Wednesday, April 27, 2011

இஷ்ராத் ஜஹான் வழக்கு குஜராத்தின் 14 மூத்த காவலதிகாரிகள் கூட்டு

Gujarat_Riots_lnk
அஹ்மதாபாத்:இஷ்ராத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத்தில் பதினான்கு ஐ.பி.ஸ் அதிகாரிகளுக்குள்  பொறாமை மற்றும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் அனைவரும் இவ்வழக்கை சி.பி.ஐ அல்லது சிறப்பு புழனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று குஜராத் உயர்நீதி மன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

ஐ.ஜி சதீஸ் வர்மா மற்றும் ஐ.பி.ஸ் அதிகாரி ஜி,எல்.சிங்கால் உள்ளிட்ட பதினான்கு அதிகாரிகள் மூத்த அதிகாரிகளுடன் உள்ள காழ்புணர்ச்சி காரணமாக குஜராத் உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளனர். இஷ்ராத் ஜஹான் என்கவுன்டரின் போது சதீஸ் வர்மா சிறப்பு  புழனாய்வு குழுவில் இடம்பெற்றிருந்தவர்.

குஜராத் உயர்நீதி மன்றம் தற்போது சதீஸ் வர்மாவுக்கு இஷ்ராத் ஜஹான் வழக்கை விசாரிக்க முழு அதிகாரத்தையும்  வழங்கியிருந்தது. மேலும் குஜராத் ஐ.பி.ஸ் அதிகாரி மோகன் ஜஹா நிர்வாக பொறுப்பு வகிப்பார் எனவும் கூறியிருந்தது. சிறப்பு  புழனாய்வு குழுவின் தலைவர் கர்னைல் சிங் தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza