Sunday, April 28, 2013

அசம் கான் அவமதிப்பு: ஹார்வர்டு பல்கலைகழக உரையையும் விருந்தையும் புறக்கணித்த அகிலேஷ் யாதவ்


அகிலேஷ் யாதவ்நியூ யார்க் : உத்தரபிரதேச மாநில அமைச்சர் அசம்கானை அமெரிக்க விமான நிலையத்தில் சோதித்து அவமானப்படுத்தியதால் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஹார்வர்டு பல்கலைகழக உரையையும் விருந்தையும் புறக்கணித்துள்ளார். 

அசம் கான் வழமைக்கு மாறாக பாஸ்டன் விமான நிலையத்தில் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டதால் அதிருப்தி அடைந்த உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தன் அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உரையை புறக்கணித்தார்.


மேலும் இந்திய தூதரகம் அகிலேஷ் யாதவை கெளரவப்படுத்தும் முகமாய் விருந்துக்கு ஏற்பாடு செய்தது. இவ்விருந்தில் அமெரிக்கவில் உள்ள முக்கிய இந்திய வம்சாவளியினர், சமுதாய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாய் இருந்தது. இவ்விருந்தையும் அகிலேஷ் யாதவ் புறக்கணித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza