Wednesday, June 21, 2017

புதுவலசையில் பாப்புலர் ப்ரண்ட் வழங்கிய "ரமலான் கிட்"

இராமநாதபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ''ரமலான் கிட்'' புதுவலசையில் ஐந்து குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

ஏழ்மை நிலையில் உள்ள இஸ்லாமிய குடும்பங்களின் ''ஷஹர் மற்றும் இப்தார்'' உணவு தேவைகளுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அகில இந்திய அளவில் ஒவ்வொரு வருடமும் ரூ.2000 மதிப்பிலான ''ரமலான் கிட்'' வழங்கி வருகிறது. 

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி..!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அகில இந்திய அளவில்  பல்வேறு சமூக நலப்பணிகளை செய்துவருகிறது. கண்ணியமிகு ரமழான் மாதத்தில் உள்ளங்களை ஒருங்கிணைக்கும் விதமாக கடந்த 18.06.2017 ஞாயிற்றுக் கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை யூனிட் சார்பாக  ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சி  அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

Monday, May 29, 2017

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கிணறு உதவி..!

இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையில்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறையின் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இதனை கடந்த 27.05.2017 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான சகோதரர்.முஹம்மது ரஸீன் அவர்கள்  பயனாளிக்கு வழங்கினார்.

Tuesday, May 23, 2017

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: புதுவலசை பள்ளியில் 99 சதவிகித தேர்ச்சி..!

கடந்த மே 19-ந்தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் நமது பள்ளி  99% தேர்ச்சி பெற்றுள்ளது.
 நமதூர் புதுவலசை அரபி ஒலியுல்லாஹ் பள்ளியில் 85 மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில்  பத்தாம் வகுப்பு தேர்வை சந்தித்தனர். இதில் 84 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு மாணவர் மட்டும்  தோல்வி அடைந்துள்ளார். மேலும், கடந்த வருடங்களை போலவே இவ்வருடமும்  நமதூர் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சிறப்பு கோடைகால பயிற்சி முகாம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுரம் மாவட்டம்,புதுவலசை யூனிட் சார்பாக கடந்த மே 2 தேதி முதல் 12ம் தேதி வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாணவர்களுக்கான சிறப்பு ஒழுக்க பயிற்சி வகுப்புகள், தனித் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், உடற் பயிற்சி வகுப்புகள், விளையாட்டுப் போட்டிகள் என பல பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்பட்டது.

Sunday, February 15, 2015

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி!
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

சாலை சீரமைப்பும், SDPI போராட்டமும் ஓர் விரிவான பார்வை

எஸ்.டி.பி.ஐ கட்சியின் பல கட்ட தொடர் போராட்டங்களின் விளைவாக கோப்பேரி மடம் முதல் ஆற்றங்கரை வரையிலான சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி  தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக அழகன்குளம் முதல் தமரை ஊரணி வரையிலான சாலை அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை முதல் கோப்பேரி மடம் வரையிலான தார் சாலை மாவட்ட தலைநகரான இராமநாதபுரத்துடன் இப்பகுதியை இணைக்கும் முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. மேலும், ராமேஸ்வரம் செல்லும் யாத்ரீகர்களும் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியை சேர்ந்த சித்தார்கோட்டை, அத்தியூத்து, தேர்போகி, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம்,ஆற்றங்கரை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வந்த இந்த சாலையானது கடந்த பல வருடங்களாகவே மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்வதற்கு மிகவும் கடினமான நிலையில் காணப்பட்டது. அவ்வப்போது, தற்காலிகமாக போடப்படும் சாலைகள் போடப்பட்ட ஒன்றிரண்டு மாதங்களுக்குள்ளாகவே காணாமல் போய்விடும் அவலமும் இருந்து வந்தது. இதனால், இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாயினர்.

Monday, November 24, 2014

புதுவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் கன மழை

புதுவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் பெய்யத் தொடங்கிய கன மழையால் கிணறுகள் உட்பட நீர்நிலைகளில் நீர்  மட்டம் உயர்ந்துள்ளது. உமர் ஊரணி, பள்ளிவாசல் ஊரணி  உள்ளிட்ட  ஊரணிகள் நிரம்பி வழிகின்றன.

காயிதே மில்லத் பகுதி உள்ளிட்ட பல குடியிருப்பு  இடங்களில் மழை நீர்  மிக அதிக அளவில் தேங்கியுள்ளதால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர், பொதுமக்கள் உட்பட பலரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள்1018 பேர் மீதான வழக்கு ரத்து- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து நீதிக்காக போராடும்! - மாநில தலைவர் ஏ. எஸ். இஸ்மாயில்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு வருடமும் அதன் துவக்க தினமான பிப்ரவரி 17 அன்று யூனிட்டி மார்ச் மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவை தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதனடிப்படையில் இந்த வருடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பிப்ரவரி 17 அன்று ஒற்றுமை பேரணி (யூனிட்டி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டம் இராமநாதபுரத்தில் நடத்துவதென்று தீர்மானித்து அதற்கு முறையாக காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி 16.02.2014 அன்று பெறப்பட்டது. 

Monday, November 10, 2014

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு தீர்மானங்கள்!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெமிலி ரவிஸ் மஹாலில் நவ.08 மற்றும் 09 ஆகிய தேதிகளில் நடந்த இந்த செயற்குழு கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம் ரஃபீக் அஹமது, மாநில பொதுச்செயலாளர்கள் M.நிஜாம் முகைதீன், A.அப்துல் ஹமீது, முகம்மது முபாரக், மாநில செயலாளர்கள் A.அமீர் ஹம்சா, T.ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர். ஆவாத் ஷெரீப் கலந்துகொண்டார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் முகம்மது பிலால் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில பொருளாளர் A.அம்ஜத் பாஷா நன்றியுரையாற்றினார்.
இச்செயற்குழுவில் கட்சியின் இரண்டு வருட செயல்பாடுகள் பற்றியும், எதிர்காலத்தில் கட்சி மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Dua For Gaza