கெய்ரோ:எகிப்து சிறையில் உள்ள அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு அளிக்கப்படும் என எகிப்து அதிபர் முஹம்மது முர்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:கடந்த ஆண்டிலிருந்து எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கிற்கு சாதமாக இருந்த அரசியல் கைதிகள் தற்பேது சிறையில் உள்ளனர்.
அவர்களுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்யவுள்ளதாக அதிபர் முர்சி நேற்று தெரிவித்திருந்தார்.
இருந்தபோதிலும் எத்தனை பேருக்கு மன்னிப்பு என்பதை தெரிவிக்கப்படவில்லை.தற்போது அரசியல் கைதிகளாக 5000 பேர் சிறையி்ல் உள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.


0 கருத்துரைகள்:
Post a Comment