Friday, September 28, 2012

"கல்விக்கூட ஜனநாயகம் காப்போம்" - கேம்பஸ் ஃப்ரண்ட்


வலிமையான ஜனநாயக கட்டமைப்பிற்க்கு மாணவர்களின் பங்கு இன்றியமையாதது. முhணவ அரசியல் மூலம் மாணவர் நலன் சார்ந்த விஷயங்களிலும் தேசிய நலன் சார்ந்த விஷயங்களிலும் உரிமைகளை போராடி வென்றெடுக்க இயலும்.


கேம்பஸ்களில் ஜனநாயகத்தை  அணுமதிப்பது மாணவர்கள் கல்விக்கூட அரசியல் மற்றும் தேசிய அரசியலில் ஈடுபட பெரிதும் உதவும். சிறந்த அரசியல் தலைவர்களுடனான மாணவர் சந்திப்பினை ஏற்படுத்துவதன் மூலம் இதனை வலுப்படுத்தலாம்.

முhணவ பிரதிநிதிகயை நிர்வாகம் நியமிப்பதை தவிர்த்து தேர்தல்களில் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். கல்விமுறையும், கல்லூரி நிர்வாகமும் கேம்பஸ் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உறுதிமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சில பல்கலைக்கழகங்கள் இன்று முதலாளிகள், குற்றவாளிக் மற்றும் வன்முறைவாதிகளின் கூடாரமாக மாறிவட்டது. மாணவர்கள் தங்களின் கடமை மறந்நு கோழைகளாகவும், செயலற்றவர்களாகவும், ஃபாசிஸ வாதிகள் மற்றும் போலி இடதுசாரிகளின் கைகளின் பொம்மைகளாகவும் இருக்கின்றனர்.

கல்வி வளாகத்திற்க்குள் எழுச்சி பெறும் ஜனநாயகத்தை கல்லூரியை அல்லது பல்கலைக்கழக நிர்வாகமோ அனுமதிப்பதில்லை. நீதி மன்றங்களும் தடைக் கரங்களையே நீட்டுகின்றன. அரசம், கல்வி நிறுவனங்களும் இந்நீதிமன்ற உத்தரவுகளையே பின்பற்றுகின்றன.


ஆகவே மாணவர்கள் வலிமையான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு கல்விக்கூட ஜனநாயகத்தை வலிமைப்படுத்துவது அவசியம், எனவே கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (27.09.2012) மதியம் 4 மணி அளவில் சென்னை சட்டக்கல்லூரி அருகில் இருந்து தலைமைச்செயலகம் நோக்கி பேரணி நடைபெற்றது, இதற்க்கு மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் துலைமையேற்று துவங்கி வைத்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza