Monday, October 3, 2011

அடுத்த இரண்டு வாரங்களுக்கு டெல்லியில் மின்சார பாதிப்பு

imagesCAXBJTIL
புதுடெல்லி:வாஜிராபத்தில் மேம்பாலம் கட்டுவதை தொடர்ந்து வட மற்றும் தென் டெல்லியில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மின்சார இணைப்பில் பாதிப்பு ஏற்ப்படும் என்றும், இன்று முதல் அக்டோபர் 17 வரை, வாஜிராபாத், கீதா காலனி, பட்பர்கனி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளதாக டெல்லி ட்ரான்ஸ்கோ லிமிட் தெரிவித்துள்ளது.

இந்த மின்சார துண்டிப்பு மிகவும் முக்கியமான காரணமாகவே செய்யப்பட உள்ளது என்றும், தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றில் இணைக்கப்பட உள்ள வாஜிராபாத் பாலத்தின் பணியை மையத்தில் வைத்தே இப்படி ஒரு ஏற்பாடு என்றும் தெரிவித்துள்ளனர். 

ஆனால் இதற்கான மாற்று வழிகள் மேற்க் கொள்ளப்படும் என்றும், தெற்கு மற்றும் மேற்கு டெல்லியில் காலை 10.30 முதல் மாலை 4.30 வரை துண்டிக்கப்படும் மின் இணைப்பிற்கு பதிலாக தனியார் மின் துறை பி.எஸ்.இ.எஸ் அதற்கான பகிர்வை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் செகத், ஷேய்க் சராய், ஒக்லா பேஸ்-3, எம்-ப்ளாக் மார்கெட், ஜனக் புரி, பலம் விஹார், ஹவுஸ் காஸ் (ஏ மற்றும் பி ப்ளாக்) மற்றும் ஆனந்த் லோக் பகுதிகளும் அடங்கும். இதனுடன் தொடர்புடைய ரஜோரி கார்டன், பிஜ்வசன், சண்ட் நகர், சந்த் நகர், முனிர்கா விஹார்ரின் எஸ்.ஃப்.எஸ். காலனி, ட்வர்க்கா (பகுதி 18 மற்றும் பகுதி 6) மற்றும் அன்சல், சட்பாரி கிராமம், ரகுபரி நகர், சியாம் நகர் ஆகிய பகுதிகளும் அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza