Tuesday, June 14, 2011

தயாநிதிமாறன் ராஜினாமா செய்ய வேண்டும்! ஏ.பி. பரதன்!

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

அவர், ‘’2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக புதிய குற்றச்சாட்டு மத்திய மந்திரி தயாநிதிமாறன் மீது கூறப்பட்டுள்ளது. மத்திய மந்திரி சபையில் அவர் தொடர்ந்து நீடிப்பது நியாயமில்லை. அவர் கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும்.

பிரதமர் மன்மோகன்சிங் இதில் தலையிட வேண்டும். அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். கால தாமதமில்லாமல் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியின்போது தான் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது இது குறித்தும் தீவிர விசாரணை நடத்த வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza