Wednesday, May 22, 2013

துபாயில் பணிபுரிபவர்கள் குடும்பத்தை அங்கு அழைத்துக் கொள்ள புதிய நடைமுறை!


துபாயில் தங்கியிருந்து பணிபுரிபவர்கள் தமது குடும்பத்தை துபாய்க்கு அழைத்துக் கொள்ள விண்ணப்பிக்கும்போது, இனி வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட்டுகள் தேவை என்ற நடைமுறை வரவுள்ளது.


இதுவரை காலமும், பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து கடிதம் (salary certificate) கொடுத்தால் போதும் என்று இருந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுகிறது.

துபாயில் உள்ள  GDRFA (General Directorate of Residency and Foreigners Affairs) அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ஏற்கனவே துபாயில் பணிபுரிந்து கொண்டிருப்பவாக இருந்தால், 3 மாதங்களுக்கான பேங்க் ஸ்டேட்மென்ட் தேவை. அதில் அவரது சம்பளம் பதிவாகி இருக்க வேண்டும். துபாய்க்கு புதியவராக இருந்தால், குடும்பத்தை ஸ்பான்சர் செய்ய 1 மாத பேங்க் ஸ்டேட்மென்ட் தேவை” என்றார்.
Dh10,000 ஊதியம் பெறுவதாக பணியிடத்தில் இருந்து கடிதம் வாங்கிவந்த சிலர், Dh2,500 ஊதியத்திலேயே பணிபுரிவதை நாம் அறிந்திருக்கிறோம். இதனால், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது” என்றும் தெரிவித்தார் அவர். 
இதுவரை காலமும், குடும்பத்தை ஸ்பான்சர் பண்ண விரும்பும் ஒருவர், labour contract, salary certificate ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால் போதுமானது. இனி புதிதாக விண்ணப்பிப்பவர்கள், இந்த இரு ஆவணங்களுடன், பேங்க் ஸ்டேட்மென்டையும் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதில் ஒரு நல்ல விஷயம், இந்த நடைமுறை புதிதாக விண்ணப்பிக்கும் ஆட்களுக்கு மட்டுமே. ஏற்கனவே குடும்பத்தை அழைத்துக் கொண்டவர்கள் விசாவை நீடிப்பு (renewing residency visas) செய்யும்போது இந்த நடிவடிக்கை கிடையாது.
அதாவது, பேங்க் ஸ்டேட்மென்ட் தேவையில்லை.



0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza