Thursday, August 16, 2012

ஒராண்டு நிறைவு:கூடங்குளத்தில் இன்று அணுசக்தி எதிர்ப்பு மாநாடு

கூடங்குளத்தில் இன்று அணுசக்தி எதிர்ப்பு மாநாடு
நெல்லை:கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் தொடங்கி ஓராண்டு ஆவதையொட்டி அணுசக்தி எதிர்ப்புக் குழு சார்பில் இன்று இடிந்தகரையில் மாநாடு நடைபெறுகிறது.
சுப.உதயகுமார் தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் வைகோ, சீமான் உள்ளிட்டோர் கலந்துகொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அணுஉலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் நாட்டில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்று போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கூடங்குளம் முதலாவது அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கடந்த வாரம் அனுமதி அளித்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza