Tuesday, August 21, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பெருநாள் தின விளையாட்டு போட்டி பரிசுகள் வழங்கும் விழா!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பெருநாள் தின விளையாட்டு போட்டிகள் கடந்த 3 நாட்களாக  புதுவலசையில் நடத்தப்பட்டு வந்தது. இதில் பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும், பொது மக்களுக்கு தனியாகவும் கால்பந்து,கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை பெருநாள் தினத்தன்று புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் அருகே நடைபெற்றது.


 இதில் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இப்பரிசினை புதுவலசை ஜமாத் தலைவர் ஜனாப்.அஹமது கபீர், செயலாளர் ஜகுபர் சாதிக்,SDPI கிளை பொருளாளர் ஹாஜி.அப்துல் ரஜாக் ஆகியோர் வழங்கினர். இதில் ஜமாத்தார்கள், சங்கத்தார்கள்,SDPI நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza