Sunday, May 29, 2011

ISIஐ தீவிரவாத அமைப்பாக நிரூபிக்க இந்தியா முடிவு!

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மும்பை தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நியூயார்க் நீதிமன்றத்தை இந்திய அரசு என்று தகவல்கள் கூறுகின்றன.

மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்ட ரப்பி கேவ்ரியல் நோவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் தொடர்ந்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தங்களையும் வாதியாகச் சேர்த்துக் கொள்ளக் கோரி இந்திய அரசு மனு செய்ய உள்ளது.

ஐஎஸ்ஐ அமைப்புக்கும் தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ள லஷ்கரே தொய்பா போன்ற அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்த ஏராளமான ஆதாரங்களுடன் இந்தியா நியூயார்க் நீதிமன்றத்தை நாட உள்ளது.

இது தொடர்பாகப் பேசிய அரசு அதிகாரி ஒருவர், "எங்களுடைய முக்கிய நோக்கம் மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்ட ரப்பியின் குடும்பத்திற்கு உதவி செய்வதுதான். அதே வேளை, மும்பை தாக்குதலை நடத்தியதாகக் கருதப்படும் லஷ்கரே தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உள்ள தொடர்புகளையும் நாஙகள் நிரூபிப்போம்" என்று கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza