Sunday, April 7, 2013

கீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாணவர் உயிர‌ழ‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் !பேராசிரிய‌ர் கைது!


கீழ‌க்க‌ரை தனியார் கல்லூரி மாடியில் இருந்து, மாணவர் விழுந்து இறந்த வழக்கில், ஆங்கில துறை தலைவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மேலப்புதுக்குடி சீனி அப்துல் மஜிது மகன் சமீமுதீன், 24. கீழக்கரை தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

 நேற்று முன்தினம் மதியம், 2:40 மணிக்கு மாணவர், கல்லூரி மாடியில் இருந்து விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.த‌ற்கொலை செய்து கொண்ட‌தாக‌ த‌க‌வ‌ல் வெளியான‌ நிலையில் இது குறித்து மாண‌வ‌ரின் உற‌வின‌ர் ந‌சீர் ஹுசைன் கொடுத்த‌ புகாரில்... மாணவருக்கும், ஆங்கில துறை தலைவர் டேனியல் நெல்சனுக்கும், முன் விரோதம் இருந்ததாகவும் இது கொலை என‌வும் இத‌ற்கு கார‌ண‌ம் டேனிய‌ல் நெல்ச‌ன் தான் என்‌ற‌ புகாரின் பேரில் டேனியல் நெல்சனை கீழக்கரை போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.

-keelakarai time's

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza