Saturday, July 27, 2013

கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் இப்தார் நிகழ்ச்சி!ஏராளமானோர் பங்கேற்பு!

கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் இப்தார் நிகழ்ச்சி ஹைராத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ நகர் தலைவர் செய்யது இஸ்ஹாக்  தலைமை தாங்கினார்.  எஸ்.டிபி.ஐ நகர் பொருளாளர் சித்திக் அலி  வரவேற்புரையாற்றினார் .

  எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர் சேகு அபூபக்கர் சாகிபு, ஜமாஅத் துணைத் தலைவர் அமீர் ஷாஜஹான், ஹைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளர். ஜகுபர் சாதிக், டாக்டர் ஜவாஹிர் உசைன்,கீழக்கரை முஜீப்,இன்ஞினியர் கபீர்,கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர். செய்யது இபுறாஹீம் (ஸ்டேஷன் மாஸ்டர் - ஓய்வு),

 சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர். தங்கம் இராதாகிருஷ்ணன், முஹம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர். அலாவுதீன், மௌலவி அல்தாப் ஹுசைன் மன்பஈ, மௌலவி சம்சுதீன் ஆலிம் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.

எஸ்.டி.பி.ஐ  மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு  உறுப்பினர் வழக்கறிஞர் .ஷாஜஹான் மற்றும் பாப்புலர் ப்ஃரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் நவாஸ்கான்  சிறப்புரை ஆற்றினர். 

இந்த நிகழ்ச்சியின் நிறைவில்  கட்சியின் நகர் இணைச் செயலாளர் அபுபக்கர் சித்தீக் நன்றியுரை வழங்கினார்,

நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.அனைவருக்கும் நோன்பு திறப்பதற்கான முழுமையான  ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது




Thanks to: keelakaraitimes.blogspot.ae

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza