Tuesday, May 10, 2011

பாபர் மசூதி வழக்கு: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு வக்பு வாரியம் வரவேற்பு!

பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நடுநிலையானதாக உள்ளதாக சன்னி வக்பு வாரிய வக்கீல் சபாரியாப் ஜிலானி தெரிவித்துள்ளார்.

 பாபர் மசூதி நிலத்தை மூன்றாகக் கூறுபோட்டதை ஏற்காத உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகுறித்து அவர் கூறுகையில், இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளா உத்தரவு மிகவும் நடுநிலையானதாகவும் பொதுவானதாகவும் உள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவிதமான வழிபாடும் நடக்கக் கூடாது.

பாபர் மசூதி வழக்கில் இறுதித் தீர்ப்பு தாமதமாகலாம் என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால் அவ்வளவு தாமதம் ஆகாது என்றே நாங்கள் கருதுகிறோம்.பிரச்சினைகளின் தீவிரம் குறித்து குறித்தும் நீதிபதிகளுக்கு நன்கு தெரியும் என்பதால் தாமதம் தவிர்க்கப்படும் என்று கருதுகிறோம்.

அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய முறையற்ற தீர்ப்பு யாருக்கும் லாபகரமானதாக இல்லை. குறிப்பாக சன்னி வக்பு வாரியத்தின் கோரிக்கைகள்,அது சமர்ப்பித்த ஆவணங்கள், ஆதாரங்கள் கருத்தில் கொள்ளப்படவே இல்லை.

அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப்பால் நாங்கள் அதிருப்தி அடைந்தோம். இதையே உச்சநீதிமன்ற தற்போதைய தீர்ப்பும் பிரதிபலித்துள்ளது என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza