Wednesday, June 19, 2013

புதுவலசை SDPI நடத்திய UAPA கருப்பு சட்டத்திற்கு எதிரான கருத்தரங்கம்

UAPA (UNLAWFULL ACTIVITIES PREVENTION ACT) சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)சார்பில் இன்று (13.06.2013) பிரதமர் அவர்களுக்கு தந்தி அனுப்பும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. யுஏபிஏ (UAPA) என்று அழைக்கப்படுகிற கருப்புச்சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை இந்தியா முழுவதும் மேற்கொண்டு வருகிறது. 

தடா, பொடா சட்டங்களுக்கு இணையான சட்டமான UAPA  சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது மனித உரிமைக்கும், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும் எதிரானதாகும்,எனவே இச்சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாட்டில் ஜுன் 9 முதல் 18 வரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில்தொடர் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை SDPI கிளை சார்பில் UAPA கருப்பு சட்டத்திற்கு எதிரான கருத்தரங்கம் 18/06/2013 செவ்வாய் கிழமை மாலை 5:30 மணியளவில் நடைபெற்றது. இக் கருத்தரங்கிற்கு புதுவலசை கிளைத் தலைவர் தமீம் அன்சர் தலைமை தாங்கினார். திருவாடனை சட்ட மன்ற தொகுதி தலைவர் ஸஹிர்தீன், செயலாளர் ரியாஸ் அஹமது உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் கலந்துகொண்டு மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீல் சிறப்புறையாற்றினார். இறுதியாக பனைக்குளம் கிளை தலைவர் நாசிர் நன்றி கூறினார்

 மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீல் பேசுகையில், ‘இந்த சட்டம் கொடூரமானது. இதனால் சிறுபான்மை சமூகத்தினரும், தாழ்த்தப்பட்டவர்களும் பாதிக்கப்படுவார்கள். தடா, பொடா சட்டங்களை விட மோசமான  UAPA சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்’ என்றார். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


-Info: சகோ.ரிஸ்வான்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza