Thursday, August 16, 2012

"சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! கோவையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் தேசிய அளவிலான பிரச்சாரத்தின் துவக்க நிகழ்ச்சி.


சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தின் மீதான இது போன்ற பொய்யான நடவடிக்கைகள் உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தவறான அடிப்படையில் சிறையில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக “சட்டப்படி பிணையில் வீடு  அப்பாவிகளை விடுதலை செய்” என்ற தலைப்பில் வரக்கூடிய 2012 ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை தேசிய அளவிலான பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் துவக்க நிகழ்ச்சியாக கோவையில் இன்று (15.08.2012) மாலை 5.30 மணியளவில் என்.எச். மஹால் திருமண மண்டபத்தில் சட்டப்படி பிணையில் விடு- அப்பாவிகளை விடுதலை செய் என்ற தேசியளவிளான பிரச்சாரத்தை துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் கே.ராஜா உசேன் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் சிறப்புறை வழங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் இப்பிரச்சாரத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.எம். இப்ராஹீம் பாதுஷா இவர்கள் முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் எம்.ஐ.அப்துல் ஹக்கீம் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza