Friday, October 31, 2014

எஸ்.பி. பட்டணம் காவல் நிலையக் கொலை - உண்மை அறியும் குழு அறிக்கை

மதுரை,
  அக்டோபர் 29, 2014.

சென்ற அக்டோபர் 14 அன்று மாலை இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை காவல் சரகம், எஸ்.பி. பட்டணம் என அழைக்கப்படும் சுந்தரபாண்டியன் பட்டனம் காவல் நிலையத்தில் காட்டுவா எனபவர் மகன் செய்யது முஹம்மது (24) என்பவர் அந்தக் காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் (எஸ்.அய்) அ.காளிதாஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அனைத்து நாளிதழ்களிலும் விரிவாக வெளிவந்தது. அவ் வழக்கு விசாரணை தற்போது சி.பி.சி.அய்.டி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், காளிதாஸ் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு இராமநாதபுரம் தலைமைக் காவல் நிலையத்தில் உள்ளார் எனவும், கொல்லப்பட்ட செய்யது முஹம்மது குடும்பத்திற்கு அரசு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு தந்துள்ளது என்பதும், பல்வேறு இயக்கங்களும் செய்யது முஹம்மது குடும்பத்திற்கு நீதி கேட்டுப் போராடி வருகின்றன என்பதும், சம்பவத்தின் போது காவல் நிலையத்தில் இருந்த ஆறு காவலர்களும் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பதும் தொடர்ந்து வந்த செய்திகள்.

Saturday, October 25, 2014

புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டி!


இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டி!


ஒரு நாட்டின் மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் தால் நாடு வலிமையாக இருக்கும். வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா "ஆரோக்கியமான மக்கள், வலிமையான தேசம்" என்ற பிரச்சாரத்தை ஒவ்வொரு வருடமும் தேசிய அளவில் செய்து வருகின்றது.

Wednesday, October 22, 2014

புதுவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

புதுவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.

 தென்மேற்கு பருவ மழை பொய்த்துவிட்டதால்  கடும்  வறட்சியின் பிடியில் சிக்கியிருந்த  புதுவலசை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள்  முன் கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். மேலும், தொடர்  மழையால் நீர் மட்டம் வற்றியிருந்த ஊரணிகள்,கிணறுகள் தற்போது நிரம்ப தொடங்கியிருக்கின்றன. 

Tuesday, October 21, 2014

S.P பட்டிணம் காவல் நிலைய படுகொலையை கண்டித்து மனித உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்..!

இராமநாதபுரத்தில் எஸ்.பி  பட்டிணம் காவல்நிலைய படுகொலையை  கண்டித்து மனித உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு  சார்பில் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் சந்தை திடல் அருகே கடந்த  20.10.2014 திங்கள் கிழமை அன்று காலை 11 மணியளவில்  நடைபெற்றது. 

இந்த கூட்டமைப்பில்  SDPI, CPM,CPI,INTJ,IUML, பாப்புலர் ஃப்ரண்ட், நாம் தமிழர், பெரியார் பேரவை, தமிழர் தேசிய முன்னணி,தமிழ் புலிகள் , விடுதலை சிறுத்தைகள்,புதிய தமிழகம், இளைஞர் பெருமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் கட்சிகள் இடம்பெற்றுள்ளன . 

Friday, October 10, 2014

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய விளையாட்டு போட்டிகளின் பரிசளிப்பு விழா

புதுவலசையில் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மின்னொளி கைப்பந்து மற்றும் கால்பந்து  ஆகிய  விளையாட்டு போட்டிகள் கடந்த 04.10.2014 மற்றும் 05.10.2014 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுடன் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

பனைக்குளம் செல்லும் சாலையை சீரமைக்க நடவ டிக்கை -மாவட்ட வருவாய் அதிகாரி

புதுவலசையில் நடை பெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.38.88 லட் சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அதி காரி விசுவநாதன் பயனா ளிகளுக்கு வழங்கினார். 

மக்கள் தொடர்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் ஆலோ சனையின் பேரில் மண்டபம் யூனியன் புதுவலசை அரபி ஒலியுல்லா பள்ளி வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகா முக்கு மாவட்ட வருவாய் அதி காரி விசுவநாதன் தலைமை தாங்கினார். வருவாய் கோட் டாட்சியர் திருமால்சாமி, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ரவீந்திரன், தாசில்தார் சுரேஷ்குமார், சமூக பாதுகாப்பு தாசில்தார் மாரி, குடிமைப்பொருள் வழங் கல் தனி தாசில்தார் கங்கா, சிறப்பு திட்ட அமலாக்க தனித்துணை ஆட்சியர் ராஜே சுவரன், ஊராட்சி தலைவர் கள் புதுவலசை சலீனாபானு ஜபருல்லாகான், தேர்போகி ஜெயக்கொடி ராதா கிருஷ் ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பஸ் வசதி, சாலை வசதி, மின் வசதி, விலையில்லா தையல் எந்திரம், சிறுதொழில் கடனு தவி, முதியோர் உதவி தொகை உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பொதுமக் கள் சார்பில் 360 மனுக்கள் அளிக்கப்பட்டன. 

Monday, October 6, 2014

புதுவலசையில் சிறப்பாக நடைபெற்ற திடல் தொழுகை

தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு புதுவலசையில் முதன் முறையாக திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நமதூரில் நபிவழி  திடல் தொழுகை நடத்தப்பட வேண்டும் என்ற மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று நமதூர் ஜமாஅத் இந்த வருட ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நமது அரபி ஒலியுல்லாஹ் உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள திடலில் நடத்த தீர்மானித்தது.

இதனையடுத்து நேற்று (05.10.2014) முழுவதும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (06.10.2014) காலை சரியாக 7:30 மணியளவில் பெருநாள் தொழுகை ஆரம்பமாகியது. சகோ. அஹமது அமீன் ஆலிம் அவர்கள் தொழுகையை நடத்தினார்கள்.

Friday, October 3, 2014

புதுவலசையில் இந்த வருடம் திடல் தொழுகை - முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு

புதுவலசையில் 2014-ம் ஆண்டிற்கான ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை அரபி ஒலியுல்லாஹ் உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள திடலில் நடைபெறும் என புதுவலசை முஸ்லிம்  ஜமாஅத் அறிவித்துள்ளது.

கடந்த பல நாட்களாகவே  நபிவழியில் திடல் தொழுகை நமதூரில் நடத்தப்பட வேண்டும் என நமதூர் இமாம்களும், புதுவலசை வாழ் முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் என அனைவரும் தொடர்ச்சியாக நமதூர் ஜமாஅத் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

Dua For Gaza