Monday, May 9, 2011

ஒசாமாவின் உடல் கடலில் வீசப்பட்டது போல ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கையும் கடலில் வீசப்பட்டுவி்ட்டது.

பாகிஸ்தானில் வைத்து அமெரிக்கப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட ஒசாமா பின்லேடனின் உடல் அமெரிக்காவினால்  கடலில் வீசப்பட்டது போல் இலங்கை தொடர்பான ஐ.நா.வின் நிபுணர் குழுவின் அறிக்கையும் கடலில் வீசப்பட்டு விட்டதென அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இலங்கைப் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை மீது ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை பல்வேறுபட்ட போர்க்குற்றச்சாட்டுக்களையும் தவறான முறையில் சுமத்தியிருந்த நிலையில் தற்போது பாகிஸ்தானில் நடந்த சம்பவம் இலங்கை மீதான சகல போர்க்குற்றச்சாட்டுக்களையும் துடைத்தெரிந்து விட்டது. ஒசாமா பின்லேடனின் உடல் அமெரிக்காவால் கடலில் வீசப்பட்டது.அதே போல் இலங்கை தொடர்பான ஐ.நா.அறிக்கையும் கடலில் வீசப்பட்டு விட்டது.

நிபுணர்குழுவின் அறிக்கையை மீளாய்வு செய்த பின்னரே வெளியிட வேண்டுமென ஐ.நா.செயலாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.ஆனால் அது மீளாய்வு செய்யப்படாமலே கசிய விடப்பட்டு இன்று உலகமறிந்த விடயமாகிவிட்டது. இதனால் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டது. அந்த அறிக்கை மீளாய்வு செய்யப்பட்டிருந்தால் அதன் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கும் என்றும் அமைச்சர் குணசேகர மேலும் தெரிவித்தார்.
 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza