Friday, August 24, 2012

அஸ்ஸாம் தாக்குதலை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்


கர்நாடகா மாநிலம் சிக்மங்கலூர் மாவட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக அஸ்ஸாம் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரணி பழைய தாலுகா அலுவலகத்தில் தொடங்கி DC அலுவலகத்தில் நிறைவுற்றது.


ஆர்ப்பாட்டத்தில் அஸ்ஸாம் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் போடோ தீவிரவாதிகளுக்கு எதிராகவும் , அஸ்ஸாம் மாநில அரசாங்கத்தின் கையாலாகாத தனத்திற்கு எதிராகாவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கூட்டத்தில் பேசிய மாவட்ட செயற் குழு உறுப்பினர் அல்தாப் அவர்கள் \\\" வங்க மொழி பேசும் அஸ்ஸாமிய முஸ்லிம்களை வங்கதேசத்திலிருந்து வந்த ஊடுருவல்காரர்கள் என்று கூறி வரும் RSS இயக்கத்தை வன்மையாக கண்டித்தார் \\\".


கண்டன உரையாற்றிய முப்தி ஸாப் அவர்கள் \\\"ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் பல்வேறு தியாகங்களை புரிந்த முஸ்லிம்கள் இன்று மறக்கப்பட்டு விட்டனர் \\\" என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொது செயலாளர் கௌஸ் முகைதீன், மாவட்ட தலைவர் பைரோஸ் மற்றும் செயலாளர் அஜீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
protest against Assam violence

protest against Assam violence

protest against Assam violence

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza