இஸ்லாமாபாத்:ஃபலஸ்தீனில் அமைதி உருவாகும்வரை அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்கமாட்டார்கள் என உஸாமா பின் லேடன் தனது இறுதி செய்தியில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஃபலஸ்தீன் மக்கள் பாதுகாப்பாக வாழும் வரை அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல்கள் தொடரும்.காஸ்ஸாவில் வாழும் மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழும்போது அமெரிக்கர்கள் நிம்மதியாக வாழ்வது அநியாயமாகும்.
இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடரும்வரை இறைவன் உதவியால் அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதலும் தொடரும்.அல்காயிதாவின் ஆதரவு இணையதளத்தை மேற்கோள் காட்டி எ.எஃப்.பி செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அப்போட்டாபாத்தில் உஸாமா கொல்லப்படுவதற்கு முன்பு தயாரிக்கப்பட்டதுதான் இந்த ஆடியோ செய்தி என அந்த தகவல் கூறுகிறது.இச்செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பதுக்குறித்து சந்தேகம் நிலவுகிறது.

0 கருத்துரைகள்:
Post a Comment