Sunday, August 19, 2012

ஈகைத் திருநாளில் சக மனிதர்களின் துயரங்களில் பங்கெடுப்போம் பாப்புலர் ஃப்ரண்ட் சேர்மன் வேண்டுகோள்

டெல்லி,18 :பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் E.M.அப்துல் ரஹ்மான் தன்னுடைய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களை தொரிவித்துள்ளார். இத்தருணத்தில் உலகில் இயற்கை மற்றும் பிற சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சுதந்திரம் மற்றும் நீதிக்காக போராடக்கூடிய மக்களுக்கு நம்முடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் தொரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நமது நாட்டில் உள்ள கனமழை மற்றும் மண்சரிவுகள் முதல் ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம் வரை மனிதர்கள் தங்களின் சக மனிதர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடைமைகளை நமக்கு உணர்த்துகின்றன. தங்களின் சொந்த கிராமங்களில் இருந்து துரத்தப்பட்டு சொந்த பந்தங்களை இழந்து அகதிகள் ஆக்கப்பட்டுள்ள மியான்மர் மற்றும் அஸ்ஸாமின் மக்களின் துயரங்களில் நாம் பங்களிப்பு செய்ய வேண்டும். அக்கிரமக்கார ஆட்சிக்கு எதிராக போராடி கொண்டிருக்கும் சிரிய மக்களுக்கும் நம்முடைய துஆக்கள் இருக்க வேண்டும்.
போலி தீவிரவாத வழக்குகளில் சிக்கி பிணை கிடைக்காமல் பல ஆண்டுகள் சிறைகளில் வாடி வரும் நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் விடுதலைக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்பதையும் இந்த சந்தோஷ தருணத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza