Saturday, May 28, 2011

பாகிஸ்தான் சந்தையில் குண்டுவெடிப்பு: எட்டுப் பேர் பலி

கடந்த வெள்ளிக்கிழமை (27.05.2011) பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியின் ஸலர்ஸாய் பிராந்தியத்தில் உள்ள பரபரப்பான சந்தையில் நிகழ்நத குண்டுவெடிப்பினால் எட்டுப் பேர் பலியானதோடு மேலும் 14 பேர் படுகாமடைந்துள்ளனர். அப்பகுதியில் இருந்த கடைகள் மற்றும் கட்டடங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
அரச மருத்துவமனை மருத்துவர் முஹம்மத் ஸயீத், குண்டுவெடிப்பினால் ஸ்தலத்திலேயே பலியான நான்குபேரின் உடல்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றன என்றும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் நால்வர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.
படுகாயமடைந்துள்ள பலரின் நிலை மிகக் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் அரசதரப்பு அதிகாரி இஸ்ரார் கான் கருத்துரைக்கையில், இந்த வெடிகுண்டு தாலிபான் எதிர்ப்பாளர்கள் சிலர் வழமையாக ஒன்றுகூடும் ஓர் உணவகத்திலேயே வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு இதுவரை எந்தந் தரப்பினரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர்வாசிகள் குறிப்பிடுகையில், இதே பிராந்தியத்தில் இருந்து தம்மை வெளியேற்றம் முயற்சியில் ஈடுபட்ட பலரைக் குறிவைத்துத் தாலிபான்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர் என்று சாட்சியமளித்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியப் பாதுகாப்பு நிலைவரம் என்பது நாளுக்குநாள் மோசமடைந்து வருவதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காவல்துறையினரைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் கொலைத் தாக்குதல்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. கடந்த வியாழக்கிழமை ஹங்கு நகரில் உள்ள காவல்துறை மீது இடம்பெற்ற மிகப் பெரிய கார் குண்டுவெடிப்பினால், 38 பேர் கொல்லப்பட்டதோடு 52 பேர் படுகாயமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை (27.05.2011) பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியின் ஸலர்ஸாய் பிராந்தியத்தில் உள்ள பரபரப்பான சந்தையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் எட்டுப் பேர் பலியானதோடு, மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். அப்பகுதியில் இருந்த கடைகள் மற்றும் கட்டடங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன.

அரச மருத்துவமனை மருத்துவர் முஹம்மத் ஸயீத், குண்டுவெடிப்பினால் ஸ்தலத்திலேயே பலியான நான்குபேரின் உடல்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றன என்றும், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் நால்வர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.
படுகாயமடைந்துள்ள பலரின் நிலை மிகக் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் அரசதரப்பு அதிகாரி இஸ்ரார் கான் கருத்துரைக்கையில், தாலிபான் எதிர்ப்பாளர்கள் சிலர் வழமையாக ஒன்றுகூடும் ஓர் உணவகத்திலேயே இக்குண்டு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு இதுவரை எந்தத் தரப்பினரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
உள்ளூர்வாசிகள் குறிப்பிடுகையில், இப்பிராந்தியத்தில் இருந்து தம்மை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்ட பலரைக் குறிவைத்துத் தாலிபான்கள் இதற்கு முன்னரும் இத்தகைய தாக்குதல்களை நடாத்தியுள்ளனர் என்று சாட்சியமளித்துள்ளனர்.

பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியப் பாதுகாப்பு நிலைவரம் என்பது நாளுக்குநாள் மோசமடைந்து வருவதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காவல்துறையினரைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் கொலைத் தாக்குதல்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. கடந்த வியாழக்கிழமை ஹங்கு நகரில் உள்ள காவல்துறை மீது இடம்பெற்ற மிகப் பெரிய கார் குண்டுவெடிப்பினால், 38 பேர் கொல்லப்பட்டதோடு, 52 பேர் படுகாயமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza