் தீர்மானம் குறித்துக் கருத்துத் தெரிவித்த எகிப்திய அதிகாரி ஒருவர், "எகிப்தியத் துறைமுகங்கள் ஊடான போக்குவரத்தில் உள்ள சிரமங்களைக் குறைத்து, பலஸ்தீன் மக்களின் நெருக்கடியான நிலையை சுமுக நிலைக்குக் கொண்டுவருமுகமாகத் தீர்மானிக்கப்பட்டுள்ள எத்தனையோ முன்னெடுப்புகளில் இதுவும் ஒன்று" என்று கூறியுள்ளார்.

10 வருடகாலம் இஸ்ரேலியச் சிறையில் வாடும் பலஸ்தீன் பெண்கள்!

"ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் ஸுஃபத் அகதி முகாமைச் சேர்ந்த ஸனா முஹம்மத் ஷஹாதாஹ் (வயது 35), ஐரினா ஸரஹ்னா (வயது 36) எனும் பலஸ்தீன் பெண்கள் இருவர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் பத்து வருடகாலத்தைத் தற்போது பூர்த்தி செய்துள்ளனர்" என்று காஸாவின் கைதிகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சகத்தின் ஊடகத் துறைப் பணிப்பாளர் ரியாத் அல் அஷ்கர் குறிப்பிடுகையில், "ஷஹாதாஹ்வுக்கு 2002 மே 24 ஆம் திகதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வழக்குமன்றத்தினால் ஆயுள்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போது ஷெரோன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள இவர், கடுமையான சுகவீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறைச்சாலையில் உள்ள மருத்துவரை நாடி சிகிச்சைபெற அனுமதிக்குமாறு அவர் பலதடவை மனு கொடுத்தும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

அரபி ஒலியுல்லாஹ் பள்ளியின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 2011

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 98.8 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது நமதூர் பள்ளி. இதில்  மொத்தம் 90 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அதில் மாணவர்கள் 33 பேரும் மாணவிகள் 53 பேரும் அடங்குவர்.

முதல் மூன்று மதிப்பெண்களை பெற்று பள்ளிக்கு பெருமை தேடிந்தந்த மாணவ மாணவியர் விபரம் வருமாறு

முதல் இடம் - நஜ்வா நஸ்ரின் - 480 மதிப்பெண்கள்

அவர் பெற்ற பாடவாரியான மதிப்பெண்கள்

TAMIL       -                   94
ENGLISH -                    90
MATHEMATICS -         100
SCIENCE -                    100
 SOCIAL SCIENCE -    96

TOTAL =                        480

10ஆம் வகுப்பு முதல் 3 இடங்களைப் பிடித்த 40 பேர்

எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10ஆம் வகுப்பு தேர்வில் தமிழை முதல் பாடமாக படித்தவர்களில், மாநில அளவில் மொத்த மதிப்பெண்களில் 40 மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். அவர்களது விவரம் வருமாறு:

முதல் ரேங்க் -  5 பேர்:

1 எம்.நித்யா (496), எஸ்.எச். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுதூர்.

1 எஸ். ரம்யா (496), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்,

1 எஸ்.சங்கீதா (496), முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி, பெரிய ஏரி, சேலம்.

1 எம். மின்னல்தேவி (496), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.

1 ஆர்.ஹரிணி (496), அவர் லேடீஸ் மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர்.

Dua For Gaza