Thursday, February 17, 2011

விபத்தில் ஆற்றில் மூழ்கி பள்ளிக்குழந்தைகள் பலி!

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாகப் பலியாகினர். இது பற்றிய விபரம் பின்வருமாறு:
திருவனந்தபுரம் சாக்கை கரிக்ககம் சாமுண்டி கோவில் பகுதியைச் சேர்ந்த 12 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் சென்றது. அப்பகுதியிலுள்ள ஆற்றங்கரை பக்கம் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு வாகனம், வேன் மீது மோதியது. இதில் வேன் நிலை தடுமாறி ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் தண்ணீரில் மூழ்கி 5 குழந்தைகளும், குழந்தைகளை அழைத்துச் சென்ற பள்ளிப் பணியாளரும் பரிதாபமாகப் பலியாகினர். மற்ற குழந்தைகள் மீட்கப்பட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza