Tuesday, October 8, 2013

சிறை நிரப்பும் போராட்டத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றி! பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முகமது அறிக்கை:


தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து தொடர் பிரச்சாரத்தை செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தியது. இதன் இறுதி தினமான அக்டோபர் 6 ம் தேதி மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்றது. 

நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் முன்னணியில் நிற்கின்றோம் என்ற அடிப்படையில் 20,000க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டதில் கலந்து கொண்டு கைதானார்கள். சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டு இப்போராட்டத்தை வெற்றி பெறச்செய்த அனைத்து தரப்பு மக்களுக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அநீதிக்கு எதிரான பாப்புலர் பிரண்ட்டின் போராட்டம் தொடரும்....
 
இப்படிக்கு,
 
ஆ.ஹாலித் முகமது,
 
மாநில பொதுசெயலாளர்
 
பாப்புலர் ஃப்ரண்ட்,தமிழ்நாடு

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza