Friday, January 28, 2011

SDPI - புதுவலசை கிளை கூட்டம்


பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை என்ற முழக்கத்தோடு மாற்று அரசியலை நோக்கி பயனிக்கும் SDPI-யின் புதுவலசை கிளை கூட்டம் இன்று (27-01-2011) நடைபெற்றது. SDPI-யின் புதுவலசை கிளை பொருலாளர் ஜனாப். அப்துல் ரஜாக் அவர்கள் தலைமை வகித்தார், கிளை தலைவர் சகோதரர். அபுரார் அஹமது முன்னிலை வகித்தார். இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக இராம்நாட் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சபீக்குர் ரஹ்மான்(சித்தார்கோட்டை), பரமக்குடி செயலாளர். கலீலுர் ரஹ்மான், பரமக்குடி தலைவர் சகோதரர். சௌந்தர் ராஜன், பனைக்குளம் கிளை தலைவர் ரியாஸ்தீன், நகர்மன்ற உறுப்பினர் மீரான் ஒனி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நமது பகுதியின் நிலைமை பற்றி கலந்துரையாடப்பட்டது. இறுதியாக சித்தார்கோட்டை முதல் ஆற்றங்கரை வரையுள்ள சாலை பழுதடைந்துள்ளது. அதனை சீர் செய்ய அரசாங்கத்தை அனுகி மனுகொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் புதுவலசை கிளை முக்கிய உறுப்பினர்கள் அஸ்மத், ஹாஜா, ஷாம் நைனா, பஷீர் அஹமது, முபாரக் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக புதுவலசை கிளை செயலாளர் அஸ்வர் ரஹ்மான் நன்றியுறை கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza