Tuesday, March 26, 2013

அறிவகம் தாவா குழுவின் “திருக்குரானும் நவீன விஞ்ஞானமும்”புத்தகம் வெளியீட்டு விழா


தேனி மாவட்டம் அறிவகம் தாவா குழுவின் “திருக்குரானும் நவீன விஞ்ஞானமும்” புத்தகம் வெளியீட்டு விழா சனிக்கிழமை 16-03-2013 கம்பம் கோகுலம் யாதவர் மஹாலில் நடைபெற்றது.இதில்தேனி மாவட்டம்  பாப்புலர் ஃப்ரண்ட்  மாவட்ட தலைவர் M.சாந்து முஹம்மதுஅவர்கள் தலைமையில், கம்பம் பாப்புலர் ஃப்ரண்ட்  நகரத்தலைவர் K.சிக்கந்தர் ஜெய்லானி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார், P.உலகநாதன் MA.B.L,ஆய்வாளர் வடக்கு காவல் நிலையம், M.U.S.K ஜபருல்லாகான்EX,செயலாளர் வாவேர்பள்ளி, சிக்கந்தர்கான் து.செயலாளர் வாவர்பள்ளி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். SDPI கட்சி தேனி மாவட்ட தலைவர் H. முஹம்மது அபூபக்கர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்தீக் புத்தகம் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். தமிழக அரசின் முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி P.செல்வேந்திரன் BA,EX.MP அவர்கள் புத்தகம் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.மற்றும் M.மஹ்பூப் அன்சாரி ஃபைஜி முதல்வர் அறிவகம், தேனி-முத்துதேவன்பட்டி அவர்களின் சிறப்புரையோடு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. இப்புத்தக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இப்புத்தகம் இலவசமாக கொடுக்கப்பட்டது. இதில் சமூகஆர்வலர்கள்,ஜமாத்தார்கள்,மற்றும் பொதுமக்கள் திரலாக கலந்துகொண்டு இப்புத்தக வெளியீட்டு விழாவை சிறப்பித்தனர். 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza