Wednesday, July 6, 2011

ஹரியானாவிலும், உ.பியிலும் கெளரவக்கொலைகள்

images
சட்டீஸ்கர்/கான்பூர்:ஹரியானாவிலும், உத்தரபிரதேச மாநிலத்திலும் மீண்டும் கெளரவ கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஹரியானா மாநிலத்தில் மோகா மாவட்டத்தில் கால்வாய்க்கு அருகே தள்ளிவிட்டு ஜகதீன்தீப்சிங் (வயது 20) என்ற தலித் இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் ஜக்ரோன் பகுதியை சார்ந்த ஜாட் சீக்கிய இளம்பெண்ணுடன் ஓடிய  ஜகதீன்தீப் சிங்கை அப்பெண்ணின் உறவினர்கள் கொலை செய்துள்ளனர். சிங்கின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் இளம்பெண்ணின் குடும்பத்தினரை போலீஸ் விசாரித்த பொழுது கொலை சம்பவம் தெரியவந்தது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் காதலர்கள் மரத்தில் மரணித்து தொங்கிய நிலையில் காணப்பட்டனர். கோவிந்த்நிபாடா (வயது 17), சீதா (வயது 14) ஆகியோரை உறவினர்கள் கொலை செய்து ஆற்றங்கரையின் அருகிலுள்ள மரத்தில் தொங்கவிட்டுள்ளனர். தலைமறைவான உறவினர்களை போலீஸ் தேடி வருகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza