Monday, April 29, 2013

மேலப்பாளையத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய முழு கடை அடைப்பு மற்றும் தர்ணா போராட்டம் - பாப்புலர் ஃப்ரண்ட் பங்கேற்பு



நெல்லை : பெங்களூர் குண்டு வெடிப்பில் மேலப்பாளையம் கிச்சான் புஹாரி உள்ளிட்ட 3 முஸ்லீம் இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யக்கோரியும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் மேலப்பாளையத்தில் 27.04.2013 அன்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு (பாப்புலர் ஃப்ரண்ட் , எஸ்.டி.பி.ஐ ,த.மு.மு.க , ம.ம.ம.க, தக்வா ஜமாத் ,இந்திய தவ்ஹித் ஜமாத்,ம.ம.க ,சிறுபான்மையினர் அறக்கட்டளை,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் பல இயக்கங்கள்) சார்பாக ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.


இதனால் மேலப்பாளையம் நகரம் முழுவதும் ஆட்டோக்கள் ,தனியார் பேருந்துகள் மற்றும் கார்கள் எதுவும் ஓட வில்லை.மேலும் அனைத்து கடைகளும் அடைக்கபட்டிருந்தது. மாலை 4 மணிக்கு பஜார் திடலில் வைத்து மாபெரும் தர்ணா போராட்டம் நடைப்பெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் , எஸ்.டி.பி.ஐ உள்பட அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்த தர்ணா போராட்டத்திற்கு அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைபாளர் மீரான் அன்வாரி தலைமை தாங்கினார் . இதில் பல்லாயிரகணக்காண மக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம் 


போஸ்டர்கள் 


பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி 


0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza