Sunday, May 29, 2011

குழந்தைகள் தங்களது மத அடையாளத்தை கூற அஞ்சுகின்றனர்: ஆய்வில் தகவல்

புலம் பெயர்ந்த குழந்தைகள் தங்களது மத அடையாளத்தை குறிப்பிடுவதற்கு பயப்படுகிறார்கள். இத்தகைய நிலை நீடித்தால் கனடாவில் கிறிஸ்துவ மதம் சக்தி வாய்ந்ததாக நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் கனடாவில் முஸ்லீம்கள் தங்களது நம்பிக்கைகளை பின்பற்றுவதில் எந்த வித இடையூறும் இல்லை என கூறுகிறார்கள். இருப்பினும் இதர வடிவத்தில் பாகுபாடுகள் தொடர்கின்றன என அவர்கள் கூறுகிறார்கள்.

கனடாவில் பல சமூக செயல்பாடுகள் அமைப்பான ஹியூமனாடிஸ் மற்றும் சோசியல் சயின்ஸ் மாநாடு ஞாயிற்றுக்கிழமை ப்ரடெரிக்டனில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் போது புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் சமர்பிக்கப்படுகின்றன.

ஒட்டாவா பல்கலைகழக மத ஆய்வு துறை பேராசிரியரான பீட்டர் பேயர் கனடாவில் 2ம் சந்ததியை சேர்ந்த 350 பேரிடம் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்கள் 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.
சிட்னி, என்.எஸ், மொன்றியல், ஒட்டாவா, டொரண்டோ, எட்மாண்டன் மற்றும் வான்கூவர் பகுதிகளில் உள்ள மாணவர்களில் 36 குழுக்கள் ஆய்வை மேற்கொண்டனர்.

 இந்த குழுக்கள் நடத்திய ஆய்வின் போது கிறிஸ்துவ இளைஞர்கள் தங்களது மத நடைமுறைகளை வெளிப்படையாக கடைபிடிக்க அஞ்சும் நிலை காணப்பட்டது.

மத விவகாரங்களை காட்டிலும் இன பாகுபாடுகள் தான் தங்களை பாதிப்பதாக முஸ்லீம்கள் குறிப்பிட்டனர். கனடாவில் பல கலாசார சமூகம் உள்ளது. இதனை கனடாவில் உள்ள இரண்டாவது சந்ததியினர் நேர்மறை நோக்கிலேயே அணுகுகிறார்கள்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza